Tuesday, September 16, 2014

ஊருக்கு உபதேசம்


இரிச்மண்டு தமிழ்ச் சங்கத்தின் அடுத்த கலாச்சார நிகழ்ச்சி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. கடந்த ஐந்து வருடங்களில் எல்லா நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்த சாதனையில், என்னுடைய அனுபவங்கள் மற்றும், சக தமிழ் நண்பர்களுக்கு சில வேண்டுகோள்கள்.

சில குறைபாடுகள், இவை ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அல்ல, நமக்குத் தெரிந்தவை, மற்றும் நாமே பலமுறை(?) கடைபிடித்தவை , நான் தொகுக்க  மட்டுமே செய்திருக்கிறேன்.

தாமத வருகை

நிகழ்ச்சி நிரல் அறிவித்த பின், கலாச்சார இயக்குனர்கள் தொலைபேசியை அணைத்து விடுவது உசிதம். முதல் ஐந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மற்றும் பங்கு பெரும் குழந்தைகளின் பெற்றோர்கள் அழைத்து, நாங்க என்னங்க உங்களுக்கு பாவம் செய்தோம், இப்படிக் கவுத்திடீங்களே என்று அலறுவார்கள். ஆறு மணி நிகழ்சிக்கு 7:30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் நம் பாரம்பரியம். அதில் நமக்குப் பெருமை உண்டு. நிகழ்ச்சி தொடங்கி சற்று நேரம் வரை தன்னார்வலர்களும் சங்கப் பொதுக்குழு உறுப்பினர்களும் மாத்திரம் அங்கே இருப்பார்கள். தன்னார்வலர்கள்  அரங்கத்திற்கு வெளியேவும், மற்ற உறுப்பினர்கள் உள்ளே பல வேலைகளாகவும் இருப்பார்கள். பெற்றோர்கள் பெரும்பாலும் நிகழ்ச்சியை பல கோணங்களில் பதிவு செய்வதில் தீவிரமாக இருப்பார்கள். எனவே முதல் சில நிகழ்சிகள் குடும்பங்களுக்கு உட்பட்ட சிறப்புக் காட்சியாகவே அமையும்.

ஒரு கண்ணில்  வெண்ணை , இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு 

அனைத்து பெற்றோர்களுக்கும் தம் குழந்தைகளின் நிகழ்ச்சியைப் பார்த்து மற்றவர்கள் புளகாங்கிதம் அடைய வேண்டும், ஆனால் நாம் நம்முடைய நிகழ்ச்சி முடிந்த உடன், இடத்தைக் காலி செய்ய வேண்டும். நிகழ்சி நிரல் அறிவிக்கும் முன், நம்முடைய நிகழ்ச்சி இடைவேளைக்கு முன்பா அல்லது பின்பா என்று அறிய ஆவல், தெரிந்து கொண்டால் சௌகர்யமான நேரத்துக்கு வரலாம். நீச்சல் வகுப்பு இருக்கிறது, என் பையன் நிகழ்ச்சியை 3 மணிக்கு அப்புறம் போடுங்க என்று வேண்டுகோள் விடுத்த நண்பர் ஒருவர் உண்டு. இவர்களுக்கு பயந்து நிகழ்ச்சி நிரலை, நிகழ்ச்சி தொடங்கும் வரை பதுக்கி வைக்கும் கட்டாயம் உண்டாகி இருக்கிறது. இரண்டு நிகழ்ச்சியில் பங்கு பெற அனுமதித்தால், அதை இப்போ போடுங்க, இதை அப்போ போடுங்க என்ற தொல்லை தாங்க முடியாமல் அதை ரத்தே செய்து விட வேண்டிய சூழ்நிலை.

காணொளிப் பதிவு 
 
உங்கள் குழந்தையின் நிகழ்ச்சியைப் பதிவு செய்ய மறந்து விட்டு, மற்றொரு பெற்றோரின் பதிவில் இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். இருபது குழந்தைகள் நடனம் ஆடினாலும், ஐந்து நிமிடமும் தம் குழந்தையை மாத்திரமே திரை முழுவதும் தெரியுமாறு பதிவு செய்வதில் பெற்றோர்கள் வல்லவர்கள். தம் பதிவை கூச்சம் காரணம் மற்றவர்களுக்குக் காண்பிக்காமல் நழுவுபர்கள் அதிகம்.


தலைமறைவு

குழந்தைகள் பெரிதானவுடன், அவர்களைத்  தமிழ்ப் பாட்டுகளுக்கு நடனம் ஆடச் சொல்லிப் பாருங்கள், துரத்தித் துரத்தி அடிப்பார்கள். இதன் காரணம், நமக்கு இனி கலாசார நிகழ்சிகளைக் காணத் தேவை இல்லை, ஏனென்றால் நம் குழந்தைகள் இனி பங்கு பெறப் போவதில்லை. நம் ஊரில், கடைசிக் குழந்தைக்குத் திருமணம் ஆகி விட்டால், அதன் பின்பு மற்ற திருமணங்களுக்குப் போவதை நிறுத்தி விடுவார்கள். காரணம் இனி எழுதும் மொய் திரும்ப வராது. பல சமுதாயத்தின் மூத்த ஆர்வலர்கள் இதன் காரணமாகவும் வருவதில்லை. அது போக அடுத்த தலைமுறையின் மீதுள்ள அதிருப்தி 2000 வருடங்களுக்கு மேலாகவே உள்ளது, அதன் காரணமாகவும் பல பேர் வருவதில்லை.

ஊருக்கு உபதேசம் செய்யும் முன், நான் இதையெல்லாம் தவிர்க்க முடியுமா என்று யோசிக்கிறேன். நீங்களும் யோசிங்க....

