Thursday, December 27, 2007

கிராமத்து மார்கழிக் காலை

மார்கழி என்றாலே நம்ம ஊர்ல குளிர், சங்கீதம், திருப்பள்ளி எழுச்சி தான். அத்தோடு நம்ம ஊர் பெண்கள் வண்ணக் கோலம் இடுவதும் சிறப்பு (இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை !). அதைப் பற்றின என் எண்ணங்கள் கவிதையாய், இங்கே க்ளிக்கவும்.


http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html

Wednesday, December 26, 2007

தடயம் - மர்மத் தொடர்


தடயம் மர்மத்தொடரின் ஏழாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்:
http://kalaichcholai.blogspot.com/2007/12/7.html
- முரளி.

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது அத்தியாயங்களைப் படிக்க இங்கே சொடுக்கவும்:

Sunday, December 16, 2007

உயிருக்கு போராடும் ராஜேஷ் ராமநாதன்


என்னுடன் கல்லூரியில் படித்த ராஜேஷ் ராமநாதன் இன்று லூகேமியாவுடன் போராடிக் கொண்டிருக்கிறான். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சென்ற வருடம் போராடி வென்றவன், இப்போது மீண்டும் போரைத் தொடர்ந்திருக்கிறான். முழு விவரங்களை இங்கே காண்க => http://www.helprajesh.com

இந்த Bone Marrow விஷயத்தில், போன் மாரோ(bone marrow) தானம் செய்ய நம் வர்க்கத்தினரால்தான் முடியும். நம் வர்க்கம் என்றால் தெற்காசிய மக்கள். ஆகவே எவ்வளவு பேர் bone marrow donor ஆக பதிவு செய்ய முடியுமோ,  ராஜேஷ் போன்றவர்களுக்கு உயிர் வாழ வாய்ப்புகள் அதிகமாகின்றன. ராஜேஷ் மாதிரி இன்னும் சில பேர் இருக்கிறார்கள். சிகாகோவில் ஆறு வாரங்களே நிரம்பிய பிரனவுக்கு தானம் செய்ய அவசரத் தேவை. 

நம் ரிச்மண்டில் வரும் புத்தாண்டு தினத்தன்று ஹிந்து மையத்தில் bone marrow donor registration நடக்கவிருக்கிறது. இதில் பதிய தேவையானதெல்லாம் ஒரு காகிதத்தை நிரப்புவதும், ஒரு குச்சியால் உங்கள் உள்கன்னத்தை தடவிக் கொடுப்பதும்தான். உங்களுக்கு ஒரு செலவும் இல்லை, பதிவு செய்ய ரத்தத்துளி தேவையில்லை.  ஒரு உயிரைக் காக்க தயாள குணம் மட்டுமே தேவை. 

உங்கள் ஊரிலும் மக்களை பதிவு செய்யலாம். சமார் நிறுவனம் தேவையான பொருட்களை இலவசமாக அனுப்புவார்கள்.விவரங்களுக்கு http://www.samarinfo.org. போன் மாரோ தானம் பற்றிய முழு விவரங்கள் சமார் தளத்தில் அமெரிக்க போன் மாரோ தளத்திலும்(http://www.marrow.org) காணலாம்.
இதைப் படிக்கும் அனைவரும் நீங்கள் பதிவது மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களையும் பதிவு செய்யவிக்க வேண்டும். உங்களால் முடிந்த நிதியுதவியும் செய்தால் நல்லது.

Thursday, December 13, 2007

பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)

பாரதி அவர்களின் அதிர்ச்சியான மறைவு எப்போதும் சிந்தனையில் இருக்க அதன் விளைவாய் வந்த கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html

Monday, December 10, 2007

தீபாவளி-கிறிஸ்துமஸ் விழா!

சென்ற சனிக்கிழமை நடந்த ரிச்மண்ட் தமிழ் சங்க தீபாவளி-கிறிஸ்துமஸ் விழாவை எல்லோரும் ரசித்து மகிழ்ந்திருப்பீர்கள். விழாவைக் குறித்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தினால் நலம்.

மேலும் படம், வீடியோ எடுத்திருந்தால், அவை இணையத்தில் காணமுடிந்தால், அவற்றின் சுட்டியையும் பின்னூட்டத்தில் கொடுங்கள். அனைத்தையும் ஒரு இடத்தில் சேகரிக்க முடிந்தால் அருமையாக இருக்கும். Flickr தளத்தில் இருந்தால் RTS 2007 Diwali என்று tag கொடுங்கள்.

Thursday, December 06, 2007

படம் பார்த்து கடி சொல் - 3



"நீ படிக்கிற படிப்புக்கு வண்டி தள்ள தான் லாயக்கு" ன்னு எங்கப்பா சொன்னதை நிஜமாக்கிட்டானே படுபாவி இந்த சீனியர் இஞ்சினியர்"

படம் பாருங்கோ! கடி கேளுங்கோ! நீங்களும் கடியுங்கோ!

Tuesday, November 27, 2007

செல்போன் ஃபார் ஸோல்ஜர்ஸ்!

மனமிருந்தால் மார்க்கமிருக்கும். ஒரு அக்கா தம்பி அமெரிக்க போர்வீரர்களுக்கு உதவ என்ன செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் மலைத்துப் போவீர்கள். இந்த ஒரு யூட்யூப் வீடியோவை பாருங்கள்.




ஒரு போர்வீரனுக்கு ஏழாயிரம் டாலர் செல்போன் பில் வந்ததைப் பார்த்து அதிர்ந்து போன இந்த உயர்பள்ளி மாணவர்கள் தங்களிடம் இருந்த பைசாவையும் நண்பர்களிடம் வசூல் செய்த பைசாவையும் கொடுக்கலாம் என்று ஆரம்பித்தது இன்று அமெரிக்க படைவீரர்களுக்கு ஒரு மில்லியன் டாலர்களுக்கு மேலாக காலிங்கார்ட் வழங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது!!!


CellPhone For Soldiers - இன்னும் பள்ளியில் படிக்கும் இந்த அக்கா தம்பி நிறுவனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும். பழைய செல்போனை அவர்களுக்கு அனுப்ப வேண்டுமா? உங்கள் ஊரில் எங்கே கொண்டு போய் கொடுக்கலாம் என்று இங்கே பாருங்கள். இல்லாவிட்டால் இலவசமாக தபாலில் அனுப்ப இங்கே பாருங்கள்.

படம் பார்த்து கடி சொல் - 1



மேலுள்ள படத்திற்கேற்றார்போல் கடிக்கவும்!!!

Monday, November 26, 2007

எச்சரிக்கை

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
காலம் கடந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சமீபத்தில் சென்னை சென்று வந்த அனுபவத்தை 'பரணீதரன்' அளவுக்கு தரமாக இல்லாவிட்டாலும், 'மணியன்' அளவுக்காவது எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் அபிப்ராயங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், பின்னூட்டங்களைப் பொருத்து இதைச் செய்யலாம் என்று இருக்கிறேன். தேவையில்லை என்று நினைத்தால் தெரிவித்து விடுங்கள். நாகு இதை வெளியிடும் சமயம், தடயம் மர்ம நாவலையும் முடித்து வெளியிட்டு விடுகிறேன் எனவே அதைப் பற்றி பின்னூட்டத்தில் கேட்டு குடைய வேண்டாம்.

சதங்கா:
உங்கள் கவிதைகளை நேற்று படித்தேன், அருமை. பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது, வார்த்தைகள் நன்கு பண் பட்டிருக்கிறது. வாஷிங்டன் பற்றிய பதிவில் வார்த்தைகளின் எளிமை மிக அழகு.

பரதேசி: படம் பாரு கடி கேளு உங்களின் ஏக போக சொத்தாகி விட்டது. இனி உங்களைப் போல இதை யாரும் எழுத முடியாது என்று நினைக்கிறேன். செல்வி(நாய்)க்கு தாலி கட்டிய செல்வகுமாரின் பதிவு அருமை. இந்த மேட்டர் சீரியஸ்னெஸ் செல்விக்கு மட்டும் புரிஞ்சுது, செல்வகுமார் கதை கந்தல்தான்.

அன்புடன்,

முரளி.

Saturday, November 24, 2007

பதநீர் குடிக்க வாரீயளா ?

பதநீர் குடிக்க வாரீயளா ? .... மன்னிக்கவும், படிக்க வாரியளா ? சுட்டி கீழே :)

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_24.html

Thursday, November 22, 2007

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம் பற்றிய ஒரு கவிதை. படிக்க கீழே சுட்டியை அழுத்தவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_20.html

Sunday, November 18, 2007

படம் பாரு கடி கேளு - 20


டேய் எந்த எருமைடா என் மேலே தண்ணிய தெளிக்கிறது? ஒரு Head and Shoulders
shampoo கிடையாது, Yardley சோப்பு கிடையாது, Old Spice deodorant spray கிடையாது - தண்ணி தெளிக்கிறானாம் தண்ணி.

Friday, November 16, 2007

படம் பாரு கடி கேளு - 19


சே! 99% தள்ளுபடின்னு சொன்னதை நம்பி online ல குடும்பத்துக்கே ஆர்டர் பண்ணினேன். வந்த பாக்கெட்டை பிரித்துப்பார்த்தா இப்படியிருக்கு.
சுண்டி விரல் கூட கொள்ளாது போலிருக்கே!

Thursday, November 15, 2007

படம் பாரு கடி கேளு - 18



போராட்டத்திற்கு "பூசணிக்காய் மாலைக்கு பதில் வெங்காய மாலை தான் அணிவோம்" என்ற கோரிக்கைக்கு செவிசாய்த்த நம் தலைவருக்கு ஜே!

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

சமீபத்தில இரண்டு கவிதைகள் என்னோட வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். சுட்டிகள் கீழே, படித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_15.html

மயில் - குழந்தைகள் கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_14.html

Monday, November 12, 2007

படம் பாரு கடி கேளு - 17


மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?


இங்கே தான் இருக்கா சிக்னல்?
"சிக்னல் ல வண்டியை நிறுத்தாம ஏன் போனே?" அப்படீன்னு தினமும் அந்த போலீஸ் என்னை பிடிச்சு டிக்கட் கொடுத்தாரு. சிக்னல் எங்கேன்னு கேட்டா இன்னி வரைக்கும் சொல்லாம அடம் பிடிச்சுட்டாரு.

Sunday, November 11, 2007

"நாய"கன்


நாய்க்கு தாலி கட்டிய செல்வகுமார்

கீழ்கண்ட செய்தி ஒரு பிரபல தினசரியில் வெளியானது.

மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.

மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு `உல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. `இறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. `செல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு `பன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், `நான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார்.

இச்செய்தியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அபத்தங்கள்:

1. மணமகன் பெயர் செல்வகுமார். மணமகள் பெயர் செல்வி. அப்பா என்ன பெயர் பொருத்தம்!
2. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு எல்லாம் நடந்திருக்கிறது.
3. பெண்ணுக்கு சேலை கட்டி கோவிலுக்கு வேறு கூட்டிச்சென்றிருக்கிறார்கள்
4. விருந்து நடத்தி மணமகளுக்கு "பன்" வேறு கொடுத்திருக்கிறாகள்
5. மணம் முடித்த மாப்பிள்ளை பெண்ணை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று சத்தியம் வேறு செய்திருக்கிறான்.

மாப்பிள்ளை அழைப்பு, ஊர்வலம், விருந்து இத்துடன் நிறுத்திவிட்டு "சாந்தி முகூர்த்தம்" நடத்தாதது ஒரு குறை. சம்மந்திகள் சண்டை வேறு போட்டிருப்பார்கள்.
இந்த கல்யாணம் நடத்தச்சொன்ன ஜோதிடரையும் கடித்துப்பிடுங்கியிருப்பார்கள்.

