Friday, September 22, 2006

நவராத்திரி கொலு

"கொலு வைக்கறது எப்படி? "
"இது தெரியாதா என்ன? பொம்மைகளை கொலுப்படியில் அடுக்கி வைக்கணும்."

தங்கவேலுவின் 'அதான் எனக்குத் தெரியுமே' மாதிரி இருக்குல்ல? பிறந்த நாட்டை விட்டு வந்து கொலு வைப்பது எப்படி என்று மலைப்பவர்கள், நியுஸிலாந்தில் கொலு
வைத்து கொண்டாடும் துளசி கோபால் அவர்களின் உத்திகளைப் பாருங்கள். துளசியின் சென்ற வருஷத்து கொலு விவரத்தையும் படித்துப் பாருங்கள்.

துபாயில் கொலு வைத்து கொண்டாடுகிறது பினாத்தல் சுரேஷின் குடும்பம். "கொலுவிற்கு முன்னேற்பாடாக ஊரிலிருந்து பொம்மையே கொண்டு வராத காரணத்தால், இங்கேயே கிடைத்த சைனா பொம்மைகளை வைத்து மூன்று படி ஒப்பேற்றி இருக்கிறோம்." எந்த பொம்மை வைத்தால் என்ன? பொம்மைகள் பக்கத்தில் பெண்குழந்தைகள் பட்டு பாவாடை சட்டை போட்டு நிற்கும் அழகே அழகு.

தமிழோவியம்.காம் நடத்திய கொலுப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறார், நியுஜெர்ஸியைச் சேர்ந்த டாக்டர் சுஜாதா. அந்த
நியுஜெர்ஸி கொலுவின் விவரம் இதோ.

பத்மஸ்ரி ஆத்துல வச்சிருக்கும் இன்னொரு கொலு விவரம் இங்கே. எந்த ஊர் என்று தெரியவில்லை.

நடமாடும் கொலு பற்றி எழுதும் எம்.கே. குமாரின் நினைவலைகள்! "எல்லோர் வீட்டிலும் இருக்கும் கொலுப்பொம்மைகள் என்ன செய்யும் சொல்லுங்கள்? அப்படியே அசையாமல் உக்காந்திருக்கும் இல்லையா? ஆனால் அவ்வீட்டில் ஒரு கொலு என்னவெல்லாம் செய்தது தெரியுமா? கவிதை மாதிரி சிரிக்குது.. அழகா அடி மேல அடி வெச்சி நடக்குது.. சுண்டல் தருது எனக்கு."

இலங்கை யாழ்ப்பாணத்தில் கொலு வைப்பதை விவரிக்கிறார் சந்திரலேகா. இலங்கையில் தொடங்கி கொலு வைப்பதின் முக்கியத்தையும் இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் நடக்கும் கொலுப் பண்டிகைகளையும் விவரித்து விட்டு யாழ்ப்பாணத்தில் தன் கொலு பிரயாணத்தை முடிக்கிறார் சந்திரலேகா.


சீரங்கம் கோவில் நவராத்திரி பற்றி சுவையாக விவரிக்கிறார் "சின்ன வயதில் நாரயணன் (என்னைவிட 5 வயது பெரியவன்) தாயார் கோவில் கொலு பற்றிச் சொல்லியிருக்கிறான், "ஐய, உங்காத்து கொலுவெல்லாம் ஒரு கொலுவா? சும்மா உங்காத்து உயரத்துக்கு தானே வெக்கறீங்க, தாயார் கோவில்ல வெப்பாங்க பாரு கொலு, ஐயோ! கோவில் எவ்வளவு உயரமோ, அவ்ளோ உயரம் வெப்பாங்க! எவ்வளவு படின்னு எண்ணிப் பாக்கவே முடியாது! நான் ஒவ்வொரு தடவையும் எண்ணப்பாப்பேன்; நடுவுல விட்டுப் போயிடும் (என்று கையை உதறுவான்). அப்புறம் யானை சூப்பரா நொண்டி அடிக்கும்.. 'ரெங்கா'ன்னு மூணுதடவை கத்தும்.."

ஜப்பானிய கொலுவான ஹினா மட்சுரியைப் பற்றி விவரிக்கிறார் ஜெயந்தி சங்கர்.

கொலு பற்றி கூகுளில் தேடினதில் கிடைத்தவை இவை.
இணையத்தில் தேடிக் கிடைத்தவற்றை வைத்துப் பார்த்தால் எனக்குத் தோன்றுவது...... இந்தியாவில் யாரும் கொலு வைப்பது போலத் தெரியவில்லையே!

கடைசி வரியைப் படித்துவிட்டு, பரதேசியார் என்னைக் காய்ச்சிவிட்டார் ஒரு மின்னஞ்சலில். சென்னையில் நடந்த கொலுக்கள் பற்றியும், மைலாப்பூர் டைம்ஸ்(?) நடத்திய கொலுப் போட்டியும் அமர்க்களம். இந்த தளத்தில் சென்ற இரண்டு ஆண்டுகள் நடந்த கொலுப் படங்கள் இருக்கின்றன. ரிச்மண்ட் வாசிகளே - சுண்டல் எல்லாம் செரிக்கும்முன் படங்களை அனுப்புங்கள்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!