Showing posts with label poonool. Show all posts
Showing posts with label poonool. Show all posts

Thursday, June 16, 2011

தெளிவு 1 - பதில் ( பூணூல் என்றால் என்ன )

அன்புள்ளங்களே,

தங்களின் பொறுமைக்கு தலை வணங்குகிறோம்.
பூணூல் என்றால் என்ன என்று கேள்விக்கு விடை அளிக்கும் தருணம்.

இதற்கு நிறைய விளக்கங்கள் உண்டு.

பூ + நூல் என்றும்
பூண் + நூல் என்றும் விளக்கங்களை படித்து உள்ளேன்.

நம் சமயத்தில் நூலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள்.
நூல் ஒரு தகவல் சம்பந்தமானது. நாம் சிறு வயதில் தீப்பெட்டியை நூலில் கட்டி தொலை பேசியாய் விளையாண்டது போல நூலை
எல்லா சடங்குகளிலும் உபயோக படுத்தியுள்ளனர்.
கோயில் விழாக்களில் யாகம் செய்யும் இடத்தில் பார்த்தால் கும்பத்தில் / கலசத்தில் நூல் சுற்றி இருக்கும்.
யாக சாலையின் அக்னி குண்டத்திற்கும், தெய்வ சிலையின் மைய பகுதிக்கும் இணைத்து ஒரு நூலையும் பார்த்து இருப்பீர்கள்.
யாகம் செய்பவர்களின் கைகளில் நூல் காப்பு கட்டப் பட்டிருக்கும்.
நூல் ஆனது தகவல் மற்றும் சக்தி பரிமாற்றத்திற்கும் துணை ஆக உள்ளது என்பது இதன் அபிப்ராயம்.
இது உண்மையா அல்லது பொய்யா என்று மற்றொரு தெளிவில் கண்டு கொள்வோம்.

திருமணத்தில் தாலி கூட நூலினால் ஆனது தான்.
இடுப்பில் அணியும் அரை ஞான கயிறும் நூலினால் ஆனது தான்.

இதனால் என்னவோ நாம் படிக்கும் செய்தி தொகுப்பு புத்தகங்களை "நூல்" என்றே கூறுகிறோம் என தோன்றுகிறது.
நூலை போல தாமரையும் தெய்வ சம்பந்த நிகழ்சிகளில் காணலாம். இது இலக்குமியின் அங்கமாகவும் கருத படுகிறது.
தாமரைத் தண்டின் நார் தான் நூலாக உபயோகத்தில் இருந்தது.
விளக்கில் திரியாகவும் பயன் படுத்தி இருந்தனர்.
எனவே பூ + நூல் என்பது பொருத்தம் என சொல்லி இருந்தனர்.

மற்றொருவரோ பூண் + நூல் = பூணும் நூல் , அதாவது அணியக் கூடிய நூல் என்று சொல்லி இருந்தார்.
அதற்கு பெரிய விளக்கங்கள் எதுவும் கொடுக்க படவில்லை.

வாரியார் அவர்களோ மிக வித்தியாசமாக சொல்லி இருந்தார். இது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. எனவே இதனை நான் பொருத்தமான
பதிலாக கொடுக்கிறேன். மற்றவர்களுக்கு மறுக்கும் உரிமை உள்ளது.

புரி + நூல் என்பது தான் திரிந்து பூணூல் என்று மாறி உள்ளது.
புரி என்றால் முடிச்சு மற்றும் விளக்கம் என்றும் அர்த்தம். முடி போட்ட நூல் "புரி + நூல் "
இதனை குரு குலத்தில் படிப்பவர் மட்டுமே அணிந்து வந்தனர். படித்தவரை அடையாளம் காட்டவே இது பயன் படுத்தப் பட்டது.
அந்த காலத்தில் வேத வியாசம் பண்ணுபவர்கள் - ஆட்சி புரிபவர்கள் - மேலை நாடு சென்று தொழில் புரிபவர்கள் மட்டுமே
படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தனர். எனவே
அந்தணர்கள் - பாடம் சொல்லி தர விரும்பியவர்கள் ,
க்ஷத்ரியர்கள் - அரசாள விரும்பியவர்கள் ,
வைசியர்கள் - வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
மட்டுமே குருகுலம் சென்று படித்தனர்.
அவர்கள் மட்டுமே இதனை அணிந்தனர்.

முதலில் எல்லோரும் ஒரு புரி மட்டுமே அணிந்தனர்.
காலப் போக்கில் பிரமச்சாரி - ஒரு புரியும்,
குடுமபஸ்தான் - இரு புரியும்,
சன்யாசம் பெற்றவர் - முப்புரியும் அணிந்தனர்.

இது நான் கேட்ட அறிவு. உங்களின் பகிர்வை தெரிய படுத்துங்கள்.

வேதாந்தி

Tuesday, June 07, 2011

பூணல் அல்லது பூணூல் என்றால் என்ன? ( தெளிவு 1 )

அன்பு உள்ளங்களே,

கேள்வி ஞானம் பற்றி கேள்விப் பட்டு இருப்பீர்கள். நீங்கள் கேள்வி கேட்டதுண்டா?
நிறைய கேளுங்கள். உங்களுக்குள்ளே கேளுங்கள், பிறரிடம் கேளுங்கள். அப்பொழுது தான் ஞானம் பிறக்கும்.
இது அல்ல கேள்வி ஞானம். ஒரு கேள்விக்கு ஆயிரம் பதில் இருக்கும். ஆனால் எல்லாம் சரியானதாக இருக்காது.
பதில் சொல்லியவருக்கோ அது சரியானதாக இருக்கும்.

இங்கே தான் குழப்பம். ஒருவருக்கு சரியாக தோன்றுவது, மற்றவருக்கு சரியாக படுவது இல்லை.
அட எதைத் தான் சரி என்று எடுத்துக் கொள்வது?
அதை நம் அறிஞர்களிடம் விட்டு விடுவோம்.

நாம் பூணல் அணிகிறோம். எதற்கு அணிகிறோம், அது என்ன என்றாவது கேட்டதுண்டா?
உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள், நான் 10 நாட்கள் கழித்து சரியான் விடை தருகிறேன்.

வேதாந்தி