சிறு வயது முதல் கல்லூரி காலம் வரை, விடுமுறையின் போது, கிராமத்துக்குப் போகும்போதெல்லாம் இந்த நிலையத்திற்கு செல்லாமல் இருந்ததில்லை. அதை ஒரு கவிதையாக்கி சேமித்து வைக்க எண்ணி எழுதியது. வாசித்துச் சொல்லுங்கள் உங்கள் அனுபவங்களையும்.
http://vazhakkampol.blogspot.com/2008/01/blog-post_08.html
Showing posts with label சதங்கா. Show all posts
Showing posts with label சதங்கா. Show all posts
Thursday, January 10, 2008
Thursday, December 27, 2007
கிராமத்து மார்கழிக் காலை
மார்கழி என்றாலே நம்ம ஊர்ல குளிர், சங்கீதம், திருப்பள்ளி எழுச்சி தான். அத்தோடு நம்ம ஊர் பெண்கள் வண்ணக் கோலம் இடுவதும் சிறப்பு (இப்பவும் நடைமுறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை !). அதைப் பற்றின என் எண்ணங்கள் கவிதையாய், இங்கே க்ளிக்கவும்.
http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html
http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_25.html
Thursday, December 13, 2007
பாவரசன் பாரதி ? (ஒரு கற்பனைக் கவிதை)
பாரதி அவர்களின் அதிர்ச்சியான மறைவு எப்போதும் சிந்தனையில் இருக்க அதன் விளைவாய் வந்த கவிதை
http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html
http://vazhakkampol.blogspot.com/2007/12/blog-post_13.html
Saturday, November 24, 2007
பதநீர் குடிக்க வாரீயளா ?
பதநீர் குடிக்க வாரீயளா ? .... மன்னிக்கவும், படிக்க வாரியளா ? சுட்டி கீழே :)
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_24.html
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_24.html
Thursday, November 22, 2007
இலையுதிர் காலம்
இலையுதிர் காலம் பற்றிய ஒரு கவிதை. படிக்க கீழே சுட்டியை அழுத்தவும்.
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_20.html
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_20.html
Thursday, November 15, 2007
கிராமத்துக் குலதெய்வ வழிபாடு
சமீபத்தில இரண்டு கவிதைகள் என்னோட வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். சுட்டிகள் கீழே, படித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கிராமத்துக் குலதெய்வ வழிபாடு
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_15.html
மயில் - குழந்தைகள் கவிதை
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_14.html
கிராமத்துக் குலதெய்வ வழிபாடு
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_15.html
மயில் - குழந்தைகள் கவிதை
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_14.html
Monday, November 05, 2007
வாஷிங்டன் வீதி உலா
சமீபத்தில் தலைநகர் வாஷிங்டன் சென்று சுற்றி வந்தோம். அதை ஒரு கவிதை வடிவில் எனது வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டமிடுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post.html
http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post.html
Monday, October 29, 2007
கிராமத்து பேருந்துப் பயணம்
என்றைக்குமே பழைய நினைவுகள் இனிமையானதே. அப்படி கிராமத்தின் பயணத்தைப் பற்றி எழுதிய கவிதையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_28.html
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_28.html
Tuesday, October 16, 2007
மழைக் காலம்
மழையைப் பற்றி எவ்வளவோ கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். நாமும் ஒன்று எழுதிப் பார்ப்போமே என்று தோன்றியதை ஒரு கவிதையாய் எழுதி எனது வலைத்தளத்தில் பதிந்துள்ளேன். படித்துப் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_16.html
http://vazhakkampol.blogspot.com/2007/10/blog-post_16.html
Thursday, September 27, 2007
Jimmy Kimmel Explains what Miss Teen said - 16 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நகைச்சுவை வீடியோ
நாகு அவர்களின் ஒரு மின்னஞ்சல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அப்படியே சுட்டு ஒரு பதிவா போட்டாச்சு. வந்து ரசிச்சிட்டுப் போங்க.
http://vazhakkampol.blogspot.com/2007/09/jimmy-kimmel-explains-what-miss-teen.html
http://vazhakkampol.blogspot.com/2007/09/jimmy-kimmel-explains-what-miss-teen.html
Sunday, September 23, 2007
டூரிங் டாக்கீஸ்
என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும், இன்னும் இந்த டூரிங் டாக்கீஸ் உயிர் பெற்றிருப்பதைப் பல கிராமங்களில் இன்றும் நாம் காணலாம். சுமார் இருபது ஆண்டுகள் முன்னால் இது போல் எங்கள் ஊரிலும் ஒரு டாக்கீஸ் இருந்தது. இப்போது இல்லை. ஆனால் அதன் நினனவுகள் இன்றும் மனதில் நிற்பவை. அதன் நினைவாய் எழுதிய எனது கவிதை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.
