Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, April 24, 2014

நினைவிற்குத் தேன்

ஆடி அசைந்து பள்ளி நுழைந்து
வெயிலும் நிழலும் அப்பிய முற்றத்தில்
அணிவகுத்து நின்று கடவுளை வாழ்த்திய காலை
நிழல் தேடி வட்டமிட்டு அமர்ந்து
கதை பேசிப்பேசி காகம் விரட்டி
கட்டித்தந்ததை உண்ட மரத்தடி மதியம்
ஆவலாய்க் காத்திருந்து மணிச்சத்தம் கேட்டவுடன்
ஆர்ப்பரித்த்து வெறியோடு வளாகம் விட்டு
அங்கும் இங்குமாய்ச் சிதறி ஓடிய மாலை
தன்னைவிடப் பிரம்பை நம்பிய ஆசிரியர்கள்
கேட்கக் கேட்கத் தாலாட்டாய் மாறும் அவர்கள் குரல்
கண்விழித்துக் கண்ட பகல் கனவு
சமைக்காத போதும் சாம்பார் மணக்கும் சத்துணவுக்கூடம்
கவனம் ஈர்த்த கிருத்துவக் கல்லூரிப் பெண்கள்
இடை இடைச் செரித்த பாடம்
பதைபதைக்கப் புரட்டிய வினாத்தாள்
படித்ததை எழுதி முடித்த நிம்மதிப் பெருமூச்சு
அறிவையும் ஆன்மாவையும் தொட்ட சிந்தனைகள்
இவை அனைத்தும் தந்த அனுபவம் கொண்டு
நான் நானாக உருவாகத் துவங்கிய கருவறை
கார்லி கலைக் கோயில்
- வாசு சண்முகம் 



Friday, January 13, 2012

பொங்க‌ல் வாழ்த்து - 2012



ஏர் பூட்டிய எருது
நிலம் பிளக்கும் உழவன்

எம்குல‌ப் பெண்க‌ளின் வ‌ருகை
விண் அதிரும் குலவை

வெண் மேகம் நீந்தும்
நீர் ததும்பும் நிலம்

சடசடத்துக் கதை பேசும்
காற்றில் ஆடும் நாற்று(க‌ள்)

முப்பொழுதும் நீர் பிடிக்க‌‌
த‌ப்பாது வ‌ள‌ரும் ப‌யிர்

நீண்டு வளர்ந்து பின்
தலை வ‌ண‌ங்கும் நெல்மணி(க‌ள்) !

***

ஞாயிற்றின் வ‌ர‌விற்கு,
மாக்கோல‌த் த‌ரையினிலே
ம‌ஞ்ச‌ள் த‌ண்டுடுத்தி
வைத்திட்ட‌ ம‌ண்பானை

க‌ற்க‌ண்டுத் தேனோடு
வெல்லம் கலந்திடவே
நீரூறும் ந‌ம்நாவில்
ப‌ச்ச‌ரிசிப் பால்பொங்க‌ல்

உண்டு மகிழ்ந்திடுவோம்
உழ‌வ‌னை வாழ்த்திடுவோம்
வைய‌க‌ம் தழைத்திட‌
உழ‌வினைப் போற்றிடுவோம் !!

***

அனைவ‌ருக்கும் இனிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள் !!!

படம்: நன்றி இணையம்

Saturday, March 26, 2011

புரட்சி



குளிர் என்னும் அரக்கனின்
அடக்குமுறையிலிருந்து
வெடித்துக் கிளம்பிய
வசந்த கால
மஞ்சள் புரட்சி!

Monday, February 21, 2011

நாளின் நிறம்



பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.

கதிரவ னுடனே பிறந்த போதும்
கறுப்பில் முழுகிக் கிடக்கும் சில நாள்-
முகிலின் நடுவே பிறந்து வந்து
மழையாய்க் கண்ணீர் பொழியும் சில நாள்-
கீழை வானச் சிவப்பில் குளித்து
தகதக தகவென ஜொலிக்கும் சில நாள்-
பசுமை எழிலில் தானும் தோய்ந்து
புன்னகை மிளிர வலம்வரும் சில நாள்-
நீல வானைக் கையில் ஏந்தி
நேசக் கரத்தை நீட்டும் சில நாள்-
அமைதி யென்னும் விளக்கைக் கொண்டு
ஆனந்த ஒளியை ஊட்டும் சில நாள்-

ஒவ்வொரு நொடியும் பின்னிப் பிணைந்து
இணைந்தே நடக்கப் பிடிக்கும் சில நாள்-
முழுக்க முழுக்கத் தவிர்த்துத் தனியே
துவண்டு கிடக்க, கடக்கும் சிலநாள்-

பிறக்கும் ஒவ்வொரு நாளுக்கும்
ஒவ்வொரு வண்ணம், ஒவ்வொரு வடிவம்.
வளரும் அன்பில் நிறங்கள் மாறும்
நாள் ஒவ்வொன்றிலும் நலமே சேரும்.

