Showing posts with label சதங்கா. Show all posts
Showing posts with label சதங்கா. Show all posts

Tuesday, May 26, 2009

விகடன் தளத்தில் முதல் பக்கத்தில்...

கீழே இருக்கும் படத்து மேலே கிளிக்கி பெரிதான படத்தில் தேடுங்கள். பின்னூட்டத்தில் சொல்லுங்கள், நான் ஏன் இதை இங்கே போட்டிருக்கிறேன் என்று?




பெண்கள் படம் எல்லாம் தாண்டி வலது பக்கம் கீழே - சதங்காவின் கதை - விகடன்.காமில் வந்திருக்கிறது. முதல் பக்கத்திலே சுட்டி வேறு.
வாழ்த்துக்கள் சதங்கா.

ஆமாம் - என்ன மாதிரி ஆட்கள் எழுதுவதற்கு யூத்புல் நிகர் வேறு எதாவது தளம் இருக்கா விகடனில்? :-)

Friday, February 27, 2009

யாரந்த சதங்கா?

மனுஷன் விகடனில் அவர் கவிதைக்கு லிங்க் கொடுத்ததையே மின்னஞ்சலில் தெரியப்படுத்தியிருந்தார். இப்போது அடக்கம் ஜாஸ்தியாயிடிச்சுன்னு நினைக்கிறேன்.

 விகடனில் கதை வெளியாயிருப்பதை சொல்லவே இல்லை. அடுத்த முறை கூப்பிடட்டும், பேசிக்கொள்கிறேன்...

வாழ்த்துக்கள், சதங்கா. மென்மேலும் உயர வாழ்த்துக்கள். பாலு மகேந்திரா ரகுமானை சொன்ன பாணியில், ஏதோ நான் பதிவுலகத்துக்கு அழைத்துவந்த மனிதர் கதை விகடனில் வந்திருப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!

Saturday, August 09, 2008

என்ன விலை அழகே - தொடர்கதை

என் இனிய ரிச்மண்ட் தமிழ் மக்களே !

சமீபத்தில ஒரு கதை, உண்மையை மையமாக வைத்து ஆரம்பித்து, கடைசியில் ஒரு அழகிய காதல் கதையாக மாற்றி எழுதியிருக்கிறேன். வந்து வாசித்து சொல்லுங்கள்.

என்ன விலை அழகே

சுட்டிய அழுத்தி, வரும் பக்கத்தில், கடைசிப் பதிவில் இருந்து வாசித்து வாருங்கள். முதல் பாகத்தில் இருந்து பக்கத்தில் ஆரம்பிக்க, blog default மாற்ற முடியுமா எனத் தெரியவில்லை. அறிந்தவர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும் :))

Tuesday, May 20, 2008

வலைச்சரத்தில் சதங்கா!


வலைச்சரத்தில் சதங்காவை இந்த வார ஆசிரியர் ஆக்கியிருக்கிறார்கள்! முதல் பதிவில் ரிச்மண்ட் வாழ்க்கையையும்(என்னையும்) நினைவு கூர்ந்திருக்கிறார் மறக்காமல். நன்றி சதங்கா!! மேலும் அவர் எழுதிய பதிவுகளில் அவருக்கு பிடித்தவற்றையும் அழகாகப் பட்டியலிட்டிருக்கிறார்.

இரண்டாவது பதிவில்  அவர் மனதில் நின்ற பதிவுலகில் படித்த கவிதைகளையும், கவிஞர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் மயக்கத்தில் உள்ள எனது நண்பன் மகேஷிலிருந்து ஆரம்பித்து கலக்கலாகப் போகிறது அவரின் அறிமுகம்.

மூன்றாவது பதிவில் கதைகளை அறிமுகப் படித்தியிருக்கிறார். நான்காவதிற்கு எங்கே போகிறார் எனப் பார்ப்போம். :-)

வலைச்சரத்தில் சதங்காவின் மீதமுள்ள நாட்களுக்கான பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து தூள் கிளப்ப வாழ்த்துக்கள்! 

