Thursday, March 01, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 4

வைரஸ்கள் யாரால் எதற்காக எழுதப்படுகின்றன?

வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களாலேயே எழுதப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம் இது உண்மை. பெரும்பாலான வைரஸ் நிரலி (புரோகிராம்) 13-20 வயது வரை உள்ளவர்களால் தான் எழுதப் படுகின்றன . அவர்களும் விளையாட்டாக இது போன்ற செயல்களைச் செய்கின்றனர். உண்மையில் ஒரு வைரஸ் நிரலியை நாம் எழுத வேண்டுமானால் நமக்கு கணிணி பற்றிய விபரங்கள் அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைரஸ் நிரலி எழுதுவோருக்கென சில குழுக்கள் உள்ளன அவற்றில் அனுபவமும், அவர்கள் சாட்ரூமில் பழக்கமும் இருந்தால் போதும் . (அவர்களுக்கென குழூஉக்குறியும் உண்டு.) ஒருவர்க்கு எளிதில் மூல வரிகள் கிடைத்து விடும். அதை அவர் மாற்றினால் போதும். எளிதில் வைரஸ் நிரலி தயார்.

மிகச்சிலரே இதன் மூலம் பணம் சம்பாரிக்கலாமென சில சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்கி மிரட்டுகிறார்கள் . அவ்வாறு தாக்க அப்பாவிகளின் கணிணிகளை வைரஸ் கொண்டு தாக்கி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து , பின் அந்தக் கணிணிகளை சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்க உபயோகிக்கிறார்கள்.




நாம் செய்யக்கூடாதவை:

பெரும்பாலான வைரஸ்கள் மின்னஞ்சல் மூலமாகத் தான் வருகின்றன. அதனால் தெரியாதவர் களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் அதில் இணைப்பு (அட்டச்மெண்ட்) இருந்தால் அதைத் திறக்காதீர் .

உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வந்தாலும், அதில் உள்ள இணைப்பைக் காரணம் இல்லாமல் திறந்து பார்க்காதீர்கள். முதலில் அவர் உங்களுக்கு ஏதேனும் இணைப்பை அனுப்புவதாகக் கூறியிருந்தாரா ?, என்று ஆராய்ந்து பிறகு அந்த இணைப்பை உங்கள் டெஸ்க்டாப்பிற்கு இறக்கம் செய்து, பின் வைரஸ் ஸகேனர் கொண்டு அந்த இணைப்பை ஆராய்ந்து, அதில் வைரஸ் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு பின் திறக்கவும் .

ஆண்டி வைரஸ் பாதுகாப்பை நிறுத்தி வைக்காதீர்கள். அப்படி ஓரு தேவை ஏற்பட்டால், இன்டர்நெட் இணைப்பையும் உடன் நிறுத்தி வைத்து விடுங்கள் .

பிளாப்பி, சிடி மற்றும் டிவிடி இவற்றில் எதை உபயோகப் படுத்த வேண்டுமானாலும் அதற்கு முன் வைரஸ் ஸ்கேன் செய்து விடுங்கள் .

நெருப்புச் சுவர் ( பயர்வால்) உங்கள் கணிணியில் இயங்குவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.( பயர்வால் பற்றித் தெரியாவர்களுக்காக பின்னொருநாள் விளக்குகிறேன்.)

சாட்டில் வரும் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் பைல்களை உபயோகிக்காதீர்கள் .

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

மார்ச் மாத லொள்ளு மொழி

வாழ்க்கையில ஒண்ணும் இல்லேன்னா bore அடிக்கும்
தலையில ஒண்ணும் இல்லேன்னா glare அடிக்கும்

Wednesday, February 28, 2007

ஐயோ! மண்டை காயுதே!

இதை படிக்கிற உங்களுக்கும் மண்டை காயும். மண்டை காயுதேன்னு டாக்டர் கிட்ட போனீங்கன்னா அவரு மருந்துக்கு பதிலா ஒரு பாட்டில் சாராயம், ஒரு கட்டு கீரை, ஒரு கிலோ காப்பிக்கொட்டை, ஒரு கிலோ சாக்லேட், ஒரு கட்டு பீடி, ஒரு பாட்டில் கரிசலாங்கண்ணி ஜூஸ் தருவாரு.
ஒரு சில டாக்டர்கள் உங்க நெத்தியிலே பொட்டு வெச்சு உங்க கையில தாயத்து கட்டி வேப்பிலை அடிச்சாலும் அடிக்கலாம்.

