Thursday, November 29, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 4

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 4

அட, பழைய சோற்ற கூட இப்படி நம்பர் போட்டு விக்கிறாங்களே நம்ம ஊரில்.










Tuesday, November 20, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 3



இவரு என்னைக்கு லீவு முடிஞ்சு திரும்பி வந்து மீட்டிங்க்ல பேசி வோட்டு கேட்கப்போறாரோ. அதுக்குள்ளே எலக்ஷனே முடிஞ்சிடும்.

Sunday, November 18, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 2

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 2






பிரசவ ஆஸ்பத்திரின்னு சொல்றாங்களா இல்ல குட்டி கரடி கடைன்னு சொல்றங்களா ? தாங்க முடியலப்பா

Saturday, November 17, 2012

நோட்டீஸ் ப்யூட்டீஸ் - 1

சென்னை மாம்பலம் ரயில் நிலையம் வாசலில் வைத்துள்ள அறிவிப்பு(சிரிவிப்பு). ஆக்ஸ்போர்டில் படித்திருப்பார்களோ?

Tuesday, November 13, 2012

ரிச்மண்டில் கொலு வலம் - 2012

ரிச்மண்டில் 2012 - கொலு வலம்

போன வருஷம் கொலுவுக்கு போகலைன்னு இந்த வருஷம் சூப்பரா ஒரு ரவுண்ட் போய் கொலு பார்த்துட்டு சுண்டல் ஸ்வீட் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்.  ஏங்க ஒரு ஆளு குடும்பத்தையே கூட்டிண்டு வரானேன்னு ஒருத்தர் வீட்லயும் எனக்கு goodie bag அதாங்க வெத்தலை பாக்கு பை, கொடுக்கலீங்க.  சரி சரி உனக்கு சுண்டல் ஸ்வீட்டே ஜாஸ்தின்னு யாரோ கொரல் விடரது கேக்குது.  இதெல்லாம் சகஜமப்பா....

எல்லார் வீட்டு கொலு ஃபோட்டோவும் இங்க போடலை, சாஸ்திரத்துக்கு ஒரு வீட்டு கொலுவுக்கு ஒரு ஃபோட்டோ போட்டுட்டு மீச்சம் இருக்கர ஃபோட்டோக்களை பிக்காசாவுல போட்டு ஒரு லிங்க் இந்த பதிவோட கடைசீல போட்டு இருக்கேன்.  அது மட்டும் இல்லாம, ரிச்மண்டில் கொலு வெச்சிருக்கர எல்லார் வீட்டுக்கும் நான் போகலை.  காரணம் அவங்கள எனக்கு தெரியாது இல்லைன்னா மாலதி மட்டும் தனியா போயிட்டு வந்திருப்பாங்க.  நான் போயிருந்த கொலுவைப் பத்தி மட்டும்தான் எழுதியிருக்கேன்.   நாகு கிட்ட சொல்லி அப்படி விட்டுப் போயிருக்கர கொலுவைப் பத்தி அவரை ஒரு பதிவு எழுதச் சொல்லிக் கேக்கரேன்.

மொதல்ல எங்க வீட்டு கொலுல இருந்து ஆரம்பிக்கரேன்.


ரெண்டே ரெண்டு பொம்மைதான் சேர்த்திருக்கோம்.  மொதல்ல, எங்க குருஜி எங்க வீட்டு கொலுவுல இருக்கார் அடுத்து, சஞ்சீவி மலையை கைல வெச்சிருக்கர ஆஞ்சநேயர் பொம்மை.  இந்த பொம்மையை, எனக்கு சுமா நவமி அரங்கேற்றதுக்கு வீடியோ எடுத்ததற்கு அவங்க அம்மாக்கள் ரெண்டு பேரும் சேர்ந்து பரிசு கொடுத்தாங்க.  வழக்கம்போல இருக்கர சாண்டா க்ளாஸ் டிரெயின் செட் மிஸ்ஸிங்.  சொல்லப்போனால் பார்க் மிஸ்ஸிங்.  அடுத்த வருஷம் என்ன பண்றதுன்னு ஜனவரிலயே ப்ளான் ஸ்டார்ட் பண்ணனும் போல இருக்கு.


சுகந்தி ஆனந்த் வீட்டு கொலு

சுகந்தி வீட்டு கொலுல நிறைய சேஞ்சஸ் இருக்கு, சூப்பரா படி செஞ்சிருக்காங்க, ஸ்நோ இருக்கர மாதிரி பார்க் கட்டியிருக்காங்க, தரைல ரங்கோலி பூவால பண்ணியிருக்காங்க.  நிறைய புது பொம்மை சேர்த்திருக்காங்க.  ராமர் பட்டாபிஷேகம் அழகு வார்த்தைகள்ல சொல்ல முடியாது அவ்வளவு திருத்தம்.


வித்யா முரளி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு முதல் தடவையா போயிருந்தேன்.  குட்டியான அருமையான கொலு.  ஆலிலை க்ருஷ்ணரும், ப்ளூட் (இல்லாமல்) நின்ற கோலத்தில் க்ருஷ்ணரும் அருமை.

இந்து ஐயர் வீட்டு கொலு

கச்சிதமான காவி நிற கொலு, அருமையான பார்க்கும் கட்டியிருக்காங்க  4-5 வருஷங்களுக்கு முன்னாடி அவங்க வீட்டு கொலு பார்த்த ஞாபகம் லேசா இருக்கு.  வரலஷ்மி அம்மன் கொலுவுல இருந்து நான் முதல் தடவை பாக்கரேன்.  அம்மன் அழகோ அழகு.  குழலூதும் க்ருஷ்ணர், ஆண்டாள் அவதாரம்னு அழகா இருந்தது.




காயத்ரி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் நான் முதல் தடவையா பாக்கரேன்.  காயத்ரி சூப்பரா ஒரு சரஸ்வதி பொம்மையை பண்ணியிருக்காங்க.  ஒரு முழு புடைவையை மடிச்சு மடிச்சு கட்டி பண்ணியிருக்காங்க.  அதுக்கு அவங்களுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சாம்.  ஹூம். எனக்கு வீட்டுல தோச்சு காயவெச்ச என் துணியை அடுக்கவே ரெண்டு மணி நேரம் பத்தாது, இவங்க இப்படி அழகா ஒரு பொம்மையை செய்ய ரெண்டு மணிதான் ஆச்சுன்னு சொல்றாங்க.  பரமாச்சார்யாரின் படம் வெச்சிருக்காங்க. ஒரு சின்ன பார்க் மேசை மேல வெச்சிருக்காங்க, கலர் கலர் அரிசில அருமையா ஒரு ரங்கோலி போட்டிருக்காங்க.  



பார்கவி கணேஷ் வீட்டு கொலு


பார்கவி வீட்டு கொலுதான் எங்க வீட்டு கொலுவுக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லனும்.  இவங்க வீட்டு கொலுவை பத்தி சொன்னா புரியாது ஒரு தடவை போய் பார்த்தா தான் அனுபவிச்சு கொலு வெக்கரது எப்படி புரியும்.  படிகள்ல கொலு வெக்கரதை கொஞ்சம் மாத்தி இந்தப் பக்கம் அந்தப் பக்கம்னு எல்லா எடத்திலயும் கொலு வெச்சுட்டு 4-5 பொட்டி பொம்மைகளை இன்னும் ஸ்டாக்ல வெச்சிருக்கரவங்க இவங்க.  கல்யாண செட், வித விதமா பிள்ளையார்கள், வசுதேவர் க்ருஷணரை கோகுலத்துல கொண்டு விட போற பொம்மை, பள்ளி கொண்ட பெருமாள், வெண்ணை திருடும் கண்ணன், ராச லீலை, காலிங்க நர்தனம், ஷீர்டி பாப, சுவாமி விவேகாநந்தர், மூஞ்சூரு இழுக்கும் ரதத்தில் பிள்ளையார் என சொல்லிலடங்கா கொலு.

லஷ்மி ஶ்ரீதர் வீட்டு கொலு

கொஞ்சம் கொஞ்சமா பெரிசாயிண்டே வர கொலு இவங்க வீட்டு கொலு.  கல்யாண செட், பீங்கான் பொம்மை செட்னு நேர்த்தியான கொலு.


ப்ருந்தா ஷங்கர் வீட்டு கொலு


கன கச்சிதமான கொலு.  தசாவதாரம் அழகோ அழகு.