Sunday, May 04, 2008

கிராமத்துக் கோவில் திருவிழா

சித்திரை, வைகாசியில் அநேக கிராமங்களில், கோவில் திருவிழாக்கள் இன்றும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, நாமறிவோம். அத்தகைய திருவிழாவினைப் பற்றிய ஒரு கவிதை .

http://vazhakkampol.blogspot.com/2008/05/blog-post.html

Friday, April 25, 2008

கிராமத்து மீசை

கிராமத்தில், வரப்பில் இருக்கும் வயோதிகர் முதல், வழித்து தேநீர் ஆற்றும் வாலிபர் வரை, பொதுவாக நிறைய பேர், மீசை என்றாலே, சற்று அளவில் பெரியதாக வைத்திருப்பார்கள். அது பற்றிய கவிதை கிராமத்து மீசை.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_24.html

Saturday, April 19, 2008

அய‌ல்நாட்டுக் கணிப்பொறியாளன் க(வி)தை

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்றோரின் நிலை என்னவென்று யோசிக்கையில், நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களின் நிலையும், மற்றும் இதே போல நிறைய குடும்பங்களின் நிலையும் இப்படித் தான் இருக்கிறது.

மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். கவிதை எப்படி இருக்கிறது என்றும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_18.html

Tuesday, April 15, 2008

எதிலும் உன் நினைவாய் !

ஒரு காதல் கவிதை. தலைவியைப் பார்த்து தலைவன் பிதற்றுவது.

எல்லாமே எந்திர யுகமாய் ஆவதனால், காதல் அழிந்து கொண்டு வருதோ என்று திடீர் என ஒரு எண்ணம். (அதைத் தாங்கி நிறுத்தப் போகிறேனா என்று விவாதிக்க வராதீர்கள் =;) ). எண்ணங்களை சேகரித்து வைப்போமே என எண்ணியதன் விளைவு எதிலும் உன் நினைவாய் ! கவிதை.

வழக்கம்போல வந்து வாசித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_14.html

Monday, April 07, 2008

தத்தி நடை பழகி

ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும், பிள்ளைகள் என்ன பண்ணுது, பேசச் சொல்லேன் என்றும், புதுசா போட்டா புடிச்சிருக்கீங்களா அனுப்பி வைங்க என்றும் நமது பெற்றோர் கேட்பது வெகுவான NRI நடைமுறையில் உள்ள ஒன்று. அவர்களைப் பற்றி இயன்றவரையில் ஒரு கவிதையில் வடித்திருக்கிறேன். வாசித்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_07.html

Wednesday, April 02, 2008

விதை ஒன்று செடி மூன்று (3-in-1) - Trucks & Drivers

கொஞ்சம் வித்தியாசம் செய்யலாம் என்று நினைத்து 3‍-in-1 பதிவு ஒன்று பதிந்திருக்கிறேன். இங்கே ஓடும் ட்ரக்குகள் பற்றிய பதிவு. 3-in-1, மற்றும் உட்கருத்து, எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாய் இருக்கிறேன்.

http://vazhakkampol.blogspot.com/2008/03/3-in-1-trucks-drivers.html

Tuesday, March 25, 2008

உதிரம் இருக்கும்வரை உன்னை மறவேனே

பெண், அப்படி என்றாலே கவிதை தான் இல்லையா ? கவிதை மீது காதல் கொள்ளாமல் இருக்கவும் முடியுமா ? ஒரு வாலிபனின் கனவுகள், கற்பனைகளாகக் கவிதை வடிவில் இங்கே. படித்துப் பிடித்திருந்தால் சொல்லுங்கள் !

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_1832.html

Thursday, March 20, 2008

தோப்பு

காவல்காரர் தூங்கிக்கிட்டு இருக்காரு. சத்தம் போடாம வாங்க. தோப்புக்குள்ள போய் ஒரு சுத்து சுத்திப் பார்த்துட்டு வரலாம். மெதுவா, ஷ்ஷ்ஷ்... இங்க க்ளிக் பண்ணுங்க‌

தமிழ்மணத்தில் சதங்கா!

சதங்காவுடைய கவிதைகளை தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில பார்த்தேன். வாழ்த்துக்கள் சதங்கா!

http://thamizmanam.com/readers_choice.php

Saturday, March 15, 2008

கிராமத்து நடவு

கிராமங்களில் நாற்று நடுவதே ஒரு விழா போலத் தான் நடக்கும். உழவர்களும், மாடுகளும், சேறும், நாற்றும், நாற்று நடும் பெண்களும் ... அப்படியே ஒரு ரம்மியமான சூழல். அதைப் பற்றி ஒரு கவிதை "கிராமத்து நடவு".

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post_13.html

Thursday, March 13, 2008

அடி பெண்ணே !

