Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Friday, May 26, 2017

தமிழ் நாட்டின் இன்றைய பரிதாப நிலை


தமிழ்நாட்டு அரசியல் பற்றி எழுத வேண்டாம் என்று பல நாட்களுக்கு முன்  உறுதி எடுத்துக் கொண்டிருந்தேன் .ஆனால் நடக்கும் தொடர் சம்பவங்கள் என் உறுதியை குலைத்து விட்டது.தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் நடக்கும் சம்பவங்கள் இந்திய அரசியலை திசை மாறி பயணிக்க செய்துவிடுமோ என்ற கவலை எல்லோரையும் பேச வைத்திருக்கிறது.

பொதுவாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் சென்ற சில ஆண்டுகளாக இந்திய அரசியலை உற்சாகத்துடன் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.அவர்களுடைய கனவுகள் பற்றி பேச இப்பொழுது தயாராக இல்லை அந்த கனவு கலையும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.  ஆனால் படித்த மத்திய தர வர்க்க மக்கள் தமிழ்நாட்டு அரசியலை கலைஞர் எதிர்ப்பு உணர்வுடன் பார்த்து வந்ததை கவனித்துக் கொண்டிருக்கிறேன் அந்த காரணத்துக்காகவே அவர்கள் ஜெயலலிதாவின் அரசியலை ஆதரித்துப் பேசி வந்ததும் தெரியும் எதிரிக்கு எதிரி நண்பன்  என்ற அந்த தவறான கருத்து தமிழ்நாட்டிலும்  பரவலாக  அரங்கேறிக் கொண்டிருந்த காலம் உண்டு.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அரசியல் சார்பு இல்லாமல் நாட்டு நலன் கருதி சிந்திக்கும், பேசும் மக்களிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.  அவர் இருக்கும்போது எல்லாம் நல்லபடியாக நடந்தது என்று இதற்கு அர்த்தம் அல்ல.  ஆர்.  கே நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதன் பிண்ணனியை அறிந்தவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும். பகிரங்கமாக பட்டப் பகலில் ஒரு வாக்குக்கு ருபாய் 4000 கொடுக்கும் காட்சி தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கமுடியும்,என்ற மோசமான நிலைமை .  உருவாகியிருக்கிறது.  ஆளும் கட்சியின் இரண்டு அணிகளும் மத்திய அரசாங்கத்தின் தயவைப் பெறுவதற்கு போட்டி  போட்டுக் கொண்டிருக்கின்றன.ஆளும் கட்சியின் சட்டசபை உறுப்பினர்களுக்கு :ள்ள ஒரே நோக்கம் எப்படியாவது ஐந்தாண்டு சட்டசபை உறுப்பினர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.  அதற்காக அவர்கள் கூண்டோடு விலை போகத் தயாராக இருக்கிறார்கள் சில்லரையாகப் போனால் சபை கலைக்கப்படும் அபாயம் இருக்கிறது.  எப்படி இருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை சட்டசபை கலைக்கப்படாது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  இடையில் பல உறுப்பினர்கள் கோஷ்டியாகப் பிரிந்து கிடைத்தவரை சுருட்ட பேரம் செய்கிறார்கள்.  சாதி வாரியாகவும் மாவட்ட வாரியாகவும் இது நடக்கிறது
 கொடநாடு பங்களாவின் ரகசியம் முழுவதும் இன்னும் வெளியாகவில்லை .அங்கே உள்ள பெரிய மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடிக்க உள்விஷயம் தெரிந்தவர்கள் நடத்திய நாடகம்தான் அது என்று மக்கள் சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கிறது அதையொட்டி  இது வரை  4 அல்லது 5 கொலைகள் நடந்திருக்கிறது.  சந்தேப்படும்படியான சில விபத்துகளில் சம்பந்தபட்ட சிலர் இறந்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டு காவல்     துறை இது பற்றி நியாயமான, உண்மையான விசாரனை நடத்த வாய்ப்பில்லை.  மத்திய அரசாங்கம் இதில் தனக்கு ஏதாவது அரசியல் லாபம் இருக்குமா என்றுதான் நினைப்பதாகத் தெரிகிறது.