சந்திரிகா சத்யநாரயணன் வீட்டு கொலு


பிங்க் கொலு.  ரெண்டு விதமான தசாவதார செட் வெச்சிருக்கர கொலு.  ஆதிசேஷன் மேல பெருமாள் லஷ்மியுடன் இருக்கர பொம்மை சூப்பர்.

ஷீலா கார்த்திக் வீட்டு கொலு


சத்யநாராயண பூஜை செட் முதல் தடவையா கொலுவுல பாக்கரேன். பெரிய புத்தர் பொம்மை, வழக்கம் போல கார்த்திக்கின் கை வண்ணத்துல ஒரு அருமையான கோலம். வாரகஸ்வாமியை கொலுவுல முதல் தடவையா பாக்கரேன்.  முருகர் மயில் மற்றும் சேவலோடு இருக்கார்.


வேதா சேகர் வீட்டு கொலு


வேதா வீட்டு கொலுவும் நாம் முதல் தடவை பாக்கரேன்.  பெரிய கொலு.  நல்ல செலக்‌ஷன்.  கல்யாண செட், பாட்டு கச்சேரி செட், குழல் ஊதர க்ருஷ்ணர், பூரி ஜகன்னாதர் எல்லோரும் இருக்கர கொலு.


சிவகாமி சுபாஷ் வீட்டு பூ சமர்பணம் 

சிவகாமி வீட்டுல பார்த்தது கொலு இல்லை, அரவிந்தர் ஆசிரமத்தின் அம்மாவின் பூ வழிபாடு.  ரொம்ப ரொம்ப அருமையான ஏற்பாடு.

சங்கீதா வாஞ்சி வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவும் முதல் தடவையா பாக்கரேன்.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க, குருவாயூரப்பன், பஞ்ச முக ஆஞ்சநேயர், லஷ்மி நரசிம்மர், ராம ஆஞ்சநேய ஆலிங்கணம், ராகவேந்திரர், கைலாசத்துல சிவ பெருமான், பள்ளி கொண்ட பெருமாள், ப்ரம்மா விஷ்ணுவின் சிவ பூஜை, வராகஸ்வாமி, சத்ய நாராயண பூஜை செட்இப்படி சொல்லிட்டே போலாம்.

விஜி வேதகிரி வீட்டு கொலு



இவங்க வீட்டு கொலுவுல இருந்து போன தடவை ஒரு பார்க் கட்டர ஐடியாவை சுட்டுண்டு வந்தேன் அது சுத்தமா மறந்து போச்சு, இந்த தடவை ஒரு படமே புடிச்சிண்டு வந்துட்டேன்.  நல்லா ஒரு ப்ராஜெக்ட் மாதிரி போட்டுண்டு கொலு வெக்கராங்கன்னு நினைக்கரேன்.  பிள்ளையாரோடு இருக்கர சிவன் பார்வதி அழகோ அழகு.  குருவாயூரப்பன், அழகான மீரா ந்னு சூப்பர் கொலு. 3-டி ப்ரிண்டர்ல பண்ணின கோவில் வெச்சிருக்காங்க.  அடுத்து 3-டி ல பொம்மை வருமான்னு கேட்டு வரும்னா ஒரு 3-டி ப்ரிண்டர் வாங்கிடனும்.


சுஜாதா ரமேஷ் வீட்டு கொலு


கொலுவை வருஷா வருஷம் நல்லா அழகாக்கிட்டே வராங்க.  ராமர் பட்டாபிஷேகம் அருமையோ அருமை.  ராமர் சிம்மசனத்துல இருக்கரமாதிரி பொம்மையை நான் இவங்க வீட்டுலதான் பாக்கரேன். சத்ய நாராயண பூஜை செட்.  சின்ன டேபிள்ல ஒரு கல்யாண செட், மீரான்னு கலக்கிட்டாங்க.


வித்யா சுப்ரமணியம் வீட்டு கொலு

இவங்களை இப்ப சமீப காலமாத்தான் தெரியும்.  இதுதான் முதல் தடவை இவங்க வீட்டு கொலுவுக்கு போனது.  டிவி வெக்கர பிட் ல கச்சிதமா கொலு வெச்சிருக்காங்க.  பாண்டுரங்கனோட அழகுக்கு ஈடு சொல்லவே முடியாது.  பொம்மையெல்லாம் குட்டி குட்டியா இருந்தாலும் ரொம்ப நேர்த்தி.  இவங்க பொம்மை எங்க வாங்கினாங்கன்னு கேட்டுண்டு வந்து இருக்கேன்.  அடுத்த தடவை சென்னை போகும் போது கண்டிப்பா நிறைய பொம்மை வாங்கனும்.  எனக்கு தெரிஞ்சு வெள்ளிப் பாத்திரக் கடை வெச்சிருக்கர செட்டியாரம்மாவை மொதல் தடவையா இவங்க வீட்டு கொலுலதான் பார்த்தேன்.  ஒரு கொசுறு செய்தி வித்யா படம் வரையரதுலயும் கில்லாடி, சாம்பிளுக்கு இதோ ஒரு படம்.




ரேணுகா பாலசுப்ரமணியன் வீட்டு கொலு

ராசலீலை க்ருஷ்ணர், வாத்யம் வாசிக்கர பிள்ளையார், காய்கறி விக்கர வயதானவர்ன்னு நிறைவான கொலு.

சந்தியா ப்ரசாத் வீட்டு கொலு:

சந்தியா ப்ராசாத் வீட்டு குட்டி கொலு.  குழந்தைங்களுக்கு பிடிச்ச மாதிரி சின்னதா ஒரு பார்க்கும் கட்டியிருக்காங்க.  வெண்ணைப் பானைல கை விட்டு கை ஃபுல்லா வெண்ணையா இருக்கர க்ருஷ்ணர் சூப்பரோ சூப்பர்.


பவானி கண்ணன் வீட்டு கொலு


குட்டியா இருந்த கொலு இன்னிக்கு 7 படில இருக்கு.  புதுசு புதுசா பொம்மைகள் வெச்சு அசத்தியிருக்காங்க.  இவங்க அடுத்து பார்க் ஒன்னு கட்டி கொலு வெக்கரதுக்குள்ள நான் ஒரு பார்க் அடுத்த வருஷம் கட்டிடனும்.


வேதுக் குட்டியின் குட்டி கொலு

வேதுக் குட்டிக்கு எவ்வளவு பெருமை பாருங்க அவளோட குட்டி கொலுவுக்கு பக்கத்துல நிக்கும் போது.


ப்ரியா ராஜேஷ் வீட்டு கொலு

இவங்க வீட்டு கொலுவுக்கு மாலதி தனியா போயிட்டு வந்துட்டாங்க.  இவங்க எங்க வீட்டு கொலுவுக்கு வந்த போது உரிமையா ஏன் வரலைன்னு கோவிச்சுக்கர அளவுக்கு போயிட்டாங்க.  அதனால ஒரு ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் போட்டு ஒரு நாள் ஆபீஸ்ல இருந்து நேர இவங்க வீட்டுக்கு போய் கொலு பார்த்துட்டு வந்தேன்.  ஆழ்வார்கள் பொம்மைகளை பூஜைல வெச்சிருக்கரத பார்த்தேன்.  அருமையோ அருமை.  அதே ஆழ்வார்களை கொலுவுலயும் வெச்சிருக்காங்க.  திருப்பதி பெருமாளும் தாயாரும் இருக்காங்க. கல்யாண செட், குருவாயூரப்பன்,  ஆஞ்சநேயர் நின்ற கோலம், பக்கத்துல ஒரு ஷெல்ஃப்ல க்ருஷ்ணனின் விளையாடல்கள்னு பின்னிட்டாங்க.

இப்படி நான் பார்த்த பல கொலுவை இங்க தொகுத்து கொடுத்துட்டேன்.  அடுத்து கொலுவோட மொத்த படங்களும் இந்த லிங்க்ல இருக்கு.

அன்புடன்,

முரளி இராமச்சந்திரன்.

Wednesday, November 07, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்னு எங்கேயோ படிச்சது






அடுத்து நம்மூர் கொலு வலம் பதிவுல பாக்கலாம்.

முரளி இராமச்சந்திரன்.

Saturday, October 27, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012 - தொடர்ச்சி

வரலாறு காணாத அளவுல மூமூமூமூமூனு பேர் பின்னூட்டம் போட்டு இருக்காங்க.  ஆனா எல்லாமே நல்லா இருக்கு சரி இன்னிக்கு வீட்டுல ஒன்னும் ஆணி புடுங்கர வேலை இல்லை, கொலுவை பத்திரமா எடுத்து வெக்கனும், சாண்டி புயல் வரதுக்கு முன்னாடி, பால் தண்ணி வாங்கி வெக்கனும் அவ்வளவுதான் சரி பதிலை ஒரு பதிவா போட்டுட்டா போச்சு, என்ன சொல்றீங்க.

