Tuesday, November 27, 2007

படம் பார்த்து கடி சொல் - 1



மேலுள்ள படத்திற்கேற்றார்போல் கடிக்கவும்!!!

Monday, November 26, 2007

எச்சரிக்கை

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்.
காலம் கடந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

சமீபத்தில் சென்னை சென்று வந்த அனுபவத்தை 'பரணீதரன்' அளவுக்கு தரமாக இல்லாவிட்டாலும், 'மணியன்' அளவுக்காவது எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் அபிப்ராயங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், பின்னூட்டங்களைப் பொருத்து இதைச் செய்யலாம் என்று இருக்கிறேன். தேவையில்லை என்று நினைத்தால் தெரிவித்து விடுங்கள். நாகு இதை வெளியிடும் சமயம், தடயம் மர்ம நாவலையும் முடித்து வெளியிட்டு விடுகிறேன் எனவே அதைப் பற்றி பின்னூட்டத்தில் கேட்டு குடைய வேண்டாம்.

சதங்கா:
உங்கள் கவிதைகளை நேற்று படித்தேன், அருமை. பதிவுகளில் நிறைய மாற்றங்கள் தெரிகிறது, வார்த்தைகள் நன்கு பண் பட்டிருக்கிறது. வாஷிங்டன் பற்றிய பதிவில் வார்த்தைகளின் எளிமை மிக அழகு.

பரதேசி: படம் பாரு கடி கேளு உங்களின் ஏக போக சொத்தாகி விட்டது. இனி உங்களைப் போல இதை யாரும் எழுத முடியாது என்று நினைக்கிறேன். செல்வி(நாய்)க்கு தாலி கட்டிய செல்வகுமாரின் பதிவு அருமை. இந்த மேட்டர் சீரியஸ்னெஸ் செல்விக்கு மட்டும் புரிஞ்சுது, செல்வகுமார் கதை கந்தல்தான்.

அன்புடன்,

முரளி.

Saturday, November 24, 2007

பதநீர் குடிக்க வாரீயளா ?

பதநீர் குடிக்க வாரீயளா ? .... மன்னிக்கவும், படிக்க வாரியளா ? சுட்டி கீழே :)

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_24.html

Thursday, November 22, 2007

இலையுதிர் காலம்

இலையுதிர் காலம் பற்றிய ஒரு கவிதை. படிக்க கீழே சுட்டியை அழுத்தவும்.

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_20.html

Sunday, November 18, 2007

படம் பாரு கடி கேளு - 20


டேய் எந்த எருமைடா என் மேலே தண்ணிய தெளிக்கிறது? ஒரு Head and Shoulders
shampoo கிடையாது, Yardley சோப்பு கிடையாது, Old Spice deodorant spray கிடையாது - தண்ணி தெளிக்கிறானாம் தண்ணி.

Friday, November 16, 2007

படம் பாரு கடி கேளு - 19


சே! 99% தள்ளுபடின்னு சொன்னதை நம்பி online ல குடும்பத்துக்கே ஆர்டர் பண்ணினேன். வந்த பாக்கெட்டை பிரித்துப்பார்த்தா இப்படியிருக்கு.
சுண்டி விரல் கூட கொள்ளாது போலிருக்கே!

Thursday, November 15, 2007

படம் பாரு கடி கேளு - 18



போராட்டத்திற்கு "பூசணிக்காய் மாலைக்கு பதில் வெங்காய மாலை தான் அணிவோம்" என்ற கோரிக்கைக்கு செவிசாய்த்த நம் தலைவருக்கு ஜே!

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

சமீபத்தில இரண்டு கவிதைகள் என்னோட வலைத்தளத்தில் பதிந்திருக்கிறேன். சுட்டிகள் கீழே, படித்துப் பார்த்து, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

கிராமத்துக் குலதெய்வ வழிபாடு

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_15.html

மயில் - குழந்தைகள் கவிதை

http://vazhakkampol.blogspot.com/2007/11/blog-post_14.html

Monday, November 12, 2007

படம் பாரு கடி கேளு - 17


மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன?