 ஏற்கெனவே இரு கோஷ்டிகளில் எது தன் பக்கம் சாயும் என்று மத்திய அரசாங்கம் கணக்கு போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது தங்கள் பலவீனத்தை சரியாகத் தெரிந்து இரு அணிகளும் மத்திய அரசாங்கத்தின் கருணைக்கு மணு போட்டுக் கொண்டிருக்கின்றன.  இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் மாற்றி மாற்றி பிரதமரை சந்தித்து பேசுகிறார்கள் விவசாயிகளை சந்திக்க.நேரம் இல்லாத பிரதமர் இவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க முடிகிறது.  கொள்ளைக்காரர்களில் வல்லமை படைத்தவனை ஆதரித்து சிம்மாசனத்தில் உறுதியாக அமர்த்த மத்திய அரசாங்கம் நியாயம் தேடிக் கொண்டிருக்கிறது.  மற்றபடி இந்த நாடகத்தில் தர்மம் நியாயம்  சமூக அக்கரை எதைப் பற்றியும் யாருக்கும் கவலை இல்லை.ஒரு தொகுதியில் நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு 89 கோடி ருபாய் செலவிட ஒருகட்சி தயாராக இருந்தால் அந்த கட்சியின் தரமும்,பணபலமும் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்தால் நம்முடைய ஜனநாயகம் போன கதி தெரியும் .  
தினம் தினம் நடக்கும் குழப்பத்துக்கு இடையில் மேலும் ஒரு பெரிய குழப்பம் வர வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. அதுதான் ரஜனிகாந்தின் அரசியல் பிரவேசம். ஒவ்வொரு படத்தின் வெற்றிக்குப் பிறகும் ரஜனி அரசியலுக்கு வருகிறார் என்ற வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது இந்த முறை தீவிரமாகப் பேசப்படுவதன் உள்நோக்கம் எல்லோருக்கும் புரிகிறது .  திரைப்படங்களில் மகாராஜா வருவதற்கு முன் பராக் பராக் என்று காவலாளி கூறிக் கொண்டு வருவது போல ஏகப்பட்ட அமர்க்களம்.காலம் கூடி வருவதாகவும் ஆண்டவனே நேரம் பார்த்து கொடுத்து விட்டதாகவும் சொல்லுகிறார்கள்.மத்திய அமைச்சர்கள் ரஜனியோடு தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் என்ற செய்தியும் உண்டு.அவர் தனிக் கட்சி தொடங்காமல் தன்னுடன் இணைந்து அரசியல் செய்தால் பாரத தேசத்தின் புனிதத்தையும் பழம்பெருமையையும் காப்பாற்றலாம் என்று மத்திய அரசாங்கத்தை ஆளும் கட்சி நினைக்கிறது சிவாஜிகணேசன் விஜய காந்த் போன்றவர்கள்  அரசியலுக்கு வந்து பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும் இப்பொழுது விஜகாந்த் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை சாராய நெடி வரும் திசையைத் தேடிப் போனால் ஒருவேளை அவரைக் கண்டு பிடிக்கலாம்.
 
ரஜனி அரசியலுக்கு வந்தால் ஒரே லாபம்  சி.  பி.  .  ரெய்டு வருமான வரித் துறை ரெய்டு என்று அவருக்கு எதுவும் இருக்காது
ஒரு  நூற்றாண்டு காலம் தமிழ்நாடு கூத்தாடிகள் கையில் அகப்பட்டு சீரழிய வேண்டும் என்று ஒரு சாபம் இருப்பதாக நாலும் தெரிந்த ஒரு ஜோசியர் கூறுகிறார் எனக்கு தனிப்பட்ட முறையில், அவருடைய ஜோசியத்தில் நம்பிக்கை இல்லை ஆனாலும் ஒரு ஜாக்கிரதைக்காக இதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா என்று கேட்டறிய வேண்டும் வடநாட்டில் மதத்தையும்  சாமியார்களையும் வைத்து அரசியல் செய்வதைப் போல தமிழ்நாட்டில் சினிமா நடிகர்களை வைத்து அரசியல் நடத்தினால் தான் பிழைப்பு ஓடும் என்று தெரிந்து கொண்டிருக்கிறர்கள். 
மாநிலத்தின் மிகப்பெரிய நதியான காவிரியில் நீர் இல்லை வறண்டு கிடக்கிறது.வளமான தஞ்சை மாவட்ட விவசாயிகள் விவசாயத்தை விட்டு வேறு தொழில் தேடி நகரங்ளில் கூலிவேலை செய்து பிழைக்க வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.பெரும்பாலான அணைக்கட்டுகளில் அடிமண் மட்டுமே தெரிகிறது ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து கொண்டிருக்கிறது இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அரசாங்கத்தை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ளத்தான் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது மற்ற கட்சிகளூம் ரஜனியின் அரசியல் வருகை ஏதோ ஒரு யுகப்;பரட்சி போல அதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  பொறுப்பான தினசரிகளில் கூட இது பற்றி செய்தி கட்டுரையும் தலையங்கமும் வருகிறது
சில சமயங்களில் நம்பிக்கை தரும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கிறது அதுதான் மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் செய்யும் கலகம்.