நான் சொல்றது ஒண்ணுமே புரியலியா? என்ன பண்றது? நேரம்யா நேரம்.
இந்த medical/health research பண்றேன்னு ஆளாளுக்கு research பண்ணி, result publish பண்ணி நம்ம மாதிரி மக்களை பைத்தியம் பிடிச்சு பாயை சுரண்ட வெக்கறாங்க.

சரி விஷயத்துக்கு வரேன்.

இன்றைக்கு படித்த செய்தி - Denmark ல் ஒரு group research பண்ணி வெளியிட்ட செய்தியின் படி: Antioxidant, Beta Carotene, Vitamin A, Vitamin B supplement இதுகளினால் ஒரு பயனும் கிடையாதாம். அதை விட மோசம் என்னதுன்னு கேட்டா, இந்த supplement எல்லாம் சாப்பிட்டா "பூட்ட கேஸ்" அப்படீன்னு வேற சொல்றாங்க. அதுல என்ன விசேஷம்னா, Beta Carotene
supplement சாப்பிட்டா புகை பிடிக்கிறவங்களுக்கு lung cancer வேறு வருமாம். இப்படி research பண்ணி result வெளியிட்டு நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியிருக்காங்க. முக்கியமா, டப்பா டப்பாவா வைடமின் supplement அடுக்கி வைத்திருக்கும் கடைகளுக்கு இந்த செய்தி ஷாக்கா இருக்கும்.

இப்படித்தான் research பண்றேன் பேர்வழின்னு research பண்ணுவாங்க - இதை சாப்பிட்டா அந்த வியாதி வரும் அப்படீம்பாங்க. அடுத்த வருஷம் அதை சாப்பிடுங்க வந்த வியாதி சரியாகி விடும் அப்படீன்னுவாங்க. மக்களும் பறந்தடிச்சுக்கிட்டு ஓடி வாங்குவாங்க. உடனே அடுத்த வருஷம் ஓ அந்த மருந்தா? அதை சாப்பிட்டா வேற வியாதி வரும் அப்படீன்னுவாங்க.
மருந்து பொருட்கள் மட்டுமில்லை. பல உணவுப்பொருட்களும் இப்படித்தான்.

காபி சாப்பிட்டா blood pressure அதிகமாகும்னு அந்த கால டாக்டர்களிலிருந்து நம்ம சினிமா டாக்டர் வீரராகவன் வரை சொன்னது நமக்கு தெரியும். இப்போ என்னடான்னா தினமும் காபி குடிச்சா உடம்புக்கு நல்லது அப்படீங்கறாங்க.

மது குடிக்காதீங்க. 'குடி குடியை கெடுக்கும்' அப்படீன்னு சொன்னாங்க. இப்போ என்னடான்னா தினமும் காலையிலும் மாலையிலும் மது குடியுங்க மது அருந்தினால் உடம்புக்கு நல்லது அப்படீன்னு சொல்றாங்க.

அடுத்தது - சாக்லேட், கோக்கோ சாப்பிட்டா கொழுப்பு (body fat) அதிகமாகும்னு சொன்னவங்க இப்போ சாக்லேட் சாப்பிட்டா கேன்ஸர் வராது, ஹார்ட் அட்டாக் வராது அப்படீன்னு சொல்றாங்க.

இது மாதிரி பல. போதாதற்கு Atkin's diet, South Beach diet இத்யாதி வேறு.
இப்படி ஆளாளுக்கு மாத்தி மாத்தி சொல்றாங்க. சில பேர் result, analysis data தப்பு அப்படீங்கிறாங்க. ஆனா, இதையெல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கிற மக்கள் தான் பைத்தியம் பிடிச்சு பாயை சுரண்டறாங்க.

இன்னும் சிகரெட் ஒண்ணு தான் பாக்கி. இன்னும் கொஞ்ச நாளில் 'சிகரெட் பிடிங்க - உடம்புக்கு நல்லது' அப்படீன்னு சொல்லுவாங்க போலிருக்கு.

என்னென்னவோ advertisement எல்லாம் தோணுது:

"உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர காலையிலும் மாலையிலும் ஒரு கப் காபி குடுங்க"

"ஒரு தில்லானா ஆடிட்டு கப்புனு 4 பெக் அடிச்சா ஆடின களைப்பெல்லாம் பறந்திடும்"

"கலக்க வேண்டாம் பாட்டிலோட அப்படியே குடிப்பேன்"

நம்ம திருவள்ளுவர் உயிரோடு இருந்தால் அவரைக்கூட மாற்றி -
"தம் அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தம் இன்றி சாவார்" என்று சொல்ல வைத்து விடுவார்கள் போலிருக்கு.