சாவி அவர்கள் "வாஷிங்டனில் திருமணம்" எழுதினார். யார் "விலாக்குளத்தில் திருமணம்" எழுதப்போறார்களோ!

அப்பா தாங்கலியேடா சாமி இந்த பைத்தியக்காரத்தனத்துக்கு.

Monday, November 05, 2007

வாஷிங்டன் வீதி உலா

சமீபத்தில் தலைநகர் வாஷிங்டன் சென்று சுற்றி வந்தோம். அதை ஒரு கவிதை வடிவில் எனது வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post.html

Thursday, November 01, 2007

நானும் படம் காமிப்பனே...

இந்த படங்களைப் பாருங்கள். (படங்களைப் பெரிசாக்குவதற்கு படங்களின் மேல் க்ளிக்குங்கள் என்று நான் சொல்லாவிட்டாலும் சும்மாவா இருப்பீர்கள் - க்ளிக் அண்ட் என்ஜாய் மாடி)மும்பையில் விமான நிறுவனங்களின் விளம்பரப் பலகை சண்டை இப்படி ஆரம்பித்தது. முதலில் ஜெட் ஏர்வேஸ்காரர்கள் இந்த பலகையை வைத்தார்கள்.




அடுத்தது கிங்பிஷர் ஏர்லைன்ஸ்காரர்கள் ஜெட் ஏர்வேஸ்காரர்களை இப்படி கலாய்த்தார்கள்...



அதைப் பார்த்தவுடன் கோ ஏர் கோதாவில் இறங்கினார்கள்....(பெயர் கேள்விப்பட்டதே இல்லை இதுவரை - நாம்தான் குகைவாசியாயிற்றே?).





உடனே நான் இவர்களுக்கு சளைத்தவனில்லை என்று லல்லு வந்து விட்டார்....




இந்த விளம்பரங்கள் நிஜமாக இப்படி அடுக்கப்பட்டனவா அல்லது போட்டோஷாப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
லல்லுவைப் பற்றி என்னதான் ஜோக் அடியுங்கள். ஆனால் மனுஷன் இந்திய ரயில்வேவை லாபகரமாக நடத்துவது மிகவும் மெச்சப்படவேண்டிய விஷயம்....


இனி அடுத்த விளம்பரம் - மிகவும் ஆச்சரியப்படவைத்தது... இது ஒரு ஸ்வீடன் நாட்டு பத்திரிக்கையில் வந்ததாம்.



ABB நிறுவனத்தாரின் வேலைவாய்ப்பு விளம்பரமாம். (சொன்னால் சரி - நமக்கெங்கே ஸ்வீடிஷ் மொழி தெரியப்போகிறது? அது ஸ்வீடிஷ் என்றே தெரியாது)
இந்த விளம்பரத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்வி:
உங்கள் எதிர்காலம் எந்த ஊரில் - பெய்ஜிங்(சீனமொழியில்), வாஸ்டெரஸ்(ஸ்வீடிஷ் ஊர்) அல்லது பெங்களூரு(கன்னடத்தில்)? இதைப்பார்த்தவுடன் இங்கே லோக்கல் கன்னடியர்கள் சிலிர்த்து விட்டார்கள். இப்படி ஒரு மடல் வந்தது எனக்கு.

What is this?

Its a ad in a swedish magazine, about job openings in ABB

What does it say?

Is your future in Bejing(written in chinese), Västerås(sewdish city) or BENGALURU

KANNADIGARE IDU NIJAAKU HEMME PADABEKADA VISHYA.

தும்பா சரி. இருக்காதா பின்னே?

ஆமேலே நோடோனா. பர்த்தினி.

Monday, October 29, 2007

கிராமத்து பேருந்துப் பயணம்

என்றைக்குமே பழைய நினைவுகள் இனிமையானதே. அப்படி கிராமத்தின் பயணத்தைப் பற்றி எழுதிய கவிதையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்

http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_28.html

Friday, October 19, 2007

புத்தகவலம்

என்னய்யா யூட்யூபை வைத்து பதிவு நடத்துகிறாய் என்று அனைவரும்(சரி - ரிச்மண்டில் இருக்கும் இருவர்) கலாய்க்கிறார்கள். அதனால் யூட்யூப் பஜனை இல்லாத பதிவு இது.

முதலில் ஒரு அபூர்வமான படத்தைப் பாருங்க இங்கே. எல்லா ஆரஞ்சு கொக்குகளும் (அதாங்கோ ஃப்ளாமிங்கோ) சேர்ந்து ஒரு பெரிய ஆரஞ்சு கொக்கு செய்திருக்கின்றன. எங்கே ரூம் போட்டு யோசிச்சதுகளோ தெரியலை...

நேற்று ஒரு புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். A Certain Ambiguity: A Mathematical Novel - by Gaurav Suri & Hartosh Singh Bal

கணிதமேதையான ஒரு தாத்தா தன் பேரனுக்கு ஒரு கால்குலேட்டர் கொடுத்து புதிர்களின் மூலம் கணிதத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். பேரன் அமெரிக்கா போய் கணிதம் கற்கவேண்டும் என்று சொத்தை எழுதிவைத்து செத்துப் போகிறார். பேரன் அமெரிக்கா வந்து ஸ்டான்ஃபோர்டில் படிக்கிறான். தாத்தா 1919ல் நியுஜெர்ஸியில் சிறைத்தண்டனை பெற்றதை அறிகிறான். அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கணிதத்தை நாடுகிறார். புத்தகம் கைக்கு வந்ததும் மேலே சொல்கிறேன். :-) வேண்டுமானால் முதல் அத்தியாயத்தை படித்துக் கொள்ளுங்கள் இங்கே.

கணிதம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது சைமன் சிங்கின் புத்தகங்கள். அவருடைய கோட் புக் மிகவும் சுவாரசியமானது. ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரை மனிதன் எப்படி ரகசியமாக சங்கேத மொழியில்(encryption) தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விளக்குகிறார். ஜூலியஸ் சீஸர், ஸ்காட்லாந்து ராணியில் துவங்கி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா-இங்கிலாந்து ரகசிய தொடர்பு கொள்ள என்ன உத்திகள் எல்லாம் கையாண்டார்கள் என்று சுவாரசியமாக போகிறது புத்தகம்.


இந்த கணிணி உலகில் புழக்கத்தில் இருக்கும் என்கிரிப்ஷன் வகைகளும் சுலபமாக புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். மாணவர்கள் படிக்க நல்ல அழகான முறையில் விளக்கியிருக்கிறார். ஜெர்மனி உபயோகப்படுத்திய எனிக்மா கருவி மாணவர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய அருமையான தலைப்பு. வர்ஜினியாவில் புதையுண்டு இருக்கும் பொக்கிஷம் பற்றிய கதையும் சுவாரசியமானது. அதற்கான் வேட்டை இன்னும் வர்ஜினியாவின் லின்ச்பர்க் நகரில் நடக்கிறதாம். அடுத்த முறை அந்த பக்கம் போகும்போது கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.

அவருடைய பிக் பேங் தியரி பற்றிய புத்தகமும் அருமையானது. இந்த புத்தகமும் ஆதி காலத்திலிருந்து பல நாகரீகங்களில் உலகம் மற்றும் அண்டவெளியைப் பற்றி இருந்த பலவிதமான நம்பிக்கைகளில் ஆரம்பித்து இந்த நாள் வரை உலகம் உருவானதற்கான ஆராய்ச்சியைக் கோவையாக சொல்கிறார் சைமன். இவருடைய ஃப்ர்மட் தியரம் பற்றிய புத்தகமும் இந்த வகையில் ஆதிகாலத்து கணித மேதைகளில் ஆரம்பித்து தற்போதைய கண்டுபிடிப்பு வரை விளக்கியிருக்கிறார். இந்த புத்தகம்தான் பாதிக்கு மேல் எனக்கு OHT ஆகிவிட்டது(overhead transmission).

இந்த புத்தகங்களை எல்லாம் அண்மையில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் ஒன்றிருக்கிறது. பத்ரி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிக் இன்ஃபோ போன்ற தளங்களுக்கு காரணகர்த்தா. இப்போது இந்தியா திரும்பி கிழக்கு பதிப்பகம் என்ற பேரில் தமிழில் புத்தகங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த கிழக்குப் பதிப்பகம் அண்மையில் ஒருவரின் வரலாற்றை புத்தகமாக போட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த நபர் அகால மரணம் அடைந்தபோது நான் அடைந்த சோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.

இவர் இறந்து போன செய்தி கேட்டு, என் நண்பன் ஒருவன் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'தூக்கம் போச்சிடி அம்மா' என்று புலம்பிக் கொண்டிருந்தான். கரெக்ட்! சிலுக்கின் வாழ்க்கை வரலாறுதான் புத்தகமாக வந்திருக்கிறது. இந்த தாளாத துயரத்தைத் தணிக்க - புத்தகம் வந்ததற்கல்ல - எத்தனை முறை மூன்றாம் பிறை பார்த்தாலும் போதாது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் யாராவது இந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தால் என் ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுக்கிறேன்.(தமிழ் சங்க பொருளாளரிடம் சொல்லாதீர்கள்)



இப்போது நான் படித்துக் கொண்டிருப்பது மீரா காம்தார் எழுதிய Planet India. 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் சைனாவுக்கும்தான் சொந்தம் என்கிறார். உலகநாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்தியா என்கிறார். தட்பவெப்பத்தில் பார்த்தால் இமாலயக் குளிரிலிருந்து ராஜபுதன பாலைவன சூடுவரை... அரசியலில் பார்த்தால் கம்யூனிஸ்டுகளில் இருந்து மன்மோகன் சிங் வரை.... சினிமா, பொருளாதாரம், ஏழ்மை, பணம் அனைத்து எல்லா விளிம்புகளையும் அடங்கியதால், இந்தியாவே ஒரு சிறிய உலகம் போன்றது என்றும், எப்படி இந்தியா உலகத்தின் முக்கிய நாடாக திகழப்போகிறது என்று சொல்கிறார் மீரா.


நான் சதங்காவுடன் கூட்டணியை முழுமையாகத் துண்டித்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிக்கட்சிக்காக அல்ல. சுஜாதாவைப் பிடிக்காதாம். அதாவது படித்ததே இல்லை என்கிறார் மனுஷன். தமிழ்நாட்டில் எந்த குகையில் இருந்தார் என்று தெரியவில்லை. சுஜாதா படிக்காத நபர் யாராவது இருப்பார்களா? பிடிப்பது பிடிக்காதது அடுத்த விஷயம். அப்புறம் பிடித்த எழுத்தாளர் என்று நான் கேள்விப்படாத பெயர் எல்லாம் சொல்கிறார். அவருடைய தமிழ் வாத்தியார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த மற்றொரு எழுத்தாளர் அண்மையில் மறைந்த ஆர்ட் பக்வால்ட். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கடைசி பக்கம் நினைவிருக்கிறதா? அதற்காக வாரம் முழுவதும் காத்திருப்பேன். பள்ளியில் ஒருமுறை நான் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு என் ஆசிரியர் 'ஆர்ட் புக்வால்ட்' ரொம்ப படிப்பியா என்று கேட்டார். நியுயார்க் டைம்ஸில் புகழ்பெற்ற மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே கடைசி பேட்டி காண்கிறார்கள். அதில் அவருக்கே உரித்த பாணியில் அவருடைய மரணத்தை அவரே அறிவிப்பதை பாருங்கள். மனுஷன் சிரித்துக் கொண்டே அழவைக்கிறார். சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் P.G.Wodehouse. ரொம்ப நாள் கழித்து சில புத்தகங்களை படித்தேன்(மகனும் விரும்பிப் படிக்கிறான் - மகனுடன் புத்தகத்துக்கு சண்டை போடுவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை). உங்களுக்கு இரண்டு வினாடி வினா கேள்விகள்(அது என்ன வினா கேள்வின்னு கேக்கப்படாது).

