Monday, July 06, 2009

வலை வலம்

உங்க வீட்டில் மீன் அல்லது பூண்டு குழம்பு வைத்த பாத்திரம் ஒரு வாரம் கழுவிய பின்னும் அந்த வாசம் போகவில்லையா? உங்கள் காலனிகளில் தார் பட்ட கறையை எடுக்க வேண்டுமா? இதுபோல பல கேள்விகளுக்கு நல்ல உபயோகமுள்ள டிப்ஸ் இந்த வலை தளத்தில் தொகுத்து வழங்கியுள்ளனர். மேலும் இந்த தளத்திற்கு நீங்கள் டிப்ஸ் வழங்கி அது பதிவானால், Clean Water Fund என்ற பயனுள்ள அமைப்பிற்கு இவர்கள் இருபத்தி ஐந்து சென்ட் (கால் டாலர்) டோனஷனாக வழங்குகிறார்கள். இந்த தளத்தை பாவிக்க எந்த கட்டணமும் இல்லை, உங்கள் ஈமெயில்-ஐ-டி-யும் கொடுக்க வேண்டியதில்லை. இதுபோல மற்றொரு தளம் http://www.ehow.com . இது போல உங்களுக்கு தெரிந்த உபயோகமுள்ள தளங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

நம்மில் பலரும் அமெரிக்க நிறுவனங்களின் தொலைபேசிவழி செவகர்களுக்காக பல

மணி நேரங்கள் காத்திருந்து நேரத்தை வீணடித்திருப்போம். பல சமயம் இணைய வழி நிறுவனங்களுக்கு கஸ்டமர் சர்வீஸ் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்கவே முடியாது. இந்த தகவல்களையெல்லாம் http://gethuman.com/ என்ற தளத்தில் விரிவாக தொகுத்து வழங்குவதுடன், விரைவாக மனித செவகர்களை அடைய வழிகளையும் கொடுத்துள்ளார்கள். நீங்கள் ஐ-போன் வைதிருப்பவரானால், அதில் பாவிக்கவும் இவர்கள் ஒரு மென்பொருளை கொடுக்கின்றனர்! என்னோட ஐ-போனில் இதை ஏற்றி வைத்துள்ளேன், சமயத்திற்கு உதுவும் நண்பன்!

உங்க வீட்டில் திருடன் கதவு/சன்னல் உடைத்து நுழைய முற்பட்டால் என்ன செய்வீர்கள்?

சில வீடுகளில் ஹோம் அலாரம் போன்ற சந்தா கட்டிய செக்யூரிட்டி அமைப்புகள் வைத்திருந்தால் அது உடனே அந்த நிறுவனத்தை அலர்ட் செய்யும். நம்மில் பலருக்கு இந்த வசதி வீட்டில் இருக்காது. திருடன் நுழைய முற்படுவதை நீங்கள் பார்த்துவிட்டால் உடனே 911 அழைத்தால் போலீஸ் வந்துவிடும். ஆனால் வரும் வரை திருடனை சமாளிக்க வேண்டுமே! சரி

உங்கள் தொலைபேசி வேலை செய்யாவிட்டால் இதுவும் சாத்தியமில்லை (எங்க வீட்டினுள் செல்லிடை தொலைபேசி சில சமயம் வேலை செய்வதில்லை). உங்க வீட்டில் காரில் பொதுவாக "keyless entry /alarm" சாவி வைத்திருந்தால் அதை வைத்து திருடனுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாம். அதிலுள்ள "Panic" சிவப்பு பொத்தானை அமுக்கினால் உடனே உங்கள் காரில் இருக்கும் அலாரம் அடிக்க ஆரம்பிக்கும். இது காரின் பேட்டரி சாகும் வரை சத்தம் கொடுக்கும். இதை காணும் திருடன் உடனே இடத்தை காலி செய்து ஓட வாய்ப்புகள் அதிகம். அதற்குள் போலீஸ் வந்துவிடும் சாத்தியம் உள்ளது. அது தவிர உங்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொடரும் பெரும் சத்தத்தை கேட்டு போலீஸ்சை அழைத்துவிடுவார்கள். திரும்ப "Panic" பொத்தானை அமுக்கி சத்தத்தை நிறுத்திவிடலாம். ஒரு சின்ன விஷயம், உங்களுக்கு அருகில் காரின் சாவியை இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்! இது வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதைபோல பல நல்ல சேமிப்பு ஐடியாக்களை http://www.wisebread.com/ என்ற தளத்தில் காணலாம்.

1 comment:

  1. //உங்க வீட்டில் மீன் அல்லது பூண்டு குழம்பு வைத்த பாத்திரம் ஒரு வாரம் கழுவிய பின்னும் அந்த வாசம் போகவில்லையா?//

    அதைவிட 'கப்'படிக்கும் ஏதாவது வஸ்துவை அந்த பாத்திரத்தில் போட்டு வைத்தால் 'அந்த' வாசம் போய்விடும். :-)

    உபயோகமான தகவல்களுக்கு நன்றி. இந்த டப்பர்வேர் டப்பா குழம்பு வாசம் உலகத்திலேயே பெரிய பிரச்னையாகிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இட்லிவடை தளத்திலும் பார்த்தேன் இதே கேள்வியை.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!