Wednesday, May 28, 2014

ஒரு ஆலமரம் சாய்ந்தது




        
நீண்ட நாள் தமிழுக்குத் தொண்டு செய்த .வே சாமிநாதய்யர் தன்னுடைய 87 ம் வயதில் காலமானார் தமிழ்த்தாத்தாவின் மறைவுக்கு அஞசலி செலுத்தும் முறையில் கல்கி.கிருஷ்னமூர்த்தி ஒரு கட்டுரை எழுதினார்..  அந்த கட்டுரைக்கு அவர் கொடுத்த தலைப்பு  ஒரு ஆலமரம் சாய்ந்தது என்பதாகும்
 பலருக்கும் பயன் தரும் வகையில் வாழ்ந்து மறைந்தவர்களைப் பற்றி குறிப்பிடும்போது ஆலமரத்தோடு ஒப்பிடுவது ஒரு தமிழ்மரபு
 நம் நாட்டில்  அப்படி பல பெரிய ஆலமரங்களை நாம் பல இடங்களில் கண்டிருக்கலாம் சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆலமரம் இன்றும் நகர வாசிகளூக்கு ஒருகாட்சிப் பொருளாக இருக்கிறது. அந்த மரத்தினுடைய வயது 450 என்று சொல்கிறார்கள்
  ஆலமரத்தின் வளர்ச்சியும் வாழ்வும் உண்மையிலேயே ஒரு அற்புதம்தான்.. சிறிய விதையிலிருந்து ,,கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறிய விதைலிருந்து வளர்ந்து நிற்கும் ஆலமரத்தின் பிரும்மாண்டம் எல்லோரையும் திகைக்க வைக்கும் வேர் விட்டு வளர்ந்து விழுது விட்டுப் படர்ந்து நிற்கும் ஒரு ஆலமரத்தின் நிழலில் ஒரு அரசனின் படை தங்கி இளைப்பாறலாம் என்று ஒரு தமிழ்ப்பாடல் சொல்லும்
      நான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் அப்படி ஒரு ஆலமரம் இருந்தது. தெருவிலிருந்து ஆற்றங்கரைக்குப் போகும் வழியில் திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் இருந்த அந்த ஆலமரம் இன்னும் என் கண் முன் நிற்கிறது  .. .
  கிராமத்துச் சிறுவர்களுக்கு பொழுது போக்கும் இடம் அந்த மரத்தடிதான் கோடைக்கால நண்பகல் வெய்யில் கூட தெரியாமல் மணிக் கணக்காக அந்த ஆலமரத்தடியில் விளையாடலாம்..திருச்சிக்கு போக பேருந்துக்காக  பயணிகள் காத்துக் கொண்டிருக்கும்போது அந்த மரத்தடி நிழல்தான் அவர்களைக் களைப்பாறச் செய்யும் அந்த காலங்களீல் பஸ் போக்குவரத்து அதிகம் கிடையாது.சலிப்போடு காத்திருக்கும் பயணிகளுக்கு அந்த மரத்தடி நிழல் குடையாக இருந்து உதவியது
     பம்பரம் ஆடவும் பாண்டி ஆடவும் கோலிக்குண்டு அடிக்கவும் கிராமத்துச் சிறுவர்களூக்கு விளையாட்டுத் திடலாகவும் இருந்தது. மரத்தின் விழுதுகளில் ஊஞ்சல் கட்டி ஆடவும் வசதியான இடம்   அந்த நாட்களில் நெடுஞ்சாலைகளில் பேருந்து போக்குவரத்து அதிகம் கிடையாது..ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போகும் திருச்சி-சேலம் பஸ். ,இது தவிர எப்போதாவது செல்லும் லாரிகள்தான் .