போகும் போக்கைப்பார்த்தால், மருந்து கம்பெனிகளும், டாக்டர்களும் கறிகாய் மண்டி, ஒயின் ஷாப், சிகரெட் கடை அப்படீன்னு திறந்திடுவாங்க போலிருக்கு.

இந்த பதிப்பை படித்துவிட்டு சுரண்டுவதற்கு பாய் வாங்க ஓடுவீங்கன்னு நினைக்கிறேன்! பாய்! பாய்!

Saturday, February 24, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 6

பித்தனின் ஆறாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/02/6.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Thursday, February 22, 2007

பொங்கல் விழா பற்றி உங்கள் கருத்து

சென்ற சனிக்கிழமை நடந்த பொங்கல் விழாவுக்கு நீங்களும் வந்திருந்தீர்கள்தானே? அது குறித்து உங்களின் கருத்து என்ன என்று கீழே பின்னூட்டத்தில் எழுதினால் நன்றாக இருக்கும். விழாவில் உங்களுக்கு பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன, நீங்கள் பார்க்க விரும்புவது என்ன என்று எழுதினால், எங்களுக்கு அடுத்த விழாவை இன்னும் மிகச் சிறப்பாக நடத்த முயல்வோம். உங்கள் கருத்தை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடவும்(அதாங்க கமெண்டு...)


Hope you attended the saturday's pongal cultural program and enjoyed it. If you give us your feedback on the program in the comments, it will help us plan the next program better. Please let us know what you liked about it, what you didn't like and the kind of programs you would like to see in a RTS function in the future. You can write in English. And you can be anonymous too.

Monday, February 19, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 3

வைரஸ்களின் வகைகள்:

மேக்ரோ வைரஸ்:
மேக்ரோ என்பவை கணிணியில் பயன்பாட்டு மென்பொருள்கள் தங்களை நுணுக்கமாகப் பயன் படுத்திக் கொள்ள பயன்பாட்டாளர்களுக்கு கொடுத்த வசதி ஆகும் .மைக்ரோசாப்டின் ஆபிஸில் உள்ள விசுவல்பேசிக்பார்அப்ளிகேசன் மூலம் எழுதப்படும் மேக்ரோ மூலம் மைக்ரோசாப்டின் ஆபிஸில் பல வேலைகளை தானாக நாம் செய்ய வைக்க முடியும் . இந்த வசதியைத் தான் வைரஸ் எழுதுபவர்கள் தவறாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். இந்த மாதிரி மேக்ரோ மூலம் எழுதப்படும் வைரஸ்கள் மேக்ரோ வைரஸ்கள் என அழைக்கப் படுகின்றன. மேக்ரோ வைரஸ் உள்ள பைலை நாம் இயக்கினால் மட்டுமே நம் கணிணியை இவை தாக்கும் .
அதனால் தெரியாதவர்களிடமிருந்து வரும் பைலை இயக்காதீர்கள். இவ்வகை வைரஸ் உள்ள பைல்கள் கவர்ச்சிகரமான வாசகங்களுடனே வரும் . மயங்கி தட்டி விட்டால் அவ்வளவுதான்.. மிகப் புகழ் வாய்ந்த மெலிஸா வைரஸ் எழுதப் பட்ட 3 நாளிலேயே 100,000 கணிணிகளை தாக்கியுள்ளது.

நினைவகத்தில் தங்கும் வைரஸ்:
இந்த வகை வைரஸ்கள் முதலில் இயக்கப் பட்டவுடன் நம் கணிணியின் நினைவகத்தில் தங்கிக் கொள்ளும். பின்னர் இயக்கப் படும் ஒவ்வொரு புராகிராமிலும் தன் பிரதியை பரப்பிக் கொண்டு இருக்கும்.

பைல்சிஸ்டம் வைரஸ்:
இந்த வகை வைரஸ்கள் இயக்கப் படும் ஒவ்வொரு பைலிலும் தன் பிரதியை பரப்பிக் கொண்டு இருக்கும்.

பூட் வைரஸ்:
கணிணி இயங்க அத்தியாவசமான மென்பொருள்கள் எல்லாம் கணிணியில் டிஸ்கில் பூட் செக்டார் எனப்படும் பகுதியில் இருக்கும் . இவ்வகை வைரஸ்கள் பூட் செக்டரை பாதிப்பதன் மூலம் ஒவ்வொரு கணிணி இயங்கும் போதும் ( அல்லது பிளாப்பியை அணுகும் போதும்) செயல்படத் துவங்கும் வண்ணம் தம்மை நிறுவிக் கொள்ளும் .

