Showing posts with label பின் லேடன். Show all posts
Showing posts with label பின் லேடன். Show all posts

Monday, May 02, 2011

வீழ்ந்தான் ஓசாமா பின் லேடன்


பாகிஸ்தானில் இஸ்லாமாத் அருகே அமெரிக்காவின் திட்டமிட்ட தாக்குதலில் ஓசாமா பின் லேடனைக் கொன்றதாக அமெரிக்க அதிபர் ஓபாமா அறிவித்தார்.

பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சட்டத்துக்கடங்காத பழங்குடியினர்(lawless tribal area) வாழும் பகுதியில் ஓசாமா பதுங்கியிருப்பதாக பாகிஸ்தான் கூறி வந்தது. ஆனால் அவன் அப்படாபாத் என்ற ஊரில் ஒரு மாளிகையில் பதுங்கியிருந்திருக்கிறான். அந்த ஊர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாதுக்கு மிக அருகில் இருக்கிறது. பாகிஸ்தானின் ஒரு கூற்று உண்மை. சட்டத்து அடங்காத பழங்குடிகள் அடங்கிய நாடு.

சென்ற ஆகஸ்டு மாதம் கிடைத்த ஒரு தகவலில் இருந்து ஆரம்பித்த ஒரு திட்டம் வெற்றியில் முடிந்தது என்றார் அதிபர் ஓபாமா.