மற்றபடி மாட்டு வண்டிகள்தான் போய்க் கொண்டிருக்கும்.. அறுவடை காலங்களீல் நெல் சுமையை ஏற்றிச் செல்லும் வண்டிகள் இவைதான் அந்த காலத்திய வாகனப் போக்குவரத்து..ஆகையால் நெடுஞசாலைகளுக்கு அருகில் விளையாடுவதை பெரிய ஆபத்தாக யாரும் எண்ணியதில்லை தார் ரோடு கூட அன்றைக்குக் கிடையாது..சரளைக் கற்கள் பதிக்கப்பட்ட மெட்டல் ரோடுதான் அன்று பல நெடுஞ்சாலைகளீல் இருந்தது. தார் ரோடு என்பதெல்லாம் நகரத்துத் தெருக்களுக்கே  கிடைத்த ஆடம்பர அலங்காரம். . .       கிராமத்தில் வெட்டியாக நேரத்தைப் போக்குவோருக்கு அந்த ஆலமரத்தடிதான் வம்பர் மகாசபையாகவும் பயன்பட்டது. ஆகையால் அந்த மரத்தடியில் ஒருசில மணி நேரம் இருந்தால் யார் வீட்டில் கல்யாணம் யார் வீட்டில் சண்டை .யார் வீட்டில் பிள்ளை பிறக்கப் போகிறது இத்தியாதி விவரங்களை அறிய முடியும்.
   மரத்தின் மேல் உட்கார்ந்திருக்கும் பறவைகளின் ஒலி ,பறந்து செல்லும் பல வகையான பறவைகளின் காட்சி இவையெலாம் அந்த இடத்துக்கே அமைந்த அற்புதமான இயற்கைக் காட்சிகள்.      .
   எங்கள் தலைமுறையச் சேர்ந்தவர்களூக்கு ஊர் நினைவு வந்தால் உடனே கண் முன்னால் வருவது அந்த ஆலமரமாகத்தன் இருக்க முடியும் மொத்தத்தில் அந்த பெரிய ஆலமரம்தான்  எஙகள் ஊர் அடையாளம்
    அந்த ஆலமரம் இப்பொழுது இல்லை. சாலையை அகலப்படுத்த அந்த ஆலமரத்தை வெட்டி விட்டார்கள்.அதற்கு முன்பாகவே அந்த மரம் தன்னுடைய பொலிவை இழக்கத் தொடங்கிவிட்டது.
   ஆனால் நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு என் ஊருக்குச் சென்ற போது
ஆலமரம் இல்லாத என் ஊர்ப் பாதையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஏதோ வேறு ஊருக்கு வந்துவிட்டது போன்ற ஒரு பிரமை.அந்த பிரமையிலிருந்து விடுபடவே சற்று தாமதமானது
    என்னை நலம் விசாரிக்க வந்த  எல்லோரிடத்திலும் நான் கேட்ட முதல் கேள்வி அந்த ஆலமரம் என்ன ஆனது என்பதுதான். பதில் அளித்தவர்கள் எல்லோருமே நிதானமாக சகஜமான முறையில் சொன்ன பதில் எனக்கு எரிச்சல் ஊட்டியது. மரம் போனது பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.அவர்களுடைய அலட்சியமும் பதிலும் விளங்காத புதிராக இருந்தது,.அந்த மரத்துக்கு ஏன் நீ இவ்வளவு அலட்டிக்கிறே என்ற பாணியில் பலருடைய எதிர்க்கேள்வி என்னை நோக்கி பாய்ந்தது அவர்களைப் பொறுத்த வரைமரம் வெட்டப்பட்டது பழைய செய்தி.
  முதல் தடவையாக மரம் இல்லாமல் வெற்றிடத்தைப் பார்த்ததால்  சற்று உணர்ச்சி வசப்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டு என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நம்முடைய அடையாளங்களைக் காப்பதில் நாம் பல சமயங்களில் உணர்ச்சி வசப்படுகிறோம்.அதன் சமகாலப் பொருத்தப்பாட்டைப் பற்றி சரியாக கணிக்கத் தவறி விடுகிறோம்
