Thursday, May 17, 2007

சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி

எனது சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி படிக்க இங்கே க்ளிக்கவும் அல்லது கீழ்கண்ட இணைப்பில் க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post_17.html

இதுவும் 2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலேயே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்த போது அப்போதைக்கும் இப்போதைக்கும் சன் டிவியின் தொடர்களில் எந்த மாற்றமும் இல்லை என்பது தெரிந்தது, அதனால் வெளியிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
முரளி.

Wednesday, May 16, 2007

படம் பாரு கடி கேளு - 2


கை குலுக்கும் வீரர்: சார் நான் இங்கே இருக்கேன் சார். இது என் கை தான்.

படம் பாரு கடி கேளு - 1

என்ன இருந்தாலும் இந்த கட்டிடத்து பக்கத்தில் தும்மல் வரவேண்டாம்.

மனங்கவர் சிங்கை

ஆசியக் கண்டத்தின் ஆச்சரியக் குறிப்புள்ளி
தேசிய மிதுவெனவே போற்றி வசிக்குமாந்தர்
அளவிற் சிறிதாயினும் அனைவரையும் ஆனந்தத்
திலார்த்து மற்புதச் சிங்கை (1)

வானுயர்ந்த வண்ணக் கட்டிடங்கள் வரிசையில்
வனப்புமிக பச்சைமரங் களெங்கும் -- வானம்
முழுதும் பெய்யும் வெய்யிலு மிருக்கும்
பொழுதில் நீர்வடிந்து விடும் (2)

சிவ லயன்சித்தித் தண்டபாணி சீனிவாசன்
ஸ்ரீவடபத்ர வைராவிமடவீ  ரகாளிமாரி யவள்
யாவருடன் இன்னும்பலர் வீற்றிருக்கு மழகில்த்
தவக்கோலம் காணும் சிங்கை (3)

தீபத் திருநாள் திருக்கோலம் ஆண்டோறும்
தைப் பொங்கல் மறந்தாலும் தைப்பூசத்
திருவிழாவில் பலவிதக் காவடி தாங்கித்
தெருவெலாம் பக்தர் மயம் (4)

அரசுப் பேருந்தோ வாடகைச் சிற்றுந்தோ
விரைவுரயிலு மதோவெதிலும் சுற்றுகையில் ஊரழகு
வியக்கவைக்கும் நம்மனதை அதற்குழைக்கப் பாடுபடும்
தயக்கம் சிறிதுமிலாச் சிங்கை (5)

ஆடை அணிகலன்கள் அணிவகுக்கும் தொழில்நுட்பக்
கடைத் தெருக்கள் ஏராளம் -- கூட்டம்
அலைமோதி வாங்கத்துடிக் குமுயர்தரப் பொருட்கள்
விலைமலிவில்க் கிடைக்கும் சிங்கை (6)

ஆட்சி மொழி நான்கிலும் சமத்துவமே
வீட்சி யுறுமெனக் கூறும் காட்சி
இங்கில்லை அரசியலாக்க வில்லை இருந்தும்
எங்கிலும் தெரியும் தமிழ் (7)

உடுக்க உடை உண்ண உணவு
படுக்க இடம் எல்லாமும் கிடைத்திட
உண்டிங்கு வேலை என்று நம்மைச்
சுண்டி யிழுக்கும் சிங்கை (8)

கட்டுமானத் தொழிலாளர் ஓய்வான அந்நாளில்
திட்டுத் திட்டாய்க் குவிதலில்க் கூட்டம்
எட்டுத் திக்கும் பரவிநிற்க படபடக்கும்
சிட்டாய்ச் சிராங்கூன் சாலை (9)

குறைவிலா வசதி நிறைவான வளமுடன்
முறையான வாழ்வு தனில் உறையும்
ஊர்முழுக்கத் தூசிலாச் சுத்தத்திற்கு மாசற்ற
பேர்பெற்ற மனங்கவர் சிங்கை (10)

-----

ஐந்து பாடல்களில் முடிக்க எண்ணி பத்து பாடல்களாகிவிட்டன. எவ்வளவோ முயன்றும் குறைக்க முடியவில்லை. நெல் விதைத்து நெல் அறுக்க, நிறையையே சொல்ல முயற்சித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை மறவாமல் பின்னூட்டமிடுங்கள்.

என்றும் அன்புடன்
சதங்கா

Tuesday, May 15, 2007

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள்!
http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd

கவிஞர் புகாரி, திசைகள் மாலன் ஆகியோரின் முன்னுரையுடன் அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் வரத் துவங்குகின்றன.

அனைவரும் பொறுமையாக வாசிக்கவும் என்று கேட்டுக்கொள்கிறோம், அனைத்து முடிவுகளும் வெளியாக சில காலம் ஆகும் என்பதால்.