மொதல்ல நாகு:

நீங்கள் போட்டிருக்கும் படம் ஜூப்பரோ ஜூப்பர். யானை தேய்ந்து கழுதை சைஸுக்கு வந்து விட்டது :-)

நான் இன்னும் யோசித்துக் கொண்டு இருக்கிறேன் யாருக்கு ஓட்டுப் போட்டு பட்டை நாமம் சாத்திக் கொள்ளலாம் என்று. நீங்கள் சொல்வது போல ரிபப்ளிகனாக இருந்தால், தாலிபான்கள் ரேஞ்சுக்குப் போகும் முர்டாக்குகளை - மன்னிக்கவும் - மூடர்களைக் கண்டுகொள்ளாமல் ஓட்டு போட்டு விடலாம். டெமாக்ரட்டாக இருந்தால் பரப்பி நிரப்பும் சோஷலிஸ கொள்கைகளைக் கண்டு கொள்ளாமல் குத்தி விடலாம். நடுவில் மாட்டிக் கொண்டால்தான் குழப்பமே...

அந்தப் பக்கம் போனால் Atlas Shrugged. இந்தப் பக்கம் போனால் Grapes of Wrath. இவன் தேவையில்லாமல் ஈராக் சண்டை போட்டு செலவழித்தால், அவன் கழகக் கண்மணிகளே வெட்கப்படும் ரேஞ்சுக்கு பேசித் தள்ளுகிறான். கூட திவாலாகும் ஓட்டு வங்கி நிறுவனங்களுக்கு செலவு...

ஓட்டு போட வேண்டும். ஆனால் யாருக்குப் போடுவது? யாரு லெஸ்ஸர் ஈவில்? சுஜாதா சொன்னதுபோல யாரையும் பிடிக்காவிட்டால் யாருக்கு வயது கம்மியோ அவருக்கு போடலாமா? இல்லை யாருக்கு பேங்க் பேலன்ஸ் கம்மியோ, ஜாஸ்தியோ அவருக்கு போடலாம். 

யோசித்து விட்டு ஒரு முடிவுக்கும் வராவிட்டால் வயதுதான்... :-)

ஆமாம் - யானை கீழேவிழுந்தா தின்னாதா? புதுக்கதையா இருக்கே? பணக்கார கொழுத்த யானையோ?



நாகு உங்க ஓட்டு  சின்ன வயசுகாரருக்கா?  சரி சரி புரிஞ்சிடுச்சு.  அதே சுஜாதா சொன்ன இன்னொரு அருமையான வழி இதோ:

சுஜாதா:  "எனக்கும் சகுனத்துல நிறைய நம்பிக்கை உண்டு, ஆனா, நிறைய உப கண்டிஷன்ஸ் போட்டுப்பேன்.  வீட்டை விட்டு கிளம்பினா சிங்கிள் குடுமி மாமா வரக்கூடாதுன்னு எங்க பாட்டி சொல்லியிருக்கா, ஶ்ரீரங்கத்துல அதெல்லாம் தினமும் நடக்கும் அதனால டக்குன்னு ஒரு கிளைக் கண்டிஷன் போட்டுப்பேன்.  அவருக்கு  கைல 6 விரலிருக்கணும்னு, அப்படி ஒருத்தர் ஒருநாள் எதிரே வந்துட்டார், உடனே கண்டிஷன் 2, அவருக்கு மாறு கண் இருக்கனும்னு.  இப்படி கண்டிஷன்ஸ் போட்டு போட்டு என்னோட சகுனத்தடைகளை எல்லாம் அடிச்சு உடைச்சுடுவேன்"

அதுமாதிரி நீங்க நிறைய வெச்சுக்கலாம். ஆனா, நல்ல ஆட்சி தர வேண்டாம்னு தீர்மானம் பண்ணிக்கனும் அவ்வளவுதான்.

யானை காட்டில இருந்தா இப்படித்தான் இருக்கும்னு நானும் நிறைய படிச்சிருக்கேன்.  கீழ விழுந்தா எடுத்து சாப்பிடரது, கை நீட்டி காசு வாங்கிட்டு ஆசீர்வாதம் பண்றது, குனிஞ்சு பாகனை மேல ஏத்திக்கரத்து, ஒத்தைக் கால்ல நின்னு சர்க்கஸ் வேலை பண்றது எல்லாம் ஊர்ல நாட்ல இருக்கர யானைங்கதான்.

இதுக்கு ஒரு சின்ன கதை:  ஒரு சர்க்கஸ்ல யானை எல்லா வேலையையும் செஞ்சுதான், அப்போ முன் வரிசைல இருந்த 4 பசங்க ஒரு இந்தியன், ஒரு ரஷ்யன், ஒரு சீனாக்காரன், ஒரு அமெரிக்கன், அவங்களை கேட்டாங்களாம், இது எப்படி சாத்தியம்னு.  அதுக்கு இந்தியன் சொன்னானாம் யானை விநாயகர் மாதிரி அதனால அது நாம எதைக் கேட்டாலும் செய்யும்னு, சீனாக்காரன் சொன்னானாம், அதை சின்ன வயசுலயே அடிச்சு அடிச்சு சொல்லிக் கொடுத்துட்டாங்க அதனால அது பயத்துல இதை செய்யுதுன்னானாம்.  ரஷ்யன் சொன்னானாம்,  அது சர்க்கஸ் யானையோட குட்டி அதனால அதனோட ரத்தத்துல சர்க்கஸ் வேலை பண்ற ஜீன் இருக்குன்னானாம்.  அமெரிக்கன் பையன் சொன்னானாம், அந்த யானைக்கு தன்னோட பலம் தெரியலை அது தெரிஞ்சுதுன்னா, இப்படி கேவலமான வேலையெல்லாம் செய்யாதுன்னானாம்.

யானை டைனோசர் காலத்துல இருந்து மிஞ்சியிருக்கர ஒரு சில மிருகங்கள்ல ஒன்னு.  எவ்வளவு பெரிசா இருந்தாலும் தாவர பட்சிணி, அருமையா நீச்சல் பண்ணக்கூடிய மிருகம்.  இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

அடுத்து சுப்பு தாத்தா:
இந்த அமெரிக்கன் ப்ர்சிடென்ட் எலக்சனே ஒரு சிக்கல். 
எல்க்டொரல் வோட் அப்படின்னு ஒரு பக்கம் சொல்றாங்க.
அதற்கப்பறம் மக்களுடைய நேரடியாக வோட் எண் ணிக்கையும் சொல்றாங்க.
அதற்கப்புரம் அந்தந்த ஸ்டேட்டுக்கு எத்தனை எலக்டொரல் வோட்டோ
அத்தனையும் யார் வின் பண்ராகளோ அவுகளுக்கு போயிடுமாம். 

இது பற்றி எத்தனையோ வெப் சைட்டுக்கு போனாலும் சொல்ராங்க.
இந்த சிஸ்டத்திலேயே கோளாரு இருக்கு. ஆனா சரி பண்ண அலவ் பண்ண மாட்டாங்க.
ஏன்னா இந்த ஸிஸ்டம் தான் இப்போதைக்கு ரைட் தோணுது அப்படின்னு.

நீங்க இந்த பிரஸிடென்ட் சிஸ்டம் எலக்ஷன் பத்தி கொஞ்சம் விலா வாரியா 
சொல்லுங்களேன். நம்ம இந்தியா கொஞ்சம் பெட்டரா இருக்கோன்னு தோனுது.

சுப்பு தாத்தா. 
American election allows an option 
for the voter to says that I do not want to vote for either, as Indian Election rules allow?