--கவிநயா

பி.கு. நாகு ரொம்ப வருத்தப்பட்டாரேன்னு, இப்போதான் எழுதிய கவிதை இங்கே... சுடச் சுட... :)

Monday, September 14, 2009

அம்மா

அம்மா காட்டிய நிலாவும்,
அம்மா ஊட்டிய சோறும்
என்றுமே ஒருபடி உசத்திதான்.

யாருக்காகவும் என்னை விட்டுக் கொடுத்ததில்லை,
என் தம்பி மட்டும் விதிவிலக்கு.

எனக்கு பிகாஸோவெல்லாம் தெரியாது
மார்கழி மாதக் காலைகளில்
அம்மா போடும் கோலங்கள்தான் தெரியும்.

நவராத்திரியை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
அப்போதுதான் அம்மா அடிக்கடி பாடுவாள்.

அம்மா கோணலாய் இட்ட விபூதிக் கீற்றில்தான்
என் முகம் அழகாய்த் தெரிகிறது.

என் பரிட்சைகளுக்காக என்னிலும் அதிகமாய்
தூக்கம் தொலைத்தவள் அம்மா.

சிகப்பு நிற சேலைகள் அனைத்தும் அழகானவை
அம்மாவிடம் அவை நிறைய உண்டு.

நான் வேற்றூரிலிருந்து வருகையில்
'வாடா' என்று அழைக்கும் போது
கண்கள் பனிக்கும் போதே தெரியும்
எனக்காக காத்திருந்திருக்கிறாள் என்று.

அம்மா கோவிலுக்குப் போய் சாமி பார்ப்பாள்.
நான் வீட்டிலிருந்து அம்மா பார்ப்பேன்.
இரண்டிற்கும் பெரிதாய் ஒன்றும் வித்யாசமில்லை.

எல்லா குஞ்சுக்கும் தன் காக்கை
பொன் காக்கை.
*******************************************************************************
இது நான் எழுதிய கவிதை இல்லை. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பலப் பல வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு புதினத்தில் படித்தது, சமீபத்தில் கிடைத்தது. இதை இப்போது வெளியிடுவதற்கு என்ன காரணம் என்பதெல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எழுதியவர் பெயர் நினைவில்லை மன்னிக்கவும்.

முரளி.
*******************************************************************************

Sunday, May 31, 2009

முடி யாது? முடியாது

நானும் ஒரு பேரு வச்சுக்கலாம்னு யோசிச்சு ஒரு பேரு கண்டு பிடிச்சு வச்சுக்கிட்டேன். பெயரைப் பற்றி அலசாமல் என் படைப்புகளை அலசவும்.

என் பேர் வேதாந்தி.

வேலை இல்லாதவன் தான் வேதாந்தம் பேசுவான். ஒரு வகையில் எனக்கும் அது பொருந்தும்.



முடி யாது? முடியாது. - அர்த்தம்


என் மகளுக்கு தான் முடி மேல் எவ்வளவு ஆசை.
முடி வெட்ட மறுக்கும் அவளுக்கும்
முடியாது என மறுக்கும் என் மனைவிக்கும் தான் தெரியும்.
இங்கே பிறந்தது என் வேதாந்தம்.
என்னால் முடிந்தது அவ்வளவு தான்
என் கொஞ்ச முடி மேல் ஆசையால் வேதாந்தம் எழுத ஆரம்பித்தேன்.
முடி மேல் யாருக்கு தான் ஆசை இல்லை
முடி சூடா மன்னருக்கும்
முடியே இல்லாத வழுக்கையருக்கும்
முடி யாது என்று எண்ணும் வேதாந்திக்கும்
முடியாது என்று மறுக்கும் என் மகளுக்கும்
வரலாறு சொன்னதோ முடியால் தொல்லை
முடியாத மொகலாயர் செய்தனர் கொலை
முடி யாது என்று ஆராய்ந்தால் இல்லை ஓர் எல்லை
முடி மேல் யாருக்குத்தான் ஆசை இல்லை
அன்று அரசன் தான் அலைந்தான் முடி சூட
இன்று அரசியல்வாதி அலைகிறான் முடி சூட
அன்றைய மங்கையர் முடிந்தால் முடி அழகு
இன்றைய மங்கையர் முடியாமல் முடி அழுக்கு
இது தான் இன்றைய இழுக்கு என்பார் வழக்கு பேசுபவர்
அது தான் இன்றைய இலக்கு என்பர் மறுசாரார்