நடுவர்கள் வாசிப்புரை, வாழ்த்துரையுடன் கலக்கப் போகிறார்கள்!

இயல்கவிதைப் பிரிவின் நடுவரான திசைகள் மாலன் அவர்களின் நடுவர் உரையின் ஒரு பகுதியும் இன்று வெளியாகியிருக்கிறது.

தொடர்ந்து வாசிக்கவும்.

Monday, May 14, 2007

நிதர்சனம் - சிறுகதை

எனது நிதர்சனம் சிறுகதையினை படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://kalaichcholai.blogspot.com/2007/05/blog-post.html
இது 11/25/2005-ல் எழுதப்பட்டு வெளிவராமலே தூங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் தூசி தட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறேன்.

அன்புடன்,

முரளி.

Friday, May 11, 2007

தோட்டம்

வாழைக் குலை தள்ளி
வைத்த கன்று பலவிருக்கும்

அவரை துவரை கொடியேறி
அழக ழகாய்ப் பூத்திருக்கும்

மலருண்ணும் வண்ணத்துப் பூச்சி
மகரந்தத் தூள் பரப்பும்

கொய்யா மரத்து அணில்
குதித் தோடி விளையாடும்

மா மரத்து மைனா
மண்புழுவைத் தேடி நிற்கும்

வேப்ப மர நிழலடியில்
வெக்கை இன்றி குளுகுளுக்கும்

இளந் தென்றல் மிதமாக
இன்னிசை பாடி வரும்

மண்ணில் கால் பதிக்க
எண்ணம் நடை திறக்கும்

-----

என்றும் அன்புடன்
சதங்கா

Thursday, May 10, 2007

படம் பார்த்து கடி சொல்

வலையில் கண்ட சில படங்களும் என்னுடைய கற்பனை பின்னூட்டங்களும்

"அப்பாடி, ப்ளேனுக்கு உள்ளேயே போயி ஏத்திவிட்டுட்டு வந்தாச்சு. இனிமே சத்தியமா திரும்பி வரமாட்டான்/திரும்பி வரமாட்டாள்"

"படிச்சு படிச்சு சொன்னா பொஞ்சாதி நீ செய்யுற வேலைக்கு வைர மோதிரத்தை போட்டுக்கிட்டு போகாதே" ன்னு. நான் கேக்கலே! எந்த பாவிக்கு குடுத்து வெச்சிருக்கோ. ம்ஹூம்.

அப்பாடி. நல்ல வேளை யாரும் பாக்கலே! எல்லோரும் நிகழ்ச்சியை ரசிச்சு பாத்துக்கிட்டு இருக்காங்க.



"எங்களை கைது பண்ண போலீசாலே பக்கத்துல கூட வர முடியலே. Gas Mask போட்டு கூட பார்த்தங்க. அப்போ கூட தாங்க முடியல்லே (நாற்றம்). போராடுவோம் போராடுவோம். வியர்வை சிந்தி போராடுவோம்"

"அவ ஸ்கேட்டிங்குக்கு அடியிலே கப்புனு ஒரு சின்ன கல்லை போட வேண்டியது தான். அப்புறம் நான் தான் ரேஸ்லே first"

"டேய் மட மடன்னு குடிச்சிட்டு இந்த பாட்டிலையும் ரொப்பு. வண்டி கிளம்பிடிச்சுன்னா ட்யூப் இழுத்து பிச்சிக்கும்"

வலைவலம்

முதலில் வலப்பக்கத்தில் இருக்கும் வலைக்குலையும் காலண்டரும் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். லேபிள் கிளவ்ட் என்று ஒரு தளத்தில் பார்த்தது. இங்கு சேர்க்க நான் கொஞ்சம் ததிங்கினத்தோம் போட்டேன். கடைசியில் பொன்ஸுக்கு் அவுட்ஸோர்ஸ் செய்ய, அவர்கள் ஆணி பிடுங்கி வேலை செய்ய வைத்தார்கள். லேபிள் கிளவுட்டை நான் வகைக்குலை என்று தமிழாக்கம் செய்திருக்கிறேன்.

இது கொஞ்சம் பழைய செய்திதான். இருந்தாலும் தமாஷ் - அதாவது உங்கள் தலையெழுத்து, என் கண்ணில் இன்றுதான் பட்டது. குஜராத்தில் பத்தொன்பது வயதான ஒரு பெண்ணும், பையனும் வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்துகொள்ளப் பார்த்தார்கள். ஆனால் ஒரு பிரச்னை. குஜராத்தில் பையனுக்கு கல்யாணம் செய்ய இருவத்தோரு வயதாயிருக்க வேண்டும். என்ன செய்வது என்று யோசித்து இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்த செய்தியை ஒரு குரங்கு(மனம்) படித்துவிட்டு இப்படி கற்பனை செய்தது. குரங்கு(மனம்) நிறைய தமிழ் சினிமா பார்க்கிறது என நினைக்கிறேன். நம்ம ஊர் சத்தியாவிடம் சொல்லி நண்பருக்கு கொஞ்சம் ஆட்றா ராமா ஆட்டம் காண்பிக்கவேண்டும்.