அமெரிக்கன் எலெக்‌ஷன் பத்தி விலாவரியா எழுதினா என் விலா எலும்பை எடுத்துடுவாங்க.  ஆனா நான் இங்க இருந்த 14 வருஷங்கள்ல பார்த்த வரைக்கும், இது இந்தியாவோட தேர்தல் முறையை விட எவ்வளவோ மேல்.  அதுக்கு எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.  மொதல்ல யார் அதிபரா வருவார்ங்கரது தேர்தலுக்கு முன்னாடியே எல்லோருக்கும் தெளிவா தெரியும்.  நம்மூர் மாதிரி, சோனியாவா, மன்மோகனா, மோடியா, அத்வானியா இல்லை வேற யாராவதான்னு தெளிவில்லாம இருக்காது.  யாரோட பார்வை எப்படின்னு முழுசா தெரியலைன்னாலும் கொஞ்சமாவது தெரிய வரும்.  4 வருஷம் ஆண்டதுக்கு பிறகும், எப்படி நல்லா உளர முடியும்னு தெரிய வரும், ஆட்சிக்கு வரதுக்கு முன்னாடியே எப்படி வெறும் வாய்ல முழம் போட முடியும்னு தெரியவரும்.  

முக்கியமா, அதிபர் பெரிய ஆளா இருந்தாலும் திரை மறைவுல ரொம்ப பவர்ஃபுல் துணை அதிபர்ன்னு பலர் சொல்லி கேட்டிருக்கேன்.  சும்மா மீன் பிடிக்க போயிட்டு, கூட வந்த நண்பரைகூட மூஞ்சில சுட்டுட்டு ஒரு சின்ன தண்டனைகூட இல்லாம தைரியமா சுத்தலாம்.  அவ்வளவு பவர்.  அதிபரா இருந்தா பெரிய மேசை போட்டுகிட்டு தன் பொண்ணு வயசு இருக்கர பொண்ணுங்க கூட ஜாலியா இருக்கலாம்.  கேட்டா தைரியமா டி.வி முன்னாடி "ஆமா, அப்படித்தான், உங்களால முடிஞ்சத பாத்துக்கங்க"ன்னு சொல்லலாம்.  

இந்தியாவுல இருக்கர ரூல் 49-ஓ (49-O) அமெரிக்காவுல இருக்கரமாதிரி எனக்குத்  தெரியலை.  அது எவ்வளவு தூரம் சரின்னும் தெரியலை.  கண்டிப்பா ஒரு விவாதத்துக்குரிய விஷயம்தான்.  

மறுபடியும் நாகு (அல்லது அவரோட நண்பனோட அப்பா எழுதிய பின்னூட்டம்)


என் நண்பனின் தந்தையிடம் இருந்து மின்னஞ்சலில் வந்தது:

கதையிலே கழுதை வராமே யானை மட்டும் வந்திருப்பதாலும் தம் நிலையை நடுவில் வைத்துக் கொண்டாற்போல எழுதியிருப்பதாலும் நாசகார ரிபப்லிக்கானுக்கு வாக்குப் போடுவார் போலிருக்கிறது.
என் நிலை இதுதான்.
ஒபாமாவை நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இரான், லிபியா, சிரியா முதலிய இடங்களில் போருக்கு புறப்படுவார்கள். அமெரிக்காவின் ஒரு சதவீத மக்களுக்குத்தான் ஆதாயம்.
உலகின் மற்ற எல்லாருக்கும் நஷ்டம்தான். Neutrality or undecidedness is being perverse.
மொதல்ல அந்த அப்பாவுக்கு அமெரிகாவுல ஓட்டு இருக்கான்னு தெரியலை,  இப்ப சொல்லிடரேன்.  நான் இந்த விஷயத்துல கண்டிப்பா நடுநிலைமைதான்.  ஆனா அதே சமயம், கண்டிப்பா இப்போதைய அதிபருக்கு ஓட்டு போடரதா இல்லை.  ஒபாமா நல்லது ஏதும் செய்ய விடாமல் எதிரிகள் தடுத்தார்கள்ன்னு ஒரு நோபல் பரிசு ரேஞ்சுக்கு எதையோ இந்த அப்பா கண்டு பிடிச்சிருக்கார் அது என்னன்னு சொன்னா நல்லா இருக்கும்.  தமிழ் ரொம்ப அருமையான மொழி, அவர் 'ஏதும்' ன்னு சொன்னதுனால, அதை கொஞ்சம் கூர்மையா பார்த்தா, அவர் எதுவும் செய்யலைன்னு ஆகுது.  தமிழ்ல ஒரு முறை உண்டு, அதாவது ஒரு விஷயத்தை சொன்னா இன்னொரு விஷயம் புரியும்ன்னு அதுக்கு அருத்தா பத்தின்னு சொல்லுவாங்க.  நான் இப்போ காபி குடிக்கரது இல்லைன்னு சொன்னா இதுக்கு முன்னாடி வரைக்கும் காபி குடிச்சுண்டு இருந்தேன்னு அர்த்தம்.  'ஏதும்' செய்ய விடலைன்னா அவர் எதுவும் செய்யலைன்னு அர்த்தம்.  4 வருஷமா கைல வீடோ பவர் வெச்சுண்டு எதுவ்ம் செய்யாம இவர் இருக்கரதுக்கு திண்ணையை காலி பண்ணிட்டு போகட்டும்.

இந்தியா தீவிரவாதிகளுக்கு எதிரா வழக்கமா சொல்ற வீராவேச பேச்சைக்கூட இப்போ நிறுத்திட்டாங்க அதனால தீவிரவாத ப்ரச்சனை இந்தியாவுல நின்னு போச்சா?  2001-ல அமெரிக்காவுல நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியா இவங்க எடுத்த நடவடிக்கைக்கை அப்புறம் அப்படி ஒரு தாக்குதல் நடத்த மத்தவங்க யோசிக்கராங்கன்னா அதை செய்யாம, க்ளிண்டன் அதிபரா இருந்த போது சவுதி அரேபியாவுல அமெரிக்க கான்சுலேட்ல நடந்த தாக்குதல்ல ஒரு மண்ணும் செய்யாம, மான் கொம்பு கராத்தே போட்டுட்டு வந்ததுக்கு (அப்படின்னா என்னன்னு நாகு கிட்ட தனியா கேளுங்க) பதில்தான் 2001ல அமெரிக்காவுல நடந்த தாக்குதல்.  மஹாபாரதத்துல பீஷ்ம நீதின்னு ஒரு கட்டம் வரும் அதுல அவர் தர்மருக்கு சொல்ற உபதேசம், ஒரு ராஜாவா இருக்கரது ரொம்ப கஷ்டம், அவன் அவனோட படையை நல்லா தயார் நிலைல வெச்சுக்கணும், அதே சமயம் 'யாரோடும் பகை கொள்ளலன், எனில் போர் ஒடுங்கும் புகழொடுங்காது'ங்கரார்.  அதுபோல நாம பவர்ஃபுல்ன்னு மந்த நாட்டுக்குத் தெரியனும் அப்பதான் அவங்க நம்ம கிட்ட வம்புக்கு வர மாட்டாங்க.  

கடைசியா, அமெரிக்காவுல 1% மக்களுக்கு மட்டும் நல்லது உலகத்துல எல்லோருக்கும் நஷ்டம்தான்னு எதை சொல்றாருன்னு தெரியலை.  அது எப்படின்னு அவருக்கு மட்டும் தெரிஞ்சத (இல்லை எனக்கு மட்டும் தெரியாததை) அவர் சொன்னா நல்லா இருக்கும்.

முரளி இராமச்சந்திரன்.

Thursday, October 25, 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012

அமெரிக்க அதிபர் தேர்தல் - 2012


2012 அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 12 நாள்ல நடக்கப்போறது.  சின்ன பசங்க ஒழுங்கா 9த் வீக் பரிச்சைக்கு படிக்கப் போங்க, பெருசுங்க மூஞ்சியை நல்லா தொடச்சு வெச்சுகிட்டா சூப்பரா ஒரு நாமம் போட கூட்டமா வந்து கிட்டு இருக்காங்க.

இதுவரைக்கும் 3 டிபேட்டை கேட்டிருப்பீங்க.  அதைத் தாண்டி இந்தக் கட்சி அந்தக் கட்சின்னு எல்லோரும் பேசி பேசி காதைக் கிழிச்சிருப்பாங்க.  இப்ப நாம செய்ய வேண்டியது எந்தக் கட்சியை தேர்ந்தெடுக்கரதுன்னு யோசிக்கனும்.  யாரைக் கேட்டாலும் யோசிக்க வேண்டியதே இல்லை, நீ ரிபப்ளிகன் ஆதரவாளர்ன்னா யானைக்கு ஓட்டு போடு, டெமாக்ரெட் ஆதரவாளர்ன்னா கழுதைக்கு ஓட்டு போடு இதுல யோசிக்க என்ன இருக்குன்னு சொல்வாங்க.