ஒரு முடியை தேடினான் வராகன்
மறு முடியை தேடினான் நான்முகன்
முடியில் இருந்து விழுந்தாள் தாழ் முடியாள்
முடியை பார்த்தேன் என்றதால் இழந்தாள் முடியை
முடியால் எவ்வளவு தொல்லை

எனக்கோ எப்படி முடிப்பது என்பது தான் எல்லை
அதனால் முடிக்கிறேன் என் சொல்லை
உங்களுக்குத் தான் எவ்வளவு தொல்லை
முடியாது என்று சொல்லாமல் நீங்க்ளும்
முடி யாது என்று வேதாந்தம் பேச வாருங்கள் என்னுடன்.

வேதாந்தி

Tuesday, May 20, 2008

சிட்டுக்குருவி




எங்கிருந்து வந்தாய் என் அருமைச் சிட்டுக்குருவி!
உன் அழகிய வால் அறுந்த காரணம் என்னவோ சிட்டுக்குருவி

வீரப்போர் வெற்றியின் அடையாளமா சிட்டுக்குருவி
பிறப்பின் பிழையா சிட்டுக்குருவி

எதுவாய் இருந்தாலும் உன் சுறுசுறுப்பைக் கண்டு
நான் மகிழ்ந்து போனேன் சிட்டுக்குருவி
வால் போன துயரத்தில் வாடி நிற்காமல் சிட்டுக்குருவி
பறந்து வந்து வற்றலைப் பற்றிச்செல்கிறாய் சிட்டுக்குருவி

உன் தன்னம்பிக்கையை பாராட்டுகின்றேன் சிட்டுக்குருவி !

Sunday, May 04, 2008

கிராமத்துக் கோவில் திருவிழா

சித்திரை, வைகாசியில் அநேக கிராமங்களில், கோவில் திருவிழாக்கள் இன்றும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, நாமறிவோம். அத்தகைய திருவிழாவினைப் பற்றிய ஒரு கவிதை .

http://vazhakkampol.blogspot.com/2008/05/blog-post.html

Wednesday, April 30, 2008

காற்றுக்குமிழி

காற்றுக்குமிழி - தொடாமல் பார்க்கவும்! (தொட்டா உடைஞ்சிடும்ல, அதுக்கு சொன்னேன்)

http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_30.html

Friday, April 25, 2008

கிராமத்து மீசை

கிராமத்தில், வரப்பில் இருக்கும் வயோதிகர் முதல், வழித்து தேநீர் ஆற்றும் வாலிபர் வரை, பொதுவாக நிறைய பேர், மீசை என்றாலே, சற்று அளவில் பெரியதாக வைத்திருப்பார்கள். அது பற்றிய கவிதை கிராமத்து மீசை.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_24.html

Saturday, April 19, 2008

அய‌ல்நாட்டுக் கணிப்பொறியாளன் க(வி)தை

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்றோரின் நிலை என்னவென்று யோசிக்கையில், நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களின் நிலையும், மற்றும் இதே போல நிறைய குடும்பங்களின் நிலையும் இப்படித் தான் இருக்கிறது.

மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். கவிதை எப்படி இருக்கிறது என்றும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_18.html

Thursday, April 17, 2008

வசந்தம்

மலர்கள் மலர்ந்திட
மகரந்தம் சிந்திட
புவிமகள் மீதினில்
பொன்போர்வை போர்த்திட
வசந்தம் வந்ததிங்கே!

வந்துதான் பாருங்களேன்! :)
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_17.html

Tuesday, April 15, 2008

எதிலும் உன் நினைவாய் !

ஒரு காதல் கவிதை. தலைவியைப் பார்த்து தலைவன் பிதற்றுவது.

எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம். (அதைத் தாங்கி நிறுத்தப் போகிறேனா என்று விவாதிக்க வராதீர்கள் =;) ). எண்ணங்களை சேகரித்து வைப்போமே என எண்ணியதன் விளைவு எதிலும் உன் நினைவாய் ! கவிதை.