Sunday, September 14, 2014

பொற்காலக் கனவும் பாரதியாரும்

(செப்டம்பர் 11 அன்று மகாகவியின் நினைவு நாளையொட்டி மு.கோ. அவர்கள் எழுதியது)
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் படித்தவர்கள், படிப்பறியா பாமரர்கள் அனைவரிடத்திலும் உள்ள பெரிய பலவீனம் கடந்த காலத்தைப் பற்றிய ஒரு பெருமிதம் கலந்த கருத்து அவர்களிடம் அழுத்தமாக நிலவுகிறது. கடந்து போய்விட்ட பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நல்லதாகவே இருந்தது. காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சீர்கெட்டு இப்பொழுது எல்லாம் கெட்டழிந்து நிற்பதாக பலர் நம்புகிறார்கள்
பள்ளியில் படிக்கும் மாணவனுக்கும் இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் கல்வித் திட்டம் செயல்படுகிறது. தமிழ் வகுப்பில் தமிழாசிரியர் சங்ககாலம் பொற்காலம் என்பார். அடுத்து வரலாற்றாசிரியர் பாடம் நடத்தும்போது குப்தர் காலம் பொற்காலம் என்பார். சலித்துப்போய் வீடு திரும்பும் மாணவனிடம் தாத்தா பேச்சைத் தொடங்குவார். அந்த காலத்தில் வெள்ளைக்காரன் ஆண்டப்போ என்று ஆரம்பிப்பார்.
இரண்டு விஷயத்தில் தமிழர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார்கள். உலகத்தில் உள்ள எல்லா நாடுகளுக்கும் முன்னால் தமிழர்கள் நாகரீகமாக வாழ்ந்தவர்கள் என்று அடித்துப் பேசுகிறார்கள்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே
முன் தோன்றி மூத்த குடி
என்று ஆதாரம் காட்டுவார்கள். உலகத்தில் உள்ள எல்லா மொழிகளுக்கும், ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழிகள் உள்பட எல்லா மொழிகளுக்கும் தமிழ் தான் தாய் மொழி. தமிழிலிருந்து தான் எல்லா மொழிகளும் தோன்றி வளர்ந்தன என்பார்கள்.
இதை ஏற்க மறுப்பவர்கள் தமிழினத்தின் துரோகி என்ற பட்டத்தைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
இந்தியாதான் உலக நாடுகள் அனைத்துக்கும் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்றுக்கொடுத்தது என்ற பேச்சுக்கு எதிராக வாய் திறந்தால் நீங்கள் இந்து மத விரோதியாக பட்டம் பெற வாய்ப்பு உண்டு. உலகத்தின் எல்லா ஞானமும் நான்கு வேதங்களிலிருந்து தான் பெறப்பட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளா விட்டால் நீங்கள் நாஸ்திகர் என்ற பழியைச் சுமக்கத் தயாராக இருக்க வேண்டும்.
எப்படி எல்லாம் வாழ்ந்த தமிழன் இப்படி நலிந்து போனானே என்று ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். வடமொழி மரபும் வாடையும் வீசி தமிழின் தனித்தன்மை அழிகிறதே என்று பகுத்தறிவு வாதிகளும், தனித்தமிழ் ஆர்வலர்களும் வேதனைப் படுவார்கள்.
பழங்கால சமுதாயத்தில் எல்லாம் நன்றாக இருந்தது என்ற மூட நம்பிக்கை தமிழனுக்கு மட்டும் உள்ள பலவீனம் அல்ல. இந்தியாவில் மற்ற மொழி பேசுவோரிடமும் ஏதாவது ஒரு வகையில் இந்த மனநோய் பல உருவங்களில் தொடர்கிறது. உலகின் பல பகுதிகளீல் வாழும் ஓரளவு பழமையான நாகரீகச் சிறப்பு உள்ள மக்களீடம் இந்த பொற்காலக் கனவு தொடர்கிறது.
மேல்நாட்டவர்கள் கிரேக்க நாகரீகம் பற்றி இந்த பெருமிதத்தோடு பேசுவதைப் பார்க்கலாம். உலகின் முதல் ஜனநாயக அமைப்பு கிரேக்கத்தில் இருந்த நகரக் குடியரசுகளில்தான் இருந்தது என்பார்கள்.இந்த கருத்தை பல அறிஞர்கள் ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான விஷயம்
அன்றைய நகரக் குடியரசில் பெரும்பான்மையானவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பதுதான் உண்மை. சொத்துக்களும், நிறைய அடிமைகளையும் உடையவர்கள் மட்டுமே ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டில் சங்ககாலம் பொற்காலம் என்று பல தமிழ் அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். அந்த பொற்காலத்தில் தமிழ் மக்கள் நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று பல தமிழ் அறிஞர்கள் கூறக் கேட்கலாம். அவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து வாழ்ந்தனர் என்றும் பல நூல்களில் கூறப்பட்டிருப்பதெல்லாம் வெறும் கற்பனைதான். புலவர்கள் வள்ளல்களையும் மன்னர்களையும் நயந்து பாடி வாழ்ந்தவர்கள். அவர்கள் கற்பனையாகச் சொன்ன, பாடிய பாடல்களில் உள்ள செய்திகள் உண்மை நிலையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்பவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வகைக் கற்பனைகளோடு கிரேக்கக் கவிஞர்களூம் பாடியிருக்கிறார்கள். போர் இல்லாமல், சகல வளமும் கொண்ட, அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த சமுதாயம் என்று மனதுக்கு இதமான கற்பனைகள் கொண்ட கவிதைகளை பழைய இலக்கியங்களில் நிரம்பக் காணலாம். இந்த பாடல்கள் கவிஞனின் நல்லெண்ணத்தையும் அவனுடைய உள்மனத்தில் கிடக்கும் ஆசைகளையும் எதிரொலிப்பதாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
கி.வ.ஜகந்நாதன் என்ற தமிழ் அறிஞர் கூறுகிறார்.
வேத காலம் முதல் பரமார்த்திக வாழ்க்கையை அறிந்து வாழ்ந்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். இனி புதியதாக உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. கிடைத்த உண்மைகளைக் கொண்டு அதைக் கடைப் பிடித்து வாழ்வதே நம் கடமையாகும்.
பழங்காலத்தில் வாழ்ந்த நம் சான்றோர்கள் எல்லா உண்மைகளையும் கண்டறிந்தவர்கள் என்ற நம்பிக்கை வலியுறுத்தப்படுகிறது. முன் நாளில் வாழ்ந்தவர்கள் பிணி இல்லாமல் முற்றும் உணர்ந்தவர்களாய் வெகு நாள் வாழ்ந்தார்கள். காலப் போக்கில் மக்கள் பிணி மிகுந்தவர்களாய் சிற்றறிவு கொண்டவர்களாய் குறுகிய வாழ்நாளைக் கழித்து மாண்டார்கள் என்ற கருத்தை பல இடைக்கால நூல்களில் பார்க்கலாம் சென்ற 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திராவிடப்பிரகாசிகை என்ற நூலின் ஆசிரியர் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
முதல் தமிழ்ச்சங்க காலத்தில் வாழ்ந்த அகத்தியர் படைத்த நூலின் பொருளை பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் ,சில வாழ்நாள் கொண்டவர்களா யும் எளிய அறிவு படைத்தவர்களாயும் இருந்ததால் புரிந்து கொள்ள முடியவில்லை அதனால். பல நூல்கள் அழிந்துபட்டன என்று கூறுகிறார் பிற்காலத்தில் வாழ்ந்த சிறு மதியாளர்கள் முந்தைய காலத்திய அறிஞர்களீன் படைப்பை புரிந்து கொள்ள முடியாததால் நூல்கள் அழிந்தன என்ற பொருளில் கூறுகிறார்..
சமயப் பிணக்காலும் குறுகிய மனப்பாங்காலும் பல நூல்கள் காப்பாற்றப்படாமல் உதாசீனப்படுத்தப்பட்டன.கவனிப்பார் இன்றி காப்பவர் இன்றி நூல்கள் அழிந்துபட்டன என்பதுதான் உண்மை.இந்த வேதனை தரும் உண்மையை மறைத்து பழம்பெருமை பேசுகிறார் ஆசிரியர்.
எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளூம் மன உறுதி இல்லாமல் பலவீனப்பட்டவர்கள் தங்கள் நாடு,சமூகம் ,மொழி பற்றி பழைய பெருமைகளை விதந்து ஓதி மன நிறைவு கொள்ளச் செய்யும் முயற்சிதான் இது அளவுக்கு மிஞ்சிய கற்பனைகளுடன் புனையப்பட்ட பழங்காலம் பற்றிய புகழ்பாடல்களில் நாம் நம் அறிவை இழந்துவிடக் கூடாது. பழைய அமைப்பு முறைகளீல் உள்ள போற்றத்தக்க ,இன்றும் ஏற்றுக் கொள்ளத்தக்கவற்றை சரியாக இனம் கண்டு அவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும்
குறிப்பிட்ட காலத்துக்குப் பின் தோன்றிய (14 ம்நூற்றாண்டுக்குப் பின்)
தமிழ் நூல்களெதுவும் இலக்கியமாகக் கருதத்தக்கதல்ல,ஒதுக்கப்பட வேண்டியவை என்று மறைமலையடிகள் கூறுகிறார்.அவர் வாழ்ந்த 20 ம் நூற்றாண்டின் முன் பகுதியில் படைக்கப்பட்ட பாரதி பாடல்களும் ,மற்ற கவிஞர்களின் படைப்புகளும் தோன்றிய நூற்றுக்கணக்கான நாவல்களும் மறைமலையடிகள் பார்வையில் கவைக்கு உதவாத எழுத்துக்கள். அவரைப் பொறுத்த வரையில் தமிழின் பொற்காலம் 14 ம் நூற்றாண்டோடு முடிந்து போய் விட்டது.
இப்படி விடாப்பிடியாக பழமையைத் தூக்கிப் பிடித்து பெருமை பேசுவோர் எல்லா பகுதியிலும் இருப்பார்கள்.தமிழ் நாட்டில் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தூவப்பட்ட விதைகள் முளைத்து முள்ளாக வளர்ந்து தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கிறது
இலக்கியத்தில் புதிய உத்திகள், மரபுகள் தோன்ற பெரும் தடையாக வளர்ந்து விட்டது.பழையன எல்லாம் கழிக்கப்படவேண்டியவை அல்ல. ஆனால் வீண் பெருமை பேசி எல்லா வகையிலும் பழமையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பது புதிய சிந்தனையோட்டத்துக்கு தடையாகி விடுகிறது. ஒரு விஷயம் பழமையானது என்பதாலேயே பூஜைக்கு உரியதாக மாறி விடுகிறது நவீன காலத்தின் வளர்ச்சியையும் பழைய முறைகளீன் இன்றைய பொருத்தப்பாட்டையும் பற்றி தெளிவான சிந்தனை இல்லை.
புது உலகக் கவிஞனாக அவதரித்த பாரதி இந்த பழமை செய்யும் கேட்டைப் பார்த்தார்.எல்லாத் துறைகளிலும் வியாபித்து நிற்கும் தடைகளுக்கு பழமை மீதான வழிபாட்டு உணர்வுதான் காரணம் என்று உணர்ந்தார்.
அதனால்தான் சரித்திரத் தேர்ச்சிகொள் என்று புதிய ஆத்திச்சூடி பாடிய பாரதி அடுத்தபடியாக பிணத்தினைப் போற்றேல் என்று பாடினார் மேலும் தெளிவாக பழமை விரும்பிகளுக்கு பாரதி அறிவுரை கூறினார்.கடந்த காலத்திலிருந்ததை எல்லாம் இழந்துவிட்டதாக புலம்பிக் கொண்டிருக்காதே புதியவை படைக்கப் புறப்படு என்றார்.
சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
என்று பாடினார்
பழமை என்பது நிகழ் காலத்துக்கான சாவி, எதிர்காலத்துக்கான வழிகாட்டி.. என்றார் ஒரு மேல் நாட்டு அறிஞர்.
பாரதி இந்த விளக்கத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டார். மிகப்
பெரிய இயக்கத்தை வழி நடத்த வேண்டிய மக்கள் கடந்த காலத்தின் சிறப்பையும்,அதன் இழப்பையும் எண்ணி ஏங்காமல் நிகழ்காலத் தாழ்வை நிணைத்து மனம் தளராமல் நமக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று
நம்புங்கள் என்று பாரதி முழங்கினார்
வரலாற்றை படித்து அதன் சரியான பயன்பாட்டைஎடுத்துச் சொல்கிறார்
முன்னர் நாடு நிகழ்ந்தபெருமையும்
மூண்டிருக்கும் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்
என்று வரலாற்றைப் படித்து தவறாகப் புரிந்து கொண்டு மனம் தளர்ந்தவர்களைப் பற்றி இந்த மக்களுக்கு என்ன சொல்லி உண்மையை
உணரச் செய்வேன்,இவர்களுடைய பரிதாப நிலையைக் கண்டு என் உள்ளம் எரிகிறதே என்றுவேதனைப் படுகிறார் பாரதி.
என்ன கூறி மற்றெங்ஙன் உணர்த்துவென்
இங்கிவர்க்கென துள்ளம் எரிவதே
என்று முடிக்கிறார்
- மு.கோபாலகிருஷ்ணன்

Saturday, September 13, 2014

என்னமோ நடக்குது?

