என்றைக்குமே பழைய நினைவுகள் இனிமையானதே. அப்படி கிராமத்தின் பயணத்தைப் பற்றி எழுதிய கவிதையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_28.html
Monday, October 29, 2007
Friday, October 19, 2007
புத்தகவலம்
என்னய்யா யூட்யூபை வைத்து பதிவு நடத்துகிறாய் என்று அனைவரும்(சரி - ரிச்மண்டில் இருக்கும் இருவர்) கலாய்க்கிறார்கள். அதனால் யூட்யூப் பஜனை இல்லாத பதிவு இது.
முதலில் ஒரு அபூர்வமான படத்தைப் பாருங்க இங்கே. எல்லா ஆரஞ்சு கொக்குகளும் (அதாங்கோ ஃப்ளாமிங்கோ) சேர்ந்து ஒரு பெரிய ஆரஞ்சு கொக்கு செய்திருக்கின்றன. எங்கே ரூம் போட்டு யோசிச்சதுகளோ தெரியலை...
நேற்று ஒரு புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். A Certain Ambiguity: A Mathematical Novel - by Gaurav Suri & Hartosh Singh Bal
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tK7ZClaeev4dMJe-sEQjAx53WHSheCNVgQaPI9V0n_8i5_x1CXo_z_siguanm1dOPeDxORrvV7Da0rshpHeh_0glHE5mnusk2InwEERzo=s0-d)
கணிதமேதையான ஒரு தாத்தா தன் பேரனுக்கு ஒரு கால்குலேட்டர் கொடுத்து புதிர்களின் மூலம் கணிதத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். பேரன் அமெரிக்கா போய் கணிதம் கற்கவேண்டும் என்று சொத்தை எழுதிவைத்து செத்துப் போகிறார். பேரன் அமெரிக்கா வந்து ஸ்டான்ஃபோர்டில் படிக்கிறான். தாத்தா 1919ல் நியுஜெர்ஸியில் சிறைத்தண்டனை பெற்றதை அறிகிறான். அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கணிதத்தை நாடுகிறார். புத்தகம் கைக்கு வந்ததும் மேலே சொல்கிறேன். :-) வேண்டுமானால் முதல் அத்தியாயத்தை படித்துக் கொள்ளுங்கள் இங்கே.
கணிதம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது சைமன் சிங்கின் புத்தகங்கள். அவருடைய கோட் புக் மிகவும் சுவாரசியமானது. ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரை மனிதன் எப்படி ரகசியமாக சங்கேத மொழியில்(encryption) தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விளக்குகிறார். ஜூலியஸ் சீஸர், ஸ்காட்லாந்து ராணியில் துவங்கி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா-இங்கிலாந்து ரகசிய தொடர்பு கொள்ள என்ன உத்திகள் எல்லாம் கையாண்டார்கள் என்று சுவாரசியமாக போகிறது புத்தகம்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u-PrVdhFuMFx-R9fBNEwI4pzNAAPeS9LrZKDSh2lc2x5y_GL-kVse8Qi370AdR38UgV8cWE_mNo4cQVfx_H2gK4P5vs_2oNoG2Tg=s0-d)
இந்த கணிணி உலகில் புழக்கத்தில் இருக்கும் என்கிரிப்ஷன் வகைகளும் சுலபமாக புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். மாணவர்கள் படிக்க நல்ல அழகான முறையில் விளக்கியிருக்கிறார். ஜெர்மனி உபயோகப்படுத்திய எனிக்மா கருவி மாணவர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய அருமையான தலைப்பு. வர்ஜினியாவில் புதையுண்டு இருக்கும் பொக்கிஷம் பற்றிய கதையும் சுவாரசியமானது. அதற்கான் வேட்டை இன்னும் வர்ஜினியாவின் லின்ச்பர்க் நகரில் நடக்கிறதாம். அடுத்த முறை அந்த பக்கம் போகும்போது கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.
அவருடைய பிக் பேங் தியரி பற்றிய புத்தகமும் அருமையானது. இந்த புத்தகமும் ஆதி காலத்திலிருந்து பல நாகரீகங்களில் உலகம் மற்றும் அண்டவெளியைப் பற்றி இருந்த பலவிதமான நம்பிக்கைகளில் ஆரம்பித்து இந்த நாள் வரை உலகம் உருவானதற்கான ஆராய்ச்சியைக் கோவையாக சொல்கிறார் சைமன். இவருடைய ஃப்ர்மட் தியரம் பற்றிய புத்தகமும் இந்த வகையில் ஆதிகாலத்து கணித மேதைகளில் ஆரம்பித்து தற்போதைய கண்டுபிடிப்பு வரை விளக்கியிருக்கிறார். இந்த புத்தகம்தான் பாதிக்கு மேல் எனக்கு OHT ஆகிவிட்டது(overhead transmission).