"நான் தீர்மானமா இருக்கேன் யாருக்கு ஓட்டு போடரதுன்னு" யாராவது சொன்னா நம்பாதீங்க.  எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும், அடுத்த நாளே அமெரிக்காவுல தெருவுக்கு தெரு தேனும் பாலும் ஓடாது.  பால் டாங்கரும் தேன் லாரியும் மோதிக்கிட்டா வேணா ஓடலாம்.

"மாமி கொலூலூலூலூ......." ன்னு போனவாரம் ஒருத்தர் வீட்டுக்கு போன போது அங்க என்னை மாதிரி கொலுவுக்கு  வந்த ஃப்ரெண்ட், அந்த வீட்டு மாமி, மாமா, அவங்க பொண்ணு எல்லோரும் சேர்ந்து, நான் என்னமோ இந்த ஊர் அரசியல் விமர்சகர்ன்னு நினைச்சு கிட்டு என்னை கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.

நான் அவங்கள கேட்டது, கடந்த நாலு வருஷத்துல என்ன என்ன நல்லது நடந்தது (நடந்ததா?) ன்னு யோசிங்க.  இந்த ஆட்சிக்காரங்க சொன்னதை செஞ்சாங்களா,   அடுத்த நாலு வருஷம் அவங்க ஆண்டா நல்லதா இல்லையான்னு யோசிங்கன்னு கேட்டேன்.  அதுக்கு என்னா பேச்சு பேசராங்கப்பா!


இந்நாள் அதிபர் போர போக்குல அவனுக்கு 800 மில்லியன், இவனுக்கு 900 மில்லியன்னு கொடுத்து அதை வாங்கின அடுத்த வாரமோ இல்லை அடுத்த நாளோ அவங்க மஞ்ச கடுதாசி - ஐ.பி. கொடுத்துட்டு நம்மூர் பைனான்ஸ் கம்பெனிமாதிரி ஓஓஓஓஒடி  போயிட்டாங்க.  ஒருத்தன் கிட்ட ஒரு மில்லியன் இருந்தாலே அவன் பணக்காரன் (என்னை விடை ஒரு 10000 மடங்கு) அப்படி இருக்கரச்சே, எப்படி 800 மில்லியனும் 900 மில்லியனும் வாங்கிட்டு ஐ.பி கொடுக்கராங்க, இவங்களும் வழிச்சுகிட்டு அதை கேட்டுக்கராங்க.

அப்போ என் ஃப்ரெண்ட்டோட பொண்ணு ஒரு கேள்வி கேட்டா, "1928ல நடந்த போருளாதார சீரழிவு (அதாங்க க்ரேட் டிப்ரெஷன்) அதுக்கு மேலன்னு சொல்லனும்ன்னா இப்ப இருக்கரதுதான் அது 2008ல வெளியேறின அதிபர் கைங்கரியம் அதனால நீ என்ன இவரை பார்த்து இப்படி நாக்குமேல பல்லப் போட்டு கேள்வி கேக்கர"ன்னு காச்சி எடுத்துட்டா.  

நான் தெரியாமதான் கேக்கரேன் (அது சரி தெரிஞ்சா ஏன் கேக்கப் போறேன்) 1928 ல உலக மக்கள் தொகை எவ்வளவு, 2008-2012ல உலக மக்கள் தொகை எவ்வளவு.  அப்போ உலகத்துல பெரிய நாடுங்கன்னு சொன்னா, அமெரிக்கா, ப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, ப்ரிட்டன், சீனா.  அதுலயும் பாதி நாடுங்க ப்ரிட்டனோட ஆதிக்கதுல இருந்தது.  அப்போ நடந்த பொருளாதார வீழ்ச்சியே நமக்கு பெரிய பாதிப்பில்லை.  ஆனா, இன்னைக்கு இருக்கர இந்த வீழ்ச்சி சுதந்திர இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கனும் ஆனா, அது அப்படி ஒரு பெரிய வீழ்ச்சியை தரல.  அமெரிக்கா, யூரோப்ல அப்புறம் சில இடத்துல வீழ்ச்சியாயிருக்கு, இதுக்கு என்ன சொல்ல முடியும்.  அமெரிக்காவோட இந்த வீழ்ச்சிக்கு காரணம், 2004-2008 ல நடந்த அதிபரோட ஆட்சின்னா, 2008-2012 வரைக்கும் இருந்த இவர் எதையும் செய்ய முடியலைன்னா, எதுக்கு மாற்றம் கொண்டு வரேன்ன்னு எம்.ஜி.ஆர் மாதிரி "என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன் கையணைக்க"ன்னு பாட்டு பாடி 44 வது அதிபரா பதவிக்கு வந்து, 20 டிரிலியன் கடன் (இதுக்கு எவ்வளவு சைபர்ன்னு சத்தியமா எனக்குத் தெரியாது) ஏத்தி விட்டுட்டு இப்ப மாற்றத்தை விட்டுட்டு 'ஃபார்வேர்ட்' ன்னு ஒரு தாரக மந்திரத்தை ஆரம்பிச்சு கதை குத்திகிட்டு இருக்காரு.

இதுல என் ஃப்ரெண்ட் ஒருத்தர், நம்ம குழந்தைங்களுக்கு 5ம் வகுப்புல பாஸ் பண்ணினதும் அவங்களுக்கு இந்த அதிபர் கையெழுத்து போட்டு ஒரு சர்டிபிகேட் கொடுத்தாரே அத போன அதிபர் செஞ்சாரன்னு கேட்டார்.  அதனால இவரே அடுத்த 4 வருஷம் பதவில இருக்கனும்னுங்கரது அவரோட வாதம்.

நானும் தான், தமிழ் சங்கத்துல அதிபரா இருந்தப்போ குழந்தைங்களுக்கெல்லாம் கையெழுத்து போட்டு சர்டிபிகேட் கொடுத்தேன், அப்போ நிறைய குழந்தைங்க 'அங்கிள் கப்பு கிப்பு ஒன்னு கிடையாதா வெறும சர்டிபிகேட்தானா'ன்னு கேட்டாங்க . ஹூம் என் கையெழுத்துக்கு அவ்வளவுதான் மதிப்பு.

இந்தப் பக்கம் இவர் இப்படி காமெடி பண்ணிகிட்டிருந்தா அந்தப் பக்கம் ஒருத்தர் திரும்பத் திரும்ப கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி 20 டிரிலியன் கடன், 20 மில்லியன் வேலை போச்சு, பொருளாதாரம் சீரடையல, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமா போச்சு, எத்தனையோ மில்லியன் உணவு சீட்டு கொடுத்துகிட்டு இருக்கோம்.  இதெல்லாம் கேக்க நாதியில்லாம போச்சு. அது இது ன்னு வீட்டுல ரிடையர்ட் ஆகிட்டு பொளம்பிட்டிருக்கர ஒருத்தர் மாதிரி சொல்லிகிட்டிருக்காரு.  அவர் சொல்றதுல உண்மை இருந்தாலும், சும்மா சொல்லிகிட்டிருந்தா அதோட வீரியம் கொறஞ்சுடும்.

நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டு போடுங்க.  ஆனா கண்டிப்பா ஓட்டு போடுங்க.  அப்புறம் இவங்களைப் பத்தியும், இவங்க ஆட்சியைப் பத்தியும் கத்தி பேசலாம்.

இன்னிக்கு துக்ளக்ல தலையங்கத்துல கேஜ்ரிவால் பரபரப்பா செய்துகிட்டு இருக்கரதைப் பத்தி சோ சொல்லிட்டு கடைசில இப்படி எழுதியிருக்காரு.

கடம் பிந்த்யாத்
படம் சிந்த்யாத்
ஏனகேன பிராகாரேண
பிரஸித்த புருஷோ பவ 

– என்பது ஒரு ஸம்ஸ்க்ருத சடையர் மொழி. 
அதாவது – 
பானையை உடை,
படத்தைக் கிழி,
ஏதோ ஒரு வழியில்
பிரபலமான மனிதனாகி விடு! 


இது இப்போதைய அதிபருக்கும் அடுத்து வர ஆசைப்படர அதிபருக்கும் சரியா பொருந்தும்.

கடைசியா ரெண்டு குட்டி கதைங்க :
1) ஒரு காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் யானை தான் தலைவன்.  எப்படின்னா, ஒரு நாள் ஒரு சிங்கம், எல்லா மிருகங்கள் கிட்டேயும் போய், "ஏய், இந்தக் காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சான்.  எல்லா மிருகங்களும், "நீங்க தான் ராஜா!"ன்னு பவ்யமா சொல்லிச்சாம்.

