Saturday, January 23, 2016

பனிப்புயல்



பள்ளிகளை மூடி
கடைகளை அடைத்து
வீட்டில் காய்கறி, பால் ரொட்டி குவித்து
சினிமா, பாடல்கள் தேர்ந்தெடுத்து வைத்து
பஜ்ஜி, பலகாரம் செய்து
பனி வரும் என்ற ஆவலும் பயமும் கலந்த எதிர்பார்ப்பில்...

பொய்க்காமல் வந்த பனிப்புயலே - நன்றி!

பனிக்காலப் பகல்



விழித்தெழ விடியும் நேரம்
இருளைத் தழுவி மயக்கும் ஒளி
மேகச் சுறுக்கமின்றித் திரையென வான்
பறந்து பறந்து இறங்கும் பனி
விண்ணும் மண்ணும் ஒரே நிறம்
படிந்தவற்றை வாரிவாரி இறைக்கும் காற்று
நடுங்கும் குளிரில் நிமிர்ந்த மரங்கள்
கிளைவிட்டு கிளை மாறும் ஓரிரு பறவைகள்
இயற்கையின் பகல்காட்சி இனிதே ஆரம்பம்

Sunday, January 10, 2016

இந்த நாள் இனிய நாள்

மழைக்குப்பின் தெளிந்த வான்
மரத்திடை கலங்கிய ஆறு
மாறிமாறி ஒலிக்கும் காற்றின் இசை
மாற்றமில்லா மார்கழிக் குளிர்
மனைவியின் அன்பில் இனிக்கும் தேனீர்
மற்றும் ஒருமுறை மயங்கிய உயிர்

Sunday, January 03, 2016

பித்தனின் கிறுக்கல்கள் - 50

அனைவருக்கும் 2016 புது வருட வாழ்த்துக்கள்.

ஒரு வழியாக 50 வது பதிவை பதிவிட காலம் துணை செய்திருக்கிறது.

புதுவருடத்தில் பலரும் பலப் பல உறுதிமொழி எடுக்கும் இத்தருணத்தில் நம்முடைய வளைப்பூ இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தால், ஆச்சர்யமாக சிலர் இன்னமும் இந்த வளைப்பூவில் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற வரலாற்று உண்மை சற்று நெருடலாக இருக்கிறது.  அதிலும் Sheung Wan லிருந்து (இந்த இடம் ஹாங்காங்கிலிருப்பதாக தெரிய வருகிறது) ஒருவர் இந்த வளைப்பூவில் உலாவியிருக்கிறார்.  அவரது துரதிஷ்டத்திற்கும் ஒரு வணக்கத்தை போட்டு விட்டு, அடுத்த வேலைக்கு செல்லலாம்.


சென்னை மற்றும் கடலூரில் வெள்ளம்

நாஞ்சில் சம்பத்தின் பேட்டி

பதிவை முழுவதும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.


பித்தனின் கிறுக்கல்கள் தொடரலாம்……

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்