இந்த புத்தகங்களை எல்லாம் அண்மையில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் ஒன்றிருக்கிறது. பத்ரி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிக் இன்ஃபோ போன்ற தளங்களுக்கு காரணகர்த்தா. இப்போது இந்தியா திரும்பி கிழக்கு பதிப்பகம் என்ற பேரில் தமிழில் புத்தகங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த கிழக்குப் பதிப்பகம் அண்மையில் ஒருவரின் வரலாற்றை புத்தகமாக போட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த நபர் அகால மரணம் அடைந்தபோது நான் அடைந்த சோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.
இவர் இறந்து போன செய்தி கேட்டு, என் நண்பன் ஒருவன் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'தூக்கம் போச்சிடி அம்மா' என்று புலம்பிக் கொண்டிருந்தான். கரெக்ட்! சிலுக்கின் வாழ்க்கை வரலாறுதான் புத்தகமாக வந்திருக்கிறது. இந்த தாளாத துயரத்தைத் தணிக்க - புத்தகம் வந்ததற்கல்ல - எத்தனை முறை மூன்றாம் பிறை பார்த்தாலும் போதாது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் யாராவது இந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தால் என் ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுக்கிறேன்.(தமிழ் சங்க பொருளாளரிடம் சொல்லாதீர்கள்)
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tGAidEZBC0EhjPm05lDvALnyWEzlcIbtoK_gPR0eH76MjUhOo8-BksPt4MdToXjILpIzLRm794H34N-AIKi71rwhlPVud0xOtM=s0-d)
இப்போது நான் படித்துக் கொண்டிருப்பது மீரா காம்தார் எழுதிய Planet India. 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் சைனாவுக்கும்தான் சொந்தம் என்கிறார். உலகநாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்தியா என்கிறார். தட்பவெப்பத்தில் பார்த்தால் இமாலயக் குளிரிலிருந்து ராஜபுதன பாலைவன சூடுவரை... அரசியலில் பார்த்தால் கம்யூனிஸ்டுகளில் இருந்து மன்மோகன் சிங் வரை.... சினிமா, பொருளாதாரம், ஏழ்மை, பணம் அனைத்து எல்லா விளிம்புகளையும் அடங்கியதால், இந்தியாவே ஒரு சிறிய உலகம் போன்றது என்றும், எப்படி இந்தியா உலகத்தின் முக்கிய நாடாக திகழப்போகிறது என்று சொல்கிறார் மீரா.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_teHeQSEDW693efHkyqUCZWDP9Y6EH2BJAJios9ZmyWxK84yk6r8S5aj599UDqF5LbqmDQa6fbu9NqQmUKzu1S5cbi65_nKTATadIYjekkuXaOke-iwxirjRJZmTqfUaJIv3AE=s0-d)
நான் சதங்காவுடன் கூட்டணியை முழுமையாகத் துண்டித்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிக்கட்சிக்காக அல்ல. சுஜாதாவைப் பிடிக்காதாம். அதாவது படித்ததே இல்லை என்கிறார் மனுஷன். தமிழ்நாட்டில் எந்த குகையில் இருந்தார் என்று தெரியவில்லை. சுஜாதா படிக்காத நபர் யாராவது இருப்பார்களா? பிடிப்பது பிடிக்காதது அடுத்த விஷயம். அப்புறம் பிடித்த எழுத்தாளர் என்று நான் கேள்விப்படாத பெயர் எல்லாம் சொல்கிறார். அவருடைய தமிழ் வாத்தியார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த மற்றொரு எழுத்தாளர் அண்மையில் மறைந்த ஆர்ட் பக்வால்ட். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கடைசி பக்கம் நினைவிருக்கிறதா? அதற்காக வாரம் முழுவதும் காத்திருப்பேன். பள்ளியில் ஒருமுறை நான் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு என் ஆசிரியர் 'ஆர்ட் புக்வால்ட்' ரொம்ப படிப்பியா என்று கேட்டார். நியுயார்க் டைம்ஸில் புகழ்பெற்ற மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே கடைசி பேட்டி காண்கிறார்கள். அதில் அவருக்கே உரித்த பாணியில் அவருடைய மரணத்தை அவரே அறிவிப்பதை பாருங்கள். மனுஷன் சிரித்துக் கொண்டே அழவைக்கிறார். சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் P.G.Wodehouse. ரொம்ப நாள் கழித்து சில புத்தகங்களை படித்தேன்(மகனும் விரும்பிப் படிக்கிறான் - மகனுடன் புத்தகத்துக்கு சண்டை போடுவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை). உங்களுக்கு இரண்டு வினாடி வினா கேள்விகள்(அது என்ன வினா கேள்வின்னு கேக்கப்படாது).
