Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Sunday, November 09, 2014

அவையடக்கம்


நண்பர் ஒருவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள ஒரு சிறுவன் சேர்ந்தான். ஒரு வருடம் கழித்து அந்தச் சிறுவனின் தந்தையும் சங்கீதம் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு நண்பரிடம் கேட்டிருக்கிறார். அந்த உரையாடலை கீழே தருகிறேன்.

நிஜமாவே உங்களுக்கு கத்துக்க ஆசையா?
ஆமாம்.

சரி வாங்க.  பேசிட்டு, நீங்க எப்படி பாடுறீங்கன்னு பாத்துட்டு டிசைட் பண்ணலாம்.

தந்தை வந்து பேசுகிறார். பாடிக் காட்டுகிறார். நண்பரும் தந்தைக்கு கற்றுத் தருவதாக சொல்லி விட்டபின் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்க இதுக்கு முன்னாடி  பாட்டு கத்துக்கிட்டிங்களா?

இல்லைங்க. நான் வெறும் பாத்ரூம் பாடகன் தான். இன்ட்ரெஸ்ட் இருக்கு, அவ்வளவுதான். கொஞ்சம் முறையா கத்துக்கலாமுன்னு ஆசை அதனால்தான்...

சந்தோஷம். எப்படி உங்களுக்கு பாட்டு கத்துக்கனும்னு ஆசை வந்தது? உங்க குடும்பத்துல யாராவது பாடுவாங்களா?

எங்க வீட்டுல யாரும் பாட மாட்டாங்க. ஆன எங்க தாத்தா ஒரு பாடகர். அவர் நிறைய சங்கீதம் பாடியிருக்கார்.  கச்சேரி எல்லாம் பண்ணியிருக்கிறார். சினிமாவுல கூட பாடியிருக்கார்.

அப்படின்னா  நான் கேள்விப் பட்டிருக்கலாம்.  உங்க தாத்தா பேரு?

டி. எம். சௌந்தர ராஜன்....

நண்பர் மயங்கி விழுகிறார்.

Wednesday, May 20, 2009

பீச்சுக்கு போகலாமா ?! (அரைபக்கக் கதை)

சரியாகக் காலை பத்து மணிக்கு சிணுங்கியது செல்.

மறுமுனையில் செந்தில். "மாலதி ! இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் வச்சுக்காத. சாயந்திரம் பீச்சுக்கு போகலாம் !"

'சாயந்திரம் போற‌த்துக்கு இப்பவே என்ன அவசரம் ! என் கூட பேசிக்கிட்டே இருக்கணும் போல' என்று பெருமிதம் கொண்டாள் மாலதி.

சமையலில் மூழ்கினாள், புத்தகம் வாசித்தாள். அயற்சியாக இருக்க சிறிது கண்ணயர்ந்தாள்.

பண்ணிரண்டு முப்பதுக்கு மீண்டும் செல்லின் சிணுங்கல்.

"மாலதி ! நான் குணா. இன்னிக்கு எதும் ப்ரோக்ராம் இல்லியே ?! சாயந்திரம் பீச்சுக்கு போகலாமா ?"

'இல்லடா, செந்தில் கூப்பிட்டு இருக்கான்னு சொல்லிடலாமா ?!' என யோசித்து, அவன் என்னடான்னா போகலாம் என்று உத்தரவிடுகிறான். இவன் என்னடா என்றால் போகலாமா என்று கேட்கிறான். யாருக்கு என்ன பதில் சொல்வது'

"உனக்கு எத்தனை தடவை சொல்வது. பசங்களுக்கு இந்த அளவிற்கு செல்லம் கொடுத்து வளர்க்காதே என்று !!! பேரு சொல்லிக் கூப்பிட்டாங்க, ச‌ரி, அத ஆரம்பத்துலேயே கண்டிச்சிருக்கணும். விட்டாச்சு. இவனுங்க எலியும் பூனையுமா இருந்துகிட்டு, நம்மள பிரிக்கிறானுங்க. இப்ப பாரு, ஊர்ல எவ்வளவோ அழகழ‌கா புள்ளைக இருக்கு. எதிர்த்து நின்னு என்ன அழகா பேசுது. அதுல யாரையாவது புடிச்சு கிடிச்சு பீச்சுக்கு போக வேண்டியது தானே !!! என் பொண்டாட்டிய என் கூட அனுப்ப மாட்டேங்கிறானுங்க" என்று ம‌திய‌ச் சாப்பாட்டிற்கு வ‌ந்த‌ அர்ஜூன் வழக்கம் போல அலுத்துக் கொண்டார்.