http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_22.html
http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_22.html
Thursday, September 20, 2007
மாட்டுச் சந்தை - ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்
கொஞ்ச நாள் முன்னால் ஆரம்பித்து கிடப்பில் கிடந்தது இக்கதை. இன்று கிடைத்த சிறு ஓய்வில் எழுதி முடித்து பதிவிட்டிருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_2111.html
http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post_2111.html
Wednesday, September 19, 2007
ஆயிரத்தில் நான் ஒருவன் - இருவர் (Flashback)
சமீபத்தில் இருவர் படத்தைப் பார்க்க நேர்ந்தது. அதில் வரும் ஒரு பாடல் அப்படியே அற்புதமாய் M.G.R.ஐ இமிடேட் செய்திருப்பார் மோகன்லால். அதைப் பற்றி எனது பதிவை இங்கே காணலாம்.
http://vazhakkampol.blogspot.com/2007/09/flashback.html
http://vazhakkampol.blogspot.com/2007/09/flashback.html
Tuesday, September 11, 2007
கோப்பையிலே உன் குடியிருப்பு - ரோஜர் ஃபெடெரர்
வணக்கம் நண்பர்களே.
சமீபத்தில் US Open வென்ற நாயகன் Roger Federer பற்றி எழுத வேண்டும் என்று, அவர் வென்றதிலிருந்து என் மனதுள் ஒரே போட்டி ... அதன் விளைவாய் எழுதிய கவிதை இங்கே. கவிதையைப் பற்றி உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரிவியுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post.html
சமீபத்தில் US Open வென்ற நாயகன் Roger Federer பற்றி எழுத வேண்டும் என்று, அவர் வென்றதிலிருந்து என் மனதுள் ஒரே போட்டி ... அதன் விளைவாய் எழுதிய கவிதை இங்கே. கவிதையைப் பற்றி உங்கள் எண்ணங்களை மறவாமல் தெரிவியுங்கள்.
http://vazhakkampol.blogspot.com/2007/09/blog-post.html
Tuesday, August 07, 2007
கிராமத்து தேநீர்க் கடை
பின்னிய கீற்றுக் கொட்டகையில்
மண்ணில் முளைத்த மரத்தூண்கள்
திண்ணை இருக்குது இருபுறம்
அதில் ஒட்டியிருக்குது விளம்பரம்
திட்டம் போட்ட கூட்டமில்லை
கட்டை மேசை மாநாடு
விடியல் கருக்கும் வேளையிலே
மாமன் மச்சான் உறவுகள்
புழுதி பரப்பும் பேருந்தில்
பருத்த செய்தித்தாள் வர
ஆளுக் கொன்றாய் பிரித்தெடுத்து ...
அருந்தத் தேநீர் சிலநேரம்
அரசியல் அலசப் பலநேரம்.
Tuesday, July 24, 2007
வாழ்த்துச் சொல்ல வாங்க
ஒரு ரோட்டுல நடந்து போனா, நம்ம கண்ணுக்குக் என்ன தெரியும் ? ரோட்டுல போர நாலு பேரு தெரியும், அங்க ஓடிக்கிட்டிருக்கிற நாய் தெரியும். ஒரு ஓரமா பூச்செடி இருந்தா, ஓ பூச்செடி இருக்கா என்று ஒரு 'ஓ' வோடு நம் பார்வையோட்டம் நின்று கொள்ளும்.
எதுக்கு இத்தன built-up னு கேக்கறீங்களா ... மேலும் படிங்க !
நம் தமிழ் வலைப் பதிவர்கள் சமீபத்தில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினார்கள். நாம் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு பூச்செடியை, அதைவிட, தனியாய் ஒரு பூவை, அதனுள் இருக்கும் details-ஐ macro உத்தியோடு நம்ம 'வெப் மாஸ்டர்' ஜெயகாந்தன் அவர்கள் க்ளிக்கி, அதற்கு மூன்றாம் பரிசும் வாங்கியிருக்காரு. மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.
கொசுறு: நாமலும் போட்டியில பங்கேத்துக்கிட்டோம்ல. ஜெய்-க்கு பரிசு கிடைக்கனும்னுட்டு சாதாரணமா ரெண்டு படம் அனுப்பிச்சோம். ஹி.ஹி. விழுந்தாலும் மண் ஒட்டுமா நமக்கெல்லாம் ;-) மேல்க்கண்ட் சுட்டியில், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு போட்டிருக்கற படத்துல ரெண்டாவது 'போகஹண்டாஸ் ஏரி' நம்மதுங்க.