1. ஜீவ்ஸின் முதல் பெயர்(first name) என்ன?
2. பெர்ட்ரம் வூஸ்டரின் நடுப் பெயர்(middle name) என்ன?
சரியான பதில் அளிப்பவருக்கு சிலுக்கு புத்தகத்திற்கு கொடுத்தது போக அடுத்த பாதி ராஜ்ஜியம்.
வர்ட்டா.... Toodle-oooo!!!
முதலில் ஒரு அபூர்வமான படத்தைப் பாருங்க இங்கே. எல்லா ஆரஞ்சு கொக்குகளும் (அதாங்கோ ஃப்ளாமிங்கோ) சேர்ந்து ஒரு பெரிய ஆரஞ்சு கொக்கு செய்திருக்கின்றன. எங்கே ரூம் போட்டு யோசிச்சதுகளோ தெரியலை...
நேற்று ஒரு புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். A Certain Ambiguity: A Mathematical Novel - by Gaurav Suri & Hartosh Singh Bal
கணிதமேதையான ஒரு தாத்தா தன் பேரனுக்கு ஒரு கால்குலேட்டர் கொடுத்து புதிர்களின் மூலம் கணிதத்தில் ஆர்வத்தைத் தூண்டுகிறார். பேரன் அமெரிக்கா போய் கணிதம் கற்கவேண்டும் என்று சொத்தை எழுதிவைத்து செத்துப் போகிறார். பேரன் அமெரிக்கா வந்து ஸ்டான்ஃபோர்டில் படிக்கிறான். தாத்தா 1919ல் நியுஜெர்ஸியில் சிறைத்தண்டனை பெற்றதை அறிகிறான். அவர் குற்றமற்றவர் என்பதை நிருபிக்க கணிதத்தை நாடுகிறார். புத்தகம் கைக்கு வந்ததும் மேலே சொல்கிறேன். :-) வேண்டுமானால் முதல் அத்தியாயத்தை படித்துக் கொள்ளுங்கள் இங்கே.
கணிதம் என்றதும் ஞாபகத்துக்கு வருவது சைமன் சிங்கின் புத்தகங்கள். அவருடைய கோட் புக் மிகவும் சுவாரசியமானது. ஆதி காலத்திலிருந்து இந்த காலம் வரை மனிதன் எப்படி ரகசியமாக சங்கேத மொழியில்(encryption) தொடர்பு கொண்டிருக்கிறான் என்று விளக்குகிறார். ஜூலியஸ் சீஸர், ஸ்காட்லாந்து ராணியில் துவங்கி, இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா-இங்கிலாந்து ரகசிய தொடர்பு கொள்ள என்ன உத்திகள் எல்லாம் கையாண்டார்கள் என்று சுவாரசியமாக போகிறது புத்தகம்.
இந்த கணிணி உலகில் புழக்கத்தில் இருக்கும் என்கிரிப்ஷன் வகைகளும் சுலபமாக புரியும் வண்ணம் விளக்கியிருக்கிறார். மாணவர்கள் படிக்க நல்ல அழகான முறையில் விளக்கியிருக்கிறார். ஜெர்மனி உபயோகப்படுத்திய எனிக்மா கருவி மாணவர்களுக்கு ஒரு ப்ராஜெக்ட் செய்ய அருமையான தலைப்பு. வர்ஜினியாவில் புதையுண்டு இருக்கும் பொக்கிஷம் பற்றிய கதையும் சுவாரசியமானது. அதற்கான் வேட்டை இன்னும் வர்ஜினியாவின் லின்ச்பர்க் நகரில் நடக்கிறதாம். அடுத்த முறை அந்த பக்கம் போகும்போது கொஞ்சம் தோண்டிப்பார்க்க வேண்டும்.
