Wednesday, November 08, 2006

நான்.. நான்... நானே சொந்தமா எழுதியது

இங்கும் அங்கும் பார்க்காமல், வலையிலும் சுடாமல், மண்டபத்தில் எழுதியவரிடமும் வாங்காமல், நானே சுயமாக சிந்தித்து, நானே சொந்தமாக உருவாக்கியவை இவை. படித்துக்களியுங்கள் ப்ளாகிகளே!

நபர் 1: ஏன் சார் உங்க பக்கத்து வீட்டுக்காரர் தென்னைமரத்துல குரங்கு
மாதிரி ஏறி அவங்க மொட்டை மாடியில குதிக்கிறாரு?
நபர் 2: அவரு ஒரு வாஸ்து பைத்தியம்.
வீட்டு வாசப்படியை மொட்டைமாடியில் தான் கட்டுவேன்னு
அடம்பிடிச்சு கட்டிட்டு இப்படி குரங்கு மாதிரி குதிக்கிறாரு.

பேஷண்ட்: டாக்டர், நானும் உங்ககிட்ட 2 வருஷமா treatment க்கு வரேன்.
ஆனா ஒரு improvement ம் இல்லையே
டாக்டர்: ஏன் இல்லை? வெளியில பாருங்க. அது என்னோட புது கார்

பேஷண்ட்: டாக்டர், எனக்கு ராத்திரியெல்லாம் தூக்கமே வரமாட்டேங்குது
டாக்டர்: சில பேரு ஆபீஸில நல்லா தூங்குவாங்க. வேணும்னா ஒரு
வாரத்துக்கு ராத்திரி ஆபீசுக்கு போயி பாருங்களேன்
பேஷண்ட்: அதை தான் தினமும் செய்யறேனே
டாக்டர்: என்ன சொல்றீங்க?
பேஷண்ட்: டாக்டர், எனக்கு தினமும் 2nd shift வேலை. ஆபீஸில தூக்கம்
வரலேன்னு தான் சொன்னேன்.

நபர் 1: ஐயா இந்த வண்டி ஏறினா சென்னைக்கு போகமுடியுமா?
நபர் 2: இந்த வண்டி ஏறினா சொர்கத்துக்கே போகலாம்

நபர் 1: அந்த ஓட்டுச்சாவடியில ஒரே கலாட்டாவாமே?
நபர் 2: நம்ம தலைவரு அவரோட ஒட்டு போடும்போது எதிர்கட்சிக்காரங்க
voting machine ஐ reboot பண்ணிட்டாங்களாம்.

நபர் 1: ஓட்டு போட்டவங்க எல்லாம் ஏன் "ஆ" "ஊ" ன்னு கத்திக்கிட்டே
போறாங்க?
நபர் 2: இந்த எலக்ஷன்ல கமிஷனர் உத்தரவுப்படி ஓட்டு போட்டவங்க
கையில மைக்கு பதிலா சூடு போடறாங்களாம்.

1 comment:

  1. பரதேசியாரே, இப்போதான் கவனிச்சேன், முதல் பாராவில். முடிவே பண்ணிட்டிங்களா, இந்த ப்ளாகை படிப்பது நம் ப்ளாகிகள் மட்டும்தான்னு?

    ஜோக்குகள் அருமை. இனிமே சுட்ட பழம், சுடாத பழம்னு பதிவுகளை தனியாக பிரிக்கவேண்டும்.

    பித்தன் கட்சில இன்னும் ஏதாவது ஓட்டு விழுந்துருக்கான்னு பாக்கனும்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!