Tuesday, March 12, 2019

அருண் பக்கங்கள் - நம்பகமும் நாலு பருவங்களும்


எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் காதலி.....
எந்த பக்கம் கடவுள் இல்லை என சொல் அங்கு நீட்டுகிறேன் என்றான்
காதலன்.....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் மனைவி....
காகிதத்தில் இருப்பதெல்லாம் கடவுளாக்கும்?  சலித்து கொண்டான் கணவன்....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் அம்மா....
அந்த நாட்காட்டி கிழிய ஆரம்பிச்சுருச்சு. எப்படி ஓட்டலாம் என பசை தேட சென்றார் அப்பா....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் பாட்டி....
ஆங் ஆமா இங்க இருக்காரா
எல்லாரையும் காப்பாத்துப்பா முருகா என்றார் தாத்தா.....


Sunday, March 03, 2019

பித்தனின் கிறுக்கல்கள் - 51

பித்தனின் கிறுக்கல்கள் - 51


அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.

ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பிறகு வலைப்பூவில் மீண்டும் சந்திக்கின்றோம்.

சில சமீபத்திய சம்பவங்கள், அதன் தாக்கங்கள், இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் அநாகரீகங்கள், வேண்டும் மோடி - மீண்டும் மோடி ப்ரச்சாரம், சமீபத்தில் நாம் ரசித்த  நிழற்படங்கள், நிகழ்வுகள் போன்ற எம்மை பாதித்த சில விஷயங்களைப் பற்றி இங்கு கிறுக்கலாம் என இருக்கிறோம்.  வழக்கம் போல் நாம் எழுதியதை படிக்காமலேயே திட்டலாம் என இருப்பவர்கள் பின்னூட்டத்தில் தைரியமாகத் திட்டலாம்.  இல்லை, நீ கிறுக்கியதை முழுவதும் படிப்பேன் என்று இறுமாப்போடு இருப்பவர்களுக்கு அந்த எல்லாம் வல்ல இறைவன் நல்ல புத்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கட்டும்.


வேண்டும் மோடி, மீண்டும் மோடி:
எதுகை மோனையுடன் சொல்லப்பட்ட வாசகம். .......

மோடியின் குறைகள்:

புல்வாமா தாக்குதல்:

அபிநந்தன் :

மற்றும் பல..... 

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……
பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்