அவருடைய பிக் பேங் தியரி பற்றிய புத்தகமும் அருமையானது. இந்த புத்தகமும் ஆதி காலத்திலிருந்து பல நாகரீகங்களில் உலகம் மற்றும் அண்டவெளியைப் பற்றி இருந்த பலவிதமான நம்பிக்கைகளில் ஆரம்பித்து இந்த நாள் வரை உலகம் உருவானதற்கான ஆராய்ச்சியைக் கோவையாக சொல்கிறார் சைமன். இவருடைய ஃப்ர்மட் தியரம் பற்றிய புத்தகமும் இந்த வகையில் ஆதிகாலத்து கணித மேதைகளில் ஆரம்பித்து தற்போதைய கண்டுபிடிப்பு வரை விளக்கியிருக்கிறார். இந்த புத்தகம்தான் பாதிக்கு மேல் எனக்கு OHT ஆகிவிட்டது(overhead transmission).
இந்த புத்தகங்களை எல்லாம் அண்மையில் என்னை மிகவும் பாதித்த புத்தகம் ஒன்றிருக்கிறது. பத்ரி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரிக் இன்ஃபோ போன்ற தளங்களுக்கு காரணகர்த்தா. இப்போது இந்தியா திரும்பி கிழக்கு பதிப்பகம் என்ற பேரில் தமிழில் புத்தகங்கள் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்த கிழக்குப் பதிப்பகம் அண்மையில் ஒருவரின் வரலாற்றை புத்தகமாக போட்டிருக்கிறார்கள். அண்மையில் இந்த நபர் அகால மரணம் அடைந்தபோது நான் அடைந்த சோகம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. அவர் கடித்துப் போட்ட ஆப்பிள் ஆயிரக்கணக்கில் ஏலம் போயிற்று. அவர் நடித்துக் கொடுத்த படங்கள் நூறு நாள் இலக்கை அநாயாசமாகத் தாண்டின. ஒரு காலகட்டத்தில் இவர் நடிக்காத படத்தை வாங்கவே மறுத்தார்கள் வினியோகஸ்தர்கள்.
இவர் இறந்து போன செய்தி கேட்டு, என் நண்பன் ஒருவன் ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'தூக்கம் போச்சிடி அம்மா' என்று புலம்பிக் கொண்டிருந்தான். கரெக்ட்! சிலுக்கின் வாழ்க்கை வரலாறுதான் புத்தகமாக வந்திருக்கிறது. இந்த தாளாத துயரத்தைத் தணிக்க - புத்தகம் வந்ததற்கல்ல - எத்தனை முறை மூன்றாம் பிறை பார்த்தாலும் போதாது. இந்தியாவிலிருந்து வருபவர்கள் யாராவது இந்த புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தால் என் ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடுக்கிறேன்.(தமிழ் சங்க பொருளாளரிடம் சொல்லாதீர்கள்)
இப்போது நான் படித்துக் கொண்டிருப்பது மீரா காம்தார் எழுதிய Planet India. 21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கும் சைனாவுக்கும்தான் சொந்தம் என்கிறார். உலகநாடுகளின் அனைத்து அம்சங்களையும் கொண்டது இந்தியா என்கிறார். தட்பவெப்பத்தில் பார்த்தால் இமாலயக் குளிரிலிருந்து ராஜபுதன பாலைவன சூடுவரை... அரசியலில் பார்த்தால் கம்யூனிஸ்டுகளில் இருந்து மன்மோகன் சிங் வரை.... சினிமா, பொருளாதாரம், ஏழ்மை, பணம் அனைத்து எல்லா விளிம்புகளையும் அடங்கியதால், இந்தியாவே ஒரு சிறிய உலகம் போன்றது என்றும், எப்படி இந்தியா உலகத்தின் முக்கிய நாடாக திகழப்போகிறது என்று சொல்கிறார் மீரா.