1. ஜீவ்ஸின் முதல் பெயர்(first name) என்ன?
2. பெர்ட்ரம் வூஸ்டரின் நடுப் பெயர்(middle name) என்ன?

சரியான பதில் அளிப்பவருக்கு சிலுக்கு புத்தகத்திற்கு கொடுத்தது போக அடுத்த பாதி ராஜ்ஜியம்.

வர்ட்டா.... Toodle-oooo!!!

Thursday, October 18, 2007

ராம்ஜியின் இசை மழலை

இன்று மின்னஞ்சலில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. அதில் ஆங்கிலத்தில் Issai Mazhalaiயின் கச்சேரி என்றிருந்தது. முதலில் மழை என்று எழுதுவதில் எழுத்துப்பிழை என்று நினைத்தேன். சரி கூகுளாண்டவரிடம் முதலில் கேட்கலாம் என்று பார்த்தால் ஒரே ஆச்சரியம். சிறிய பெரிய குழந்தைகளை வைத்து அபஸ்வரம் ராம்ஜி நடத்தும் இசைக்குழு இது.

யூட்யூபில் தேடினாலும் நிறைய கிடைக்கிறது. சில பாடல்களைப் பார்த்தேன். எனக்கு பிடித்த பிபரே ராமரஸம் பாடலை இந்த குட்டிப்பையன் அனந்தராமன்(நம்ம ஊர்ல இப்படி ஒரு பேரா?) கலக்கிப் போட்டிருக்கிறான் பாருங்கள். என்ன குரல், என்ன திறமை.... அற்புதம். அதுவும் எப்படி அனுபவித்துப் பாடுகிறான்.... பெரிய ஆளாக வருவான் பாருங்கள்.




இசை மழலையைப் பற்றி என் நண்பனிடம் கேட்டேன். இவ்வளவு நாள் எந்த குகையில் இருந்தாயடா என்கிறான். மூன்று வருஷங்களாக ஜெயா டீவியில் வருகிறதாம் இ.ம. பார்க்கலாம் என்னைப் போல் குகைவாசிகள் எத்தனை பேர் என்று....


குகையில் இருந்து வெளியே வந்தால் எவ்வளவோ விஷயங்கள் தெரிகிறது. இங்கே பாருங்கள். மருதமலை மாமணியேன்னு ஒரு சின்ன பையன். சும்மா அதிருதுல்ல...

Tuesday, October 16, 2007

கொலு பாக்க வாங்க!

இந்த வருஷமும் எங்க ஊர்ல நவராத்திரி 'கொலு' கட்டியிருக்கே...

மிட்லோதியனில் வசிக்கும் பார்கவி - கணேஷ் தம்பதியினரின் வீட்டில் வைத்திருக்கும் அட்டகாசமான கொலுவுடன் ஆரம்பிக்கலாம்.



அடிக்கடி இங்க வந்து பாருங்க. உங்க வீட்டு கொலு படங்களை இங்கே சேர்க்கனுமா? richmondtamilsangam க்கு gmail.com ல ஒரு மின்மடல் படங்களுடன் அனுப்புங்க...

சென்னையில் பக்கத்து வீட்டு கொலு!

மழைக் காலம்

மழையைப் பற்றி எவ்வளவோ கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். நாமும் ஒன்று எழுதிப் பார்ப்போமே என்று தோன்றியதை ஒரு கவிதையாய் எழுதி எனது வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_16.html

Tuesday, October 09, 2007

வாஷிங்டன் - சென்னை பயண உதவி

அக்டோபர் 11ம் தேதி இரவு 10 மணிக்கு வாஷிங்டன் ட்ல்லஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸில் லண்டன் வழியாக சென்னை செல்வோர் யாராவது இருந்தால் ஒரு உதவி தேவைப்படுகிறது. நமது முன்னாள் தலைவர் வெங்கட் செட்டியாரின் தாயார் தனியாக பிரயாணம் செய்யவிருக்கிறார். அவர் ஏற்கனவே பயணம் செய்தவர்தான். யாராவது வழித்தடத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், லண்டனில் சரியான கேட்'டில் ஏறுவதற்கும், நம்ம ஊர் ஏர் ஹோஸ்டஸ் "பய நிகல் கவனத்திற்கு" என்று ஆரம்பித்து பேசும் தமிழை மொழி பெயர்க்கவும், சற்று உதவி செய்தால் போதுமானது.

நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பயணம் செய்யவிருப்பின், வெங்கட் அவர்களை 804-346-8238 என்ற எண்ணில் அழைத்துப் பேசலாம்.

Tuesday, October 02, 2007

நியுயார்க்கின் சிறந்த தெருவோர உணவகம் - NY Dosas

நியுயார்க் நகரத்தின் தெருவோர உணவகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் சிறந்த கடைகளை தேர்ந்தெடுத்து வெண்டி அவார்ட்ஸ் என்ற பரிசை அளிக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் திரு குமார். தோசா மேன் என்று அழைக்கப்படும் கந்தசாமி திருகுமார் ஈழத்தில் இருந்து வந்தவர். வேகன் முறையில் நெய், வெண்ணெய் இல்லாமல் இவர் சுடச்சுட சமைக்கும் தோசைகள் பறக்கின்றன. பல நியுயார்க் சுற்றுலா இதழ்களில்(Tour Guide), நியுயார்க் நகரில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியலில் இவருடைய தோசைக்கடையையும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் வெண்டி அவார்ட்ஸ்க்கு கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களை கீழே காணலாம்



தெருவோர கடையாய் இருந்தால் தரங்குறைவான எண்ணெய், காய்கறிகள் உபயோகிப்பார்கள் என்ற பரவலான கருத்தை பொய்ப்பிப்பதே என் நோக்கம் என்கிறார் திரு குமார்.

Monday, October 01, 2007

பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 3 - இந்திரா நூயி

இந்த எந்திர உலகில், மனிதர்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டிருக்கிறது. நெருங்கிய பால்ய நண்பர்களே, தொலைபேசியில் அழைத்தாலோ, மின்னஞ்சல் செய்தாலோ, அவர்களின் புலம்பல் தான் வெகுவாக இருக்கிறதே அன்றி நம்பிக்கை வலுப்பதில்லை ;-(

நமது வாழ்வில் ஒரு சிலரைப் பார்க்கையில், அவர்களைப் பற்றி படிக்கையில் ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை வலுக்கும். அப்படி ஒருவரைப் பற்றி சமீபத்தில், நம் தமிழ் சங்கத் தலைவர் நாகு மூலம் அறியப் பெற்றேன்.



நூயி அவர்களின் பெருமையை நம்ம வீட்டு அம்மணியிடம் சொல்லி அசத்தலாம் என்று பார்த்தால், இவரைப் பற்றி எனக்கு முன்பே தெரியுமே என்று சொல்லி நம்மை அசத்தி விட்டார்.

இந்திரா நூயி ! என்னது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணி கூகுளாரிடம் முறையிட்டால், கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார் இந்தப் பவர்புல் பெண்மணியைப் பற்றி. தொழில்துறை பத்திரிகைகள் அனைத்திலும் இவரைப் பற்றி செய்தி தான் ப்ரதானம். "இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்கத் தொழில்துறை அரசி" என்ற பட்டத்துடன் விவரிக்கிறது Times of India.

என்றாவது நெற்றியில் திருநீறு (ஒரு சிறு கீற்று) அணிந்து வேலைக்குச் செல்வது நம் போன்ற சிலரின் வழக்கம். அதையே சில நண்பர்கள் (வெள்ளைக்காரர்கள் என்று நினைக்காதீர்கள், பக்கா இந்தியர்கள் தான்) இதெல்லாம் ஏன் வைத்து வருகிறீர்கள் ! இவர்களுக்குப் பிடிக்காது தெரியுமா என்று ஜால்ரா அடிப்பார்கள்.

ஆனால் நூயி அவர்கள், 1980ல் Yale பல்கலைக் கழகத்தில் பயிற்சி முடிந்து Boston Consulting Group என்னும் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்கு, நம் பாரம்பரிய உடை சேலையில் சென்றிருக்கிறார். வேலையும் வாங்கியிருக்கிறார் !

நூயி அவர்களைப் பற்றிய மேலும் சில ப்ரமிப்புக்கள் :

தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக பவர்ஃபுல் பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். 2005ம் ஆண்டு கணக்கெடுப்பில் பதினோறாம் இடத்தில் இருந்தவர்.

2000ல் Chief financial officer பொறுப்பேற்ற பின்பு பெப்சி நிறுவனத்தின் ஆண்டு ரெவின்யூ 72% கூடியிருக்கிறது.

இந்த 2007 மே மாதம் பெப்சி நிறுவனத்தின் சேர்மன் & CEO ஆகியவர்.

நம் நாட்டின் மிகச் சிறந்த விருதுகளின் ஒன்றான பத்மபூசன் விருது பெற்றவர்.

மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

தற்போது கணவருடனும், இரு மகள்களுடனும் கனெக்டிக்கட்-ல் வசித்து வருகிறார்.

நூயி அவர்களைப் பற்றிய வீடியோ காட்சி:

Friday, September 28, 2007

டெக்ஸாஸில் கள்ள ஓட்டு

நம்ம ஊர் அரசியல்வாதிகளாவது அடியாட்களை வைத்து பொதுத் தேர்தலில்தான் கள்ள ஓட்டு போடுகிறார்கள். இங்கே பாருங்கள் சட்டசபையிலேயே மக்களின் பிரதிநிதிகள் ஜமாய்க்கிறார்கள். சுழன்று சுழன்று வேலை செய்கிறார்கள். பாயும் புலிகளாக இருக்கிறார்கள் பாருங்களேன்!



பண்ணுவதையும் பண்ணிவிட்டு அதற்கு சால்ஜாப்பு வேறு. நம்ம ஊரில் இவ்வளவு டெக்னாலஜி வந்திருக்கிறதா என்று தெரியவில்லை. வந்தால் நம்ப ஆட்கள் ஸ்கோர் போர்டிலேயே மேட்டரை முடித்து விடுவார்கள் :-)

நமக்கே பதிவு எழுத விஷயம் கிடைக்க மாட்டென்கிறது. இதில் நம்ம கூட்டணி கட்சிகள் வேறு முந்திவிடுகின்றன. இனி பதியக்கூடிய மேட்டர் எல்லாம் பதிந்து விட்டுதான் மக்களை ஸ்பேம் பண்ண வேண்டும் :-)

Thursday, September 27, 2007

Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ

நாகு அவர்களின் ஒரு மின்னஞ்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அப்படியே சுட்டு ஒரு பதிவா போட்டாச்சு. வந்து ரசிச்சிட்டுப் போங்க.

http://vazhakkampol.blogspot.com/2007/09/jimmy-kimmel-explains-what-miss-teen.html

Sunday, September 23, 2007

டூரிங் டாக்கீஸ்

என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்னும் இந்த டூரிங் டாக்கீஸ் உயிர் பெற்றிருப்பதைப் பல கிராமங்களில் இன்றும் நாம் காணலாம். சுமார் இருபது ஆண்டுகள் முன்னால் இது போல் எங்கள் ஊரிலும் ஒரு டாக்கீஸ் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் அதன் நினனவுகள் இன்றும் மனதில் நிற்பவை. அதன் நினைவாய் எழுதிய எனது கவிதை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_22.html

Friday, September 21, 2007

இந்தியா மகத்தான வெற்றி...