சமீபத்துல ஊர்ல நாட்ல கேக்கர இல்லைன்னா நான் பார்க்கர விஷயங்கள் எல்லாமே கொஞ்சம் ஏறு மாறாத்தான் இருக்கு.  உங்க எல்லோருக்குமே அப்படியான்னு தெரியலை.  அதனால கொஞ்சம் இங்க வந்து சொல்லிப் பார்ப்போமேன்னு ஒரு முயற்சி.

சங்கர்ராமன் கொலைவழக்கு
இந்த விவகாரம் பலப் பல வருஷங்கள் இழுத்து கிட்டு போய் கடைசியா குத்தம் சாற்றப் பட்ட 'எல்லோரும்' விடுவிக்கப் பட்ட பின்னாடி, மேல் முறையீடு வரும்னு சொல்லப்பட்டது.  இப்போஇந்த கேஸ்ல மேல் முறையீடு இல்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கரதா தமிழக அரசு முடிவெடுத்திருக்கிறதுன்னு செய்தி போட்டிருக்காங்க.  இந்த கேஸ்ல தீர்ப்பு வந்ததும் பலர் சொல்ல ஆரம்பிச்சது, சங்கர்ராமனை ஆள் வெச்சு காஞ்சி ஆச்சார்யர்கள் கொலை செய்யலைன்னா அவரை அவரே ஆள் வெச்சு தற்கொலை செஞ்சுகிட்டாரா, இல்லை தானே ஒரு நாலு அரிவாளை எடுத்து வெட்டிகிட்டு செத்து போயிட்டாரான்னு கேள்வி கேட்டிருந்தாங்க.  அவங்க எல்லோரும் திருப்பி அதே உலக மகா அறிவுப் பூர்வமான கேள்வியை கேக்க ஆரம்பிச்சிருக்காங்க.  தமிழ்நாட்டுல உணர்ச்சி வசப்படாம யாரும் எதுவும் செய்யரதோ இல்லை  பேசரதோ இல்லை.  ஆனா இப்படிப் பட்ட கேள்விகள் உணர்ச்சி வசப்படுதல்ல உச்ச கட்டம்ன்னு நினைக்கரேன்.  ஒரு கொலை நடக்குது, கொலைக்கு முக்கிய குற்றவாளிகள்ன்னு சந்தேகத்தின் அடிப்படையில சிலரை கைது செய்யராங்க, சந்தர்ப்பமும், சாட்சியங்களும் வெச்சு அவங்க குற்றவாளிகள் இல்லைன்னு தீர்ப்பு வந்த உடனே சரியான குற்றவாளிகள் யாருன்னு யோசிக்காம, எப்படியாவது குற்றம் சாட்டப் பட்டவங்களுக்கு ஏதாவது தண்டனை தரனும்னு யோசிச்சா அதை என்ன சொல்றது.  இந்திய தண்டனைச் சட்டம் சொல்வது (நிஜமான வக்கீல்கள் யாராவது இந்தப் பதிவைப் படிக்கவேண்டிய கஷ்டம் வந்தா இது சரியா இல்லை தப்பான்னு சொல்லலாம்), ஒரு குற்றவாளி குற்றம் செய்திருக்கிறார் என்பது சந்தேகத்து இடமில்லாமல் தெளிவாக்கப் படவேண்டும்ன்னு, நாம எல்லாம் தீர்ப்பு வரதுக்கு முன்னாடியே தீர்ப்பு எழுதர ஆசாமிகள்.  அவர் அரெஸ்ட் ஆனவுடனே அவர்தான் குற்றவாளின்னு தீர்ப்பு எழுதிட்டோம், இப்போ அப்படி இல்லைன்னு கோர்ட் சொன்னதும் ஒத்துக்க முடியலை.  ஆனா இதே விஷயம் அரசியல்வாதிகிட்ட சொல்லுபடியாகாது.

சங்கர்ராமன் தானே தன் கழுத்தை அறுத்து கிட்டு செத்தார்ன்னு கோர்ட் சொல்லலை, அவரை காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஆள்வெச்சு கொலை செஞ்சாங்கன்னு சொல்லப்பட்டது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப் படலைன்னுதான் சொல்லியிருக்கு.

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு
ஒரு அரசியல் தலைவர் வரம்புக்கு மீறி சொத்து குவிச்சு வெச்சிருக்காருன்னு ஒரு கேஸ், அது ஒரு 19 வருஷமா நடக்குது, இதுல எது சரி, யார் சரி, எது தப்பு, யார் தப்புன்னு யாருக்கு தெரியும்னு எனக்கு தெரியலை.  20 கேஸ் போட்டு, 19 கேஸ்ல ஜெ நிரபராதின்னு வெளில வந்துட்டாங்க.  ஒரே ஒரு கேஸ்ல அதாவது இந்த சொத்து குவிப்பு கேஸ்ல மட்டும் இன்னும் வெளில வரலை.  இதுல ஒரு விஷேஷம் என்னன்னா இவங்க வெளில வந்த 19 கேஸ்ல பெரிவாரியான கேஸ்களோட தீர்ப்பு வந்த போது ஆட்சியில இருந்தது தி.மு.க.  அதனால இவங்க தன்னோட பவரை யூஸ் பண்ணி வெளில வந்துட்டாங்கன்னு சொல்ல முடியலை.  இப்போ என்ன நடக்கும்ங்கரது 20ம் தேதி தெரிஞ்சுடும்.


நித்தியானந்தா
சில வருஷங்களுக்கு முன்னாடி நான் டெல்லியில வேலை செய்திட்டு இருந்த போது ஒரு சாமியாரைப் பத்தி சொல்லும் போது என்னோட நண்பர் அந்த சாமியாரை 'ஜில்காட்' சாமியார்ன்னு சொல்வார்.  அதோட அர்த்தம் தெரிஞ்ச போது சிரிப்பா இருந்தது.  அதனோட ரியல் அர்த்தத்துக்கு சரியான சாமியார் இந்த நித்தி.  இதுக்கு மேல இவரப்பத்தி நான் எழுத எனக்கு கேவலமா இருக்கு அதனால அதைப் பத்தி நீங்களே பத்திரிகைகள்ல படிச்சுக்கங்க.

கத்தி படம்
படம் என்ன படம், கதை என்ன கதை, இதெல்லாம் யாருக்கு தெரியும்னு தெரியலை ஆனா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கள்ல ஒருத்தர் இலங்கை அதிபரோட தொடர்புடையவர் அதனால இந்தப் படத்தை தமிழ்நாட்டுல வெளியிடக் கூடாதுன்னு முடக்கி வெச்சிருக்காங்க.  தமிழ் படத்தை தயாரிக்கரவர் இன்னரோட தொடபுடையவரா இருக்கக் கூடாதுன்னு எந்த சட்டத்துல இருக்குன்னு தெரியலை, ஆனா, தமிழ்நாட்டுல தமிழ் தமிழ்னு வெத்துக்கு கத்தி அரசியல் பண்ணும் ஒரு கட்சி (தி.மு.க ந்னு நான் வெளிப்படையா சொல்ல மாட்டேன்)யில பெரிய போஸ்ட இருக்கரவரோட அண்ணன் (கலாநிதி ந்னும் நான் சொல்ல மாட்டேன்) தமிழ்நாட்டுல தொலைக்காட்சி சானல்கள் வெச்சு கோடிக்கோடிக்கோடியா சம்பாதிச்சுட்டு ஒரு விமான சேவையை துவக்கி இலங்கைக்கு விமானம் விடலாம், இலங்கை கிரிக்கெட் வீரர்களை வெச்சு ஒரு டீம் வாங்கி IPL ல கிரிக்கேட் விளையாடலாம் ஆனா இலங்கைல அதிபரோட தொடர்பில இருக்கரவங்க யாரும் படம் தயாரிக்கக் கூடாது.  என்ன கூத்து இதுன்னு தெரியலை.

பாபநாசம்
கமல் மலையாளத்துல மோகன்லால் நடிச்சு வந்த த்ரிஷ்யம் படத்தோட தமிழ் பதிப்பான பாபநாசத்துல நடிக்கரதுக்கு நெத்தில விபூதி பூசி நடிக்கரது தப்பு, அதே கெட்டப்போட ஒரு மடாதிபதியைப் பார்த்தது தப்பு.  காரணம் அவர், தான் ஒரு நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவு வாதின்னு அவரே பல பேட்டிகள்ல உளறி கொட்டினதுனாலன்னாலும் அவர் நெத்தில விபூதி வெச்சுக்கக் கூடாதுன்னு சொல்றது கொஞ்சம் அழிச்சாட்டியம்தான்.  பகுத்தறிவு பகுத்தறிவுன்னு ஜல்லியடிக்கும் ஒரு கூட்டம் (திமுக) தன்னோட மனைவி, துணைவி, இணைவிகளோட கோவிலுக்கு போகலாம், நெத்தி நிறைய குங்குமம் வெச்சுக்கலாம், தேர்தல்ல ஜெயிக்கனும்னு சிறப்பு ஆராதனை செய்யலாம் ஆனா விநாயக சதுர்த்திக்கு வாழ்த்து மட்டும் சொல்லக்கூடாது.  இது சரியான்னு யாரும் கேக்கக்கூடாது.

இப்போ கமல் சொன்னது ஏன் உளறிக் கொட்டினதுன்னு சொல்லிட்டேன்னா பின்னூட்டத்துல யாரும் திட்ட மாட்டாங்க.