   நான் உத்தியோகம் கிடைத்து வெளியூருக்குச் சென்றுவிட்டேன் ஊருக்கு பல ஆண்டுகள் வரமுடியவில்லை. நான்கைந்து ஆண்டுகள் கழித்து என்னுடைய கிராமத்துக்கு வந்தேன்.வீட்டில் அம்மா, அப்பா, சகோதரர்கள் மற்ற நண்பர்களுடைய விசாரிப்பிலும் காட்டிய அன்பிலும் மகிழ்ந்து போய் சில நாட்கள் கிராமத்தில் வலம் வந்தேன்
ஒரு நாள்  என் வீட்டு அடுக்களையில் இருந்த பெரிய மாராப்பை நோட்டம் விட்டேன் .அந்த மாராப்பில் சுண்ணாம்பு பானை இருக்கும்.அந்த பானையிலிருந்து தான் வெற்றிலை போட தேவையான சுண்ணாம்பை என் அப்பா எடுத்துக் கொள்வது வழக்கம் .அந்த பானை அப்படியே இருந்தது.அந்த பானையின் பக்கத்தில் இருந்த ஒரு பழைய அலுமினியம் தட்டு மீது என் கவனம் சென்றது
   அம்மா அந்த தட்டு என்றேன் .என் கேள்வியைப் புரிந்து கொண்ட என் தாய் சொன்னாள். உன் சாப்பாட்டு தட்டு தான் .அங்கே போட்டு வைத்திருக்கிறேன் என்றாள் .உடனே அந்த தட்டை எடுத்தேன்.கேட்பாரற்று பல நாட்களாக மாராப்பில் இருப்பதால் அழுக்கு ஏறி மங்கலாக இருந்தது.அந்த அலுமினியத் தட்டு.
     அந்த காலத்தில் எங்களூக்கு அலுமினியத் தட்டில்தான் சாப்பாடு போடுவார்கள் .எவர்சில்வர் பாத்திரம் பெரிய அளவில் புழக்கத்துக்கு வராத காலம். அது.
  நான் தட்டை எடுத்ததும் அம்மா:அதை எதற்கு இப்பொழுது எடுக்கிறாய் என்று கேட்டாள். தூசி படர்ந்து கிடந்த அந்த தட்டைசற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன் அந்த தட்டில் பல நசுங்கல்கள் ..தட்டை அம்மாவிடம் கொடுத்து புளி போட்டு தேய்த்துக் கொண்டு வா என்றேன்
அது எதற்காக இப்போ என்று திரும்பவும் கேட்டாள். நான் அந்த தட்டில்தான் சாப்பிடப் போகிறேன் என்றேன். உனக்கு பைத்தியமா ? நல்ல வாழை இலைஇருக்கிறது இப்பொழுதுதான் வாழைக் கொல்லையிலிருந்து உன் அப்பா கொண்டு வந்திருக்கிறார் அந்த இலையில் சாப்பிடு என்றாள் அம்மா.
     முடியாது. ஊருக்குப் போகும் வரை இந்த தட்டில்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்தேன்.நீண்ட நேரம் அம்மா சொன்ன புத்திமதி பலிக்காமல் போனதால் வேறு வழியில்லாமல் தட்டை சுத்தமாகத் தேய்த்துக் கொண்டு வந்தாள்.
  தட்டு இப்பொழுது சற்று பளிச்சென்றிருந்தது .அதை அப்படியும் இப்படியுமாக திருப்பிப் பார்த்து விட்டு  இப்பொழுது இந்த தட்டில் சாப்பாடு போடு என்றேன் ..
  அம்மா சிரித்துக் கொண்டே உனக்கு பழசுகள் மேல் பைத்தியம் என்றாள்.அன்று அம்மா போட்ட சாப்பாடு சற்று கூடுதலான சுவையோடு இருந்தது. நான் ஊருக்கு திரும்பும் வரையில் அந்த தட்டில்தான்  சாப்பிடுவேன் என்றேன் .அம்மா கேலியாகச் சிரித்தாள்...ஆனால் என்னைப் பொறுத்த வரை அந்த பழைய தட்டில் சாப்பிடும்போது என்னுடைய மகிழ்ச்சிகரமான சிறு வயது வாழ்க்கையை வாழ்ந்ததாகவே உணர்ந்தேன்