இரண்டு நாட்களுக்கு முன்னே ஒரு நண்பனிடம் சாட்'டிக்கொண்டிருக்கும்போது கேட்டேன், "இங்கிலாந்தையும் ஜெயித்து, சவுத் ஆஃப்ரிக்காவையும் ஜெயித்து, நல்ல ரன் ரேட் இருந்தால் இந்தியா செமி ஃபைனல்ஸ் போகுமாம்?". ஏதாவது நடக்கிற காரியமா பேசு என்றான் அவன். எனக்கும் நம்பிக்கையில்லை. ஆனால் இளைஞர்கள் என்னமாக ஆடினார்கள். இங்கிலாந்து மேட்சில் யுவராஜின் விளாசல் என்ன? சவுத் ஆஃப்ரிக்காவுடன் இருபதே வயதான முதல் ஆட்டம் ஆடும் ரோஹித்தின் ஆட்டம் என்ன... இருவத்தோரு வயதான ருத்ரப்ரதாப் சிங்கின் பவுலிங் என்ன...

அற்புதம். நீங்களே பாருங்களேன்...

இந்தியாவின் இன்னிங்ஸின் முக்கிய பாகங்கள்.



இந்திய பவுலிங் - முதல் பாகம்




இந்திய பவுலிங் - இரண்டாம் பாகம்



யுவ்ராஜ் சிங்கின் ஆறு சிக்ஸர்கள். வேறு எந்த வர்ணனையைவிட பங்க்ரா இசை எப்படி பட்டையை கிளப்புது பாருங்க!


யுவராஜை ஃப்ளிண்டாஃப் வெறியேற்றிவிட்டாராம். இருவரும் முறைத்துக் கொண்டு போகும்போது வர்ணனையாளர், "நானாக இருந்தால் இந்த நேரத்தில் யுவராஜிடம் ஒன்றும் வைத்துக்கொள்ளமாட்டேன்", என்று சொல்லி முடிக்கவில்லை. வாணவேடிக்கை ஆரம்பமாகிவிட்டது!



பாகிஸ்தானுடன் ஆடிய ஆட்டம் தமாஷாக முடிந்தது. சர்வதேச அளவில் ஆடும் பௌலர்களுக்கு வெறும் விக்கெட்டுக்கு பந்து போட்டு வீழ்த்தவா முடியாது? அதுவும் மூன்று பௌலர்களும்? எனக்கு என்னவோ பொட்டி வாங்கினார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

ஆட்டங்களை பார்க்க வலையில் இரண்டு வழி இருக்கின்றன. சொன்னால் அப்புறம் நான் பார்ப்பதை கெடுத்து விடுவீர்கள் :-) வேண்டுமானால் கூகுளாண்டவரிடம் sopcast tvuplayer என்று முறையிட்டுப் பாருங்கள்!

Thursday, September 20, 2007

மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்

கொஞ்ச நாள் முன்னால் ஆரம்பித்து கிடப்பில் கிடந்தது இக்கதை. இன்று கிடைத்த சிறு ஓய்வில் எழுதி முடித்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_2111.html

Wednesday, September 19, 2007

ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)

சமீபத்தில் இருவர் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு பாடல் அப்படியே அற்புதமாய் M.G.R.ஐ இமிடேட் செய்திருப்பார் மோகன்லால். அதைப் பற்றி எனது பதிவை இங்கே காணலாம்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/flashback.html

Tuesday, September 11, 2007

வலைவலம்

ஒருவனுக்கு சாப்பிட மீனைக் கொடுத்தால் அவன் அன்று மட்டும்தான் சாப்பிடுவான். அதைவிட அவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவன் வாழ்நாள் முழுதும் சாப்பிடுவான் என்கிறது ஒரு சீனப்(?) பழமொழி. அந்த பழமொழியைச் செயல்படுத்தும் இரண்டு பொதுப்பணி நிறுவனங்களைப் பற்றி பார்க்கலாம்.



முதலாவது கிவா! கிவா'வின் திட்டம் மிக எளிது. சுயமாகத் தொழில் செய்ய விரும்பும் ஏழைமக்களுக்கு தேவையான சிறுகடன்(மைக்ரோக்ரெடிட்) கொடுப்பது. நீங்கள் உங்கள் கணணியில் இவர்களைப் பற்றி படித்துவிட்டு இருபத்தைந்து டாலரில் இருந்து தேவைப்பட்ட அளவு கொடுக்கலாம். அவர்கள் அந்த கடனை அடைக்கும்போது நீங்கள் மீண்டும் வேறு யாருக்காவது கடன் கொடுக்கலாம் அல்லது உங்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். கிவா நிறுவனம் பல நாடுகளில் உள்ள சேவை நிறுவனங்கள், மற்றும் மைக்ரோகிரெடிட் நிறுவனங்களுடன் சேர்ந்து உங்கள் கடனை அப்படியே தேவைப்படும் மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கிவா தளத்தில் படியுங்கள். நியுயார்க் டைம்ஸின் இந்த வீடியோவும் சுவாரசியமானது.

PBS-ன் செய்தித் தொகுப்பை இங்கே பாருங்கள்.


நான் கிவாவைப் பற்றி கேள்விப்பட்டது இந்த பதிவின் மூலம்.

ஆனால என்ன ஒரு வேடிக்கை என்றால், அண்மையில் கிவாவுக்கு ஆப்ரா வின்ஃப்ரி மூலம் நல்ல விளம்பரம் கிடைத்ததால், அனைத்து கடன்களுக்கும் பண உதவி கிடைத்துவிட்டது. நீங்கள் கடன் கொடுக்க இப்போது ஆளில்லை. ஆனால் தளத்தை அவ்வப்போது பார்த்துக் கொண்டே இருங்கள். கிவா நிறுவனம் கடன் கொடுக்க தகுதியானவர்களை மும்முரமாக தேடி தளத்தில் சேர்த்துக் கொண்டே இருக்கிறது. ஒரு உபகதையாக ஆப்ராவுக்கு நன்கொடை செய்ய ஐடியா கொடுத்த ஒரு சிறுமியின் கதையையும் படியுங்கள்.





இரண்டாவது நிறுவனம் ரூம் டு ரீட். இந்த நிறுவனத்தை ஜான் வுட் ஆரம்பித்த கதை ரொம்ப சுவாரசியமானது. மைக்ரோசாஃப்டில் ஒரு நல்ல வேலையில் இருந்த ஜான் வுட் நேபாளத்தில் ஒரு முறை மலையேற்றம் செய்யப் போயிருந்தபோது ஒரு சின்னஞ்சிறு பள்ளிக்கூடத்தை பார்க்கிறார். அங்கு இருக்கும் புத்தகங்களெல்லாம் இவர் மாதிரி மலையேறும் மக்கள் போட்டுவிட்டுப்போன புத்தகங்கள், வார இதழ்கள். அவற்றுள் பல குழந்தைகளுக்கு உகந்ததுமல்ல. ஆசிரியர்களோ குழந்தைகளுக்கு படிப்பு சொல்லத் துடிக்கிறார்கள். இவர்களுக்கு எப்படி உதவலாம் என்று ஜான் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்த தலைமை ஆசிரியர் சொன்ன ஒரு வாக்கியம் தன் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டது என்கிறார் ஜான். அந்த தலைமை ஆசிரியர் சொன்னது இதுதான்:

"Perhaps, Sir, you will some day come back with books".

அந்த கதையை அவர் சொல்லியே கேளுங்கள்.



அந்த பள்ளிக்கு சில புத்தகங்கள் கொடுக்கலாம் என்று ஆரம்பித்த முயற்சி இன்று ஒரு மிகப் பெரிய பொதுச்சேவை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே அதன் முதல் அத்தியாயத்தைப் படித்துப் பாருங்களேன்.

ஜான் வுட்'டின் நிறுவனம் இன்று பள்ளிக்கூடங்களில் நூலகம் நிறுவுவதில் இருந்து நூதனமான முறையில் பள்ளிக்கூடங்களே கட்டிக் கொடுப்பதும் பெண் குழந்தைகளுக்கு படிக்க பண உதவி தருவதுமாக கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஒரு சிறு கிராமத்தில் உங்கள் பெயர் போட்ட நூலகம் நிறுவத் தயாரா?

கோப்பையிலே உன் குடியிருப்பு - ரோஜர் ஃபெடெரர்

வணக்கம் நண்பர்களே.

சமீபத்தில் US Open வென்ற நாயகன் Roger Federer பற்றி எழுத வேண்டும் என்று, அவர் வென்றதிலிருந்து என் மனதுள் ஒரே போட்டி ... அதன் விளைவாய் எழுதிய கவிதை இங்கே. கவிதையைப் பற்றி உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரிவியுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post.html

Wednesday, September 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 15

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/09/15.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

விமானத்தின் முன் கிடா வெட்டிய நேபாள ஏர்லைன்ஸ்

ப்ளாகிகள் மாநாட்டில் கிடா வெட்டுவதாக தெரியவில்லை. ஆனால் ஒரு பிரபல தினசரியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியை படிக்கவும்.

காத்மாண்டு: நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், இந்து கடவுளின் அருள் வேண்டி இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. நேபாள ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங்-757 ரக விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. கோளாறை சரி செய்வதாகக் கருதி, இந்து கடவுளான ஆகாஷ் பைரவ் அருள் வேண்டி, விமானத்தின் முன் இரண்டு ஆடுகள் பலியிடப்பட்டன. வான்வெளி பாதுகாப்பில் ஆகாஷ் பைரவ் பாதுகாப்பாக இருப்பார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இந்த சடங்குக்கு பின், அந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரியானது. இதன் பின், விமானம் வெற்றிகரமாக ஹாங்காங்குக்கு புறப்பட்டது, என்று விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி கே.சி.ராஜூ தெரிவித்தார். நேபாள ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு மொத்தம் இரண்டு போயிங் விமானங்கள் உள்ளன. இதில், ஒரு விமானத்தில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால், விமானப் பயணம் பலமுறை ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து நேபாள ஏர்லைன்ஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு மின் கோளாறு தான் காரணம் என்று சில உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

Monday, September 03, 2007

ஆன்மீகச் சொற்பொழிவுகள்

ராதே க்ருஷ்ணா
கலிபோர்னியாவிலிருந்து இயங்கும் Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) என்ற தொண்டு நிறுவனமும் தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பக்தர்களால் நடத்தப் பட்டு வரும் மதுரமுரளி-சைதன்ய மஹா ப்ரபு நாம பிக்க்ஷா கேந்ரா (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இரு ஆன்மீகப் பேச்சாளர்களைக் கொண்டு அமெரிக்காவின் பல பகுதிகளில் சொற்பொழிவுகளை நடத்த உள்ளனர். சொற்பொழிவுகள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் நடைபெற உள்ளது. இவர்கள் பற்றிய மற்ற விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.









இவர்கள் செப்டம்பர் 12ம் தேதிமுதல் 23-ம் தேதிவரை நமது ரிச்மண்டில் தங்கியிருந்து சொற்பொழிவுகள் நிகழ்த்த உள்ளார்கள். அது பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. மேலும் விவரம் வேண்டுவோர் மாலதி முரளியை (804) 747-7997 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது malamurali@yahoo.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது http://godivinity.org/ என்ற வலைதளத்திலிருந்து தெரிந்து கொள்ளவும்.