அந்த சினிமா கதை இருக்கட்டும். இந்த செய்தியைப் பாருங்கள். பாலச்சந்தர் பிச்சை வாங்கவேண்டும். மாண்ட்ரியல் நகரைச் சேர்ந்த மெலனி போய்வின் என்பவர் தனது 7 வயது மகளுக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறார். டெய்லர் சின்ட்ரோம் என்ற வியாதி கொண்ட மகளுக்கு குழந்தை பெறும் வாய்ப்பு இல்லை. அந்த குறையைத் தீர்க்க தாயார் மெலனியின் உத்தி என்ன தெரியுமா? தன் முட்டைகளை உறைநிலையில் வைத்து மகள் பெரியவளானவுடன் கர்ப்பம் தரிக்க பயன்படுத்துவாராம். ஆக ஒரே நேரத்தில் அவர் பாட்டியாகவும், தாயாராகவும் ஆவாராம். யாரோடு விந்தை பயன்படுத்துவார்கள் என்று தெரியவில்லை. பெண்ணிற்கு விந்துதானம் செய்பவர் தந்தையா, துணையா??? கேள்வியின் நாயகனைத்தான் கேட்க வேண்டும். குரங்க்கைக் கேட்டால் என்ன சொல்லும் என்று தெரியவில்லை.


ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் பெரியார் சிலைக்கு குண்டு வைக்கப் பார்த்த அம்புஜம் மாமியைப் பற்றிக் கேள்விப் பட்டீர்களா? இந்த கண்மணிப் பக்கத்தில் அதைப் பற்றி படிக்கலாம். இன்னோரு மாமியிடம் ஒரு திருடன் பட்ட அவதி இந்தக் கதையில்.

ஆப்பிள் கம்ப்யூட்டரின் ஸ்டீவ் ஜாப் பற்றி தெரியாதவர்கள் கிடையாது. அவரது 10 பாடங்கள் இந்த தளத்தில். இது அவரே சொன்னதா, இங்கே ஜல்லியடிக்கிறார்களா என்று தெரியவில்லை. கன்ஃபூசியஸ் சொன்ன ஒரு மேற்கோள்தான் நினைவுக்கு வருகிறது.

கன்ஃபூசியஸ் சொன்னதாக சொல்லும் பல மேற்கோள்கள் உண்மை கிடையாது - கன்ஃபூசியஸ்!


பாடம் எல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைக்கு உதவும் இந்த சர்ச்சையைப் பார்ப்போம். தாளிப்பதற்கு எதைப் போடலாம் - எள்ளா, உளுந்தா? கடலை போடலாம் என்று குரல் கொடுப்பவர்கள் கடைசி பெஞ்சுக்கு போகவும். எள்ளா, உளுந்தா எந்த சமயத்தில் எதை பயன்படுத்தலாம் என்று கம்பராமாயணம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாமா இங்கே?

இந்த விஷயத்தை நமது உள்ளுர் கம்ப ராமாயண வல்லுனரைக் கேட்டிருக்கிறேன். என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Wednesday, May 09, 2007