ஜெய்யின் பதிவிற்குச் சென்று உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
அவரின் பரிசு பெற்ற படம்
எதுக்கு இத்தன built-up னு கேக்கறீங்களா ... மேலும் படிங்க !
நம் தமிழ் வலைப் பதிவர்கள் சமீபத்தில் ஒரு புகைப்படப் போட்டி நடத்தினார்கள். நாம் சாதாரணமாய்ப் பார்க்கும் ஒரு பூச்செடியை, அதைவிட, தனியாய் ஒரு பூவை, அதனுள் இருக்கும் details-ஐ macro உத்தியோடு நம்ம 'வெப் மாஸ்டர்' ஜெயகாந்தன் அவர்கள் க்ளிக்கி, அதற்கு மூன்றாம் பரிசும் வாங்கியிருக்காரு. மேலும் விபரங்களுக்கு இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.
கொசுறு: நாமலும் போட்டியில பங்கேத்துக்கிட்டோம்ல. ஜெய்-க்கு பரிசு கிடைக்கனும்னுட்டு சாதாரணமா ரெண்டு படம் அனுப்பிச்சோம். ஹி.ஹி. விழுந்தாலும் மண் ஒட்டுமா நமக்கெல்லாம் ;-) மேல்க்கண்ட் சுட்டியில், இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு போட்டிருக்கற படத்துல ரெண்டாவது 'போகஹண்டாஸ் ஏரி' நம்மதுங்க.
ஜெய்யின் பதிவிற்குச் சென்று உங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.
அவரின் பரிசு பெற்ற படம்
Thursday, July 19, 2007
வாழ்வில் பெறுவது எது ?
ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டென்பது அறிவியல் பூர்வமான உண்மை. இதையே நம் முன்னோர்கள் பல பழமொழிகள் மூலமா நமக்குச் சொல்லியிருக்கிறார்கள்.
உதாரணமா, மிகப் பிரபலமான பழமொழிகள் :
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நெல் போட்டா நெல் முளைக்கும்; சொல் போட்டா ? (நாவை அடக்கி வாசி என்று நாசுக்காவும் சொன்னார்கள்)
கொடுத்தால் தான் பெறமுடியும் என்பதை உணர்ந்த பிறகு, என்னெல்லாம் கொடுத்தா, என்னெல்லாம் கிடைக்கும் என்று யோசித்தவை கீழே :
கேட்டுப் பெறுவது யாசகம்
கேளாமல் பெறுவது பாசம்
தட்டிப் பெறுவது தண்டல்
முட்டிப் பெறுவது மூர்க்கம்
விட்டுப் பெறுவது சுவாசம்
விடாமல் பெறுவது கோள்சொல்
ஒட்டிப் பெறுவது உறவு
வெட்டிப் பெறுவது தனிமை
கட்டிப் பெறுவது மகவு
கொட்டிப் பெறுவது அன்பு
உதாரணமா, மிகப் பிரபலமான பழமொழிகள் :
தினை விதைத்தவன் தினை அறுப்பான்.
நெல் போட்டா நெல் முளைக்கும்; சொல் போட்டா ? (நாவை அடக்கி வாசி என்று நாசுக்காவும் சொன்னார்கள்)
கொடுத்தால் தான் பெறமுடியும் என்பதை உணர்ந்த பிறகு, என்னெல்லாம் கொடுத்தா, என்னெல்லாம் கிடைக்கும் என்று யோசித்தவை கீழே :
கேட்டுப் பெறுவது யாசகம்
கேளாமல் பெறுவது பாசம்
தட்டிப் பெறுவது தண்டல்
முட்டிப் பெறுவது மூர்க்கம்
விட்டுப் பெறுவது சுவாசம்
விடாமல் பெறுவது கோள்சொல்
ஒட்டிப் பெறுவது உறவு
வெட்டிப் பெறுவது தனிமை
கட்டிப் பெறுவது மகவு
கொட்டிப் பெறுவது அன்பு
Sunday, July 08, 2007
கடல்
பொங்கும் நுரைதள்ளி
எங்கும் கரைதொடுவாய்
சங்கும் சிப்பிகளும்
தங்கும் சிறார்கைகள்
...
மருளும் புள்ளிமானின்
மயக்கத் துள்ளலையும்
சீறிப்பாயும் சிங்கத்தின்
சிறப்பான வேகத்தையும்
சிறகடிக்கும் பறவையின்
சீரான படபடப்பையும்
...