Radhe Krishna
Non profit organization Global Organization for Divinity (GOD) (http://godivinity.org/) of California, joins hands with a non profit organization Madhuramurali - Chaithanya Maha Prabhu Naama Bhiksha Kendra of Chennai (http://www.madhuramurali.org/) (http://www.namadwaar.org/) run by the followers of Sri Sri Muralidhara Swamiji, in bringing two spiritual speakers to give Discourses at various places in USA. The Discourses will be in Tamil, English and Hindi. To learn more about the speakers and the mission, please refer to the attached flyers.
The speakers will be staying in Richmond from 12th September to 23rd September giving discourses on various topics. The Schedules are detailed below. If you require further details on the satsang schedules, please contact Malathi Murali @ (804) 747-7997 or send an email to malamurali@yahoo.com or visit http://godivinity.org/

Bhakthi Margam and Power of Nama in English by Sri Ramanujam
On Tuesday, 9/18/07 7:00 pm – 8:00 pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]
Bhaktha Vijayam in Tamil by Kumari Poornima
On Wednesday, 9/19/07 7:00 pm – 8:30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]
Guru Bhakthi in Tamil by Kumari Poornima
Thursday, 9/20/07 - 7:00 pm - 8:00 pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]
Bhajan & Satsang by Kumari Poornima
On Friday, 9/21/07 - 7:00 pm - 8:30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

Beyond Meditation – Self Discovery in English by Kumari Poornima
On Saturday, 9/22/07 - 3:00 pm – 5:00pm @ Twin Hickory Area Library, 5001 Twin Hickory Road, Glen Allen, VA 23059 [Directions]
Unshackling the mind for everlasting peace in English by Kumari Poornima

On Sunday, 9/23/07 - 4:00 pm – 6.00 pm @ Hindu Center of Virginia, 6051 Springfield Road, Glen Allen, VA 23060. [Directions]
Sita Kalyanam by Kumari Poornima
On Monday, 9/24/07 - 7.00 pm – 8.30 pm @ Residence of Malathi Murali, 5517, Holman Dr, Glen Allen, VA 23059 [Directions]

ராதே க்ருஷ்ணா

Sunday, September 02, 2007

பட்டாம்பூச்சி

பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சி
பார்க்கும் இடமெல்லாம் பட்டாம்பூச்சி
படம் பிடிக்க விடாமல்
பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சி!

படம் பாரு கடி கேளு - 16


அமெரிக்காவுக்கு மாம்பழம் export பண்ண ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சாங்க Qality Control ஆளுங்க ரொம்ப தான் படுத்தறாங்க. அந்த ஒரு அழுகல் மாம்பழத்தை கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சேன். கை தவறி எங்கேயோ விழுந்திடுச்சு. மீண்டும் எப்படி கண்டுபிடிக்கப்போறேனோ!

படம் பாரு கடி கேளு - 15


அந்த ஓட்டு மெஷினை தொடாதே!
உனக்கு எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன் ஓட்டு மெஷினுக்கு மேட்சிங்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு வரணும்னு! இப்போ என்னை பாரு!

படம் பாரு கடி கேளு - 14


ஜிப்பா காரர்: யோவ், சீக்கிரம் போட்டோ எடுய்யா. நானே இந்த உண்ணாவிரதம் எப்போ முடியும்னு காத்துக்கிட்டு இருந்தேன். இந்த ஆளு வேற போஸ் குடுக்கிறாரு. சட்டு புட்டுன்னு போட்டோ எடு. எங்க வூட்டுல இன்னிக்கு மீன் கொழம்பு போலிருக்கு. வாசனை இங்கே வரைக்கும் வந்து மூக்க தொளைக்குது.

Friday, August 31, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 14

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/08/60-60.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Monday, August 27, 2007

நம்ப ஊர் பதிவுகள் - நம்ம ஊர் வலைவலம்

என்னடா இது, இந்த ரிச்மண்டுக்கு வந்த சோதனை? இதில் எழுதிக்கொண்டு இருந்த மக்களைக் காணவில்லை. கோடை விடுமுறையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் போலிருக்கிறது. பித்தனாவது பரவாயில்லை. தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டு நம்முடன் கூட்டணி வைத்திருக்கிறார். இந்த சதங்கா இருக்கிறாரே - சத்தம் போடாமல் தனிக்கட்சி ஆரம்பித்துவிட்டார். தமிழ்மணத்தில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். என்னய்யா தனியாக மைக் பிடித்து விட்டீர் என்றேன். கொள்கை அடிப்படையில் தனியாக போய்விட்டேன் என்று சொல்லிவிட்டார். நான் 'இஞ்சி' தின்ற குரங்கு மாதிரி ஆகிவிட்டேன். அவ்வப்போது நான் ரொம்ப அழுதால், ஒரு இஞ்சி, மன்னிக்கவும், ஒரு பதிவு இங்கே போடுகிறேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். வாரத்துக்கு ஒருமுறை புலம்புவதாக உத்தேசம்.

தமிழ்மணத்தின் பூங்கா வலை இதழில் சதங்காவின் யானைக்கவிதை வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

பரதேசியாரும் காணோம். சென்னைக்கு போய்விட்டு வந்து இன்னும் பரதேசி மனநிலைக்கு வரவில்லையோ என்று நினைத்துக் கூப்பிட்டேன். தலைக்கு மேல் வேலையாம். அவர்தான் இந்த பதிவை ரொம்ப நாள் ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றி வந்தார். இன்னும் ஒரு வாரம் பார்த்துவிட்டு கூப்பிட்டு "தமிழ் சங்கப் பதிவுக்கோர் குறை நேர்ந்தால் உனக்கன்றி எனக்கில்லை" என்று பாடப்போகிறேன்.

காணாமல் போன தேனப்பனை பிடித்துக் கொடுக்கும் நபருக்கு ஒரு குறிஞ்சிப்பூ பரிசு கொடுக்கப்படும். அவர் கதையை அடுத்த பதினோரு வருஷத்துக்கு கேட்கக்கூடாது என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

நம் ஊரில் தனிக்கட்சி நடத்தும் மற்ற சிலரைப் பார்ப்போம். நம் தமிழ் சங்க வெப் மாஸ்டர் கதையைப் பாருங்கள். தனிமரம் காடான கதையாய் ஒரே ஆளாய் பல பேரில் கூட்டணி நடத்துகிறார். அவருடைய புகைப்படங்கள் மிகவும் அருமையானவை. ஜெயகாந்தன் என்றால் சும்மாவா?

எங்க ஊரு பாட்டுக்காரன் பதிவைப் பாருங்கள். தமிழ் சங்க கல்லாப்பெட்டிக்காரர் அரவிந்தின் பாடல்கள் அருமையாக இருக்கின்றன. அரவிந்தன் மட்டும் எழுதினால், அவர் வீட்டில் சும்மா இருப்பார்களா? முப்பது நாளில் முப்பது பதிவுகள் என்று ஒரு சாதனை செய்திருக்கிறார் சுபத்ரா. அவருடைய பதிவு இதோ. ஆனால் கல்லாப்பெட்டி ரொம்ப மோசம். அவர் படிக்கும் பதிவுகள் என்ற வரிசையில் மனைவியின் பதிவை கடைசியில் குறிப்பிடுகிறார்(ஏதோ நம்மால் ஆன கைங்கரியம் :-)

எல்லோர் பதிவையும் சொல்லிவிட்டு இந்த பதிவைச் சொல்லாவிட்டால் எனக்கே புவ்வா கிடைக்காது :-) அப்படியே நம் புத்திர சிகாமணிகள் பதிவுகளும் இங்கே (ஒன்றா, இரண்டா) இருக்கின்றன.

அட மறந்தே விட்டேன். ரிச்மண்டில் அனைவரையும் எழுத வைக்க மூல காரணமே கவிநயாதான். அவருடைய வலைத்தளத்தில் புதிதாக ஏதும் காணவில்லை. அன்புடன் ஜோதியில் கலந்திருக்கிறார் போல. அவர்தான் இயலிலும் நாட்டியத்திலும் கலக்குகிறார் என்றால் அவர் மகன் எனம்மா இசையை விட்டு வைத்தீர்கள் என்ற தோரணையில் மேற்கத்திய இசையில் கலக்குகிறான். எனக்கு ஒரே ஆச்சரியம் அரவிந்த் கேட்கும் மேற்கத்திய இசை எல்லாம் எனக்குப் பிடித்த கிளாஸிக் ராக்! அவனது இசையிலும் அதன் தாக்கம் தெரிகிறது. மேலும் தொடர்ந்து இசையில் சாதனை புரிய என் வாழ்த்துக்கள்.

எனக்குத் தெரிந்த ரிச்மண்ட் பதிவுகள் இவ்வளவுதான். உங்களுக்கு தெரிந்த ரிச்மண்ட்காரர்களின் பதிவுகளையும், வலைத்தளங்களையும் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Tuesday, August 21, 2007

அதிர வைக்கும் கூகுள்

எங்கும் வியாபித்திருக்கும் எம்பெருமான் கூகுளை விட்டுவைப்பாரா? கூகுள் 60வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களுக்கு சில மென்பொருள்களை வழங்கியிருக்கிறது.

தமிழில் தேட வசதியாக ஒரு விட்ஜெட் அளித்திருக்கிறார்கள். அதில் உதாரண தேடுசொல் அதிர வைக்கிறது. வாழ்க கூகுள். தமிழில் தேடுவதற்கு மிக எளிய முறையில் வசதி இருக்கிறது இந்த விட்ஜெட்டில். இந்த விட்ஜெட் வலது பக்கத்தில் சேர்க்க யாராவது உதவினால் நன்றாக இருக்கும். அதுவரை கீழே தமிழில் அடித்துவிட்டு, வலப்பக்கத்தில் வெட்டி ஒட்டி இந்தப் பதிவில் தேடலாம்.



மேலே தமிழைத் தடவித் தடவி அடித்து என்ன ஆகிறது என்று பாருங்கள். தேடல் பக்கம் முழுவதும் தமிழில்!

நிரல் துண்டை உடனே அனுப்பிய நம் வெப்மாஸ்டர் ஜெயகாந்தனுக்கு ஒரு 'ஓ'

Tuesday, August 07, 2007

கிராமத்து தேநீர்க் கடை



பின்னிய கீற்றுக் கொட்டகையில்
மண்ணில் முளைத்த மரத்தூண்கள்

திண்ணை இருக்குது இருபுறம்
அதில் ஒட்டியிருக்குது விளம்பரம்

திட்டம் போட்ட கூட்டமில்லை
கட்டை மேசை மாநாடு

விடியல் கருக்கும் வேளையிலே
மாமன் மச்சான் உறவுகள்

புழுதி பரப்பும் பேருந்தில்
பருத்த செய்தித்தாள் வர

ஆளுக் கொன்றாய் பிரித்தெடுத்து ...

அருந்தத் தேநீர் சிலநேரம்
அரசியல் அலசப் பலநேரம்.

Sunday, July 29, 2007

பிடிவாதம்

அரண்டு புரண்டு அழுது சாதிப்பது குழந்தையின் பிடிவாதம்
படிப்பதைவிட வேறெதாவது செய்வது பிள்ளையின் பிடிவாதம்
பரிட்சைக்கு படி படி என்று பாட்டு பாடுவது தந்தையின் பிடிவாதம்
சாப்பிடு சாப்பிடு என்று சமைத்து தொந்தரவு செய்வது தாயின் பிடிவாதம்
கணனியில் பொழுதைக் கழிப்பேன் கடைக்கு வரமாட்டேன் என்று கணவனின் பிடிவாதம்
கோடி கொடுத்தாலும் கொல்லையில் புல் வெட்ட மாட்டேன் என்று மனைவியின் பிடிவாதம்
படத்துக்கு போகலாம் என்றால் சாக்கு சொல்வது நண்பனின் பிடிவாதம்
தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று தோழியின் பிடிவாதம்
காதலுக்கு பச்சைகொடி காட்டும்வரை கவிதைமழை பொழிவது காதலனின் பிடிவாதம்
கல்யாணம் செய்தால் காதலனுடந்தான் என்று காதலியின் பிடிவாதம்
பட்டு சட்டை போடவில்லையா என் பேராண்டி என்று தாத்தாவின் பிடிவாதம்
பொன்சங்கிலி பூட்டவில்லையா என் பேத்தி என்று பாட்டியின் பிடிவாதம்
மருமகள் சொல்வதை கேட்கவேண்டுமா என்று மாமியாரின் பிடிவாதம்
மாப்பிள்ளைக்கு தன் கையால் கூட பரிமாறவேண்டுமென்று மாமானாரின் பிடிவாதம்

பிடிவாதம், பிடிவாதம், பிடிவாதம் உலகில் இன்னும் பல பிடிவாதம்

Wednesday, July 25, 2007

மரங்கள்

சிறுவயதிலிருந்தே மரங்களின் மேல் ஒரு பாசம். தொடக்கப்பள்ளியின் மைதானம் ஒரு மாந்தோப்பு. அதற்கு குத்தகைதாரர், காவலாளி எல்லாம் சோவை என்றழைக்கப்பட்ட பெயருக்கேத்த மாதிரி ஒரு பெண்மணி. அவளுக்கு பயந்து கைக்கெட்டிய மாங்காய்களைக்கூட பறிக்கமாட்டோம். மாமரங்களின் நிழலில் நிறைய வகுப்புகள் நடக்கும்.

