Showing posts with label marathon. Show all posts
Showing posts with label marathon. Show all posts

Tuesday, December 30, 2008

அஞ்சா நெஞ்சன் - அஞ்சன்!

ரிச்மண்டில் வாழும் வாணி, பவனிராம் கௌஷிக் தம்பதியினரின் மகன் அஞ்சன் கௌஷிக்  மார்ச் 2009ல் லூகேமியா, லிம்ஃபோமா சொசைட்டிக்கு நிதி திரட்டுவதற்காக வர்ஜினியா பீச் நகரில் நடக்கவிருக்கும் ஷாம்ராக் அரை மராத்தனில் கலந்து கொள்ளவிருக்கிறான்.

லுகேமியாவுடன் போராடும் தங்கைக்காக நிதி திரட்டாமல் அந்த நோயை எதிர்க்க இந்த நிதித்திரட்டலில் ஈடுபட்டிருக்கும் அவன் மனதிடம் என்னை வியக்க வைக்கிறது. அவனுக்கு இருக்கும் உறுதியில் சற்றாவது நமக்கும் தொற்றிக்கொள்ள உங்கள் அனைவரையும் அழைக்கிறேன் இதில் ஈடுகொள்ள. அஞ்சனுக்கு உங்கள் ஆதரவைத் தெரிவிக்க விரும்பினால், உடனே விரையுங்கள் இந்தத் தளத்திற்கு => http://www.tinyurl.com/anjank 

ஷார்லட்வில்லில் மருத்துவம் படிக்கும் அஞ்சனின்  இந்த அரிய சேவைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

நீங்கள் இதுவரை எலும்பு மஞ்சை தானத்திற்கு பதிந்திராவிட்டால், உங்களுக்கு கூடிய விரைவில் ஒரு சந்தர்ப்பம். ஜனவரி 18ல் ரிச்மண்ட் ஹிந்து சென்டரில் நடக்கவிருக்கும் லட்சார்ச்சனையின் போது மாடியில் இலவச எலும்பு மஞ்சை பதிவு முகாம் நடக்கவிருக்கிறது.  மேல் விவரங்கள் இங்கே.

Tuesday, December 02, 2008

ஓடிய பொருளாளர்...

உங்க பொருளாளர்(அதாம்பா தமிழ்ல ட்ரெஷரர்னுவாங்களே) ஓடப் போறார்னு செய்தி வந்தவுடனே, என்னடா கணக்க எல்லாம் அடுத்த கமிட்டி கிட்ட ஒப்படைக்கற நேரத்துல இப்படி பண்ணப் பாக்கறாரேன்னு கொஞ்சம் கவலையா இருந்துது. பாத்தா அரை மராத்தன் ஓடறாராம். நிம்மதி!

ரெண்டரை மணி நேரத்துல ஓடினதா கேள்வி. வெகு ஜோர். அடுத்த தடவை வீட்ல உருட்டுக்கட்டை எடுத்துட்டு பின்னாடியே வரச்சொல்லுங்க. ஒரு மணிநேரத்துல முடிச்சிறலாம்.

படத்து மேல கிளிக்குங்க...  அரவிந்த் விஸ்வரூபம் எடுப்பார்.





இன்னும் கொஞ்சம் படங்க பாக்கனும்னா, இங்க வாங்க! அந்த தளம் வேலை செய்யாட்டி இந்த பக்கத்துல போயி BIB number 10477னு போட்டுப் பாருங்க. நம்ம அரவிந்த் இன்னா ஷ்டைலா ஓடறாருன்னு... நிறைய படத்துல தனியா ஓடறத பாத்தா சந்தேகம் வருது, சும்மா ஆக்ட்டு குடுக்கறாரோன்னு. ஆனா பினிஷ் பண்ணிக்கிறார்பா. அதுவும் மராத்தன் ஓடிட்டு அன்னக்கி மத்யானம் நடந்த நம்ப தீபாவளி பங்ஷ்னுக்கும் வந்துட்டாரு மனுஷன்.


அடுத்த வருஷம் நானும் கூட ஓடனும்னு சொல்லியிருக்கார். என்னை பாதி தூரம் உப்பு மூட்டை தூக்கிட்டு போறதுன்னா சரின்னு சொல்லியிருக்கேன். நாமளே முருங்க மரத்துல இருந்து இறங்கிட்டா மரம் என்ன ஆவறது?

கங்கிராட்ஸ் அரவிந்த்!