டிஸ்கி: இது என் சொந்தக் கதை அல்ல. வெகு நாட்கள் முன் ஆ.வி.யில் படித்த ஒரு கதையும் (used at climax here), பின் நண்பர்கள், அவர்தம் நண்பர்களின் கதைகள் எல்லாம் கலந்து செய்து கலவை தான் அடி பெண்ணே ! படிச்சுப் பார்த்து புடிச்சிருந்தா பின்னூட்டத்தில சொல்லுங்க !!!

பி.கு.: எங்க ஊட்டுக்காரம்மா ஒரே ஒரு கேள்வி கேட்டாங்க, ஏன் இந்த மாதிரி விசயங்களில் பெண்கள் தான் தவறு செய்வார்களா ? பசங்க செய்றதில்லையா என்று ! ஏன் இல்லை, அது பற்றியும் ஒரு கவிதை எழுதி போட்டுறலாம் என்று சொல்லி, நல்ல வேளை கவிதையின் நாயகி யாரு என்று அவர்கள் கேட்கும் முன்னால எஸ்கேப்ப்ப்ப்ப் ....

http://vazhakkampol.blogspot.com/2008/03/blog-post.html

Wednesday, March 05, 2008

அபார்ட்மென்ட் எண் 26

அபார்ட்மென்ட் பத்தி ஒரு செய்தியைக் கதையாய் எப்படி சொல்லலாம் என்று எண்ணி, ரொம்ப நாளா எழுதணும் என்று நினைத்து இப்ப தான் நேரம் கிடைத்தது. எழுதியிருக்கிறேன், வந்து படிச்சு பார்த்து உங்க கருத்துகளச் சொல்லுங்க.

http://vazhakkampol.blogspot.com/2008/03/26.html

Tuesday, February 26, 2008

கிராமத்து ஊருணி


"ஊருணி நீர் நிறைந்தற்றே - உலகவாம்

பேரறி வாளன் திரு"

என்று ஊரே உண்ணும் ஊருணி பற்றி வள்ளுவர் பெருந்தகை அருமையாக ஈற்றடிகளில் சொல்லியிருப்பார். அவர் சொல்கிற ஊருணியில் கடல் அளவுக்கு விசயங்கள் அடங்கியிருக்கும். நாம என்னதான் வரி வரியா எழுதினாலும், அந்தக் காலத்து ஆட்களை கிட்ட கூட நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது. இதோ எனது கவிதை.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_25.html

Saturday, February 23, 2008

உயிர் காக்க உதவுங்கள்

ராஜேஷ் அவர்கள் பற்றி ஒரு கட்டுரையும், கவிதையும் எழுதி எண்ணாலான மிகச் சிறிய உதவியாக எனது வலைத்தளைத்தில் பதிந்திருக்கிறேன். வாருங்கள், வாசியுங்கள், ராஜேஷ் குடும்பத்தாருக்கு உதவிக் கரம் நீட்டுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_23.html

Sunday, February 17, 2008

அரிதாரத்தப் பூசிக் கொள்ள ஆசை

கிட்டத்தட்ட ஒரு வருசம் ஆகிப்போச்சு என்று நினைக்கும்போது காலம் எவ்வளவு வேகமாக ஓடுகிறது என வியக்க வைக்கிறது. அதாங்க போன வருசம் பனி பற்றி ஒர் வெண்பா பதிவு போட்டோம். இந்த வருசம் பனி பத்தி யோசித்துக் கொண்டிருந்தபோது கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்று, அசையாப் பொருட்கள் எல்லாம் அரிதாரம் பூச ஆசைப்பட்டு, விழுந்த பனியை தம்மேல் பூசிக்கொள்வது போல எழுதியிருக்கிறேன். படித்துச் சொல்லுங்கள் எப்படி இருக்கிறது என்று ;-)

http://vazhakkampol.blogspot.com/2008/02/blog-post_11.html

Monday, January 28, 2008

அப்பாவின் காகிதக் கப்பல்

என்னதான் டெக்னாலஜி வளர்ந்து ஆரைகமி, கிரைகமி (உச்சரிப்பு சரியா என்று தெரியவில்லை, ஆங்கிலத்தில் Origami, Kirigami) என்று காகிதப் படைப்புக்கள் சிறந்து விளங்கினாலும், அன்று நமக்கு அப்பா அன்பினால் செய்து கொடுத்த காகிதக் கப்பல் இன்றும் மறக்க முடியாத ஒரு inspiration தான்.

http://vazhakkampol.blogspot.com/2008/01/blog-post_27.html