Thursday, August 07, 2014

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்

அருமை சகோதரிகளே,

முறத்தால் புலியை துரத்திய காலம் போய்  இப்பொழுது முரடர்களை துரத்தும் நிலையாக உள்ளது.
இது உங்களின் களம். நமக்கு நாமே தீர்வு காணும் உலகம்.

இன்றைய கால கட்டத்தில், செய்திகளைப் படித்தாலே மனம் பதறுகிறது. வயது வரம்பின்றி கொடுமைகள் நடக்கின்றன. இதற்க்கு ஒரு தீர்வு கண்டே ஆக வேண்டும்.

பெண் குழந்தை பெற்ற எனது நண்பர்கள் சிலர் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு  பயந்து இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். ஆனால் இன்றைய நிலையில் இந்தியாவிலும் பாதுகாப்பற்ற நிலையை கண்டு அஞ்சுகிறார்கள்.

இந்த நிலைமையை மாற்ற உங்களது தீர்வு என்ன? எந்த வகையில் பெண் உரிமை மற்றும் பாதுகாப்பு நிலை நாட்டப் படும்.

உங்களின் தீர்வை  இந்த வலைத்தளத்தில் பதிவு செய்யுங்கள்.

வேதாந்தி

4 comments:

  1. பாரதி இதை எழுதியபோது பெண்கள் சம உரிமை, படிப்பு பற்றித்தான் யோசித்திருப்பார். இப்படி இந்தியாவில் நடக்கும் செய்திகளை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

    அண்மையில் ஆமிர் கானின் சத்யமேவ ஜயதே தொடரைப் பார்த்தேன்.நெஞ்சைப் பிசைய வைக்கும் எபிஸோட். பெண் குழந்தைகளைக் கருவில் கலைக்கும் கொடுமையைப் பற்றி நாம் நம்ப முடியாத அளவுக்கு நடக்கும் விஷயங்களை அறிய முடிந்தது. அதுதான் இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் ஆரம்ப வித்து என்று தோன்றுகிறது.

    உங்களுக்கு கொஞ்சம் திடமான நெஞ்சு இல்லை என்றால் கீழ்க்காணும் சுட்டியைப் சொடுக்கிப் பார்க்காதீர்கள்.

    Female foeticide(in Tamil)


    ReplyDelete
  2. நாகு மற்றும் VGR,

    ஆம். சொல்லொண்ணாத் துயரங்கள்.
    இதைப் பற்றி நினைத்தால் நாளைய சமுதாயம் எப்படி இருக்கும் என்பதே கேள்விக் குறியாக உள்ளது?
    சட்டம் என்பது எல்லாம் ஒரு வேலி மட்டுமே. வேலி க்குள் நடப்பதை எப்படி தடுப்பது.

    இந்திய மந்திரிகள் பெண்களின் ஆடைகள் தான் உணர்ச்சியை தூண்டுவதாக அறிவிழந்து பேசியுள்ளார்கள்.
    இது எல்லாம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் சொல்ல முடியும். அவர்கள் வீட்டில் நடந்தால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்.

    எனக்கு தெரிந்தது எல்லாம் விழிப்புணர்வு மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.
    நாம் ஏன் ஒன்று செய்யக் கூடாது.

    காதலர்கள் பதிவு செய்ய ஒரு வலைத்தளம் கொண்டு வரக்கூடாது.
    ஒவ்வொரு பெண்ணும் அல்லது ஒவ்வொரு ஆணும் தங்கள் காதலை பதிவு செய்ய வேண்டும் புகைப்படத்துடன். இதனால் ஒருவன் அல்லது ஒரு பெண் பலரை ஏமாற்ற முடியாது.

    ஆனால் முறை தவறி நடக்கும் அநியாயங்களை இது தடுக்காது.

    இன்னும் யோசிக்கிறேன்.
    வேதாந்தி

    ReplyDelete
  3. நாகு மற்றும் VGR,

    ஆம். சொல்லொண்ணாத் துயரங்கள்.
    இதைப் பற்றி நினைத்தால் நாளைய சமுதாயம் எப்படி இருக்கும் என்பதே கேள்விக் குறியாக உள்ளது?
    சட்டம் என்பது எல்லாம் ஒரு வேலி மட்டுமே. வேலி க்குள் நடப்பதை எப்படி தடுப்பது.

    இந்திய மந்திரிகள் பெண்களின் ஆடைகள் தான் உணர்ச்சியை தூண்டுவதாக அறிவிழந்து பேசியுள்ளார்கள்.
    இது எல்லாம் அவர்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை தான் சொல்ல முடியும். அவர்கள் வீட்டில் நடந்தால் குய்யோ முறையோ என்று கத்துவார்கள்.

    எனக்கு தெரிந்தது எல்லாம் விழிப்புணர்வு மட்டுமே இதனைத் தடுக்க முடியும்.
    நாம் ஏன் ஒன்று செய்யக் கூடாது.

    காதலர்கள் பதிவு செய்ய ஒரு வலைத்தளம் கொண்டு வரக்கூடாது.
    ஒவ்வொரு பெண்ணும் அல்லது ஒவ்வொரு ஆணும் தங்கள் காதலை பதிவு செய்ய வேண்டும் புகைப்படத்துடன். இதனால் ஒருவன் அல்லது ஒரு பெண் பலரை ஏமாற்ற முடியாது.

    ஆனால் முறை தவறி நடக்கும் அநியாயங்களை இது தடுக்காது.

    இன்னும் யோசிக்கிறேன்.
    வேதாந்தி

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!