Showing posts with label ஆத்திச்சூடி. Show all posts
Showing posts with label ஆத்திச்சூடி. Show all posts

Tuesday, March 09, 2010

ஐபோனில் அறம் செயும் தேவராஜன்

ஐபோனில் தமிழ் சரியாகத் தெரியாது என்ற குறை எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. அதே குறை எனக்குத் தெரிந்த பலருக்கும் உண்டு. ஆனால் அதற்காக ஒன்றும் செய்யவில்லை. நாம்தான் முருங்கையில் வீற்றிருக்கும் வேதாளம் ஆச்சே?

அந்த குறையைத் தீர்க்க வந்திருக்கிறார் தேவராஜன். ஐபோனில் ஆத்திச்சூடி காண்பிக்கிறார் இந்த அரக்கோண ஆப்பிள் வித்தகர்! ஒரு அற்புதமான ஐபோன் மென்பொருளைத் தயாரித்து அதை இலவசமாக வேறு வெளியிட்டிருக்கிறார் தேவராஜன்.

நீங்களே அவர் தளத்தில் மேலும் படித்துக் கொள்ளுங்கள். படிப்பது மட்டுமில்லாமல் உங்கள் ஐபோனிலோ,ஐபாட் டச்சிலோ இந்த மென்பொருளை நிறுவி பயனடையுங்கள்.

தேவராஜன் - சொல்ல வேறு வார்த்தையில்லை. தலை வணங்குகிறேன்!

Wednesday, June 27, 2007

வலைப்பதிவர் ஆத்திச்சூடி

அற்புத வலை
ஆர்ப்பாட்டம் குறை
இனிதாய் எழுது
ஈர்ப்பது நட்பு
உற்றது உரை
ஊக்கம் வளர்
எழில் பதிவிடு
ஏமாற்றம் தவிர்
ஐயமற விளக்கு
ஒவ்வாதன நீக்கு
ஓய்வு எடு



-----

சில வரிகள் எழுத பல நேரம் பிடித்தது. 'ஓய்வு எடு'னு எழுதினவுடனே தான் ஞாபகம் வந்தது, நான் ரொம்ப நேரமா வலையிலே இருக்கிறேன் என்று. அதானால ஓய்வு எடுத்துக்கிறேன். ;-)

கடைசி இரு எழுத்துக்களுக்கு, உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டமிடுங்கள். அசத்தலாகச் சொல்பவர்களுக்கு "திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா" (சங்கத்து சார்பா, அப்பாடா தலை தலையில தூக்கிப் போட்டாச்சு பொறுப்ப :)) வழங்கப்படும்.

என்றும் அன்புடன்
சதங்கா

Monday, August 21, 2006

இலக்கியப் போட்டி 2006

நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி! ரிச்மண்ட் நகரவாசிகளின் தமிழ் புலமையை காண்பிக்க இன்னொரு சந்தர்ப்பம் இதோ வருகிறது, தமிழ் சங்கத்தின்

இலக்கியப் போட்டி 2006


பத்து வயதுக்குட்பட்ட இளையர்களுக்கு ஒரு போட்டியும், அதற்கும் மூத்த இளையர்களுக்கு(11-20) ஒரு போட்டியும், இருபது வயதை தாண்டியவர்களுக்கு ஒரு போட்டியும் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு வயதுக்குரிய போட்டியிலும் இரண்டு விதமான படைப்புகள் சமர்ப்பிக்கலாம்: கவிதை, கதை அல்லது கட்டுரை(கவிதையில் சேர்க்கமுடியாத படைப்புகள்)

இளையர்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம். தமிழ் படைப்புகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும்(தமிழ் சங்கம் நடத்தற போட்டியில அது கூட இல்லாட்டி எப்படி?). மூத்தவர்கள் மட்டும் தமிழிலேதான் எழுத வேண்டும். அப்படியும் பிடிவாதமாக ஆங்கிலத்தில் எழுதும் மூத்தவர்கள் தங்கள் படைப்புடன் தங்கள் பதின்ம(teen) வயதை நிருபிக்கும்வண்ணம் பிறந்தநாள் சான்றிதழ் இணைக்குமாறு வேண்டப்படுகிறார்கள்.

தமிழில் எழுதுபவர்கள் யுனிகோடு எழுத்துருவை உபயோகித்தால் வசதியாக இருக்கும்.தமிழில் தட்டச்சு செய்வது குறித்து இந்த வலைத்தளத்தில் கற்கலாம்(http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil)

தமிழில் எழுத முடியாதவர்கள் அவர்களின் படைப்பின் பிம்பத்தை(scanned image)அனுப்பலாம். அல்லது பிரதியை நிர்வாகக் குழுவினரிடம் கொடுக்கலாம்.

உங்கள் படைப்புகள் எங்களுக்கு ரிச்மண்ட் நேரப்படி 2006 செப்டம்பர் 30 இரவு 12 க்குள் வந்து சேர வேண்டும். ஒவ்வொரு பிரிவில் முதல் இடம் பெறும் கவிதை மற்றும் கதைக்கு ஆயிரம் பொற்..... ஹி.. ஹி... மன்னிக்கவும். நிர்வாகக்குழுவில் ஜனநாயகம் வலுத்துவிட்டதால், இன்னும் பரிசு குறித்து சர்ச்சை நடந்து கொண்டு இருக்கிறது.

நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். அவை உங்கள் சொந்தப் படைப்புகளாக இருக்கவேண்டும். மண்டபத்தில் யாரோ எழுதி வாங்கிக்கொண்டு வரலாம். எங்களுக்கு தெரியாமலிருக்க வேண்டும். அவ்வளவே.

உங்கள் படைப்புகளை மின்னஞ்சல் மூலம்
rts_lit@googlegroups.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தவறாமல் படைப்பாளியின் பெயர், வயது, மின்னஞ்சல் முகவரிகளை குறிப்பிடவும்.

சரியா?

அன்புடன்

ரிச்மண்ட் தமிழ் சங்கம்

பி.கு: உங்கள் படைப்புத் திறனை உதைத்து ஆரம்பிக்க(அதாங்க கிக் ஸ்டார்ட்) இந்த தளத்தைப் பார்க்கவும். http://richmondtamilsangam.blogspot.com



How to write in Tamil: http://buhari.googlepages.com/anbudan.html#UnicodeTamil

To convert Tscii/Tab files to unicode: http://www.suratha.com/atamil.htm

To write Tamil without installing any software: http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm (click on Thaminglish and type away!)