நான் சதங்காவுடன் கூட்டணியை முழுமையாகத் துண்டித்துவிடலாமா என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். தனிக்கட்சிக்காக அல்ல. சுஜாதாவைப் பிடிக்காதாம். அதாவது படித்ததே இல்லை என்கிறார் மனுஷன். தமிழ்நாட்டில் எந்த குகையில் இருந்தார் என்று தெரியவில்லை. சுஜாதா படிக்காத நபர் யாராவது இருப்பார்களா? பிடிப்பது பிடிக்காதது அடுத்த விஷயம். அப்புறம் பிடித்த எழுத்தாளர் என்று நான் கேள்விப்படாத பெயர் எல்லாம் சொல்கிறார். அவருடைய தமிழ் வாத்தியார் என்று நினைக்கிறேன். எனக்குப் பிடித்த மற்றொரு எழுத்தாளர் அண்மையில் மறைந்த ஆர்ட் பக்வால்ட். ஞாயிற்றுக்கிழமை ஹிந்து கடைசி பக்கம் நினைவிருக்கிறதா? அதற்காக வாரம் முழுவதும் காத்திருப்பேன். பள்ளியில் ஒருமுறை நான் எழுதிய கட்டுரையைப் பார்த்துவிட்டு என் ஆசிரியர் 'ஆர்ட் புக்வால்ட்' ரொம்ப படிப்பியா என்று கேட்டார். நியுயார்க் டைம்ஸில் புகழ்பெற்ற மனிதர்கள் உயிருடன் இருக்கும்போதே கடைசி பேட்டி காண்கிறார்கள். அதில் அவருக்கே உரித்த பாணியில் அவருடைய மரணத்தை அவரே அறிவிப்பதை பாருங்கள். மனுஷன் சிரித்துக் கொண்டே அழவைக்கிறார். சிரிக்க வைக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர் P.G.Wodehouse. ரொம்ப நாள் கழித்து சில புத்தகங்களை படித்தேன்(மகனும் விரும்பிப் படிக்கிறான் - மகனுடன் புத்தகத்துக்கு சண்டை போடுவேன் என்று ஒருநாளும் நினைத்ததில்லை). உங்களுக்கு இரண்டு வினாடி வினா கேள்விகள்(அது என்ன வினா கேள்வின்னு கேக்கப்படாது).
1. ஜீவ்ஸின் முதல் பெயர்(first name) என்ன?
2. பெர்ட்ரம் வூஸ்டரின் நடுப் பெயர்(middle name) என்ன?
சரியான பதில் அளிப்பவருக்கு சிலுக்கு புத்தகத்திற்கு கொடுத்தது போக அடுத்த பாதி ராஜ்ஜியம்.
வர்ட்டா.... Toodle-oooo!!!
Thursday, October 18, 2007
ராம்ஜியின் இசை மழலை
இன்று மின்னஞ்சலில் ஒரு திருமண அழைப்பு வந்திருந்தது. அதில் ஆங்கிலத்தில் Issai Mazhalaiயின் கச்சேரி என்றிருந்தது. முதலில் மழை என்று எழுதுவதில் எழுத்துப்பிழை என்று நினைத்தேன். சரி கூகுளாண்டவரிடம் முதலில் கேட்கலாம் என்று பார்த்தால் ஒரே ஆச்சரியம். சிறிய பெரிய குழந்தைகளை வைத்து அபஸ்வரம் ராம்ஜி நடத்தும் இசைக்குழு இது.
யூட்யூபில் தேடினாலும் நிறைய கிடைக்கிறது. சில பாடல்களைப் பார்த்தேன். எனக்கு பிடித்த பிபரே ராமரஸம் பாடலை இந்த குட்டிப்பையன் அனந்தராமன்(நம்ம ஊர்ல இப்படி ஒரு பேரா?) கலக்கிப் போட்டிருக்கிறான் பாருங்கள். என்ன குரல், என்ன திறமை.... அற்புதம். அதுவும் எப்படி அனுபவித்துப் பாடுகிறான்.... பெரிய ஆளாக வருவான் பாருங்கள்.
இசை மழலையைப் பற்றி என் நண்பனிடம் கேட்டேன். இவ்வளவு நாள் எந்த குகையில் இருந்தாயடா என்கிறான். மூன்று வருஷங்களாக ஜெயா டீவியில் வருகிறதாம் இ.ம. பார்க்கலாம் என்னைப் போல் குகைவாசிகள் எத்தனை பேர் என்று....
குகையில் இருந்து வெளியே வந்தால் எவ்வளவோ விஷயங்கள் தெரிகிறது. இங்கே பாருங்கள். மருதமலை மாமணியேன்னு ஒரு சின்ன பையன். சும்மா அதிருதுல்ல...
யூட்யூபில் தேடினாலும் நிறைய கிடைக்கிறது. சில பாடல்களைப் பார்த்தேன். எனக்கு பிடித்த பிபரே ராமரஸம் பாடலை இந்த குட்டிப்பையன் அனந்தராமன்(நம்ம ஊர்ல இப்படி ஒரு பேரா?) கலக்கிப் போட்டிருக்கிறான் பாருங்கள். என்ன குரல், என்ன திறமை.... அற்புதம். அதுவும் எப்படி அனுபவித்துப் பாடுகிறான்.... பெரிய ஆளாக வருவான் பாருங்கள்.