   நெடுநாட்கள் நம்மோடு இருந்து நமக்கு பயன்பட்ட பொருட்களை
நீண்ட இடைவெளிக்குப்பிறகு பார்க்கும்போது அவை நமக்கு வெறும் சடப்பொருளாகத் தெரிவதில்லை.அதை ஒரு ஜீவனுள்ள பொருளாக நினைக்கத் தோன்றுகிறது. நம்முடைய பழைய வாழ்க்கை பற்றிய எண்ணங்களுக்கு இட்டுச் செல்கி/றது
   சீப்பு கண்ணாடி பவுடர் இதர காஸ்மெடிக் பொருட்களை வைத்துக் கொள்ள ஒரு ரப்பர் பெட்டியை வாங்கினேன்.என்னுடைய நம்பிக்கைக்குரிய அந்த கடைக்காரர் பெட்டியை கொடுக்கும் போது சொன்னார்..இந்த பெட்டி நீண்ட நாள் உழைக்கும் என்று..அந்த வார்தை பொய்யாகவில்லை. 9 அஙுகுலம் நீளம் 6 அங்குலம் அகலம் கொண்ட அந்த ரப்பர் பெட்டி ஏறக்குறைய 20 வருடம் எனக்கு உழைத்தது.எந்த வகையிலும் சேதப்படாமல் நிறம் மட்டும் சற்று மங்கிய நிலையில் இருந்த அந்த பெட்டியின் மீது எனக்கு அலாதியான் ஒரு பிரியம் வளர்ந்தது .வெளியூருக்கு எடுத்துப் போனால் எங்காவது தொலைந்து போய்விடும் என்ற பயத்தில் பயணகாலத்தில் அந்த பெட்டியை எடுத்துப் போவதைத் தவிர்த்தேன் .
எனக்கு மறதி அதிகம். மழை பெய்யும்போது குடை எடுத்துப் போனால் திரும்பி வரும்போதும் மழை பெய்ய வேண்டும் இல்லையென்றால்  குடை என்னுடையதல்ல. வாங்கிய மறுநாளே குடையைத் தொலைத்த பெருமை எனக்கு உண்டு குடையின் விலையில் கால்வாசி கூட இல்லாத அந்த பெட்டியை இழக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தேன்.. 20 ஆண்டுகள் எனக்கு சேவை செய்த அந்த பெட்டியை நானே வழியனுப்பி வைத்தேன். சிவப்பு நிறமூடியுடன் கூடிய அந்த வெள்ளை நிறப் பெட்டி இன்னும் என் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது
    இந்த எண்ணமும் உணர்வும் அந்த பொருட்களின் மதிப்பில் இல்லை..அதன் பயன்பாட்டால் அந்த பொருளோடு நாம் மானசீகமாக வளர்த்துக் கொண்டிருக்கும் உறவுதான் காரணம் எத்தனையோ பொருட்களை நாம் வாங்கி பயன் படுத்திவிட்டு  பயன்பாடு தீர்ந்த பின் அதை அப்புறப்படுத்தியிருந்தாலும் அவை எல்லாம் நம் நினைவில் நிற்பதில்லை.
மிகச்சில பொருட்களே நம், நினைவில் தொடரும் இது மனித மனத்தின் பலமா அல்லது பலவீனமா என்று நாம் ஒருபோதும் எண்ணிப்பார்ப்ப தில்லை உண்மையில் அந்த பொருளின் பயன்பாட்டில் நமக்கு ஏற்பட்ட
திருப்திதான் அதற்கான காரணம் அல்லது ஒரு வகையான குழந்தைப்
பருவக் கோளாறு என்று கூடக் கூறலாம்.    
                                           -  மு..கோபாலகிருஷ்ணன். 
      