தமிழ்ச் சங்க தமிழ் இசை விழா

இந்தப் பதிவை நான் வெளியிடும் நேரம் தமிழ் இசை விழாவின் பாதிப்பு சற்று ஓய்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
பல விளம்பரதாரர்களைச் சேர்த்திருப்பது பாராட்டுக்குரியது. சென்ற நிகழ்ச்சியின் DVD விற்பனை மிக நல்ல முயற்சி. இதை தொடர்ந்து செய்தால், பல பெற்றோர்கள் காம்கார்டரும் கையுமாக அலையாமல் நிம்மதியாக நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம்.
குழந்தைகள் சற்று அமைதியாக இருக்க என்ன வழி என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம். அவர்களுடைய பங்கேற்றல் முடிந்தவுடன் அவர்கள் அடிக்கும் லூட்டி சற்று தாங்க முடியவில்லை. நல்ல யோசனை சொல்பவர்களுக்கு ஏதேனும் இலவசம் என்று அறிவிக்கலாம் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையின் குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு வருட தமிழ் சங்கத்தின் சந்தா தள்ளுபடி என்று ஆசை காட்டி பார்க்கலாம்.
முதலில் சிறுவர் சிறுமியர் நிகழ்ச்சிகள்:
அவர்கள் மேடையேறி பாடும் போதும் சரி, ஆடும் போதும் சரி, என்ன ஒரு கம்பீரம்! அவர்களுக்கு இணை அவர்களேதான். குறிப்பாக யாரையும் சொல்லப் போவது இல்லை. அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடுகளும் வந்து விடக் கூடாது என்பதல்ல காரணம், அவர்களில் இவர் முதல், அவர் அடுத்து என சொல்லி அவர்கள் உழைப்பை, உற்சாகத்தை, முயற்சியை, உறுதியை கேள்வி கேட்கும் எந்தத் தகுதியும் எனக்கு இல்லாததுதான் காரணம்.
மெல்லிசை நிகழ்ச்சி`
ரிச் மெலோடீஸ் வழங்கிய மெல்லிசை நிகழ்ச்சியில் பல புது முகங்களை அறிமுகம் செய்தார்கள். அவர்கள் மெல்லிசை குழுவிற்கு புது முகங்களே தவிர தமிழ் சங்கத்துக்கு நன்கு பரிச்சயமானவர்களே.
பயிற்சி என்பது இது போன்ற இசை நிகழ்ச்சிகளுக்கு மிக மிக முக்கியம். பாடல் வரிகளை மறப்பதோ, தவறாகப் பாடுவதோ, பின்னனி இசையை மாற்றி வாசிப்பதோ ஒப்புக் கொள்ளக்கூடியதாக இல்லை.
பாட்டுத் தேர்வில் குழுவினர் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 'மெலோடீஸ்' என்ற பெயருக்கு ஏற்ப பாடல்களைத் தேர்ந்தெடுத்தால், ரசிகர்களைக் கட்டிப் போடுவது ரொம்ப கடினம். தேவுடா தேவுடா மட்டுமே வேகப் பாட்டு அதுவும் நிகழ்ச்சியின் கடைசியில் என்றால் என்னைப் போன்ற மெல்லிசை மோகர்களுக்கு போதாதுங்கோ.
நிகழ்ச்சி முடிந்து கிளம்பும் போது ஒரு ரசிகர், குழுவினரிடம் உங்களுக்கு ஒரு தகுதியான ஒலிப் பொறியாளர் (Sound Engineer) உடனடித் தேவை என சொல்லிக் கொண்டிருந்தார். அதை நானும் வழிமொழிகிறேன். அது நிகழ்ச்சிக்கு நன்கு மெருகூட்டியிருக்கும். பல இடங்களில், சுரேஷின் Bass Guitar-ன் திறமை வெளிப்படவே இல்லை. கார்த்திக்கின் தபலாவும், மிதுனனின் ட்ரம்ஸும், சிவாவின் இசையும் ஏன் மார்லானின் ரிதம் கிடாரின் இசையும் கூட சரிவர கேட்கவில்லை.
அரவிந்தும் சிவாந்தியும் வழக்கம் போல கலக்கினார்கள், சிவாந்தியின் குரலில் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. நாராயணன் மேடையில் பாடுவது நமக்கு புதிதல்ல, மெல்லிசை நிகழ்ச்சியில் பாடுவது புதிது. ஆனால் அதுவும் தனக்கு ஒரு பெரிய விஷயமில்லை என்பதை நிருபித்தார்.
சித்ரா அவர்கள் மேடையில் கர்னாடக சங்கீதம் பாடி, கேட்டு மயங்காத ரிச்மண்ட் வாசிகள் இருக்க முடியாது. அவர் பாடியது நன்றாக இருந்தது. இருந்தாலும் அவர் சற்று வேகமான பாடலை எடுத்துக் கொண்டு கையாண்டிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். இது, அவர் மீது என் போன்ற சிலரின் அதீத எதிர்பார்பே அன்றி வேறு இல்லை. அவர் மெலோடியஸாக பாடலகளை select செய்து பாடியது, பாம்பே ஜெயஸ்ரீ மேடையேறி, தமிழ்தாய் வாழ்த்து மட்டும் பாடிவிட்டு சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
ஆரதி, தான் சிவாந்தியின் தங்கை என்பதை just like that நிருபித்து விட்டார் அவர் பாடிய 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம். கலா நன்றாக பாடினார், அவரும் சற்று வேகமான பாடல்களை பாடுவதற்கு முயல வேண்டும். பாடிய மற்றவர்களிடம் குறை என்று பெரிதாக ஏதுமில்லை, பயிற்சிக் குறைவைத் தவிர.
ஒரு முறை யாரோ சொல்லி கேட்டது, A critic need not be a professional என்று, அதை முழுவதுமாக பின்பற்றும் ஒரு சிலரில் நானும் ஒருவன்.
பின்னர் வழக்கமான கிறுக்கல்களில் சந்திக்கிறேன்.
- பித்தன்.
இந்த பதிவை எனது வளைப்பதிவிலும் படிக்கலாம்: http://pkirukkalgal.blogspot.com/2007/05/blog-post.html