இசை மழலையைப் பற்றி என் நண்பனிடம் கேட்டேன். இவ்வளவு நாள் எந்த குகையில் இருந்தாயடா என்கிறான். மூன்று வருஷங்களாக ஜெயா டீவியில் வருகிறதாம் இ.ம. பார்க்கலாம் என்னைப் போல் குகைவாசிகள் எத்தனை பேர் என்று....
குகையில் இருந்து வெளியே வந்தால் எவ்வளவோ விஷயங்கள் தெரிகிறது. இங்கே பாருங்கள். மருதமலை மாமணியேன்னு ஒரு சின்ன பையன். சும்மா அதிருதுல்ல...
Tuesday, October 16, 2007
கொலு பாக்க வாங்க!
இந்த வருஷமும் எங்க ஊர்ல நவராத்திரி 'கொலு' கட்டியிருக்கே...
மிட்லோதியனில் வசிக்கும் பார்கவி - கணேஷ் தம்பதியினரின் வீட்டில் வைத்திருக்கும் அட்டகாசமான கொலுவுடன் ஆரம்பிக்கலாம்.
அடிக்கடி இங்க வந்து பாருங்க. உங்க வீட்டு கொலு படங்களை இங்கே சேர்க்கனுமா? richmondtamilsangam க்கு gmail.com ல ஒரு மின்மடல் படங்களுடன் அனுப்புங்க...
சென்னையில் பக்கத்து வீட்டு கொலு!
மிட்லோதியனில் வசிக்கும் பார்கவி - கணேஷ் தம்பதியினரின் வீட்டில் வைத்திருக்கும் அட்டகாசமான கொலுவுடன் ஆரம்பிக்கலாம்.
அடிக்கடி இங்க வந்து பாருங்க. உங்க வீட்டு கொலு படங்களை இங்கே சேர்க்கனுமா? richmondtamilsangam க்கு gmail.com ல ஒரு மின்மடல் படங்களுடன் அனுப்புங்க...
சென்னையில் பக்கத்து வீட்டு கொலு!
மழைக் காலம்
மழையைப் பற்றி எவ்வளவோ கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். நாமும் ஒன்று எழுதிப் பார்ப்போமே என்று தோன்றியதை ஒரு கவிதையாய் எழுதி எனது வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_16.html
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_16.html
Tuesday, October 09, 2007
வாஷிங்டன் - சென்னை பயண உதவி
அக்டோபர் 11ம் தேதி இரவு 10 மணிக்கு வாஷிங்டன் ட்ல்லஸ் (Dulles) விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸில் லண்டன் வழியாக சென்னை செல்வோர் யாராவது இருந்தால் ஒரு உதவி தேவைப்படுகிறது. நமது முன்னாள் தலைவர் வெங்கட் செட்டியாரின் தாயார் தனியாக பிரயாணம் செய்யவிருக்கிறார். அவர் ஏற்கனவே பயணம் செய்தவர்தான். யாராவது வழித்தடத்தில் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், லண்டனில் சரியான கேட்'டில் ஏறுவதற்கும், நம்ம ஊர் ஏர் ஹோஸ்டஸ் "பய நிகல் கவனத்திற்கு" என்று ஆரம்பித்து பேசும் தமிழை மொழி பெயர்க்கவும், சற்று உதவி செய்தால் போதுமானது.
நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பயணம் செய்யவிருப்பின், வெங்கட் அவர்களை 804-346-8238 என்ற எண்ணில் அழைத்துப் பேசலாம்.
நீங்களோ, உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் பயணம் செய்யவிருப்பின், வெங்கட் அவர்களை 804-346-8238 என்ற எண்ணில் அழைத்துப் பேசலாம்.