இங்கே தான் இருக்கா சிக்னல்?
"சிக்னல் ல வண்டியை நிறுத்தாம ஏன் போனே?" அப்படீன்னு தினமும் அந்த போலீஸ் என்னை பிடிச்சு டிக்கட் கொடுத்தாரு. சிக்னல் எங்கேன்னு கேட்டா இன்னி வரைக்கும் சொல்லாம அடம் பிடிச்சுட்டாரு.

Sunday, November 11, 2007

"நாய"கன்


நாய்க்கு தாலி கட்டிய செல்வகுமார்

கீழ்கண்ட செய்தி ஒரு பிரபல தினசரியில் வெளியானது.

மானாமதுரை: பரிகாரத்திற்காக இளைஞர் ஒருவர் நாய்க்கு தாலி கட்டிய விநோத நிகழ்ச்சி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்தது.

மானாமதுரை அருகே ஏ.விலாக்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு `உல்லாசமாக' இருந்த நாய்களை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டார். இதற்கு பிறகு நான்கு நாட்களில் செல்வக்குமாரின் கை, கால்கள் முடங்கின. காது கேட்கவில்லை. பலவித சிகிச்சை அளித்தும் பலன் இல்லை. `இறந்த நாய்களின் சாபம் எனவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும்' ஒரு ஜோதிடர் கூறினார். பரிகாரமாக பெண் நாய்க்கு தாலி கட்ட வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது. இதன்படி செல்வி என்ற நாய்க்கும், செல்வக்குமாருக்கும் நேற்று திருமணம் நடந்தது. `செல்வி' க்கு சேலை கட்டி ஊர்வலமாக கணபதி கோயிலுக்கு அழைத்து வந்தனர். செல்வக்குமார் மாப்பிள்ளை கோலத்துடன் மணமேடை வந்தார். இருவரும் மாலை மாற்றிக்கொண்ட பிறகு, செல்வக்குமார் தாலி கட்டினார். தடபுடல் விருந்தும் நடந்தது. மணமகள் செல்விக்கு `பன்' கொடுக்கப்பட்டது. இதுகுறித்து செல்வக்குமார் கூறுகையில், `நான் செய்த பாவத்திற்கு பரிகாரம் செய்துள்ளேன். மனைவி செல்வியை பத்திரமாக பார்த்துக்கொள்வேன்' என்றார்.

இச்செய்தியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில அபத்தங்கள்:

1. மணமகன் பெயர் செல்வகுமார். மணமகள் பெயர் செல்வி. அப்பா என்ன பெயர் பொருத்தம்!
2. மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு எல்லாம் நடந்திருக்கிறது.
3. பெண்ணுக்கு சேலை கட்டி கோவிலுக்கு வேறு கூட்டிச்சென்றிருக்கிறார்கள்
4. விருந்து நடத்தி மணமகளுக்கு "பன்" வேறு கொடுத்திருக்கிறாகள்
5. மணம் முடித்த மாப்பிள்ளை பெண்ணை கண் கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என்று சத்தியம் வேறு செய்திருக்கிறான்.

மாப்பிள்ளை அழைப்பு, ஊர்வலம், விருந்து இத்துடன் நிறுத்திவிட்டு "சாந்தி முகூர்த்தம்" நடத்தாதது ஒரு குறை. சம்மந்திகள் சண்டை வேறு போட்டிருப்பார்கள்.
இந்த கல்யாணம் நடத்தச்சொன்ன ஜோதிடரையும் கடித்துப்பிடுங்கியிருப்பார்கள்.

சாவி அவர்கள் "வாஷிங்டனில் திருமணம்" எழுதினார். யார் "விலாக்குளத்தில் திருமணம்" எழுதப்போறார்களோ!

அப்பா தாங்கலியேடா சாமி இந்த பைத்தியக்காரத்தனத்துக்கு.