Thursday, July 19, 2007

வாழ்வில் பெறுவது எது ?

ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டென்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதையே நம் முன்னோர்கள் பல பழமொழிகள் மூலமா நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

உதாரணமா, மிகப் பிரபலமான பழமொழிகள் :

தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நெல் போட்டா நெல் முளைக்கும்; சொல் போட்டா ?
(நாவை அடக்கி வாசி என்று நாசுக்காவும் சொன்னார்கள்)

கொடுத்தால் தான் பெறமுடியும் என்பதை உணர்ந்த பிறகு, என்னெல்லாம் கொடுத்தா, என்னெல்லாம் கிடைக்கும் என்று யோசித்தவை கீழே :

கேட்டுப் பெறுவது யாசகம்
கேளாமல் பெறுவது பாசம்

தட்டிப் பெறுவது தண்டல்
முட்டிப் பெறுவது மூர்க்கம்

விட்டுப் பெறுவது சுவாசம்
விடாமல் பெறுவது கோள்சொல்

ஒட்டிப் பெறுவது உறவு
வெட்டிப் பெறுவது தனிமை

கட்டிப் பெறுவது மகவு
கொட்டிப் பெறுவது அன்பு

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!