ஒரு இண்டர்வ்யூல (கார்டூனிஸ்ட் மதன்) அவரே சொன்னது, எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது, நான் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் இருப்பவன், நான் ஒரு அக்மார்க் நாஸ்திகவாதி.  இது தப்புன்னு எங்க குடும்பத்துல இருக்கரவங்க எல்லோரும் சொல்லும் போது நான் சொல்றது இதுதான், கடவுள்ங்கரது ஒரு க்ருபா சமுத்ரம்ன்னு சொல்றாங்க அப்படி அவர் க்ருபா சமுத்திரம்னா என்னை ஒன்னும் செய்யாம இப்படியே ஏத்துக்கட்டுமேன்னார்.  ஆக இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, ஆனா அப்படி இருக்கரதுனால எந்த ப்ரச்சனையும் வராம இருக்க அதே க்ருபா சமுத்திரம் காப்பாற்றட்டும்னு வேண்டிக்கரார்.  இது உளறல் இல்லைன்னா என்னன்னு யாராவது சொல்லுங்க.

முரளி இராமச்சந்திரன்.

Friday, September 05, 2014

குரு என்பவன் யார் ?

மாதா, பிதா, குரு, தெய்வம்

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ! ... அருணகிரியார்

எல்லோருக்கும் ஆசான் (குரு) வேண்டும்.  ஆசான் இல்லாத வாழ்க்கை, ட்ரைவர் இல்லாத வண்டியில் போகிற மாதிரி ... வாரியார்

சைவ சித்தாந்தங்களில் குரு நம்மைத் தேடி வர வேண்டும் என்கின்றனர்.

இதில் வ‌ரும் குரு என்பவன்  யார்?  ப‌ள்ளி க‌ல்லூரி கால‌ங்க‌ளில் ந‌ம‌க்குப் பாட‌ங்க‌ள் ப‌யிற்றுத் த‌ந்த ஆசிரிய‌ப் பெருமக்கள்?

ஆசிரிய‌ரும் குருவும் ஒன்றா ?  அன்று ஆம், இன்று அன்று!


ஏட்டுச் சுரைக்காயை எடுத்துப் புகட்டுபவர்ஆசிரிய‌ர்.  மக்கு மாணவன்
என்பவனையும் மார்க்கு வாங்கும் எந்திரமாக மாற்றுபவர் ஆசிரியர்.
அரசுப் பள்ளியில் வேலை வேண்டிப் பெற்று தன் பிள்ளையை தனியார் பள்ளியில் சேர்ப்பவர் ஆசிரியர்.  மாதச் சம்பளம் போதாதென்று மாலை வேளை ட்யூஷன் எடுப்பவர் ஆசிரியர்.  இதில் பெற்றோருக்கும் பெரும் பங்குண்டு என்பதை மறுப்பதற்கில்லை.

ஆனால், குரு என்பவன், பிறர் தன்னை குரு என்று போற்றுவதையும் விரும்பாதவன்.  தன் பின்னே இத்தனை இலக்கங்களில் மாணாக்கர்கள் இருக்கிறார்கள் என்று மார் தட்டி, உலகெங்கும் மடம் கட்டிக் கொள்ளாதவன்.  ஏட்டுச் சுரைக்காயை எடுத்துரைக்காமல், அனுபவ ஞானத்தைப் புகுத்துபவன்.  தன் உயர்வைப் பெரிதென எண்ணாமல், தன்னை நாடி வரும் உண்மைச் சீடனின் உயர்வை விரும்புவன்.  ஞானத் தெளிவைத் தருபவன்.

அடுக்கலாம் இன்னும் பல ...

இதுபோன்ற குருக்கள் இன்றும் இருக்கிறார்களா ? இல்லாததால் தான், குரு தினம் கொண்டாடாமல் ஆசிரியர் தினம் கொண்டாடுகிறோமா ?  இதில் ஏதேனும் அரசியல் இருக்கக்கூடுமோ ?

எது எப்படியோ, மேற்கண்ட 'மாதா, பிதா, குரு, தெய்வம்' தொடரில் வரும் குருவுக்கும், இன்றைய ஆசிரியருக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை.  அவர் குரு, இவர் ஆசிரியர்.  ஆனால் இன்றுவரை இத்தொடர் நமக்குத் தவறுதலாக கற்பிதம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்!!!



Wednesday, August 27, 2014

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை

சமீபத்தில் படித்த செய்தி ஒன்று மனதைத் தைத்தது.  எவரெஸ்ட் ஏறிய டென்சிங்கிடம், 'இந்த மலையில் ஏறி என்ன கண்டீர்கள் ?' என்று கேட்டதற்கு, 'மனிதன் மலைச் சிகரத்தைக் கைப்பற்றுவதைவிட, தன்னைத் தானே உணர்வது முக்கியம் என்று புரிந்து கொண்டேன்! இந்த எளிய உண்மையைப் புரிந்து கொள்ள நான் எவரெஸ்ட் மீது ஏற வேண்டி இருந்தது!!" என்றாராம்.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா!' என்று கணியன் பூங்குன்றன் சொல்லிச் சென்றதைப் போல பல யோகிகள், மகான்கள், பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டு வந்திருக்கிறோம்.  இது எத்துணை சத்தியம் என்று நம்மை நாம் அறிந்தால் மட்டுமே சாத்தியம்!!

'தன்னை உணர்வது' என்றால் என்ன என்று அறிய முதலில், நம்மை நாம் அறிய வேண்டும்!  நான் அறிந்த‌ வ‌ரையில் திருமூல‌ரின் இர‌ண்டு பாட‌ல்க‌ள் இவ‌ற்றை அழுத்த‌மாக‌ உண‌ர்த்துகின்ற‌ன‌.  அவ‌ற்றிலிருந்து தான் க‌ணிய‌ன் பூங்குன்ற‌ன் தம‌து 'தீதும் ந‌ன்றும்'ஐ எளிமைப்ப‌டுத்தியிருக்க‌க்கூடும்.

கீழே உள்ள திருமூல‌ரின் இரு திருமந்திரப் பாடல்கள், சாதார‌ண‌ வ‌ரிக‌ள் போல‌த் தோன்றினாலும்,  உள்ளார்ந்து பய‌ணிக்க‌ ஒரு பேருண்மை புல‌னாகும் என்ப‌து திண்ண‌ம்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!!

மனித இனத்தில் இரண்டே ஜாதி தான்.  ஒன்று, எது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் போதும் என்ற மனம்.  மற்றொன்று, எவ்வளவு தான் கிடைத்தாலும் போதாதென்ற மனம்.

தந்தையும், தாயும், குழந்தை மகளும் நகைக்கடைக்குள் நுழைந்தால், பளபளக்கும் நகைகளைவிட, அங்கே பளபளப்பாக இருக்கும் தாயின் மனம்.  ஆனால், குழந்தைக்கோ அங்கிருக்கும் பலூன்களிலோ, பொம்மைகளிலோ பதிந்திருக்கும் மனம்.  த‌ந்தையின் ம‌ன‌ம் ... சொல்ல‌வே வேண்டாம் :)

எல்லாவற்றிற்கும் காரணம் நாம் தான்.  அது ... நம்மை ஆட்டுவிக்கும் மனம் தான்.  இந்த பாழாய்போன மனது இருக்கிறதே, அது, கட்டவிழ்த்த கன்றுக்குட்டியாய் துள்ளித் திரிவது.  இலக்கின்றித் துள்ளிக் குதிப்பது.  ஓரிடம் பற்றாது, முட்டி மோதி வீழ்ந்தெழுந்து ... மீண்டும் அங்குமிங்கும் துள்ளி ஓடுவது.  மனதினை அடக்கிய மனிதன் மகான் ஆகின்றான்.

நம்மை அறிவதை விடுத்து பிறரை அறிவதில் அதிக‌ நாட்டம் செலுத்துகிறோம்.  பிறரை அறிவதுகூட ஒரு கட்டத்தில் சுலபம் என்றாகிவிடும், நம்மை நாமே அறிய முற்படுகையில்.

நம்மை அறிய‌, மனதை ஒருமுகப்படுத்தினால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.  காலையில் எழுந்ததில் இருந்து, மாலை வரை உடலாலும் மனதாலும் அலுத்துத் திரியும் நாம், 'ஓரிடம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது சாத்தியமா ?'  என்றால், ஆம் ... ஆனால், உடனே இல்லை எனலாம்.  மனதை ஒருமுகப்படுத்தி, தன்னை அறிய, நமது சுவாசத்தைக் கவனிக்க மற்றும் சரி செய்யச் சொல்கிறார் திருமூலர் ப‌ல‌ பாட‌ல்க‌ளில்.  அவ‌ற்றைப் பிரிதொரு ப‌திவினில் பார்க்க‌லாம்.

***

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது சங்ககால‌ புறநானூற்றுப் பாடல்.   திருமந்திரம், திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வருகிறது.  இது ஐந்தாம் நூற்றாண்டு படைப்பு என்கின்றனர் பலர்.  ஆனால், திருமுறைகள் காலத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படவில்லை என்பதையும் நாமறிய வேண்டும்.  தென்நாட்டில் வாழும் தலைச்சங்கத்தின் தலைவராக இருந்த அகத்தியரை சந்திக்க வடக்கில் இருந்து வந்ததாக திருமூலரின் வரலாறு சொல்கிறது.  அதுவுமன்றி  ஆண்டுக்கு ஒரு பாடலாக, மூவாயிரம் பாடல்கள் பாடியாதாகவும் நாம் படிக்கின்றோம்.  இது 'எந்த ஆண்டு' என்றும் ஆராய வேண்டும்.  கண்டிப்பாக சூரியனைச் சுற்றும் பூமி சுழற்சி ஆண்டாக இருக்கமுடியாது.