அடுத்த பள்ளியில் நிறைய தூங்குமூஞ்சி மரங்களும், வேப்பமரங்களும் ஒரு பெரிய ஆலமரமும். தூங்குமூஞ்சிமரத்தின் காய்ந்துபோன காய்களை வைத்து கத்திச்சண்டை போடுவோம். அந்த மரத்தடியில் உட்கார்ந்தால் தூக்கம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரே ஒரு டீச்சர்தான் தூங்குவார்கள். அவங்க பெயரே தூங்குமூஞ்சி டீச்சர். (ஆசிரியர்களின் பட்டப்பெயர் வைத்து நிறைய பதிவு எழுதலாம்). வேப்பமரம் எனக்குப் பிடித்த மரங்களில் ஒன்று. தூரத்தில் இருந்து பார்த்தால் மற்ற மரங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமான வெளிர்ப் பச்சையில் பந்து பந்தாக தெரியும். நிறைய வேப்பம்பழங்களையும் துளிர்இலைகளையும் தின்றிருக்கிறேன் பள்ளிநாட்களில். ராஜபுதனத்து வறண்ட பிரதேசத்திலும் எங்கள் கல்லூரி ஒரு பாலைவனச்சோலையாக இருந்ததற்கும் காரணம் வேப்பமரங்கள்தாம். பள்ளியில் நாங்கள் நட்டுவைத்த சில அலங்காரக் கொன்னை மரங்கள் இன்று பெரிதாக வளர்ந்து பிரேயர் க்ரௌண்டிற்கு நிழல் அளிப்பதில் பெரு மகிழ்ச்சி.

வீட்டுப் பின்னாலிருந்த ஒரு வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரங்களில் ஒன்று பார்க்க கம்பீரமாக ராஜதோரணையுடன் இருக்கும். தென்னைக்கென்ன ராஜ தோரணை என்றெல்லாம் கேட்காதீர்கள். சுற்றி கொஞ்சம் குட்டையான தென்னைகளுக்கு நடுவே உயரமாக அந்த தென்னைகளுக்கெல்லாம் ராஜா மாதிரி நிற்கும். வீட்டருகில் விளையாடும் மைதானத்தில் பூவரச மரங்களும், புளிய மரங்களும், புளியமரத்தைப்போலவே தோன்றும் வாதநாராயண மரங்களும் இருக்கும். வாதநாராயண மரத்தை ரொம்ப நாள் வாழ்நார் மரம் என்றுதான் தெரியும்.
பூவரச மர இலைகளை சுருட்டி பீப்பீ ஊதுவான் மாரிமுத்து. எனக்கு எவ்வளவு முயற்சி செய்தாலும் காற்றுதான் வரும். மாரியை பார்த்து பொறாமையாக இருக்கும். இன்னொரு வீட்டில் இருந்த கொய்யா மரத்தில் மணிக்கணக்காக விளையாடுவோம். கொய்யாமரத்தின் கிளைகள் வலுவானவை. மெல்லிய கிளைகள் கூட எங்கள் கனத்தைத் தாங்கும்.
இளம் புளியங்காய்களையும் புளியங்கொழுந்துகளையும் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டாம்.

அமெரிக்கா வந்த பிறகு எனக்கு என்ன குறை என்றால், இங்கு நிறைய மரங்களின் இலைகள் முழுவதாகவே இல்லை. மேபிள் மரங்களும், ஓக் மரங்களும்தான் இங்கு நிறைய. அவற்றின் இலைகள் முழுமையாகவே இல்லை. ஒரு பூவரச இலைப்போலவோ ஆல, அரச இலை போலவோ முழுமையில்லை. அதனாலேயே எனக்கு அரச இலையை போல தோன்றும் ப்ராட்ஃபோர்ட் பியர் மரத்தைப் பிடிக்கும்.
அது சரி. முழுமையாக இல்லாமலே இலையுதிர்காலத்தில் இவ்வளவு இலை அள்ளும் வேலை. முழுதாக இருந்தால் என்னாவது என்கிறீர்களா?


இந்த ஊர் மரங்களிலும் சில வித்தியாசமான இலைகள் கொண்டவை இருக்கின்றன. ட்யூலிப் பாப்லரின் இலை சீராக கத்திரிகோல் கொண்டு வெட்டியது போலிருக்கும்.


ஒரே மரத்தில் மூன்று விதமான இலைகள் கொண்ட மரம் ஸாஸ்ஸஃப்ராஸ் மரம். இதைப்பற்றி படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை கண்ணில் படவில்லை.


சென்ற வருடம் சென்ற நியுயார்க் மிருகக்காட்சிசாலையில் நம்ப ஊர் தட்பவெப்பநிலையில் ஒரு இடத்தை வைத்திருக்கிறார்கள். சொன்னால் நம்ப மாட்டீர்கள். அதில் ஒரு பெரிய வேப்பமரம்! நைஸாக ஒரு வேப்பிலையை பிய்த்து தின்றுகூட பார்த்தேன் உறுதிப்படுத்திக்கொள்ள. கண்ணில் நீர் கலங்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு இங்கே ரிச்மண்டில் வேப்பமரம் வளர்க்க வேண்டும் என்று ஒரு ஆசையில் ஆரம்பித்து வெறியாகியது. வலையில் மேய்ந்து பார்த்ததில் தெரிந்தது, அமெரிக்காவில் தென் ஃப்ளோரிடாவில் மட்டும்தான் வேப்பமரம் வெளியே வளர்க்கமுடியுமாம். அந்த ஆசையில் மண். அப்புறம் வீட்டுக்கு உள்ளே வளர்த்தால் என்ன என்று ஒரு ப்ராஜெக்ட் ஆரம்பித்தேன். இங்கே ஃளோரிடாவில் டாம்பா நகருக்கு அருகே ஒரு வேப்பம்பண்ணையே வைத்திருக்கிறார்கள். வேப்ப மரங்களை எப்படி வளர்ப்பது என்று சொல்லித் தருகிறார்கள். உங்களுக்கு வளர்க்க முடியாவிட்டால், அவர்களிடமிருந்து வேப்பங்குச்சி முதல் கொண்டு வேப்ப எண்ணெய், வேப்பங்கன்று எல்லாம் வாங்கலாம். வேப்பங்கொட்டைக்கு முப்பது நாள்தான் ஆயுளாம். அதைப் படித்ததிலிருந்து கோடையில் ஊருக்குப் போகும் சிலரிடம் மரத்திலிருந்து பறித்த வேப்பங்கொட்டை கொண்டு வாருங்களென்றேன். சிலர் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்கள். சிலர் ஒரு மாதிரி பார்த்தார்கள். ஆனால் இன்னும் சிலர் கொண்டுவந்து கொடுத்து அவர்களும் வளர்த்து வருகிறார்கள். போன வருடம் ஆரம்பித்தது, குளிர்காலத்தில் உள்ளே வைத்திருந்து நிறைய போய் இப்போது ஒரு நான்கைந்து பிழைத்திருக்கின்றன. படம் போட்டால் நீங்கள் கண் போட்டு விடுவீர்கள் என்பதால் போடவில்லை. படத்தில் பார்த்தாலும் தெரியாது. அவ்வளவு சிறிசு. நம்ம ஊர் மரங்கள் பட்டியல் பார்க்கவேண்டுமா? இதோ!

ரிச்மண்டில் சில வருடங்களுக்கு முன்னால் சூறாவளி வீசியதில் நிறைய மரங்கள் விழுந்தன. அப்போது பார்த்தால் பெரிய பெரிய ஓக் மரங்களுக்கும் ஆணிவேரே இல்லை. கொஞ்சம் பரந்துவிரிந்த வேர்கொத்துதான் இருந்தது. ஒருசில வகைமரங்களுக்கு ஆணிவேர் கிடையாதாம். அதுதான் காற்றில் சுலபமாக விழுந்துவிட்டன. அப்படி விழுந்த மரத்தை தூக்கி நட்டுவைத்து என்னை ஆச்சரியப்படுத்தினார் நம் சேகர் வீரப்பன்.

Tuesday, July 24, 2007

வாழ்த்துச் சொல்ல வாங்க

ஒரு ரோட்டுல நடந்து போனா, நம்ம கண்ணுக்குக் என்ன தெரியும் ? ரோட்டுல போர நாலு பேரு தெரியும், அங்க ஓடிக்கிட்டிருக்கிற நாய் தெரியும். ஒரு ஓரமா பூச்செடி இருந்தா, ஓ பூச்செடி இருக்கா என்று ஒரு 'ஓ' வோடு நம் பார்வையோட்டம் நின்று கொள்ளும்.

எதுக்கு இத்தன built-up னு கேக்கறீங்களா ... மேலும் படிங்க !

நம் தமிழ் வலைப் பதிவர்கள் சமீபத்தில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினார்கள். நாம் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு பூச்செடியை, அதைவிட, தனியாய் ஒரு பூவை, அதனுள் இருக்கும் details-ஐ macro உத்தியோடு நம்ம 'வெப் மாஸ்டர்' ஜெயகாந்தன் அவர்கள் க்ளிக்கி, அதற்கு மூன்றாம் பரிசும் வாங்கியிருக்காரு. மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.


கொசுறு: நாமலும் போட்டியில பங்கேத்துக்கிட்டோம்ல. ஜெய்-க்கு பரிசு கிடைக்கனும்னுட்டு சாதாரணமா ரெண்டு படம் அனுப்பிச்சோம். ஹி.ஹி. விழுந்தாலும் மண் ஒட்டுமா நமக்கெல்லாம் ;-) மேல்க்கண்ட் சுட்டியில், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு போட்டிருக்கற படத்துல ரெண்டாவது 'போகஹண்டாஸ் ஏரி' நம்மதுங்க.

ஜெய்யின் பதிவிற்குச் சென்று உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

அவரின் பரிசு பெற்ற படம்

Monday, July 23, 2007

Apurva Pande's fund-raiser for St.Jude's Hospital

Apurva Pande, a rising sophomore at Henrico High School, is inviting everyone to participate in the Swim-For-Life Marathon on Sunday August 5, 2007 at the Shady Grove YMCA, Glen Allen, VA. Here is the personal invitation from her seeking your participation.

You can learn more about sponsorship details here.

I encourage everyone to participate and contribute to this noble cause.

Sunday, July 22, 2007

கோடை பிக்னிக் 2007

ரிச்மண்ட் தமிழ் சங்கத்தின் கோடை பிக்னிக் ஹென்ரைகோ கௌண்டியிலுள்ள டோரி பார்க்கில் நடைபெற்றது. பெரியவர்கள், சிறுவர்கள் அனைவரும் கிரிக்கெட், உறியடி, கயிற்றிழு(அதாங்க டக் ஆஃப் வார்) போட்டிகளில் கலந்து கொண்டு களித்தார்கள்.