இப்படி கேட்டு கேட்டு மிதப்பா வந்த சிங்கம் தனியா போய்கிட்டிருந்த யானையைப் பாத்து, "ஏய் இந்த காட்டுக்கு யார் ராஜா?"ன்னு கேட்டுச்சாம்.  யானை கவனிக்காத மாதிரி போயிட்டே இருந்துச்சாம்.  சிங்கத்துக்கு கோபம் வந்து யானை முன்னாடி வந்து திரும்பியும் கேட்டுச்சாம், யானை ஒன்னும் பதில் சொல்லாம, துதிக்கையால, சிங்கத்தோட வாலை பிடிச்சு தலைக்கு மேலை மூனு தடவை சுத்தி தூக்கி போட்டுச்சாம், தூரத்துல போய் விழுந்த சிங்கம் அங்கேயிருந்து சொல்லிச்சாம். "சே இது செவுட்டு யானை போல இருக்கு, பேச்சு பேச்சா இல்லாம அனவசியமா அடிக்குதுன்னு" சொல்லிட்டு ஓடி போச்சாம்.


2) காட்டுல இருக்கர எல்லா மிருகங்களுக்கும் உணவு போடரது யானைதான்னு குருஜி சொல்வார்.  எப்படின்னா, யானை உணவு தேடிண்டு போகும் போது, அங்க இங்க இருக்கர மரக்கிளையெல்லாம் பறிச்சு சாப்டுண்டே போகுமாம், அப்போ கீழ விழரத அது சாப்பிடாதாம், அதைச் சாப்பிட மான், வரிக்குதிரை, முயல், காட்டெருமைன்னு தாவர பட்சிணிகள்லாம் வருமாம், இதுங்க வரும்னு அதுங்கள சாப்பிட சிங்கம், புலி எல்லாம் வருமாம், இதுங்க சாப்பிட்டு மிச்சம் இருக்கரத சாப்பிட கழுதைப் புலி, நரி, ஓநாய் எல்லாம் வருமாம், இதுங்களும் சாப்பிட்டு வெக்கர மிச்சத்தை சாப்பிட கழுகு பருந்து எல்லாம் ஆகாசத்துல வட்டம் போடுமாம்.  இப்படி ஒரு காட்டுக்கே தினமும் உணவு போடரது யானை.

இந்த கதைகளுக்கும், யாருக்கு நீங்க ஓட்டு போடனும்ங்கரதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.


முரளி இராமச்சந்திரன்.

Sunday, October 21, 2012

எங்க வீட்டு கொலு...


புதுசு புதுசாக வரும் தொழில் நுட்பங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு பிறகு பயன்படுத்த ஆரம்பித்தால் நல்லது. இந்தப் பாடத்தை கடந்த இரண்டு நாட்களில் நன்றாகக் கற்றுக் கொண்டேன்.

கூகுள் ப்ளஸ்ஸில் ஈவண்ட்ஸ் என்று ஒரு விஷயம் இருக்கிறது. ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது அதை அங்கே போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். அந்த நிகழ்ச்சி நடக்கும்போது ஒரு ஹேங்க் அவுட் ஆரம்பித்து வீடியோ மூலம் பகிர்ந்து கொள்ளலாம். அண்மையில் ஒரு நண்பன் வீட்டு பூஜையில் ஹேங்க் - அவுட் மூலம் இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் பூஜை, ஹோமம் அனைத்தையும் பார்த்து மகிழ்ந்தார்கள். மதுரையில் உட்கார்ந்து கொண்டு நியுஜெர்ஸி பூஜையில் ஐயரை ஓட்டினார் என் நண்பனின் தந்தை!

அதிலிருந்து எனக்கு ஈவண்ட்ஸ் ரொம்ப பிடித்து விட்டது. இங்கே ரிச்மண்டில் கொலுவுக்காக நண்பர்களிடம் இருந்து ஈவைட் மூலம் அழைப்புகள் வந்து குவிந்து கொண்டிருந்தபோது எனக்கு ஒரு யோசனை. நவராத்திரி கொலுக்காக ஈவண்ட் ஆரம்பித்தால் அதில் உலகெங்கிலும் இருந்து அவரவர் கொலு படங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே?  அனைவரும் பார்க்கும்படியாக ஒரு பொது நிகழ்ச்சி(பப்ளிக் ஈவண்ட்) ஆரம்பித்து அனைத்து நண்பர்களையும் சேர்த்து விட்டு மற்ற வேலைகளில் மும்முரமாகிவிட்டேன்.

அரைமணி கழித்துப் பார்த்தால், அதில் ஒரு நண்பர் அழைப்புக்கு நன்றி, நாளை மாலை சந்திக்கலாம் என்று எழுதியிருந்தார். சரி யார் வீட்டு கொலுவிலாவது சந்திப்போம் என்று எழுதியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். சில மணி நேரம் கழித்து திடீரென்று தோன்றியது - மனிதர் நம் வீட்டில் கொலு என்று நினைத்துவிட்டாரா என்று. உடனே  அவருக்கு பதில் போட்டேன். ஐயா - என் வீட்டில் கொலு இல்லை. நீங்கள் கொலு போகும்போது படம் எடுத்தால் பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஈவண்ட். அவரும் விளக்கத்துக்கு நன்றி என்று எழுதினார்.

மறுநாள் தொடர்ந்தது வேடிக்கை. காலையில் ஒருவர் மின்னஞ்சலில் என் முகவரி கேட்டிருந்தார். தொலைபேசியில் இருவர் அதே மாதிரி கேட்டிருந்தார்கள். தங்கமணி வேறு போன வாரம்தான் கிளம்பி இந்தியா போயிருக்கிறார். அது தெரிந்த சிலர், வீட்டில் அம்மணி வேறு இல்லையே, புதுசாக கொலு வேறு வைத்திருக்கிறாயா என்றார்கள்.  நானும் என் பிள்ளைகளும் கொலுவிருக்கிறோம், நீங்களெல்லாம் சுண்டல் கொண்டு வாருங்கள் என்றேன்.

ஒரு சிலர் விஷயத்தைப் புரிந்து கொண்டு தொலைபேசியில் இதோ வந்து கொண்டிருக்கிறோம், அதோ வந்து கொண்டிருக்கிறோம் என்று கிண்டலாக மெசேஜ் விட்டார்கள் (வாய்ஸ் மெயிலுக்கு தமிழில் என்ன?) இது ஏதடா வம்பாகி விட்டது என்று நேற்று நாலு மணியில் இருந்து கொலு பார்க்கும் சாக்கில் வீட்டிலிருந்து ஜூட்.

இன்னொரு நண்பர், என்னடா தங்கமணி வேறு இல்லாமல் நீ கொலு வைத்திருக்கிறாய்.  'எந்த மாதிரி' கொலு என்று கடுப்பேத்தினார்.

நியுசிலாந்தில் இருந்து துளசி டீச்சர் ரிட்மண்ட் சற்று தொலைவில் இருப்பதால் வரமுடியவில்லை, எங்கள் கொலுவுக்கு வேண்டுமானால் வாருங்கள் என்று கிண்டலடித்தார்.