Thursday, May 22, 2014

தாய் - 4

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் மூன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


இதுவரைக்கும் அம்மா எப்படி தன்னை வளர்த்தாள், எப்படி தன்னை பெற்றெடுத்தாள் ந்னு பாடிய பட்டினத்து ஸ்வாமிகள் அம்மாவின் சிதைக்கு தீ மூட்டி அது அடங்கியதும் நேரடியாக சிவபெருமானிடம் கேட்கும் சில கேள்விகள் இந்தப் பாடலில்;

வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ
என்னை மறந்தாளோ சந்தமும் உன்னையே நோக்கி
உகந்து வரம் கிடந்தென் 
தன்னையே ஈன்றெடுத்த தாய்.

திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானே எப்பொழுதும் உன்னை தன் அகக் கண்ணால் பார்த்து மகிழ்ந்து குழந்தைப் பேறு வரம் வேண்டித் தவம் கிடந்து என்னை உன் அருளால் ஈன்ற என் தாய் நான் இட்ட தீயினால் வெந்து ஆம்பல் ஆயினளோ, அவள் அன்புக்கு உரிய என்னை மறந்து விட்டாளோ, அவள் உன்னை எப்பொழுதும் மறவாதவள் அதனால் அவள் உன் பதத்திற்கு வந்து பேரின்பம் அடைந்தாளோ என்று கேட்கிறார்.


அடுத்து ஊரார் அனைவரையும் அழைக்கின்றார், அழைத்து இந்த வாழ்க்கை எப்படிப் பட்டது என்பதை நான்கு வரிகளில் தெளிவாக்குகிறார்.

வீற்றிருந்தாளன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் பால் தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்


என் தாய் நேற்று உயிருடன் இருந்தாள், திண்ணையில் வீற்றிருந்தாள், பிறகு இறந்து போய் வீதி தனில் கிடந்தாள், இன்று வெந்து சாம்பலாகிப் போனாள்.  இதற்கு காரணம் என்ன என்று யாரும் யோசிக்காமல், அதற்காக அழாமல் எல்லோரும் அவளுக்காகப் பால் தெளிக்க வாருங்கள்.  இங்கும் அங்கும் எங்கும் பரவி இருப்பது சிவமயமே.

இவ்வளவு நேரம் தனது தாயின் பிரிவை எண்ணி கலங்கிய பட்டினத்தார் எப்படி இந்த கடைசிப் பாடலில் எல்லோரையும் அழாதே என்று சொல்கிறார்ன்னு ஒரு கேள்வி எழும்.  இவருக்கு ஒரு நீதி நமக்கு ஒரு நீதியா? அப்படி இல்லை, அவர் அழுவதாக காட்டியிருப்பது ஒரு தாய் என்பவள் எப்படி பட்ட நல்ல குணங்கள் கொண்டவள், எப்படிப்பட்ட கருணை கொண்டவள் என்று நம்மைப் போன்ற பாமர ஜனங்களுக்கு புரியவைக்க என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவரது இந்த கருத்தை சார்ந்து பிற்காலத்தில் ஒரு கவிஞர் இப்படிப் பாடினார்:

"ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ நிலத்தீர்"

தன்னைச் சுமந்து பெற்ற தாய்க்கு இறுதிக் கடன் செய்யும் போது இவர் பாடிய பாடலைப் பார்த்தோம்

அடுத்து இவர் தனக்கு பிறவா வரம் வேண்டி பாடுகிறார் என்று பார்ப்போம்.

எத்தனையூர், எத்தனை வீடு எத்தனைதாய் பெற்றவர்கள்
எத்தனை பேர் இட்டு அழைக்க ஏன் என்றேன் நித்தம்
எனக்குக் களையாற்றாய் ஏகம்பா 
உனக்கு திருவிளையாட்டோ


நமக்கு கிடைத்த இந்த பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்று நமக்கு தெரியாது,
எத்தனை ஊர்ல இருந்தோம் தெரியாது.
எத்தனை வீடுகள்ல இருந்தோம் தெரியாது,
நம்மை பெற்றவர்கள் எத்தனைப் பேர் தெரியாது,
எத்தனைபேர் இட்டு அழைத்தார்கள் தெரியாது - அதாவது எவ்வளவோ பேர் நம்மை அழைத்து பேசியிருப்பார்கள் தெரியாது
இன்னொரு அர்த்தம் - எவ்வளவு பெயர் நமக்கு இதுவரை இருந்தது தெரியாது
இப்படி இத்தனை பிறவிகளில் நான் எல்லோருக்கும் ஏன் ஏன் நு பதில் சொல்லி சொல்லி களைப்பாகி விட்டேன். இது என்ன உனக்கு ஒரு திருவிளையாடலா ந்னு கேக்கரார்.  இந்தப் பாடலில் தன்னைப் பற்றிச் சொல்லி பிறவா வரம் தரச் சொல்லி கெஞ்சுகிறார்.