Monday, August 25, 2014

வாங்க கொஞ்சம் சிரிக்கலாம்

என்னமோ ஏதோ தெரியலை, தமிழ் சங்கத்து ப்ளாகுக்கு வாஸ்து சரியில்லைன்னு நினைக்கிறேன்.  நாகு, கொஞ்சம் செட்டிங்க்ஸ் ஏதாவது மாத்துங்க.

திடீர்னு வேதாந்தி கதை கதையா எழுதராரு. VGR-ன்னு ஒருத்தர் நம்பர் போட்டு பதிவு எழுதராங்க.  நடுவுல கொஞ்சம் சண்டை, செண்டிமெண்ட், பாட்டு டான்ஸ் எல்லாம் இருக்கு ஆனா காமெடி இல்லை.  கவலைப்படாதீங்க நான் காமெடியெல்லாம் எழுதப் போரதில்லை.  அதுக்குன்னு ஒருத்தர் இருக்கார், ஆனா,  அவரோட ப்ளாகுல இருந்து எடுத்து இங்க போட்டா தப்பு இல்லையா அதனால, அந்த பதிவுக்கு இங்க ஒரு லிங்க் கொடுத்துட்டா போச்சு.

http://dubukku.blogspot.com/2014/08/blog-post_14.html.  மாற்றான் நு தலைப்பு, படிச்சுட்டு சிரிக்கலைன்னா, நான் காமெடி எழுதுவேன் சொல்லிட்டேன்.

முரளி இராமச்சந்திரன்.


Saturday, August 23, 2014

யாரிடம் கற்றோம் ?



மனிதன் யாரிடம் கற்றான் இந்த பேசும் மொழி தனை
என்று சதங்கன் யாரிடமோ கேட்டு விட்டார்

வாசித்த அனைவரும் வாழ்த்தியதோடு
யோசித்த பதிலை  சொல்லாமல் சென்று விட்டார்

நானும் அவ்வழி செல்லாது ஒரு பதிலை
சதங்கனுக்கு கொடுக்க வேண்டும் என்ற
திண்ணம் மனதில் ஒழிக்க இதோ எனது மொழி

மனிதன் விட்டு சென்ற குகை சித்திரம் தான்
இன்று மொழியாய் கண்ணுக்கு தெரிகிறது
நாம் என்றும் சூத்திரதாரி தான்
சுயநலத்தை தவிர நமக்கு என்ன தெரியும்
இதனால் தான் நம் காலடியை மட்டுமே தேடுகிறோம்
பின்னாளில் வரலாறு ஆகும் என்று

இயற்கை விட்டு சென்ற சுவடுகள் தான் எத்தனை
ஏன் அதனில் உங்கள் தேடல் இல்லை?

மனிதன் மொழி வெறும் ஒலி மட்டுமே.
இதனால் தான் ஊமைகளும் பேச முடிகிறது
யார் சொல்லியது பறவையும் விலங்கும் பேசவில்லை என்று
அவை பேசும் மொழி நமக்கு புரிய வில்லை

இயற்கையும் பேசுகிறது, இதனை புரிந்தவர்கள்
மனிதர்கள் அல்ல, தேவர்கள்

அனால் உங்களின் தேடல் அது அல்ல
விதண்டமாய், வினயமாய், நய வஞ்சகமாய்
பேச மனிதனுக்கு யார் தான் கற்று தந்தார்கள்?
அது கற்றதல்ல, விட்டு சென்றது
ஆம் கடவுளின் பகைவன் மனிதனுக்காக விட்டு சென்றது.

அதை பேசுபவர் எவரும் மனிதரும்  அல்ல .
ஐயா, நாத்திகர் ஆத்திகர் விவாதம் வேண்டாம்
இது வெறும் அரசியல் மட்டுமே.

வேதாந்தி


relax please




படம் பாரு கடி கேளு மாதிரியே ஒரு பதிவு
மிக அருமையாக இருந்தது



 "அதிக பிரசங்கி"   வேதாந்தி 


Friday, August 22, 2014

Blogs updates on Twitter

நாகு,
நம் தமிழ் சங்கத்தின் பெருந்தகை ஒருவரின் சிறிய வேண்டுகோள்.
நம் வலைதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் ஏன் "TWITTER" பண்ணக் கூடாது என்று கேட்கிறார். அவர் இதனை சோதனை செய்து வெற்றியும் கண்டு விட்டார். இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எந்த வகையில் சாத்தியம் என்று நீங்கள் கூறுவீர்கள் என எதிர் பார்க்கும்
உங்களின்
வேதாந்தி

Tuesday, August 12, 2014

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?



எனக்கு ஒன்று தெரிந்து விட்டது. மாற்றத்தை விரும்பாதவனே மறத் தமிழன்.
ரஜனி இருக்கும் வரை அவர் தான் சூப்பர் ஸ்டார்.
அடுத்தவரைப் பற்றி யோசிக்க கூட மாட்டோம் என்று பிடிவாதமாக இருகிறார்கள்.

ஒரு வேளை நடிகர்கள் வந்து கூடாரம் போட்டால் தான் நாம் முடிவு செய்வோமோ?

சென்ற மாதம் இங்கு நடிகை ஸ்ரேயா வந்து போனது யாருக்கும் தெரிந்து இருக்க நியாயம் இல்லை.
ஆனால் கூட்டம் தான் இல்லை. நுழைவுக் கட்டணம் அதிகமாக இருந்ததே காரணம்.
இறுதியில் ஆட்கள் இல்லை என்ற காரணத்தால் , இலவசமாக ஆட்களை கையை, காலை பிடித்து வந்து உட்கார வைத்தார்கள்.

அது போல நாமும் ஒரு கட்டத்தில் யாரையோ ஒருவரை  அவர் உறவினர் என்று சூப்பர் ஸ்டார் ஆக
தேர்ந்து எடுத்து விடலாம்.

நமக்கு தான் பரம்பரை ஆளுமை ரொம்ப பழக்கம் ஆகி  விட்டதே. இது ஒன்றும் புதிது இல்லை,

வேதாந்தி 

Monday, August 11, 2014

ரிச்மண்டில் பிடித்த இடம்

கொஞ்ச நாட்களுக்கு முன் ரிச்மண்ட் பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இதைக் கருதலாம். உங்கள் அனைவருக்கும் ரிச்மண்டில் ஏதாவது ஒரு இடம் மிகவும் பிடித்திருக்கலாம். எனக்கு மிகவும் பிடித்த இடம் ஒன்று இருக்கிறது. ரொம்ப தூரம் எல்லாம் இல்லை. என் வீட்டிலிருந்து சில நிமிடங்கள்தான் ஆகும் போவதற்கு.



எந்த இடம் என்று தெரிகிறதா?

 டீப் ரன் பார்க்!

சிறு குழந்தைகள் முதல் என்னைப் போன்ற முதியவர்கள்வரை அனைவரும் பொழுது போக்கலாம் இங்கே. இந்தப் பூங்காவில் பல மகிழ்ச்சியான நினைவுகள், நிகழ்ச்சிகள். தமிழ் சங்கப் பிக்னிக்குகள், பார்க்கில் இருக்கும்  அனைத்து விளையாட்டு இடங்கள், கால்பந்தாட்டம், கிரிக்கெட், நடைபாதைகள், சாரண முகாம், மீன்பிடிப்பு, குளத்தில் ஆமைகள், வாத்துகள், மீன்கள், துவக்கப் பள்ளி புத்தகப் போட்டி( Book Bowl),  கோடைகாலப் பசுமை, இலையுதிர் கால வண்ணக் கோலம், குளிர்காலத்தில் உறைந்த குளம்,  சைக்கிளோட்டம், சாரணர்களுடம் புதையல் தேடல்(Geocacahing), நாயுடன் நடை,  அங்கிருக்கும் கட்டிடத்தில் நண்பர்களுடன்  பேட்மிண்டன், நிறைய பார்ட்டிகள், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் எனது அனுபவங்களை...

இத்தனை வருடங்களில் இந்தப் பூங்காவில் நிறைய மாறுதல்களைப் பார்த்திருக்கிறேன். பாதைகள் அகலமானது. சரிவான பாதையை மேடாக்கி குளக்கரையை பலப் படுத்தியிருக்கிறார்கள். குழந்தைகள் விளையாட்டிடத்தில் நிறைய புது விளையாட்டு சாதனங்கள்.  காடாய் அழகாய் இருந்த பூங்காவை சிதைத்து நட்ட நடுவே ஒரு பூதாகரமான கட்டிடம்! ஆனால் அந்தக் கட்டிடமும் நிறைய உபயோகமாகத்தான் இருக்கிறது. சின்னதாக ஆரம்பித்த மூங்கில் புதர் இப்போது மூங்கில் காடாகிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் குளத்தின் பக்கத்தில் ஒரு இயற்கை மையம் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இங்கு நடந்து போக எத்தனை பாதைகள் இருக்கின்றன தெரியுமா? நான் அகலமாக ரோடு மாதிரி இருக்கும் பாதைகள்களைச் சொல்லவில்லை. ஒற்றையடி பாதை மாதிரி நிறைய இருக்கின்றன... அடுத்த முறை போகும்போது கவனியுங்கள்.  அவற்றில் போய்ப் பாருங்கள். எத்தனை வகையான மரங்கள் இருக்கின்றன என்று பாருங்கள். மரங்களின் பெயர்கள், பறவைகள் வகைகள், ஆமை வகைகள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு இடத்திற்குப் போகும்போதும், ஒவ்வொரு மனிதரை சந்திக்கும்போதும் முதல் முதலாகப் போவது போல், சந்திப்பது போல் எண்ணிப் பாருங்கள். அந்த இடத்தைப் பற்றி, அந்த மனிதரைப் பற்றி புதிதாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்வீர்கள்.