இவற்றில் சில படங்களை இங்கே காணலாம். இதில் சில வீடியோக்களும் இருக்கின்றன.

Thursday, July 19, 2007

வாழ்வில் பெறுவது எது ?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டென்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதையே நம் முன்னோர்கள் பல பழமொழிகள் மூலமா நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமா, மிகப் பிரபலமான பழமொழிகள் :

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நெல் போட்டா நெல் முளைக்கும்; சொல் போட்டா ?
(நாவை அடக்கி வாசி என்று நாசுக்காவும் சொன்னார்கள்)

கொடுத்தால் தான் பெறமுடியும் என்பதை உணர்ந்த பிறகு, என்னெல்லாம் கொடுத்தா, என்னெல்லாம் கிடைக்கும் என்று யோசித்தவை கீழே :

கேட்டுப் பெறுவது யாசகம்
கேளாமல் பெறுவது பாசம்

தட்டிப் பெறுவது தண்டல்
முட்டிப் பெறுவது மூர்க்கம்

விட்டுப் பெறுவது சுவாசம்
விடாமல் பெறுவது கோள்சொல்

ஒட்டிப் பெறுவது உறவு
வெட்டிப் பெறுவது தனிமை

கட்டிப் பெறுவது மகவு
கொட்டிப் பெறுவது அன்பு

Sunday, July 15, 2007

கொஞ்சும் மழலை


குழலும் உன்குரல் இனிமையில்
குழலும் யாழும் கீழே

மருளும் உந்தன் விழிகள்
பிறமாந்தரைக் காண்கையிலே

சுற்றிச்சுற்றி வந்தே காலைக்
கட்டிக் கொள்ளுவாயே

அள்ளி அணைக்கத் தந்தை
சொல்லித்தர அன்னை

சொந்த பந்தம் எல்லாம்
நண்பர் குழுக்களோடே

பொழுதும் வந்து உதவி - வீட்டைத்
தலை கீழாக்குவாயே

நாளும் சண்டை கொண்டு
நாடக மாடிடுவாயே

அறுசுவை அமுது உண்பாய்
விளையாட்டி லென்விரல்களாலே

அயற்சி யின்றி நீயும்
ஓடிஆடும் போதே

தத்தித் தவழும் என்மனம்
உன்அழகு மழலையாலே

சட்டை



சட்டையின் கை குட்டை
காபி நிற பட்டை
அணிவது சின்ன மொட்டை
கால்சட்டை ஜோபியில் ஒரு ஓட்டை
அதன் வழியே விழுந்தது புளியாங் கொட்டை
கையிலொரு கைக்குட்டை
அதில் சுமப்பதொரு கொடுக்காப்புளிக்காய் மூட்டை
ஆற்றில் சிறுவன் கட்டுவது ஒரு மணல் கோட்டை

Saturday, July 14, 2007

தனிமை




உன்னைப் போல் ஆயிரம் இருக்கையில்
நீ மட்டும் துணையில்லாமல்
தன்னந்தனியே மின்சாரக் கம்பியில் உட்கார்ந்திருப்பது ஏனோ?

சுகமோ அல்லது சோகமோ
எந்த நிலையில் நீ இருக்கின்றாய்?

தனிமையில் துயரமும் உண்டு
தெளிவும் உண்டு.

Friday, July 13, 2007

வந்துட்டான்யா வந்துட்டான்

வந்துட்டான்யா வந்துட்டான்! பரதேசி வந்துட்டான்.
சக ப்ளாகிகளே வணக்கம்!
மூன்று வார விடுமுறைக்குப்பிறகு சென்ற ஞாயிறன்று பிறந்த நாட்டிலிருந்து புகுந்த நாட்டிற்குத்திரும்பினோம். என் பயணம் மிக அருமை. பல உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்ப்போல் என் உடன் படித்த நண்பன் ஒருவனை 30 வருடங்களுக்கிப்பிறகு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல பழங்கதைகள் பேசினோம். பிறகு விலாவாரியாக எல்லாவற்றையும் விவரிக்கிறேன். வாக்கு கொடுத்தபடி சரவணபவனில் வயிறு புடைக்க புசித்தேன் (சாம்பார் வடை, புரோட்டா குருமா, குழிப்பணியாரம் முதல் 'முக்கனி' ஐஸ்க்ரீம் வரை). நீங்கள் ஜொள்ளு விட்டு கீபோர்டையும் மௌஸையும் ஈரமாக்குவது தெரிகிறது. 7 வருடங்களுக்கு முன் நான் பார்த்த சென்னையும், மும்பாயும் தலைகீழாக மாறிவிட்டன. என்ன ஜனநெருக்கம்! என்ன பணப்பெருக்கம்! நான் வாழ்ந்த காலத்தில் 10 ரூ நோட்டே ரொம்ப பெரியது. இப்போது அவ அவன் 500 ரூ நோட்டுக்களள சர்வசாதாரணமாக எடுத்து வீசுகிறான். கார், மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி என்று 'அவன்'களும் 'அவள்'களும் சல்லென்று பறக்கின்றனர். பீட்ஸா ஹட், டாமினோஸ்,
பீட்ஸா கார்னர், காபி டே, கபே காபி என்று விதவிதமான தீனிகள் வேறு. போதாதற்கு, சரவணபவன், சங்கீதா, க்ராண்ட் ஸ்வீட்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் என்று வேறு.

கட்டுரை தொடரும் வரை......
ஸாம்பிளுக்கு சில படங்கள்:


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பீட்சா ஹட்



மெரினா பீச்சில் கண்ட மாங்காய் பத்தைகள்



திருமயிலை கபாலீஸ்வரர் கோவில்


டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி செண்டரின் முகப்பு


திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் (நிரம்பியுள்ளது)

அடையார் ரோட்டோரம் கண்ட ஒரு டிபன் கடை

Tuesday, July 10, 2007

இமேஜை வென்ற கதாபாத்திரங்கள் - மாயன்

சமீபத்தில் வெளியான ஒரு ப்ரமாண்ட திரைப்படம், திரைத்துறை வட்டாரத்திலேயே சலசலப்பை ஏற்படுத்தியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் ஈடுபட்டவர்கள் எல்லாம் பெரிய தலைகளும் அவர்களது இமேஜும் தான். சலசலப்பில் ஈடுபட்டவர்கள் திறமை மிக்கவர்களாக இருந்தும் புகைச்சலோடு நிறுத்திக் கொண்டார்கள்.

இந்தத் (தொடர் ?) கட்டுரையின் நோக்கம் சினிமாவில் தங்கள் இமேஜை மறைத்து அந்தக் கதாபாத்திரங்களாகவே நம் கண்முன்னே வலம் வந்தவர்களைப் பற்றியது அன்றி விவாதம் பண்ண அல்ல.

1992ம் ஆண்டு வெளியான படம் 'தேவர்மகன்'. இதில் கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் மற்றும் பலரோடு மாயனும் நடித்தது நம்மில் பலருக்குத் தெரியும். ஆமாங்க, படத்தில் வில்லனான 'மாயன்' நாசர் தான் இங்க நமக்கு ஹீரோ !

கமல், சிவாஜி, காக்கா ராதாகிருஷ்ணன் இவர்கள் மூவரும் எவ்வளவு பெரிய கலைஞர்கள் என்று நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. அதற்காக மாயனும் சளைத்தவர் அல்ல. இவர்களுக்கும் மேல் தேவர்மகனில் மாயனின் ஆளுமை நிறைந்திருந்தது எனலாம். கமலும், சிவாஜியும் அவர்களாகவே தான் தோன்றினார்கள். அவர்களால் அவர்களது இமேஜை மறைக்க முடியவில்லை. ஆனால் மாயன் ...

கொத்து மீசையும், பொட்டிட்ட அகன்ற நெற்றியும், வெள்ளை உடுப்பும், உறுமும் குரலும் அப்படியே ஒரு கிராமத்துக் கோபக்காரராய் மாயன் இன்றும் நம் நினைவில் நிற்பவர்.

கீழே உள்ள youtube-ல் பஞ்சாயத்துக் காட்சியில் மாயனைக் காணுங்கள்.



சமீபத்தில் சலசலத்த திறமைமிக்கவர்களுள் ஒருவர் என்பது தான் இந்த நேரத்தில் நாசரைப் பற்றி சிந்திக்க வைத்தது.

நாம் என்ன தான் திட்டினாலும், விலக்கினாலும் சினிமாவைத் தவிர்க்க முடியாது தான் வாழ்கிறோம். நம்ம blogலேயே சிலர் அங்கலாய்த்திருந்தார்கள். ஒரு நான்கு பேர் சேர்ந்தால், என்ன தான் வேறு வேறு தலைப்புகளில் அரட்டை அடித்தாலும் கண்டிப்பாக சினிமாவைப் பற்றிய பேச்சு இருக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பது என் எண்ணம்.

காலத்தால் வெற்றி பெறுவது கதையின் கதாபாத்திரமே அன்றி, எட்டும் இமேஜோ, கொட்டும் கோடிகளோ அல்ல. இதை உணர்ந்து, நல்ல கதாபாத்திரங்களை சிருஷ்டிக்க, சிந்திப்பார்களா நமது தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும்!

Sunday, July 08, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 13

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.




- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

கடல்

பொங்கும் நுரைதள்ளி
எங்கும் கரைதொடுவாய்

சங்கும் சிப்பிகளும்
தங்கும் சிறார்கைகள்

...

மருளும் புள்ளிமானின்
மயக்கத் துள்ளலையும்

சீறிப்பாயும் சிங்கத்தின்
சிறப்பான வேகத்தையும்

சிறகடிக்கும் பறவையின்
சீரான படபடப்பையும்

...

கொண்ட உந்தனலை
ஊர்முழுக்க அறிந்திருக்க

உன்னோடு நான்நடக்க
உள்ளம் களிப்படையுமே

சற்றே உள்ளிறங்கி
சில்லென்று மேனிசிலிர்க்க

ஆடும் உன்மீது மிதந்தே
பாடும் என்மனம் அலைபோலே

-----

இந்தக் கவிதைய ஆரம்பிக்கும்போதும், 'ங்' முதல் நான்கு அடிகளுக்கு வரவே. சூப்பர் அப்படியே continue பண்ணலாம் என்று நினைத்தேன்.

அப்புறம் தான் புத்தி சொல்லியது, அடே மடயா, போன பாட்ட போட்டது அங்கே குற்றம்னு சொல்றாங்க என்று. யாரும் சூப்பரா இருக்குனு சும்மா எல்லாம் comment போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லுங்க அது போதும்.

Friday, July 06, 2007

மற்றும் ஒரு சிறு உதவி: [Richmond/Virginia/DC/MaryLand Area India/Chennai Travellers]

வைத்தியா சுந்தர்:

"எனது தாயாருக்கு தமிழ்/ஆங்கிலம் பேசக்கூடிய வழித்துணை தேவை. அவர்
வாசிங்டன் டி.சி.(IAD) இருந்து சென்னைக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலமாக ஆகஸ்ட் 20ம் தேதி வாக்கில் (*செப்டெம்பர் வரை வேறு தேதிக்கு மாற்ற இயலும்) பயணம் செய்யவிருக்கிறார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது, ஆனால் நல்ல உடல் நலம் உள்ளவர். உங்களுக்கு தெரிந்தவர்கள் எவரேனும் இந்த வழித்தடத்தில்/விமானத்தில் பயணம் செய்யவிருந்தால், தயவு செய்து உதவவும். உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
EMAIL : vaidyasundar AT yahoo.com"

உங்கள் உதவிக்கு மிக்க நன்றி!

