
தழுவி வரவேற்று
தலைவாழை இலைபோட்டு
அறுசுவைக் காய்கறிகள்
அரணென நிறுத்தி
இட்ட சாதத்தில்
விட்ட நெய்கிளறி
சொட்டு நீர்விட்டு
உட்கொளல் ஆரம்பம்
தாளித்த சாம்பாரும்
புளித்த மோர்க்குழம்பும்
தக்காளி ரசத்தின்பின்
தயிர்சாதம் பிசைந்துண்ண
வடைபாயசம் அப்பளம்
தடையின்றி தானிறங்க
நறுக்கிவைத்த ஆப்பிள்
ஆரஞ்சு மாம்பழம்
சிலதுண்டு வாயில்போட்டு
சிலாகித்து உள்ளிறங்க
காம்புகிள்ளி வெற்றிலை
காரத்துடன் நான்மெல்ல
உண்டு முடியுமுன்
துணிந்ததென் உறக்கமுமே
என்னென்று வியப்பேன்
எளிதில் மறவேன்.