Saturday, September 30, 2006

எங்க ஊரு கொலு!

எங்க ஊருப்பக்கம் நடந்த கொலுவெல்லாம் பாக்கறீங்களா? வாங்க, முதல்ல மனாஸஸ் பக்கம் போகலாம்.















ரொம்ப நாள் ரிச்மண்டில் வசித்துவிட்டு இப்போது மனாஸஸில் இருக்கும் லஷ்மி கிருஷ்ணசாமியின் கொலு எப்பவுமே அமர்க்களமாக இருக்கும். இந்த முறையும் ஒன்பது படிகளுடன் கலக்கியிருந்தார்கள் லஷ்மியும், பிருந்தாவும்.














ரிச்மண்டுக்கு புதிதாக குடி வந்திருக்கிறார்கள் மீனா, சங்கரன் தம்பதியினர். புது ஊர், புது பள்ளிக்கூடம், வந்தவுடன் சென்னைப் பயணம் போன்ற களேபரங்களுக்கு இடையே தவறாமல் சிறிதாக ஒரு அழகான கொலு!

மறக்காமல் ஒரு பூங்காவும் உண்டு. சார்லட்ஸ்வில்லில் வசிக்கும் ப்ரியா, மணி மகாதேவன் குடும்பத்தினரின் கொலுவும் கொள்ளை அழகு.

இந்தக் கொலுவில் என்னை மிகவும் கவர்ந்தது தள்ளுவண்டி

காய்கறிக்காரி! என் மேலான பாதிக்கு பிடித்ததோ, காய்கறிக்காரியின் சுமாரான பாதி.(புரியலைன்னா ஆங்கிலத்துக்கு முழிபெயருங்க)

இன்னொரு சிறப்பம்சம் தசாவதாரங்களின் மேற்பார்வையில் அவர்களது மகனுடைய 'பயானிக்கில்'களின் அணிவகுப்பு.

"இந்த கொலு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா". அப்படின்னு நா கூவனும்னு பாக்கறேன். அதுக்கு தோதுவா எனக்கு உங்க வீட்டு கொலு படங்களை அனுப்புங்க(nagu இருக்கும் yahoo புள்ளி காம் - ஸ்பேமோதனை மேல் ஸ்பேமோதனை, போதுமடா ஸ்பாமி!).

1 comment:

  1. காய்கறி தள்ளுவண்டிக்காரரை பிடித்ததன் காரணம் படத்தைப்பார்த்தாலே தெரிகிறது. காய்கறிக்காரரின் வண்டியில் காய்கறிகளோடு தென்னை மரத்தையும் அல்லவா ஏற்றிவிட்டார்கள்!!!

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!