ஒரு ஈவண்ட் மற்றவர்களிடம் பகிர்ந்த் கொள்ளும்போது, அந்தப் பகிர்வு ஒரு அழைப்பாகப் போகிறது -  அதுதான் குழப்பத்தின் காரணம். ஆகவே மக்களே - எங்கள் வீட்டில் கொலு வைக்கவில்லை என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொலு பற்றிய கூகுள் ஈவண்ட்  இங்கே பார்க்கலாம். இதுவரை ரிச்மண்ட், ப்ரிட்ஜ்வாட்டர்-நியுஜெர்ஸி, கோயமுத்தூர் ஆகிய ஊர்களில் வைத்திருக்கும் கொலு படங்கள் பகிரப் பட்டிருக்கின்றன. நான் பார்த்த கொலுக்கள் பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

Saturday, September 22, 2012

கை வந்த கலை

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை நகரத்துக்குப் போயிருந்தேன். எந்த நகரத்துக்குப் போனாலும் அந்த நகரத்தில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குச் செல்வது என் வழக்கம். குறிப்பாக மதுரை நகரத்தில் பழைய நாடக நூல்களும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய நாடகங்களும் நிறையவே கிடைக்கும்.அந்த வகையான புத்தகங்களைத் தேடிச் சென்ற எனக்கு இந்த முறை சற்று ஏமாற்றம்தான் மிஞ்சியது.
ஆனால் எதிர்பாராவிதமாக வேறு ஒரு நூல் கிடைத்தது. அது சைவ சித்தாந்தம்
பற்றிய ஒரு சிறிய புத்தகம். ஏற்கனேவே என்னிடம் சைவ சித்தாந்தம் பற்றிய புத்தகங்கள் இருந்த போதிலும் நான் அந்த புத்தகத்தை வாங்கினேன். அதை
நான் வாங்கியதற்குக் காரணம் சைவ சித்தாந்தம் பற்றிய அந்த புத்தகத்தை
எழுதியவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு கிறிஸ்தவர் சைவ சித்தாந்தம் பற்றி என்ன
எழுதியிருப்பார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்தான் வாங்கினேன்

தங்கி இருந்த அறைக்குத் திரும்பி வந்து புத்தகத்தை படிக்கத் தொடங்கியதும் வேறு சில உண்மைகளையும் தெரிந்து கொண்டேன். கிறிஸ்தவப் பாதிரியார்களுக்கு சமயப் பிரச்சாரம் செய்ய பயிற்சி கொடுக்கும் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி தெளிவு கொடுப்பதற்காக அந்த புத்தகம் எழுதப்பட்டது என்ற செய்தியை தெரிந்து கொண்டேன். இந்த
வகையில் வைணவம் பற்றியும், மற்ற இந்திய சமயங்கள் பற்றியும் பல புத்தகங்களை அவர்கள் எழுதிவெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியையும் அறிந்தேன். இந்த புத்தகங்கள் கிறிஸ்தவ மிஷினரிகள் நடத்தும் பாதிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில்உள்ள மற்ற சமய நிறுவனங்கள் வைணவமோ, சைவமோ, அல்லது பிற சமயத்தார்களோ இத்தகைய பயிற்சியை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதாக நான் கேள்விப் பட்டதில்லை. பொதுவாக எல்லா சமய நிறுவனங்களும் மற்ற சமய நூல்களைப் படிக்கக் கூடாது என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். சமண சமயத்தவர் எழுதிய நீதி நூல்களைக் கூட படிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சைவ சமயத் தலைவர்கள் கூறியிருப்பது பலருக்கும் தெரியும். வைணவர்களும் அப்படியே என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இந்த வகையில் கிறிஸ்தவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள்என்று நினைத்தேன்.  16,17ம் நூற்றாண்டுகளில் பல ஐரோப்பிய நாட்டினர் இந்தியாவுக்கு வாணிபம்  செய்ய வந்த பிறகும்,குறிப்பாக, பிரிட்டிஷ் ஆட்சி இந்திய நாட்டில் வேரூன்றிய பிறகும் பல மேல்நாட்டு அறிஞர்கள் இந்திய சமய நூல்களை படிக்கத் தொடங்கினார்கள். இந்திய சமயங்களின்
அடிப்படைத் தத்துவங்களையும் இந்திய சமூக அமைப்பையும் தெளிவாகப் புரிந்து கொள்வதிலும் அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் அனைவரும் ஒரே நோக்கத்தோடு படித்தார்கள் என்று சொல்வதற்கில்லை.

இந்திய சமயங்களின், குறிப்பாக இந்து சமயத்தின், பலவீனங்களை
கண்டறியும் நோக்கத்தோடும் இந்து சமயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளும் நோக்கத்தோடும் அவர்கள் இந்திய சமயநூல்களைப் படிக்கத் தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை.

சைவ, வைணவ, அத்வைத சமயங்களின் அடிப்படைத் தத்துவங்களை அறிந்தால்தான் இந்தியர்களை புரிந்து கொள்ள முடியும். அந்த நோக்கத்தோடு பாதிரியார்களுக்கு இந்திய சமயங்கள் பற்றி பாடம் நடத்தப்பட்டது.

சாதாரண மக்களுக்கு அவர்களுடைய பழக்கவழக்கங்களிலிருந்து உதாரணங்களையும் எடுத்துக் காட்டுகளையும் கூறினால்தான் எளிதில் விளங்கிக் கொள்வார்கள். இந்த சாதாரண உண்மையை கிறிஸ்தவ மிஷினரியைச் சேர்ந்தவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். பல நூற்றாண்டுகளாக மற்ற மதத்தினரை தன் மதத்துக்கு மாற்றுவதில் தனிக் கவனம் செலுத்திய அவர்களுக்கு இது கை வந்த கலையாக இருந்தது. தமிழ்நாட்டில் மதப் பிரச்சாரம் செய்து தமிழுக்கும்தொண்டு செய்த வீரமாமுனிவர் பிராமணர் போல் உடை அணிந்து பூணுலுடனும் காவி உடையுடனும் வாழ்ந்தார். காலில் கட்டையால்  ஆன காலணி அணிந்துதான் நடந்தார் என்பது நன்கறிந்த செய்தியாகும்.

தங்கள் மதத்தை பரப்ப அவர்கள் இந்திய சமயங்களை மிக மோசமாக கொச்சைப் படுத்தினார்கள். தப்பித் தவறி அவர்களுடைய பார்வையில் நல்லதாகப் பட்ட அம்சங்களை இந்துக்கள் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கியதாகவும், காப்பி அடிக்கப் பட்டதாகவும் கூறிப் பிரச்சாரம் செய்தார்கள்.

உதாரணத்துக்கு ஒரு செய்தி.

ஹோரஸ் ஹேமாஸ் வில்சன் என்ற ஆங்கிலேயர் 1840ம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பேசிய பேச்சிலிருந்து ஒரு பகுதி.

இந்திய சமயங்களில் காணப்படும் குற்றம், குறைகளை மெய்ப்பித்துக் காட்டி இந்திய மக்களை கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றும்படி தூண்டும் பொருட்டு இந்திய சமயங்கள் பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வது மிக முக்கியமான கடமையாகும். இருளில் மூழ்கிக் கிடக்கும், அதே நேரத்தில் மதிநுட்பம் மிக்க இந்தியர்களை அவர்களுடைய சமயப் பொய்மைகளிலிருந்து காப்பாற்றி கிறிஸ்தவ சமய உண்மைகளை உணரச் செய்ய வேண்டும்.

இது அவருடைய உரையின் ஒரு சிறிய பகுதி மட்டும்தான். பலகலைக் கழக உரையே இந்த தரத்தில் இருந்தால் இந்தியாவில் பாமர மக்களிடையில் பிரச்சார மேடையில் எப்படி பேசியிருப்பார்கள் என்று அனுமானம் செய்து கொள்ளலாம். இவர்தான் விஷ்ணு புராணத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பல புராணங்களை ஆராய்ச்சி செய்து பல (கிறிஸ்தவ மதப் பிரச்சார ) கட்டுரைகளை எழுதினார்.

இவருடைய ஆலோசனையை ஏற்றுக் கொண்டு கல்கத்தா பல்கலைக் கழகம் இந்திய சமயங்களின் அடிப்படைகள் பற்றிய ஆராய்ச்சிக்காக ஒரு துறையை ஏற்படுத்தியது.

19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல ஐரோப்பிய நாட்டு அறிஞர்கள் இந்திய சமயங்கள் பற்றி ஆரரய்ச்சி கட்டுரை எழுதி வெளியிட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு பல பாதிரியார்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் பல மதப் பிரச்சாரக் கட்டுரைகளை வெளியிட்டனர். கிருஷ்ண பகவான் மற்றும் கிருஷ்ண னுடைய பிறந்த நாள் பண்டிகை(கோகுலாஷ்டமி ) பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை எழுதிய வெபர்  என்பவர் வைணவ சமயத்தில் உள்ள பக்தி மார்க்கம் பற்றிய கொள்கைகள் பெரும்பாலும் கிறிஸ்தவ சமயத்திலிருந்து கடன் வாங்கப்பட்டவை என்று எழுதினார்.

(An investigation into the origin of kirishna janmaashtami)

இந்த முறையில் எந்த விதமான ஆதாரமும் இல்லாமல் உலகத்தில் எந்த மூலையில் ஏதாவது நல்ல அம்சம் இருந்தால் அது ஐரோப்பிய நாகரீகத்தின் பங்களிப்பு என்றும், கிறிஸ்தவ சமயமே மனித குலத்தை நாகரீகப் படுத்த தோன்றிய முதல் மதம் என்றும் கூசாமல் எழுதினார்கள். உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆன்மீகத் தேவையை பூர்த்தி செய்ய வல்லது கிறிஸ்தவ சமயம் மட்டுமே என்று பிரச்சாரம் செய்தார்கள்.