உச்ச நீதி மன்ற்ம் கொடுத்த தீர்ப்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.  உடனே தேசிய நெடுஞ்சாலைகளின் விளக்கத்தையே மாற்றி விட்டது மாநில  அரசாங்கம்  பல தேசிய நெடுஞ்சாலைகள் மாநில சாலைகளாக அவதாரம் எடுத்தன. எல்லாம் மத்திய அரசாங்கத்தின் உடன்பாட்டோடுதான் செய்தார்கள்.அதே நெடுஞ்சாலைகளில் அதே மதுக்கடைகள் வழக்கம் போலச் செயல்பட்டன. அதன் பிறகு தொடங்கியது பெண்கள் எழுச்சி .  நூற்றுக்கணக்கான இடங்களில் பல்லாயிரக்கண்க்கான பெண்கள் கூடி மதுக்கடைகளை முற்றுகையிடத் தொடங்கினார்கள் ஒரு மாதத்துக்கு முன் தொடங்கிய இந்த போராட்டம் முடிவு இல்லாமல் நடக்கிறது எந்த குறிப்பிட்ட அரசியல் கட்சியும் இதில் முனைப்பு காட்டவில்லை .  நகரங்கள் கிராமங்கள் என்ற வேற்றுமை இல்லாமல் எல்லா பகுதிகளிலும் மறியல் தொடர்கிறது தொடக்கத்தில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளுக்கு எதிராக ஆரம்பமான இயக்கம் எல்லா பகுதிக் கடைகளுக்கும் எதிராகத் திரும்பிவிட்டது.இதற்கு முக்கிய காரணம் தேசிய நெடுஞ்ச்சாலைக்கான விளக்கத்தை அரசாங்கம் மாற்றியதுதான்.கூட்டுசதியை மக்கள் புரிந்து கொண்டதுதான். 
வெறும் மறியலில் தொடங்கிய இயக்கம் படிப்ப்படியாக எல்லா மதுக்கடைகளுக்கும் எதிராகத்  திரும்பியது மறியலோடு மட்டுமல்லாமல்  கடைகளில் புகுந்து பாட்டில்களை எடுத்து உடைத்து வீதியில் எறிகிறார்கள்.  எல்லாம் பெண்கள்தான்.எந்த காவல்துறையும் அவர்களை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.அவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையால் எந்த பயனும் இல்லை.  கலகம் அதிகமானது மட்டுமல்லாமல் பல புதிய பகுதிகளுக்கும் பரவியது
எல்லா தொலைக்காட்சிகளும் தொடர்ந்து நடக்கும் கலகத்தை ஒளி ;பரப்பிக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் ஒரு தெருவில் மறியல் செய்த ஒரு பெண்ணை கன்னத்தில் ஒரு அறை விட்டார் ஒரு காவல்துறை அதிகாரி.அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் தன் கன்னத்தை தடவிக் கொண்டார்கள். அந்த அளவுக்கு பலமான அடி அந்த பெண்ணுக்கு காது செவிடு ஆகிவிட்டது என்று செய்தி.  ஆனால் அதைக் கண்டு எந்த பெண்ணும் பயந்து போராட்டத்தில் ஈடுபட தயக்கம் காட்டவில்லை.  பெரும்பலும் குடித்து வீணாகும் இளைஞர்களின் தாயார், னைவி, குழந்தைகள் இப்படி குடும்பம்.குடும்பமாக பலர் வீதிக்கு வந்துவிட்டனர். தன்னெழுச்சியாகத் தொடங்கிய இந்த போராட்ட்த்தைப் பார்த்து அரசாங்கம் ஆடிப் போய் விட்டது.எந்த அமைச்சருக்கும் மக்களை சந்திக்கும் துணிவு இல்லை. பெண்களின் இந்த போராட்டம் தொடர்கிறது.
இப்படி எல்லாமே குறைகள் நிறைந்த அறிக்கையாக இந்த கட்டுரை அமைந்து விட்டதாக யாரும் குறைப்பட்டுக் கொள்ள வேண்டாம். படிப்பவர்கள் சிரிக்க ஒரு செய்தியோடு முடிக்கலாமென்று நினைக்கிறேன்.அந்த செய்திகூட நடிகர் கட்சி மாறியது தொடர்பான செய்திதான். ராதாரவி என்ற சினிமா நடிகர் சமீபத்தில் .  தி.  மு.கவிலிருந்து விலகி தி.மு..வில் சேர்ந்தார், அதற்கு அவர் பத்திரிகை நிருபர்களிடம் கொடுத்த காரணம். அவருடைய தாயார் இறந்த போது எந்த .  தி.  மு.  தலைவரும் இவரை சந்தித்து ஆறுதல் கூறவில்லையாம்.  ஸ்டாலின் ஒருவர் மட்டுமே  துக்கம் விசாரித்து இவருடைய கண்ணீரை துடைத்து விட்டாராம். அதனால்தான் திமுவில் இப்பொழுது சேர்ந்தாராம்.  அந்த தாயில்லா பிள்ளை கொடுத்த   கொடுத்த விளக்கம் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? ராதா ரவியின் தாயார் இறந்து 9 வருடம் ஆகி விட்டது.