Sunday, July 08, 2007

கடல்

பொங்கும் நுரைதள்ளி
எங்கும் கரைதொடுவாய்

சங்கும் சிப்பிகளும்
தங்கும் சிறார்கைகள்

...

மருளும் புள்ளிமானின்
மயக்கத் துள்ளலையும்

சீறிப்பாயும் சிங்கத்தின்
சிறப்பான வேகத்தையும்

சிறகடிக்கும் பறவையின்
சீரான படபடப்பையும்

...

கொண்ட உந்தனலை
ஊர்முழுக்க அறிந்திருக்க

உன்னோடு நான்நடக்க
உள்ளம் களிப்படையுமே

சற்றே உள்ளிறங்கி
சில்லென்று மேனிசிலிர்க்க

ஆடும் உன்மீது மிதந்தே
பாடும் என்மனம் அலைபோலே

-----

இந்தக் கவிதைய ஆரம்பிக்கும்போதும், 'ங்' முதல் நான்கு அடிகளுக்கு வரவே. சூப்பர் அப்படியே continue பண்ணலாம் என்று நினைத்தேன்.

அப்புறம் தான் புத்தி சொல்லியது, அடே மடயா, போன பாட்ட போட்டது அங்கே குற்றம்னு சொல்றாங்க என்று. யாரும் சூப்பரா இருக்குனு சும்மா எல்லாம் comment போட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உண்மையைச் சொல்லுங்க அது போதும்.

2 comments:

  1. உந்தனலை என்பதை முதலில் உன் தனலை என்று படித்தேன்.

    மற்றபடி நன்றாக இருக்கிறது. கடைசி வரி சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடலை நினைவூட்டியது. ஓடம் போல ஆடிடுவோமே....

    ReplyDelete
  2. நாகு,

    நன்றி.

    //கடைசி வரி சிதம்பரம் ஜெயராமன் பாடிய பாடலை நினைவூட்டியது. ஓடம் போல ஆடிடுவோமே....//

    பகவத் கீதையின் பிரபலமான வரி தான் என் நினைவிற்கு வருகிறது.

    "எதை நீ எடுத்துக் கொண்டுயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது." :)

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!