Tuesday, October 02, 2007
நியுயார்க்கின் சிறந்த தெருவோர உணவகம் - NY Dosas
நியுயார்க் நகரத்தின் தெருவோர உணவகங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதில் சிறந்த கடைகளை தேர்ந்தெடுத்து வெண்டி அவார்ட்ஸ் என்ற பரிசை அளிக்கிறார்கள். இந்த ஆண்டு முதல் பரிசைத் தட்டிச் சென்றிருப்பவர் திரு குமார். தோசா மேன் என்று அழைக்கப்படும் கந்தசாமி திருகுமார் ஈழத்தில் இருந்து வந்தவர். வேகன் முறையில் நெய், வெண்ணெய் இல்லாமல் இவர் சுடச்சுட சமைக்கும் தோசைகள் பறக்கின்றன. பல நியுயார்க் சுற்றுலா இதழ்களில்(Tour Guide), நியுயார்க் நகரில் அவசியம் பார்க்கவேண்டிய இடங்கள் பட்டியலில் இவருடைய தோசைக்கடையையும் சேர்த்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டின் வெண்டி அவார்ட்ஸ்க்கு கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களை கீழே காணலாம்
தெருவோர கடையாய் இருந்தால் தரங்குறைவான எண்ணெய், காய்கறிகள் உபயோகிப்பார்கள் என்ற பரவலான கருத்தை பொய்ப்பிப்பதே என் நோக்கம் என்கிறார் திரு குமார்.
இந்த ஆண்டின் வெண்டி அவார்ட்ஸ்க்கு கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உணவகங்களை கீழே காணலாம்
தெருவோர கடையாய் இருந்தால் தரங்குறைவான எண்ணெய், காய்கறிகள் உபயோகிப்பார்கள் என்ற பரவலான கருத்தை பொய்ப்பிப்பதே என் நோக்கம் என்கிறார் திரு குமார்.
Monday, October 01, 2007
பிரமிக்க வைக்கும் பிரபலங்கள் - 3 - இந்திரா நூயி
இந்த எந்திர உலகில், மனிதர்களைக் காண்பதே அரிதாகிக் கொண்டிருக்கிறது. நெருங்கிய பால்ய நண்பர்களே, தொலைபேசியில் அழைத்தாலோ, மின்னஞ்சல் செய்தாலோ, அவர்களின் புலம்பல் தான் வெகுவாக இருக்கிறதே அன்றி நம்பிக்கை வலுப்பதில்லை ;-(
நமது வாழ்வில் ஒரு சிலரைப் பார்க்கையில், அவர்களைப் பற்றி படிக்கையில் ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை வலுக்கும். அப்படி ஒருவரைப் பற்றி சமீபத்தில், நம் தமிழ் சங்கத் தலைவர் நாகு மூலம் அறியப் பெற்றேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHH6KRRTgeQGyIAvMrAfciNyBOFtQPJCnp7oh0GbOmCKEhVo3jcpX9FOKz8PtOwePJHfNQImG2qFNQqel4Oa2TgG7CyWiT4zQnc9K9cy_IAxDhTsd8Z1h0guj9Ecl-9XOFkWs-0q5Zvvk/s400/IndiraNooyi.gif)
நூயி அவர்களின் பெருமையை நம்ம வீட்டு அம்மணியிடம் சொல்லி அசத்தலாம் என்று பார்த்தால், இவரைப் பற்றி எனக்கு முன்பே தெரியுமே என்று சொல்லி நம்மை அசத்தி விட்டார்.
இந்திரா நூயி ! என்னது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணி கூகுளாரிடம் முறையிட்டால், கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார் இந்தப் பவர்புல் பெண்மணியைப் பற்றி. தொழில்துறை பத்திரிகைகள் அனைத்திலும் இவரைப் பற்றி செய்தி தான் ப்ரதானம். "இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்கத் தொழில்துறை அரசி" என்ற பட்டத்துடன் விவரிக்கிறது Times of India.
என்றாவது நெற்றியில் திருநீறு (ஒரு சிறு கீற்று) அணிந்து வேலைக்குச் செல்வது நம் போன்ற சிலரின் வழக்கம். அதையே சில நண்பர்கள் (வெள்ளைக்காரர்கள் என்று நினைக்காதீர்கள், பக்கா இந்தியர்கள் தான்) இதெல்லாம் ஏன் வைத்து வருகிறீர்கள் ! இவர்களுக்குப் பிடிக்காது தெரியுமா என்று ஜால்ரா அடிப்பார்கள்.
ஆனால் நூயி அவர்கள், 1980ல் Yale பல்கலைக் கழகத்தில் பயிற்சி முடிந்து Boston Consulting Group என்னும் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்கு, நம் பாரம்பரிய உடை சேலையில் சென்றிருக்கிறார். வேலையும் வாங்கியிருக்கிறார் !
நூயி அவர்களைப் பற்றிய மேலும் சில ப்ரமிப்புக்கள் :
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக பவர்ஃபுல் பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். 2005ம் ஆண்டு கணக்கெடுப்பில் பதினோறாம் இடத்தில் இருந்தவர்.