இந்தப் பூங்காவில் எடுத்த சில படங்கள்.

நான்காம் பதிவு

இவருக்கு Patio doors'அ திறந்து வச்சா பிடிக்காது
அந்த அம்மாவுக்கு Balcony கதவ மூடினா suffocating'அ இருக்கும்

இவருக்கு 75 degree ஆனா வேர்த்து கொட்டும்
அந்த அம்மாவுக்கு AC'அ on செஞ்சாலே குளிரும்

இவருக்கு நெனச்சத சாப்பிடனம்'னு ஆசை
அந்த அம்மாவுக்கு ஆரோக்யமா சாப்பிடனம்'னு குறிக்கோள்

இவருக்கு NFL'லும், Cricket'டும், Baseball'லும் ESPN'ல பாத்தா போதும்
அந்த அம்மாவுக்கு என் பிரியமுள்ள சினேகிதி நாடகம் பாக்கலேன்னா தூக்கமே வராது

இவருக்கு பொருள எடுத்த இடத்துல வக்க வராது
அந்த அம்மாவுக்கு அது அது அதோட இடத்துல இல்லேனா இருப்பு கொள்ளாது

இவருக்கு பிடிச்சது லெப்ரான்
அந்த அம்மாவுக்கு பிடிச்சது சல்மான்கான்

இவருக்கு விழுந்து விழுந்து படிக்கறதுனா அது அகிலத்தின் செய்திகள்
அந்த அம்மாவுக்கு அகிலமே இவரின் பார்வைகள்

இவருக்கு இஷ்டம் சப்பாத்தி சாவல்
அந்த அம்மாவுக்கு இஷ்டம் வெண்டைக்காய் வறுவல்

இவருக்கு அதிகம் பேசறதுங்கறதுனா 10 வார்த்தைகள்
அந்த அம்மாவுக்கு வாயில விளையாடும் கணக்கில்லா சொற்கள்

இவருக்கு பிடிச்சதெல்லம் டார்க் கலர்
அந்த அம்மாவுக்கு பிடிச்சதோ light rose மலர்

இவருக்கு gift'னா அகராதில அதிக பணம்
அந்த அம்மாவுக்கு gift'னா artistic மனம்

இப்படி எந்த விஷயத்திலுமே ஒரு சேர இருக்க முடியாத இரண்டு பேர ஒரு பெரிய Institution'னுக்குள்ள போட்டு சண்டை போட்டுக்கற இரண்டு பசங்கள ஒரே ரூமுக்குள்ள தள்ளற Teacher மாதிரி 4 சுவருக்குள்ள அடைக்கறது கல்யாணம்.

இந்த எல்லா odds'அயும் மீறி கால் சதமும், அரை சதமும் அடித்து ஆண்டுக்கொரு ஆளை கூட்டி அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாள்'னு காமிக்கற அகிலம் முழுக்க இருக்கற அத்தனை அப்பாவி ஆண்களையும் அழகு பெண்களையும் தெய்வ பிறவிகள்'னு தான் சொல்லனம்.

வேறு எந்த விஷயத்துல ஒத்துக்காவிட்டாலும் 'அஹம் பிரம்மாஸ்மி'யை இந்த இடத்தில் ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.

-இப்படிக்கு
ரிச்மண்டில் வாழும் மணம் ஆகாத கன்னியர் மற்றும் காளைகளின் சார்பாக உங்கள்
vgr

மீண்டும் சந்திப்போம். நன்றி. வணக்கம்.

This article on RTS is sponsored to you by writer/author Thiru. vedaanthi.

Thursday, August 07, 2014

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்

அருமை சகோதரிகளே,

முறத்தால் புலியை துரத்திய காலம் போய்  இப்பொழுது முரடர்களை துரத்தும் நிலையாக உள்ளது.
இது உங்களின் களம். நமக்கு நாமே தீர்வு காணும் உலகம்.

இன்றைய கால கட்டத்தில், செய்திகளைப் படித்தாலே மனம் பதறுகிறது. வயது வரம்பின்றி கொடுமைகள் நடக்கின்றன. இதற்க்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்.

பெண் குழந்தை பெற்ற எனது நண்பர்கள் சிலர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு  பயந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பற்ற நிலையை கண்டு அஞ்சுகிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற உங்களது தீர்வு என்ன? எந்த வகையில் பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு நிலை நாட்டப் படும்.

உங்களின் தீர்வை  இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வேதாந்தி

நாயோட்டு மந்திரம் ...


அனைத்தும் மறந்த‌ அவ‌ச‌ர‌ உல‌கில், ஒரு ந‌ண்ப‌ருக்குத் தொலைபேசி, க‌தைக்க‌லாம் என்றால் கூட‌ முடிவ‌தில்லை.  ஒன்று ந‌ம‌க்கு நேர‌மிருப்ப‌தில்லை, அப்படியே அழைத்தாலும் ம‌றுமுனையில் ந‌ண்ப‌ருக்கு நேர‌மிருப்ப‌தில்லை.  எங்கூருப் ப‌க்க‌ம் கிழ‌விக‌ள் கூறும் ஒரு ப‌ழ‌மொழி தான் நினைவிற்கு வ‌ருகிற‌து.  'நாய்க்கு நிற்க நேரமில்லை உட்கார இடமில்லை', என்ப‌து போன்ற‌ ஒன்று!  இன்றைய‌ வாழ்விற்கு இது எத்துனை பொருத்த‌ம்.  சமீபத்தில், வெகு நாள் க‌ழித்து அழைத்த‌ ந‌ண்ப‌ர், ரிச்ம‌ண்ட் மிடில் ஏஜ் மார்க‌ண்டேய‌ரிட‌ம் இது ப‌ற்றி பேசிய‌போது, 'அத‌ ஏன் ஓய் ஞாப‌க‌ப்ப‌டுத்தரீர், இதோ, இப்ப‌க் கூட‌ அங்க‌ இங்க‌னு ஓடிகிட்டு இருக்கேன், எதுவும் உருப்ப‌டியா இல்ல'னு அங்க‌லாய்த்துக் கொண்டார் :)

இது இப்ப‌டி இருக்க‌, இவ்வ‌ச‌ர‌த்தில் ந‌ம‌து ர‌சிப்புத் திற‌னும், சிந்தனைத் திற‌னும் எப்ப‌டித் தாக்குப் பிடித்து நீடிக்கும்?  ப‌த்தாத‌ற்கு, சித்த‌ர்க‌ள் த‌ங்க‌ள் பாட்டுக்க‌ளில், 'இலை ம‌றை காய் மறை'யாக‌ப் பாடிச்சென்ற‌ க‌ருத்துக்க‌ள் தான் எத்த‌னை ?!  அவ‌ற்றை எல்லாம் ஆய்ந்து ப‌டித்து இன்புற‌ ந‌ம‌க்கெல்லாம் நேர‌மெங்கே ?  ந‌ம்ம‌ அவ‌ச‌ர‌ம் அவ‌ர்க‌ளுக்கு தெரியாம‌ல் போன‌தே, ப‌டித்த‌வுட‌ன் புரிய‌ற‌மாதிரி எழுத‌ வேண்டாம் :)

ச‌மீப‌ கால‌மாக‌க் கேட்டுத் திளைக்கும் அரும‌ருந்து, திருமூல‌ரின் திரும‌ந்திர‌ம்.  'த‌ண்ணீர் வாளிக்குள் த‌லையைக் க‌விழ்த்து' பின்னாளில் ந‌ட‌க்க‌ப் போவதை முன்னாளில் க‌ண்ட‌தாக‌ நாஸ்ட்ர‌டாம‌ஸைச் சொல்வ‌ர் சில‌ர்.  அதுபோல‌ திருமூல‌ரும் ஏதாவ‌து டெக்னிக் ப‌ய‌ன்ப‌டுத்தியிருப்பாரோ ?  சாதார‌ண‌ ம‌னித‌ன் எழுதும் பாட‌ல்க‌ள் அன்று அவை.  மேலோட்ட‌மாக‌ ஒரு க‌ருத்தும், ஆழ்ந்து உட்செல்லச் செல்ல‌ ... இன்றைய அறிவிய‌ல் விய‌க்கும் வ‌ண்ண‌ம் அன்றே எழுதி அருளிய‌வ‌ர்.

நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்
நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம்
நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி
நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே.

என்ற பாட‌லை ப‌ல‌முறை கேட்டிருந்தாலும், 'நாயோட்டு ம‌ந்திர‌ம்' என்றால் என்ன‌ ?  இப்ப‌டி ஒரு திருமுறைப் பாட‌லில், கேவ‌ல‌ம் நாயின் ம‌ந்திர‌ம் என்று சொல்லியிருக்கிறாரே என்று விய‌ந்த‌துண்டு.  அது என்ன‌வென்று அறிந்து கொள்ள‌ நேர‌மின்றி, ப‌ல‌ நாட்க‌ள் சென்று, எப்ப‌டியோ நேர‌ம் ஒதுக்கி, இணைய‌க் க‌ட‌வுளிட‌ம் முறையிட்ட‌தில், இத‌ன் பொருள் கிட்டிய‌து.  அது,

"நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும்."