மல்ட்டி பார்டைட்:
இவை மிகச் சாமார்த்தியமாக வடிவமைக்கப்பட்ட வைரஸ்கள். மேலே சொன்ன மூன்று வழிகளிலும் செயல்படக் கூடியவை.

வார்ம் :
மெயிலில் உள்ள அட்டாச்மெண்ட் வசதி மூலம் பரவக்கூடிய வைரஸ்கள் வார்ம். இவை அந்த அட்டாச்மெண்ட் உள்ள மெயிலை யாராவது படிக்கையில் அவரது கணிணியை தாக்கி விடும். பிறகு அவரது சிஸ்டத்தில் உள்ள அட்ரஸ்களைத் திருடி அவர்களுக்கும் அந்த மெயிலை அனுப்பிவிடும் . பின்பு இதேச் சுற்று துவங்கும்.

டிரோஜன் குதிரை:
அந்த கால கிரேக்க இதிகாசத்தில் ஒரு சம்பவம் வரும். ஒரு அழகியை (ஹெலன்) டிராய் தீவுக்காரர்கள் கடத்தி விட டிராய்க்கும் கிரீஸுக்கும் சண்டை மூண்டு விடும் . பல வருடங்கள் ஆகியும் கிரேக்கர்களால் டிராயை தகர்க்க முடியவில்லை. பின் ஒரு சதி செய்தனர். ஒரு பெரிய மரக்குதிரையை செய்து உள்ளே ஒருசில வீரரை வைத்து அதை டிராயின் கோட்டை வாயிலில் விட்டுவிட்டு கிரேக்க வீரர்க்ள் மறைந்து விட்டனர் . மறுநாள் அதைப் பார்த்த டிராய் நகரத்தவர் அந்தக் குதிரையை நகருக்கு உள்ளே தள்ளி செல்ல , இரவில் மறைந்திருந்தவர் வெளியே வந்து மற்றவர்க்கு கதவைத் திறந்து விட கிரேக்கம் வென்றதாக வரும். இது எவ்வளவு உண்மையோ எனக்குத் தெரியாது. ஆனால் டிரோஜன் வைரஸ் இவை போலவேச் செயல்படும் . நல்ல மென்பொருள் போல் ஒன்றை வழங்குவதாக நடித்து ஒரு மென்பொருள் நமக்கு கிடைக்கும். அதை இயக்கினால் அதிலிருந்து டிரோஜன் கிளம்பும். அந்த நல்ல மென்பொருளாக நடிப்பதையே டிராப்பர் என்று அழைக்கிறார்கள் .

வைரஸ் ஹௌக்ஸ்:
நடிப்பு திலகங்கள். இந்த மாதிரியான மெயில்கள் சில பைல்களின் பெயரைக் குறிப்பிட்டு அவை எல்லாம் வைரஸ் எனவும் , அவற்றை நீக்கும் படியும், மெயிலை பலருக்கும் அனுப்பும்படியும் வரும் . பின்னர் பார்த்தால் நாம் நீக்கிய பைல் எல்லாம் கணிணிக்கு தேவையான பைல்கள் எனத் தெரிய வரும் .
எப்படி ஹௌக்ஸ் அடையாளம் காண்பது? - இம்மாதிரி மெயில்கள் வந்தால் உடனே கூகுளில் சர்ச் இடுங்கள், http://www.f-secure.com/virus-info/hoax/ பாருங்கள்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

-தொடரும்.

சுட்ட பழங்கள் - 1

நபர் 1: நம்ம தலைவருக்கு பொருளாதாரத்தைப்பற்றி ஒண்ணுமே
தெரியலியே!
நபர் 2: ஏன்?
நபர் 1: பண வீக்கத்தை குறைக்க "அயோடெக்ஸ்" தடவலாம்னு
பேசியிருக்காரு

கல்யாண சர்வர்: என்னப்பா நீ போன பந்தியிலும் சாப்பிட்டியே!
என்னை ஏமாத்த முடியாது! எனக்கு ஞாபக சக்தி ஜாஸ்தி
சாப்பிடுபவர்: என்னங்க செய்யறது, எனக்கு ஜீரண சக்தி ஜாஸ்தி

நபர் 1: உங்க மாமா Delhi க்கு போனாரே அங்கே என்னவா இருக்காரு?
நபர் 2: அங்கேயும் என் மாமாவாகத்தான் இருக்காரு

Saturday, February 17, 2007

லொள் லொள்

நாய் கடிச்சா ஊசி போடலாம்
செருப்பு கடிச்சா மருந்து போடலாம்
மனுஷன் கடிச்சா டைப் அடிச்சு ப்ளாகில் போடலாம்

Wednesday, February 14, 2007