2000ல் Chief financial officer பொறுப்பேற்ற பின்பு பெப்சி நிறுவனத்தின் ஆண்டு ரெவின்யூ 72% கூடியிருக்கிறது.
இந்த 2007 மே மாதம் பெப்சி நிறுவனத்தின் சேர்மன் & CEO ஆகியவர்.
நம் நாட்டின் மிகச் சிறந்த விருதுகளின் ஒன்றான பத்மபூசன் விருது பெற்றவர்.
மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
தற்போது கணவருடனும், இரு மகள்களுடனும் கனெக்டிக்கட்-ல் வசித்து வருகிறார்.
நூயி அவர்களைப் பற்றிய வீடியோ காட்சி:
நமது வாழ்வில் ஒரு சிலரைப் பார்க்கையில், அவர்களைப் பற்றி படிக்கையில் ஒரு உற்சாகம் பிறக்கும், நம்பிக்கை வலுக்கும். அப்படி ஒருவரைப் பற்றி சமீபத்தில், நம் தமிழ் சங்கத் தலைவர் நாகு மூலம் அறியப் பெற்றேன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHH6KRRTgeQGyIAvMrAfciNyBOFtQPJCnp7oh0GbOmCKEhVo3jcpX9FOKz8PtOwePJHfNQImG2qFNQqel4Oa2TgG7CyWiT4zQnc9K9cy_IAxDhTsd8Z1h0guj9Ecl-9XOFkWs-0q5Zvvk/s400/IndiraNooyi.gif)
நூயி அவர்களின் பெருமையை நம்ம வீட்டு அம்மணியிடம் சொல்லி அசத்தலாம் என்று பார்த்தால், இவரைப் பற்றி எனக்கு முன்பே தெரியுமே என்று சொல்லி நம்மை அசத்தி விட்டார்.
இந்திரா நூயி ! என்னது பேரே வித்தியாசமா இருக்கே என்று எண்ணி கூகுளாரிடம் முறையிட்டால், கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார் இந்தப் பவர்புல் பெண்மணியைப் பற்றி. தொழில்துறை பத்திரிகைகள் அனைத்திலும் இவரைப் பற்றி செய்தி தான் ப்ரதானம். "இந்திய வம்சாவளியில் வந்த அமெரிக்கத் தொழில்துறை அரசி" என்ற பட்டத்துடன் விவரிக்கிறது Times of India.
என்றாவது நெற்றியில் திருநீறு (ஒரு சிறு கீற்று) அணிந்து வேலைக்குச் செல்வது நம் போன்ற சிலரின் வழக்கம். அதையே சில நண்பர்கள் (வெள்ளைக்காரர்கள் என்று நினைக்காதீர்கள், பக்கா இந்தியர்கள் தான்) இதெல்லாம் ஏன் வைத்து வருகிறீர்கள் ! இவர்களுக்குப் பிடிக்காது தெரியுமா என்று ஜால்ரா அடிப்பார்கள்.
ஆனால் நூயி அவர்கள், 1980ல் Yale பல்கலைக் கழகத்தில் பயிற்சி முடிந்து Boston Consulting Group என்னும் நிறுவனத்திற்கு நேர்முகத் தேர்விற்கு, நம் பாரம்பரிய உடை சேலையில் சென்றிருக்கிறார். வேலையும் வாங்கியிருக்கிறார் !
நூயி அவர்களைப் பற்றிய மேலும் சில ப்ரமிப்புக்கள் :
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக உலக பவர்ஃபுல் பெண்மணிகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர். 2005ம் ஆண்டு கணக்கெடுப்பில் பதினோறாம் இடத்தில் இருந்தவர்.
2000ல் Chief financial officer பொறுப்பேற்ற பின்பு பெப்சி நிறுவனத்தின் ஆண்டு ரெவின்யூ 72% கூடியிருக்கிறது.
இந்த 2007 மே மாதம் பெப்சி நிறுவனத்தின் சேர்மன் & CEO ஆகியவர்.
நம் நாட்டின் மிகச் சிறந்த விருதுகளின் ஒன்றான பத்மபூசன் விருது பெற்றவர்.
மிக முக்கியமாக நம் தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.
தற்போது கணவருடனும், இரு மகள்களுடனும் கனெக்டிக்கட்-ல் வசித்து வருகிறார்.
நூயி அவர்களைப் பற்றிய வீடியோ காட்சி:
Subscribe to:
Posts (Atom)