இன்னும் சற்றே ஆழ்ந்து பொருள் கொள்ள மற்றொரு வலைத்தளம் தரும் தகவல்,



"மகா காரண பஞ்சாக்கரமாகிய `சி` என்னும் ஓர் எழுத்தே நான்கு வேதப் பொருள்களாய் விரிந்தது. அதுவே கடவுளது இருப்பிடம் எனவே, தத்துவாதீதமான ஒளிப்பொருளும் அதுவேயாம். ஆகவே, சித்தர்கள் `நாய் ஓட்டும் மந்திரம்` என நகை விளைக்குமாறு மறைத்துக் கூறுகின்ற அம்மந்திரத்தைப் பிறர் `இன்னது` என அறிதல் இயலாது."

இது போல‌ ப‌ல‌ நுண் க‌ருத்துக்க‌ளை உள்ள‌ட‌க்கி ந‌ம்மை என்றும் வ‌சீக‌ரிக்கும் திரும‌ந்திர‌ம்.  நேர‌ம் விளைகையில், மேலும் சில பாடல்கள் பார்க்கலாம்!

Tuesday, August 05, 2014

யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?


யார் அடுத்த சூப்பர் ஸ்டார்?
இந்த பதிவு ஒரு கருத்து கணிப்பு  மட்டுமே
வேட்பாளர்களின் பெயரை பார்க்கலாம் என்று விக்கி யை  சொடுக்க ஒரு பட்டியல் கிடைத்தது . எனக்கு தெரிந்த வரை அது முழுமையாக இல்லை. நம்ம நமீதா பேரை காணோமுண்ணா பார்த்துகோங்களேன் .
மக்களே தூங்கிரதீங்க. உங்கள் அபிமான சூப்பர் ஸ்டார் யார் என்று உலகுக்கு தெரிய படுத்துங்கள்.


முதலில் பெயர் ராசியை பார்ப்போம்
இப்ப உள்ள சூப்பர் ஸ்டார்  பெயர் மாதிர்யே உள்ளவர்கள்  விஜயகாந்த் ,   நளினிகாந்த மற்றும் ஸ்ரீகாந்த் 
ரஞ்சனி, ரஜினிப்ரியா 
பெயரின் அர்த்தம் பார்த்தால்
விஜய், விஜயகாந்த், ஜெய் , விஜய் சேதுபதி, விஜயகுமார், கே ஆர் விஜயா, விஜய நிர்மலா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராய் பச்சன்
பட்டம் வைத்துப் பார்த்தால்
லிட்டில்  சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் , ஆக்சண் கிங் , இந்தியன் புருஷ் லீ ,
உலக நாயகன் , தல , பவர் ஸ்டார் , வைகை புயல்
தளபதி என்ற பட்டம் உள்ளவர்கள்  புரட்சி வந்தால் மட்டுமே ஆட்சியை புடிக்க முடியும்.
கேப்டன் பட்டம் வெறும் அணிக்கு தலைவன் மட்டுமே.
தற்போது உள்ள சூழ்நிலையை பார்த்தால்
சிவ கார்த்திகேயன், விமல், விஜய் சேதுபதி, சசிகுமார், சமுத்திர கனி, சூரிய, தனுஷ் , அஜித், விஜய் போன்றவர்கள் மட்டுமே
வெல்வதற்கு வாய்ப்பு உண்டு
உங்களின் சூப்பர் ஸ்டார் வாய்ப்பு எப்படி உள்ளது என்று எங்களுக்கு தெரியப் படுத்துங்கள்

வேதாந்தி

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை


இன்று வினவு என்ற வலைத்தளம் ஒன்றை பார்த்தேன். உங்களிடம் பகிர ஆசை.
குடும்பம் சிரிக்க நீ அழுதால் அது உழைப்பு என்றது எனது பதிவு.
இங்கு ஒவ்வொரு உழைப்பாளியும் என்ன நிலைமை என்று மிக அருமையாக விவரித்துள்ளனர் 

http://www.vinavu.com/2014/08/05/kolar-gold-fields-workers-2/#tab-comments

 

Monday, August 04, 2014

சூடா என்ன இருக்கு ?

அய்யா பார்த்து சாப்பிடுப்பா , ரொம்ப சூடா இருக்கு. இப்படித் தான் நிறைய எச்சரிக்கைகள் .
எழுதும் சமயம் கூட இப்படி நிறைய எச்சரிக்கைகள்.
இதெல்லாம் பார்க்க முடியுமா?

ஏன்னா சூடான விஷயமாச்சே.
நாட்டில் ஒரு பக்கம் common wealth games பற்றிய செய்திகள்.
ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் மண் சரிவு. ஒரு பக்கம் இலங்கை அரசு முதல்வரிடம் மன்னிப்பு கேட்குமா கேட்காதா? ஒரு பக்கம் மோடி அரசின் சாதனைகள். ஒரு பக்கம் டில்லியில் அடுத்த ஆட்சி அமைப்பது யாரு?
இப்படி பரபரப்பு இருக்க, இங்கே ரிச்மாண்ட்  தமிழ் சங்கத்தில் எழுதலாமா வேண்டாமா என்ற பரபரப்பு.

மக்களே! நீங்கள் மட்டும் பரபரப்பு இல்லாமல் எப்படி இருக்கிறீர்கள்?
உங்களுக்காக ஒரு கேள்வி. சூடான விஷயம் என்பதால் கொதித்து விடாதீர்கள்.
நாம் தமிழன் தானே, நமக்கு நடிகர்கள் தானே வழிகாட்டி . அதனால் 
அடுத்த  "சூப்பர் ஸ்டார்" யார்? என்பது தான் இப்ப சூடான செய்தி.

ஏன்னா அவர் தான் அடுத்த முதல்வரை நிர்னயீக்க போகிறவர் !!!!

ஆமாம், சூப்பர் ஸ்டார் ஆகா இருக்கணும்னா என்ன தகுதி வேண்டும்?
மனிதாபிமானமா? நடிப்பு திறமையா? மேடைப் பேச்சா? அழகா? இல்லை எல்லா படமும் சூப்பர் ஹிட் ஆகணுமா? இல்லை என்றால் மேக்கப் இல்லாமல் நடிக்கணுமா?

எனக்கு ஒன்னும் விளங்க வில்லையே. அது சரி தேர்தலில் தகுதி பார்த்தா வாக்கு அளிக்கிறோம். அது மாதிரி இதையும் தேர்ந்து எடுத்து விட்டால் சரியப் போய்  விடும் .

நன்றாக  வரும் வரை ரசிகர் மன்றம் வச்சுக்க வேண்டியது, அப்புறம் எனக்கு அது தேவை இல்லை என்பது.
எது எப்படியோ என் மண்டையை குடைவது யார் சூப்பர் ஸ்டார் என்பது தான்.

உங்களின் வாக்கு படி நாம் அடுத்த சூப்பர் ஸ்டார் தேர்ந்து எடுப்போம்.

யார் யார் தகுதி ஆனவர்கள. எல்லா நடிகர்களும் தகுதி ஆனவர்கள்.
ஆமாம், இந்த மாதர் சங்கம் எல்லாம் எங்க போய்  விட்டது. இதில் பெண்களுக்கு உரிமை இல்லையோ ?
நாம் பெண்களை மதிப்பவர்கள். அதனால் நடிகைகளையும் களத்தில் இறக்கி விட வேண்டியது தான்.

மக்களே உங்கள் பொன்னான வாக்குகளையும், மறுமொழிகளின் மூலம் எங்களுக்கு தெரிய படுத்துங்கள்.
இல்லை என்றால் நாங்களே ஒரு குத்து மதிப்பா ஒரு ஆளை தேர்ந்து எடுத்து விடுவோம்.

என்னுடைய முதல் வாக்கு யாருக்கு என்பது அடுத்த பதிவில் தெரிவிக்கின்றனே.

இப்படிக்கு
வேதாந்தி ( இது வதந்தி இல்லை வேதாந்தி)

Wednesday, June 25, 2014

மூன்றாம் பதிவு

blog எழுதலாமா வேணாமா
எழுதலாமா வேணாமா blog
எழுதலாமா வேணாமா blog
வேணாமா எழுதலாமா blog
எழுதலாமா வேணாமா வேணாமா எழுதலாமா
blog எழுதலாமா வேணாமா

காலையில் எழுந்து பல் தேச்சிட்டேன்
குழந்தைய school'கு drop பண்ணிட்டேன்
காய்கறி cut பண்ணி கொடுத்துட்டேன்
வேலைய செய்யற மாதிரி நடிச்சிட்டேன்
ஆனா
இப்போ ஒரு யோசனை தோனுதுங்க…
மனசு ஏங்குதுங்க...

blog எழுதலாமா வேணாமா?

ஆளில்லா அங்காடிக்கு தேனீர் ஆற்றுவது போல்..
வளறாத பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போல்..
வேகாத இட்லியை தட்டில் போடுவது போல்..
balance ஏறாத account'கு bank account வைத்திருப்பது போல்..
குறையாத weight'கு Gym போவது போல்..
நம்ம பேச்ச ஒத்துகாத மனைவியிடம் argue செய்வது போல்...
யாருமே படிக்காத blog'கு மூளையை கசக்கி பிழிந்து அறிவு திறனை எல்லாம் பயன்படுத்தி பதிவு எழுதலாமா? இல்லை வெண்டாமா?