கொண்ட உந்தனலை
ஊர்முழுக்க அறிந்திருக்க
உன்னோடு நான்நடக்க
உள்ளம் களிப்படையுமே
சற்றே உள்ளிறங்கி
சில்லென்று மேனிசிலிர்க்க
ஆடும் உன்மீது மிதந்தே
பாடும் என்மனம் அலைபோலே
-----
இந்தக் கவிதைய ஆரம்பிக்கும்போதும், 'ங்' முதல் நான்கு அடிகளுக்கு வரவே. சூப்பர் அப்படியே continue பண்ணலாம் என்று நினைத்தேன்.
அப்புறம் தான் புத்தி சொல்லியது, அடே மடயா, போன பாட்ட போட்டது அங்கே குற்றம்னு சொல்றாங்க என்று. யாரும் சூப்பரா இருக்குனு சும்மா எல்லாம் comment போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லுங்க அது போதும்.
எங்கும் கரைதொடுவாய்
சங்கும் சிப்பிகளும்
தங்கும் சிறார்கைகள்
...
மருளும் புள்ளிமானின்
மயக்கத் துள்ளலையும்
சீறிப்பாயும் சிங்கத்தின்
சிறப்பான வேகத்தையும்
சிறகடிக்கும் பறவையின்
சீரான படபடப்பையும்
...
கொண்ட உந்தனலை
ஊர்முழுக்க அறிந்திருக்க
உன்னோடு நான்நடக்க
உள்ளம் களிப்படையுமே
சற்றே உள்ளிறங்கி
சில்லென்று மேனிசிலிர்க்க
ஆடும் உன்மீது மிதந்தே
பாடும் என்மனம் அலைபோலே
-----
இந்தக் கவிதைய ஆரம்பிக்கும்போதும், 'ங்' முதல் நான்கு அடிகளுக்கு வரவே. சூப்பர் அப்படியே continue பண்ணலாம் என்று நினைத்தேன்.
அப்புறம் தான் புத்தி சொல்லியது, அடே மடயா, போன பாட்ட போட்டது அங்கே குற்றம்னு சொல்றாங்க என்று. யாரும் சூப்பரா இருக்குனு சும்மா எல்லாம் comment போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லுங்க அது போதும்.
Tuesday, July 03, 2007
ஞ்...ஞ்...ஞ்சிருங்கோ...
வஞ்சி உனைக்
கொஞ்ச வருமென்
பிஞ்சு மனம்
மஞ்சம் அதில்
தஞ்சம் தரஉனைக்
கெஞ்சி நிற்கும்
வாஞ்சை கொண்டு
நெஞ்சம் குலாவித்தரும்
கஞ்சமிலா முத்தம்
இஞ்சி இடுப்பினில்
மிஞ்சி விளையாடுமென்
அஞ்சு விரல்(கள்)
அஞ்சி அஞ்சிப்
பஞ்சுப் பாவைஉனை
விஞ்சுமென் வீரம்
பஞ்சம் தீர
எஞ்சி நிற்கும்
நஞ்சமிலா நம்காதல்
-----
இந்தக் கவிதையில் (???), எல்லா முதல் சொல்லிலும் இரண்டாம் எழுத்து 'ஞ்' வருகிற மாதிரி எழுதியிருக்கிறேன். உங்களுக்கும் இது போல் ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இலக்கணப்படி எதுலயாவது இது சேருமா என்று தெரியவில்லை. "கவிதையானு நாங்கள் சொல்லனும், அதுகுள்ள இலக்கணத்துக்கு வேற போயாச்சா" என்று திட்டாதீர்கள் ;-)
என்றும் அன்புடன்
சதங்கா
Friday, June 29, 2007
காய் காயா காய்த்திருக்கு
உலகில் எத்தனை விதமாகக் காய் காய்க்கிறது என்று யோசித்ததில் தோன்றியவை வெண்பாப் பாடலாகக் கீழே அளித்திருக்கிறேன். பாடலை உங்கள் கண்முன்னே கொண்டுவர இணையத்தில் இருந்து படங்களை தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறேன். புகைப்பட உரிமையாளர்களுக்கு நன்றி.
பாடல் :
படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்
படங்கள் :
பாடல் :
படரலில் உருண்டு பந்தலில் நீண்டு
செடியில் குவிந்து கொடியில் உதிர்ந்து
கிளையில் பரந்து மரத்தில் அடர்ந்து
கோளமும் காய்க்கும் காய்
படங்கள் :
Subscribe to:
Posts (Atom)