வழக்கம்போல வந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_14.html

Sunday, April 13, 2008

அருவி

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! சித்திரை வெயிலுக்கு இதமா அருவில வந்து கொஞ்சம் நனைஞ்சுட்டு போலாமே :)

Monday, April 07, 2008

தத்தி நடை பழகி

ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும், பிள்ளைகள் என்ன பண்ணுது, பேசச் சொல்லேன் என்றும், புதுசா போட்டா புடிச்சிருக்கீங்களா அனுப்பி வைங்க என்றும் நமது பெற்றோர் கேட்பது வெகுவான NRI நடைமுறையில் உள்ள ஒன்று. அவர்களைப் பற்றி இயன்றவரையில் ஒரு கவிதையில் வடித்திருக்கிறேன். வாசித்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_07.html

பெண்

நீங்க ஆணா இருந்தாலும் இதைப் படிக்கலாம்; தப்பில்லை.

Sunday, April 06, 2008

எது பெரிது


எந்த ஊனில் எந்தப் புற்றோ?

இந்தப் புற்றுநோயின் கொடுமை பெரிதா?
இத்தீங்கு வந்தவரின் துயரம் பெரிதா?

இந்நோயை வெல்ல முயன்ற பெவினின் உறுதி பெரிதா?
அவனுக்கு துணை நின்ற நண்பர்களின் நட்பு பெரிதா?
பலர் கண்களைத் திறந்த வினய்யின், சமீரின் சாதனை பெரிதா?
எட்டு வயது ஆதித்யாவை இழந்த பெற்றோரின் சோகம் பெரிதா?
எட்டு மாதம்கூட நிரம்பாமல் சென்ற பிரனவின் இழப்பு பெரிதா?

சிகிச்சை பெற்றுவரும் தாயைப் பிரிந்த இரு சிறார்களின் தவிப்பு பெரிதா?
மருத்துவமனையிலேயே குடியிருக்கும் இவர்தம் குடும்பத்தின் பொறுமை பெரிதா?
குழந்தைகளுடனும் மருத்துவமனைக்கும் அல்லாடும் மனைவியின் மனதிடம் பெரிதா?
மகன் படும் இன்னலை பார்க்கும் வயதான தந்தையின் சகிப்பு பெரிதா?
இவர்க்கு உதவ முடியாமல் தவிக்கும் உற்றாரின் இயலாமை பெரிதா?
இந்நோயின் தீவிரம் உணரா மக்களின் உதாசீனம் பெரிதா?

இவர்க்கு பொருத்தம் தேட உழைக்கும் நண்பர் உழைப்பு பெரிதா?
பொருத்தம் கிடைத்தவுடன் அனைவரும் அடையும் மகிழ்ச்சி பெரிதா?
பொருள் வழங்கும் அறிமுகமற்ற மக்கள் மனித நேயம் பெரிதா?
இந்நோயை வெல்ல முயலும் ஆர்ம்ஸ்ட்ராங்கின் முயற்சி பெரிதா?
எண்ணற்ற மருத்துவர்களின் ஆராய்ச்சி பெரிதா?

இவ்வனைத்தையும்விட பெரிதாக வேண்டும்

Wednesday, April 02, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

கொஞ்சம் வித்தியாசம் செய்யலாம் என்று நினைத்து 3‍-in-1 பதிவு ஒன்று பதிந்திருக்கிறேன். இங்கே ஓடும் ட்ரக்குகள் பற்றிய பதிவு. 3-in-1, மற்றும் உட்கருத்து, எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

http://vazhakkampol.blogspot.com/2008/03/3-in-1-trucks-drivers.html

Tuesday, April 01, 2008

கார்மேகக் காகத்தின் கதை!

எல்லோரும் காக்கா நரி கதை படித்திருப்பீர்கள். அதை கவிதையாக வடித்திருக்கிறேன்.  


புழுதி படிந்த ஒரு கிராமத்தில் 
ஒரு யௌவனக் கிழவி வடை
 சுட்டு விற்று வந்தாள்
காசு பெற்று வந்தாள்

அந்த கந்தக வடையை
கவர்ந்து செல்ல அங்கே வந்தது
ஒரு கார்மேகக் காகம்
பாட்டிக்கு மட்டும் அந்த கார்மேகக் காகத்தின்  
கள்ள எண்ணம் தெரிந்திருந்தால்
அவளது கல்லறைப் பூக்கள்கூட
அவளுக்காக கண்ணீர் சிந்தியிருக்காது.