மாக்ஸ் முல்லர் என்ற மேல்நாட்டவரும் இதற்கு விலக்கல்ல. லண்டனில் உள்ள இந்திய செயலாளருக்குஎழுதிய கடிதத்தில் அவர் கீழ்க் கண்டவாறு குறிப்பிட்டார். இந்து சமயம் கூடிய சீக்கிரம் அழியப் போகிறது. அந்த காலிஇடத்தை இட்டு நிரப்பும் கடமையை மேல்நாட்டு கிறிஸ்தவ சமயம்தான் செய்தாக வேண்டும். இதற்கான எல்லா உதவியையும் அரசாங்கம்
செய்ய வேண்டும்.

இவர்தான் கீழ்த் திசை நாடுகளின் புனித நூல்கள் என்ற தொகுப்பை தயாரித்தார். அந்த நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் இவருடைய நோக்கத்தையும் சமயச் சார்பையும் தெளிவாகப் புரிந்து
கொள்ளலாம். ஆராய்ச்சி கட்டுரை என்ற பெயரில் இத்தகையவர்கள் எழுதிய
எல்லாவற்றிலும் மேல் நாட்டவர்கள் மட்டுமே உலகத்தை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதை காணக் கிடக்கிறது.

நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிக் கிடந்த ஆப்பிரிக்க நாடுகளைப் போல்
அல்லாமல் இந்தியாவில் அவர்கள் முழுமையான நாகரீகம் உள்ள சமுதாயத்தை கண்டார்கள்.இங்கே அவர்களுடைய கடையை விரித்து ஆன்மீக வியாபாரம் செய்ய இந்து சமய நிறுவனங்களும், கல்வியில் சிறந்த ஒரு சில மேன்மக்களும் தடையாக இருந்ததை அறிந்தனர். அந்த தடைகளை உடைத்தெறிய அவர்கள் செய்த முயற்சியாக பல  ஆராய்ச்சி( ?) கட்டுரைகள் அமைந்தன.

எல்லா மேல்நாட்டு அறிஞர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்று
கூறமுடியாது. சிலர் ஒவ்வொரு சமூக வளர்ச்சியிலும் பல்வேறு சமயங்கள் எப்படி தொழிற்பட்டிருக்கிறது என்பதை கண்டறியும் ஆர்வத்தில் ஆராய்ச்சி
மேற்கொண்டனர்.

இந்த வகையில் ஆராய்ச்சி என்ற பெயரில் நடைபெற்ற கிறிஸ்தவ மதப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல இந்திய நாட்டு அறிஞர்கள் மறுப்புக் கட்டுரைகள் எழுதினார்கள். ஆர் ஜி.பண்டார்கர் என்ற அறிஞர் இவர்களில் மிக முக்கியமானவர். இந்து சமயம் தன் பலவீனங்களை உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியர்களுக்கு அறிவுரை கூறினார். மற்ற சமயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து நம்இந்திய சமயங்களின் நிறை, குறைகளை கண்டறிய வேண்டும் என்றார் அவர். பிரஜெந்திரநாத் என்ற அறிஞர் ரோம் நகரத்தில் ஒரு கருத்தரங்கத்தில் பேசும்போது கிறிஸ்தவ சமயத்தோடு ஒப்பிடும்போது,கீழை நாட்டு சமயங்கள் மிகச் சாதாரணமானவை என்ற மேல்நாட்டு அறிஞர்கள் கருதுவது பற்றி கடுமையாக விமர்சித்தார். 20. மநூற்றாண்டில் ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு வழி காட்டக் கூடிய விலை மதிப்பற்ற அம்சங்கள் இந்திய சமயங்களில் உண்டு என்று கூறி பதிலடி கொடுத்தார்.


அச்சுத் தொழில் ஓரளவு வளர்ந்த பிறகும் இந்தியாவில் கிறிஸ்தவ மிஷினரிகள் மட்டுமே அச்சகங்களை வைத்துக் கொள்ள உரிமை பெற்றிருந்தார்கள். உள்நாட்டவர்கள் அச்சு யந்திரங்கள் வாங்க அனுமதி மறுக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட யந்திரங்கள் விலை மிகுந்திருந்தது. இந்தியர்கள் அச்சகங்களை இயக்க பெரும் தொகையை காப்புத் தொகையாக அரசாங்கத்துக்கு கட்ட வேண்டிதாயிற்று.


பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான பிரசுரங்கள் அச்சடிக்கப் படுவதை
தவிர்க்கவே இத்தகைய கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதித்தது. இந்த வகையான கட்டுப்பாடுகள் இல்லாத கிறிஸ்தவ மிஷினரிகள் நிறைய பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தன. 19 ம நூற்றாண்டின் கடைசி 20 ஆண்டுகளில் (1880 to 1900 ) வெளியாகிக் கொண்டிருந்த பிரசுரங்களில் 70 சதவிகிதத்துக்கு மேற்பட்டவை கிறிஸ்தவ சமயப் பிரச்சார ஏடுகள்தான் என்ற உண்மை இன்று நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் காரணமாக இந்திய சமயங்களை மேலை நாட்டு சமயங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் முறையும் வளரத் தொடங்கியது. அதன் விளைவாகத்தான் பிரம்மசமாஜம் போன்ற சீர்திருத்த இயக்கங்கள் வளர்ந்தன. சாதி என்ற அமைப்பு இந்து சமயத்தை பலவீனப் படுத்தி சமூக ஒற்றுமையை சிதைக்கிறது என்ற செய்தி மக்களிடம் பரவியது. அரசாங்க ஆதரவோடு கிறிஸ்தவ மிஷினரிகள் தொடங்கிய சமயப் பிரச்சாரமும்,இந்து சமய எதிர்ப்பு பிரச்சாரமும் இந்திய மக்களிடம் முதன் முறையாக ஒரு நெருடலை ஏற்படுத்தியது.

பல ஆயிரம் ஆண்டுகளாக நிலைபெற்று இறுகிப் போன சாதி அமைப்பில் இந்த காலகட்டத்தில்தான் ஒரு கீறல் விழத் தொடங்கியது. ஆனால் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தி விடக்கூடிய அளவில் அது வளரவில்லை.

பிற்காலத்தில் இந்து சமயத்தவர்களும் பொறுப்புள்ள பொதுவாழ்வு பிரமுகர்களும் அது பற்றி கவனமாக சிந்திக்கத் தொடங்கினார்கள். கிறிஸ்தவ மிஷினரிகள் இந்து மதத்தின் மீது தொடுத்த பிரதானமான தாக்குதல் இந்த சாதி வேறுபாடு மீதுதான். ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்கள் மத்தியிலும் சாதி அமைப்பும் அதன் அடிப்படையிலான வேறுபாடும் இன்றும் தொடர்கிறது என்பதுதான் உண்மை

படிப்படியாக இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் சகல மக்களிடமும் கல்வி வளர்ச்சி பற்றிய நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.

பர்மா,சிலோன் (இன்றைய மியான்மர், ஸ்ரீலங்கா ) போன்ற மற்ற காலனி நாடுகளிலும் பௌத்த சமயத்தவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் புத்தருடைய வாழ்க்கை வரலாற்றையும் பௌத்த மதக் கொள்கைகளையும் திரித்தும்,மலினப் படுத்தியும் பல நூல்களை வெளியிட்டனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் இனக்குழுக்களின் சச்சரவைப் பயன்படுத்தி கிறிஸ்தவ மதத்தை வளர்த்து அந்த மக்களை அடிமைப் படுத்திய வரலாறு மிகக் கொடுமையானது. ரத்தக் கறை படிந்த அந்த வரலாறு பற்றி எழுதிய ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளருடைய வாசகத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். மதப் பிரச்சாரத்தின் சுயரூபத்தை அனைவரும் புரிந்து கொள்ளும்படி தோல் உரித்துக் காட்டும் அந்த வாசகம் இதுதான்.

அவர்கள் வந்தபோது எங்கள் கையில் நிலம் இருந்தது,
அவர்கள் கையில் பைபிள் இருந்தது.
இப்பொழுது எங்கள் கையில் பைபிள் இருக்கிறது.
அவர்கள் கையில் நிலம் இருக்கிறது.
- மு.கோபாலகிருஷ்ணன்