இந்த காரணத்துக்கு தான் என்னோட private blog'அ நான் offline செஞ்ஜேன்... ஆனா அதுவே பரவால்ல போலருக்கே... இன்னும் நிறைய பேர் படிப்பாங்களே... RTS தமிழ் blog'ல போடறதும் Kapteyn 'ல poster அடிச்சு ஒட்டறதும் ஒன்னு தான் போலருக்கு... ரெண்டையுமே யாரும் பாக்க மாட்டாங்க... நம்ம எழுதினா யாரும் படிக்கறதில்லைனா...யாரு எழுதினா படிப்பாங்க? ஒரு வேளை Cinema/Politics படிக்க விருப்பம் இருக்குமோ.... அப்படி ஒன்னும் படிக்கற வழக்கம் நம்ம கிட்டிருந்து போச்சுன்னு சொல்ல முடியாது.... 24 மணி நேரமும் news படிக்கற ஆட்கள் நம்மில் எத்தனை பேரு? எப்போ பாரு எதாவது ஒரு sport'ஒட score card'அ check பண்றது எத்தனை பேரு? வெட்டி பந்தா facebook messages படிக்கறது எத்தனை பேரு? இந்த ஓட்ட பந்தயத்துல ஜெயிக்கற அளவுக்கு என் blog post'கு influence இருக்கா? இல்லைனு தான் சொல்லனும்... அப்படியே இருந்தாலும் நமக்கு தெரிஞ்ச அறிஞ்ச 4 ஜீவன் தான் படிக்கும்...என்னோட post படிங்க..படிங்கனு எல்லாருக்கும் மின்னஞ்சல் அனுப்பறதெல்லாம் ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு... என்னால அத செய்ய முடியறதில்ல...self appraisal மாதிரி இருக்கு...அப்படியே தெரிஞ்சாலும்...பல பேர் படிக்கவா போறாங்க? Genelia'விற்கு எத்தனை மாதம்? பிறக்க போவது ஆணா, பெண்ணா? இல்ல Preity Zinta case'இல் ஜெயிப்பாறா இல்லையா? George Clooney'ஒட Best Man கண்டுபிடிக்க பட்டார்? அப்படினு Yahoo.com, Rediff India மாதிரி article'கும் தலைப்புக்கும் சம்மந்தமே இல்லாம click count'காக தடபுடல் தலைப்பு வச்சா ஒரு வேலை படிப்பாங்களொ? நாம்ம ரொம்ப யோசிக்காம consecutive number'ல heading போடறது தான் காரணமா இருக்குமோ? பேசாம Fibonacci Series'ல தலைப்பு கொடுத்தா? அடுத்த பதிவுனு ஒன்னு இருந்தா அதுக்கு ஐந்தாம் பதிவுனு பேர் வச்சு...எத்தனை clicks வருதுனு பாக்கலாமா?

blog எழுதலாமா வேணாமா? வேணாமா எழுதலாமா?

-vgr

Friday, May 30, 2014

இரண்டாம் பதிவு

போன முறை 'Breaking Bad'...இந்த முறை செல்வராகவன் பட தலைப்பு மாதிரியே ஒரு தலைப்பு. ஒரு வழியா முதல் post'க்கு 10 காமென்ட் கிடைச்சதால (உங்களில் சில பேர் 'அதுல 5 நீ போட்டதாச்சே'னு நக்கீரர் மாதிரி பொருள் குற்றம் கண்டுப்பிடிக்கறது காதுல விழுது...) ஆனால் அதை கண்டுகாமல் வெற்றி வெற்றி என்று சொல்லி....இரண்டாவது பதிவு எழுத முடிவு பண்ணிருக்கேன். இந்த முறை என்ன எழுத போறேன் தெரியுமா? நானும் என் நண்பரும் காய்கறி வாங்க போன அந்த சம்பவம்...’அந்த நாள் உன் calendar'ல குறிச்சு வச்சுகோ'னு சொல்ற அளவுக்கு ஒரு முக்யமான கதைய சொன்ன நாள்.

ஸ்ரீமன் நாராயணின் மனைவியின் பெயர் வைத்து ரிச்மன்ட்'ல் காய்கறி வியாபாரத்தில் monopoly செய்து வந்த அந்த கடையின் vote'களை இரண்டாக பிரித்த சிவனின் மனைவி பெயர் கொண்ட அந்த கடை இருக்கே....அங்க தான் நடந்தது அந்த சம்பவம்.

நானும் என் நண்பரும் சனிக்கிழமை காத்தால கறிகாய் வாங்க போனோம். அப்போ நான் வழக்கம் போல எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கினேன். ஆனா அந்த நண்பர் மட்டும் Indian eggplant, Thailand eggplant, Japanese eggplant, வெள்ளை eggplant, குண்டு eggplant அப்படினு ஒரே கத்திரிக்காயா மட்டுமா வாங்கி தள்ளினார். எனக்கு ஏன்னு கேக்கனம்'னு துரு துரு'னு இருந்தது...ஆனா கேக்ககல...பேசாம ரெண்டு பேரும் சாமான்களை வாங்கிட்டு வெளியில் வந்தோம்...

"ஏன் நான் வெரும் கத்திரிக்காய மட்டும் வாங்கினேன்'னு தானே யோசிக்கற...?" அப்படினு அவரே என்ன கேட்டார்.

"ஆமாம்...அதான் கேக்கனம்'னு நெனச்சேன்...ஏன் அப்படி?" - இது நான்.

கூக்கூ - கூக்கூ - முதல் மரியாதை - BGMமை play செய்து மேலே படிக்கவும்...

அது ஒரு அழகிய நிலா காலம்'னு நானும் எல்லா காய்கறிகளையும் சாபிட்டு தான் வளர்ந்திருக்கேன்...ஆனா என் மனைவி சமையல என்னிக்கி சாப்பிட ஆரம்பிச்சேனோ...அன்னிலேருந்து ஆரம்பிச்சுது என் கஷ்டம்...

'என்ன சொல்லுவேன் என் உள்ளம் தாங்கல...மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல....' சிவாஜி acting'ஐ மனதில் நினைவுருத்தி மேல நண்பர் சொன்னதை மீண்டும் படிக்கவும்...

என் வீட்டு அம்மாவுக்கு....கத்திரிகாய் மட்டும் தான் செய்ய தெரியுமாம்....ஒரு நாள் கத்திரிகாய் வத்த குழம்பு...மறு நாள் கத்திரிகாய் கறி....அன்னிக்கி சாயங்காலமே...கத்திரிகாய் போட்ட வாங்கி பாத்...

இப்படி எல்லாம் கத்திரிகாய் மயம்...புவி மேல் இயற்கையினாலே விளையும் எழில் வண்ணம்...எல்லாம் கத்திரிகாய் மயம்.... அப்படி'னு என் நண்பர் சொன்னப்போ அவரோட நிலமைய நெனச்சு எனக்கு கண்ணுல ஒரு சொட்டு தண்ணியே வந்தாச்சு...

ஏன் யா அப்படி உனக்கு மட்டும்....ஒரு நாள் கூட வேற காய்கறி போட்டு எதுவும் பண்ணதில்லையா? 'I mean not even on a single day?' அப்படி'னு மேஜர் சுந்தரராஜன் பாணி'ல நான் கேட்டேன்.

அதுக்கு என் நண்பர்...

ஒரு நாள் வீட்டுக்குள்ள நுழையும் போது சுட சுட சப்பாத்தி செய்யும் மணம் மூக்கை துளைச்சுது...உடனே அடடா ஏதோ புது ஐடெம் கற்றுக்கொண்டாள் நம்மவள்'னு ஆசையா உள்ள நுழைஞ்சேன்... வாங்க சாப்பிடலாம்'னு கூப்டு தட்டை கையில கொடுத்தா...அதுல 4 சப்பாத்தியும் பக்கத்துல ஏதோ reddish brown கலர்'ல தொகையல் மாதிரி paste போல இருந்துது....தப்பிச்சோம் டா சாமி'னு ஒரு வாய் எடுத்து வாயில வச்சேன்...

"பைங்கன் கா பர்தா" எப்படிங்க இருக்கு'னு என் வீட்டு நளபாகம் கேட்க...
"என்னது பைங்கன் ஓட பர்தாவா... நான் உன்னோட பர்த்தாவாச்சே மா...யார கேக்கற.." அப்படினேன்...
"அட அது இல்லங்க சப்பாத்திக்கு தொட்டுக்க...பைங்கன் கா பர்த்தா... நீங்க வாங்கிட்டு வந்த பெரிய கத்திரிகாய தவா'ல போட்டு சுட்டு பண்ணினேன்..."
என்னவோ புதுசா இருக்குனு ஆசையா வந்த எனக்கு 'என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளே...என் கதயை கேட்டால் உங்கள் சிறகுகள் தன்னால் மூடி கொள்ளும்..."னு பாடற நிலமைக்கு கொண்டு போய் சாப்பிட திறந்த வாய மூடி விட்டுட்டா... வாரத்துல 7 நாள் இருக்கு...இவங்களுக்கு தெரிஞ்ச கத்திரிகாய் ஐடெம் 4 தான் இருக்கு....எப்படி vgr என்னால முடியும்....? இதுக்கு ரெண்டே வழி தான் இருக்கு...ஒன்னு இந்த ரிச்மன்ட்'ல இருக்கற ரெண்டு இந்தியா பஜாருக்கும் whole sale கத்திரிகாய் supply வராம கட்டுப் படுத்தனம்...இல்லைன...
'எடுறா அரிவாள வெட்டுறா அந்த கத்திரிகாய் கொடிய...'னு வன்முறைய கைல எடுக்க வேண்டியது தான்..

என்று நண்பர் சொல்லி முடித்தார்...

இப்போ நம்ம பொறுப்புள்ள community'யா அவருக்கு செய்ய வேண்டியது என்னனா...உங்களோட நல் கருத்துக்களை இந்த பிரச்சனைக்கு முடிவா சொல்றது தான்....

சொன்னால் ஒரு உத்தமனின் வாழ்வில் விளக்கேற்றிய பெருமை உங்களை சாரும்.

கூடிய விரைவில் சந்திப்போம்

-vgr