பாட்டி பாராத சமயம்
அந்த கார்மேகக் காகம் 
சந்தன மின்னல் போல் பாய்ந்து
அந்த கந்தக வடையை கவர்ந்து சென்றது

விதைக்குள் இருந்து வந்த விருக்ஷம்
அங்கே வளர்ந்து நின்றது பல வருஷம்
அதன் சுந்தரக் கிளைகளில் சென்று அமர்ந்தது
அந்த சொப்பனக் காகம்

பூவுக்குள் பூகம்பம்போல்
புறப்பட்டு வந்தது ஒரு நரி
அந்த நரி - நர்த்தக நரி
நாலடியார் நரி
நீதியறிந்து போதி சொல்லும்
போதி மரத்து சாதி
கார்மேகக் காகம் வைத்திருந்த அந்த வடையை
அந்த நரி பார்த்தது
உடல் வேர்த்தது
அந்த ராஜவடையை அபகரிக்க
அதன் நந்தவன மூளை
நாசவேலை ஒன்றை செய்தது

நரி
அதுவாகச் சென்றது ,
காகம் இருந்த மரத்தடியே
மெதுவாகச் சென்றது
ஆனால் அந்தக் கார்மேகக் காகமோ
இச்சக அழகியாகி ய
எச்சம் கூட போட மறந்து
அந்த வீரிய வடையை
தன் நேரிய விரல்களுக்கிடையில் வைத்து
அதன் கூர்மையை சோதித்துக் கொண்டிருந்தது

நரி பகர்ந்தது
ஓ உலக அழகியே
உள்ளூர் மோனலிசாவே
நகராட்சி ப் பூங்காவுக்குள் நுழைந்த நமீதாவே
என் அந்தப்புரத்துக்குள் அத்து மீறி புகுந்த அசினே
தீவுத் திடலில் திடும்பென  நுழைந்த திரிஷாவே
நீ பார்க்கவே எ வ்வளவு அழகு
நீ மட்டும் உன் கந்தர்வக் குரலிலே ஒரு கானம் இசைத்தால்
எருதுக்கும் விருது கிடைக்கும்
சர்ப்பம்கூட கர்ப்பம் தரிக்கும்
ஏன்,  நீருக்கும் வேர்க்கும் என்றது

இந்த இடத்தில்தான் சரித்திரம் சரிகிறது
பூகோளம் புரள்கிறது
தமிழ் தடுமாறுகிறது

நரியின் தேவ எண்ணத்திலே
ஈட்டி பாய்ந்தது
ஏனென்றால்,

 காகம் என்ன பதிலளித்தது தெரியுமா?
ஏ நர்த்தக நரியே
நான் பாடமாட்டேன்.
ஏனென்றால்

நான் நாகுவின் வாசலில் வளர்ந்த காகம்
ஆகவே மெட்டு இல்லாமல் பாட மாட்டேன்
என்று சொல்லி வடையுடன் பறந்தது

ரிச்மண்ட் மக்களே
பாசமுள்ள ரிச்மண்ட் தமிழ் மக்களே
காகத்தின் உயிரில் வசந்தம் இனித்தது
மனதிற்குள் மழை பொழிந்தது
அங்கே ஆனந்தங்கள் பரவசம்
அனுமதி இலவசம்
கார்மேகக் காகத்தின் கதை
என்னைப் பொருத்தவரை
ஒரு கருவாட்சிக் காவியம் !
கள்ளிக்காட்டு இதிகாசம் !!

பாசமுள்ள ரிச்மண்ட் வாசிகளே
நீங்கள் பள்ளிகளிலும்
பல்கலைக் கழகங்களிலும்
இந்தக் கார்மேகக் காகத்தின் கதையை
பாடத்திட்டமாக்க பரிந்துரை செய்யுங்கள்!

வணக்கம் கூறி கதை முடித்தேன் யான்.


பிகு: நானே எழுதியது என்று சொன்னால்.....  பித்தன் நெற்றிக்கண்ணைத் திறந்திடப் போகிறார். அதனால் சொல்லிவிடுகிறேன். இந்த மண்டபத்தில் சுட்டது. அதுவுமில்லாமல் ஏப்ரல் ரெண்டுக்குள் எழுத ஒரு கெடு.. அதான் ஹி.... ஹி....







Monday, March 31, 2008

என் கண்மணி

நானே எப்பவாச்சும்தான் என் வலைப்பூ பக்கம் போறேன்; ஆனா நீங்களெல்லாம் எப்பவுமே (சதங்கா மட்டும் போனாப் போகுதுன்னு... நன்றி, சதங்கா! :) அந்தப் பக்கம் வரதில்லை. இதான் என் கடைசி முயற்சி, உங்களை வர வைக்க...

என் கண்மணி