கல்விக்கு உதவுங்கள்

சமீபத்தில் செந்தழல் ரவி மூலமாக இன்னொரு இளைஞருக்கு கல்விக்கு உதவி தேவைப்படுகிறது என்று தெரியவந்தது. மேல் விவரங்களுக்கு வரவணையான் பதிவில் படித்துக் கொள்ளுங்கள்.

வரவணை பதிவில் இருந்து ஒரு பகுதி இதோ:

அந்த தம்பியின் பெயர் கௌதம் ( ராஜா முகமது) சென்னை திரைப்படக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கிறார். தந்தை இவர் பிறந்த சில ஆண்டுகளில் தவறிவிட்டார். இவரையும் இவரின் தங்கையும் தாயார் சித்தாள் வேலை செய்து படிக்க வைத்தார். மேற்படிப்புக்கு சென்னை வந்த இந்த தம்பி பகுதி நேரம் உழைத்துக்கொண்டெ படித்துக்கொண்டிருக்கிறார் , அதில் வரும் வருமானம் அன்றாட செலவுக்கு பயன்படுத்திக்கொள்கிறார். இந்த ஆண்டு தன் கல்லூரிகட்டணத்தை செலுத்த இயலாத காரணத்தால் தன் படிப்பை நிறுத்துவதாக தெரிவித்தார் என்னிடமும் சுகுணா திவாகரிடமும்.

உங்களால் முடிந்த உதவி செய்யலாம்.

Thursday, July 05, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 12

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.



http://pkirukkalgal.blogspot.com/2007/07/12.html



- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.

piththanp@gmail.com

Tuesday, July 03, 2007

ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...



வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்

மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்

வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்

இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)

அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்

பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்

-----

இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)

என்றும் அன்புடன்
சதங்கா

Saturday, June 30, 2007

வலைவலம்

கோடைகாலத்திற்கு நிறைய பேர் இந்தியாவிற்கு போய்விட்டு வருவார்கள். போகும்போதும், வரும்போதும் நேர வித்யாசத்தினால் பல தொந்தரவுகள். இந்த ஜெட்-லேகிற்கு ஒரு நிவாரணம் கண்டுபிடிக்க அர்ஜெண்டைனாவில் சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவாரஸ்யமான முயற்சி செய்கிறார்கள். அதுசரி தலைவலி போய் 'திருகு'வலி வராதா என்று கேட்காதீர்கள். அதைப்போல இந்த செய்தியை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்று இந்த மருந்தைக் கேட்டால் நான் பொறுப்பில்லை.

மருத்துவர் என்றதும் ஞாபகத்துக்கு வருவது அமெரிக்காவில் ஒரு புது ஊருக்கு போனவுடன் ஒரு நல்ல டாக்டரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமல்லவா? அதற்கு உதவுகிறார் பாரதி இந்தப் பதிவில். பாரதி என்றால் முண்டாசுக்காரர் இல்லை. அவரது பதிவில் சில நல்ல வலைத்தளங்களை சுட்டியிருக்கிறார். அது மாதிரியான ஒரு தளம்தான் ரெவல்யூஷன் ஹெல்த். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அமெரிக்காவில் வலைஉலாவிற்கு AOL மூலம் வித்திட்டு பட்டை கிளப்பிய ஸ்டீவ் கேஸ்.

உட்கார்ந்த இடத்திலேயே உலகத்தின் பல மூலைகளில் உள்ள நல்ல விஷயங்களைப் பார்க்க வேண்டுமா - இந்த தளத்தில் பாருங்கள்.. எல்லா ஊருக்கும் போய் பாருங்கள். கஜுராஹோவிலேயே உட்கார்ந்து விட வேண்டாம்.(அங்கே இங்கே போய் 'அதே' இடத்துக்கு வரீங்களேன்னு பித்தன் குரல் விடுவது கேட்கிறது)

ஈபே கேள்விப்படாதவர்கள் இருக்கமுடியாது. இங்கிலாந்தில் வாழும் ஒரு இந்தியக் குடும்பம் ஒரு தலைகீழான ஈபே ஆரம்பித்திருக்கிறது. ஹம்ராஸ் தளத்தில் ஒரு பொருளை ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் எல்லாரைவிட குறைந்த விலைக்கு கேட்கவேண்டும். அது எப்படி என்கிறீர்களா? அந்த குறைந்த விலைக்கு நீங்கள் மட்டுமே கேட்டிருக்க வேண்டும். அதாவது ஒரு பொருளுக்கு இப்படி பேரம் நடந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்:

1.20 - பத்து பேர்
1.23 - இரண்டு பேர்
1.24 - ஒருவர்
1.28 - மூன்று பேர்
1.39 - ஒருவர்

ஜெயிப்பவர் 1.24க்கு கேட்டவர். அவர் ஒருவர் மட்டும்தான் குறைந்த விலைக்கு கேட்டிருக்கிறார். இந்த நிறுவனத்தை ஆரம்பித்தவர் அஸ்மத் மோனகன் எனும் தாயும் அவரது மகள்கள் ஆம்பரின், ஹென்னா. இதைப் பற்றி விவரமாக இங்கே படிக்கலாம்.

பேரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லக்கூடாது என்பார்கள். ஏன் என்று தெரியாது. தெரிந்தவர்கள் பின்னூட்டமிடவும். நான் இங்கே பேரைச் சொல்லாமல் ஊரைச் சொல்கிறேன். நம் வலைப்பதிவில் எழுதும் ஒரு நபரின் ஊரில் நடந்த சம்பவம் மிக சுவாரசியமானது. கவிச் சக்கரவர்த்திக்கு எந்த ஊரில் சமாதி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாட்டரசன் கோட்டைக்காரர்கள் தவிர மற்றவர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். முதலில் கவிச்சக்கரவர்த்தி யாரென்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான் ஆளாளுக்கு அரசர், பேரசரர் என்று பேர் வைத்துக்கொள்கிறார்கள். நான் சொல்லுவது கம்பரைப் பற்றி. ஆனானப்பட்ட கவிச்சக்கரவர்த்தியையே ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் வெட்கித் தலைகுனிய வைத்தது நாட்டரசன் கோட்டையில். கர்வமடங்கிய கம்பர் மீதமுள்ள வாழ்நாட்களைக் கழித்தது அந்த ஊரில்தானாம். அந்த சுவாரசியமான கதையை பிரபுவின் பதிவில் நீங்களே படித்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையைப் படித்தவுடன் எனக்கு Gods must be crazy யில் வரும் ஆதிவாசிதான் நினைவுக்கு வந்தான். அய்யய்யய்யய்யய்யய்.......


இப்படி ஒரு போராட்டம் ஆரம்பித்திருக்கிறார் ரவிசங்கர்.



புரியவில்லையா?

தமிங்கிலத்தில் தட்டச்சு செய்ய வேண்டாமென்கிறார். ஆங்கில அடிமை என்ற குற்றச்சாட்டுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் வேகமானது என்கிறார் ரவி. வேகமான முறை என்பதற்காகவே முயற்சி செய்யலாம் என்று இருக்கிறேன். இந்த விசைப்பலகையை பார்த்தால்தான் கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது.




ஆனால் இந்த முறை ஆங்கில மோகத்தைக் குறைக்குமென்றால், தட்டச்சும் வேகத்தை அதிகமாக்குமென்றால் கண்டிப்பாக அனைவரும் முயலவேண்டும். நான் முயற்சி செய்து பார்க்கிறேன். இப்போதே வலைபதிய உட்காரும்போது 'கருத்து' கேட்க வேண்டியிருக்கிறது. இதில் இந்த விசைப்பலகையை முயன்றால், 'கருத்து' 'புராணமாக' மாறும் அறிகுறிகள் வலுக்கின்றன.

கடேசியாக நமது வர்ஜீனியா மாவட்டத்தில் மோசமாக காரோட்டுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை. அடுத்த முறை கன்னாபின்னாவென்று ஓட்டி மாமாவிடம் மாட்டினால் நீதிபதி தீட்டுவது மட்டுமல்லாமல் மூன்று வருடங்களுக்கு தண்டல் கட்டவேண்டும். முழு விவரங்கள் இதோ.

Friday, June 29, 2007

ஔவையார் vs [க|வ]ம்பர்

ஒரு நாள், சோழன் அவையில் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது சொற் குறும்பினைத் தொடங்கினார் கம்பர்.

ஆரைக் கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார்.

ஔவையாரை ஆரைக்கீரையோடு ஒப்பிட்டு, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாகக் கூற, ஔவையார் கோபம் கொண்டார்.

கம்பரின் குறும்பினை புரிந்து கொண்டு அதே பாணியில் ஒரு பாடலைச் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது.


எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னா யடா ?


தமிழில் 'அ' என்பது எண் 8 ஐக் குறிக்கும். 'வ' 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் 'அவ' என வரும். இந்த மாதிரி எழுத்தையும், எண்ணையும் தொடர்பு படுத்தி, வார்த்தை விளையாட்டுக் கவிதைகள் எராளம் உண்டு அக்காலத்தில்.

"அவலட்சணமே ! எமனின் வாகனமான எருமையே ! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே ! முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே ! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே ! அடே ! ஆரைக் கீரையைச் சொன்னாயடா !" என்று பொருள் பட பாடினார்.

டயலாக்ஸ்.. ரிலாக்ஸ்..

லைப்ரரியில்..


"சார்.. இந்த புத்தகத்துல கதைய காணோம்.. ஆனா எல்லா பாத்திரங்க பெயர் மட்டும் இருக்கு?"

"யோவ்.. நீ தான் அந்த டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனவனா?"
-------------------------------------------------------------------------

பார்க் அருகில்.

"ஏண்டா டிரைவிங் லைசன்ஸ புதைச்சுட்டிருக்க?"


"அது expire ஆயிடுச்சுடா"


-------------------------------------------------------------------------

ATM முன்.


"டேய்.. நான் உன்னோட பாஸ்வோர்ட்'ஐ பார்த்துட்டேன்.. அது ***** தானெ?"


"போடா முட்டாள்.. என்னோட பாஸ்வோர்ட் 12345"

-------------------------------------------------------------------------


[-- சுட்ட பழமானாலும், சுவைதானே!]

காய் காயா காய்த்திருக்கு

உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.

பாடல் :

படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்

படங்கள் :













Thursday, June 28, 2007

அரிசியை விட சிறிய யானை பார்த்திருக்கிறீர்களா ?

அன்பர்களே,

ஒரைகாமி, ஆரிகாமி ஏதோ ஒன்னு ! Origami நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தெரியாதவங்களுக்கு, நம் பள்ளிப் பருவத்தில் நாம் அனைவருமே இதில் ஈடுபட்டிருப்போம். அதாங்க காகிதத்தில கப்பலு, ராக்கெட்டு எல்லாம் செய்வோமே, அதே தான்.

கிரிகாமி (Kirigami) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என்னது கிருக்குப் புடிச்சிருக்கானு கேட்டு அடிக்க வராதீங்க ;-) காகித்தில் வெட்டி ஏதாவது உருவம் கொண்டு வரும் கலைக்குப் பேரு தாங்க Kirigami.

கீழே உள்ள you tube-ஐ play பண்ணி பாருங்க. சும்மா மனுசன் கத்தரியையும், காகிதத்தையும் வைத்துப் புகுந்து விளையாடுவதைப் பார்த்து அதிசயுங்கள்.



அரிசியை விட சிறிய யானை எப்படி வந்தது-னு பார்த்து அசந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு



-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா

Tuesday, June 26, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 11

பித்தனின் அடுத்த கிறுக்கலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2007/06/11.html

- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com