Monday, April 07, 2008

தத்தி நடை பழகி

ஒவ்வொரு முறை தொலைபேசும் போதும், பிள்ளைகள் என்ன பண்ணுது, பேசச் சொல்லேன் என்றும், புதுசா போட்டா புடிச்சிருக்கீங்களா அனுப்பி வைங்க என்றும் நமது பெற்றோர் கேட்பது வெகுவான NRI நடைமுறையில் உள்ள ஒன்று. அவர்களைப் பற்றி இயன்றவரையில் ஒரு கவிதையில் வடித்திருக்கிறேன். வாசித்து உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_07.html

1 comment:

  1. சதங்கா,

    கவிதை நடை குழந்தையின் நடையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.

    கவிதை, ஒன்றுக்கு மேற்பட்டோர் பார்வையில் பயணிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

    உ-ம்:
    தத்தி நடை பழகி...

    உன் தந்தை விளையாட‌...

    இரு சந்தங்களும் ஒருவருடைய பார்வையில் இருக்க,

    அன்றைய வேடிக்கை...
    தொலை பேசியின் வழி...
    வேடிக்கை நிறைந்த‌...
    தத்தி நடை பழகி...

    இந்தச் சந்தங்கள் ஒரு தாத்தா அல்லது பாட்டியின் பார்வையில் பதிவாகியிருக்கிறது.

    வேடிக்கை நிறைந்த‌
    வேகமான இவ்வாழ்வில்
    வேதனை களைந்திட‌
    விரைந்து வாராயோ? என்ற சந்தத்தை

    விரைந்து நீ வாராயோ?

    என்று முடித்தால் அதிக கனம் சேருவது போல இருக்கிறது.

    அருமையான முயற்சி.

    பித்தன்.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!