இந்தப் பாடலைத் தழுவி தமிழ்த் திரைப்படத்தில் வந்த ஒரு பாடல்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா, அந்த ஊர் நீயும் கூட இருந்த ஊர் அல்லவா

 அடுத்த பாடலில் அம்மா, பிரம்மா இருவருக்கும் இருக்கும் கஷ்டத்தைச் சொல்லி பிறவா வரம் கேக்காரார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னமோர் அன்னை
கருப்பையூர் வாராமல் கா

திரு இருப்பையூரில் இருக்கும் சிவனே என்னை பெற்று பெற்று எத்தனையோ அம்மாக்கள் உடல் சலித்து விட்டார்கள், கடுமையான வினைகள் உடைய நான் பிறவிப் பெருங்கடலைக் கடக்க நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலையெழுத்தை எழுதி எழுதி வேதா (பிரமன்) கை சலித்து விட்டான், அதனால் எனக்கு இன்னொரு முறை ஒரு தாயின் கருப்பையில் வாழ வேண்டிய கஷ்டத்தைத் தராதே என்கிறார்.

அடுத்து சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிச் சொல்லி பிறவா வரம் கேக்கிரார்.

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் பண்ணும் அயன்
கையாறவும் அடியேன் காலாறவும் கண்பார்
ஐயா திருவையாறா

திருவையாற்றில் வீற்றிருக்கும் சிவனே, என்னை மீண்டும் படைக்காமல் இருந்தால், மீண்டும் மீண்டும் நான் இறந்து என்னை கொளுத்தி கொளுத்தி இந்த பூமி சூடாவதைத் தடுக்கலாம்.

அப்படி கொளுத்தி கொளுத்தி வெளியேறும் புகையால் வானம் மறைக்கப் படாமல் காக்கலாம்.

பலகோடி தாய்மார்கள் பிள்ளைப் பேறு இல்லாமல் கொஞ்சம் இளைப்பாறலாம்
என்னைப் படைத்து படைத்து பிரமன் கை வலியில் துடிக்கிறார் அவருக்கு கொஞ்சம் கை வலியிலிருந்து ஆறுதல் கிடைக்கட்டும்.

உன்னைத் தேடித் தேடி இப்படி அலைந்து அலைந்து வலிக்கும் என் கால்கள் கொஞ்சம் இளைப்பாற எனக்கு பிறவா வரம் தா என்கிறார்.

என்னைப் போன்ற மனிதர்கள் இந்த உடலை பேணிவளர்க்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் இந்த உடலை ஒரு புண் என்கிறார் இவர்:

ஓடு விழுந்து சீப்பாயும் ஒன்பது வாய்ப் புண்ணுக்கு 
இடு மருந்தை யான் அறிந்து கொண்டேன்
தேவாதி தேவன் திருவொற்றியூர்த் தெருவில்
போவார் அடியின் பொடி.

அதோடு இந்த உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு இதன் நிலை என்ன என்பதை இந்தப் பாடலில் தெளிவாக்குகிறார்:

எரியெனக்கு என்னும் புழுவோ
எனக்கென்னும், இந்த மண்ணும்
சரி எனக்கு என்னும் பருந்தோ
எனக்கு எனும் தான் புசிக்க
நரியெனக்கு என்னும் புன் நாய் எனக்கு
என்னும் இந்நாறு உடலைப் 
பிரியமுடன் வளர்த்தேன் இதனால்
என்ன பேறு எனக்கே.

எரி - நெருப்பு, புழு, மண், பருந்து, நரி, நாய் எல்லாம் என் உடலை சாப்பிட ஆவலுடன் இருக்கும் அது தெரியாமல் நாறும் இந்த உடலை இப்படிப் பிரியமாக வளர்த்தேனே இதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்கிறார்.

ஆரணம் நான்கிற்கும் அப்பால் அவர் அறியத் துணிந்த
நாரணன் நான்முகனுக்கு அரியான் நடுவாய் நிறைந்த பூரணன்
எந்தைப் புகலிப் பிரான் பொழில் அத்தனைக்கும் காரணன்
அந்தக் கரணம் கடந்த கருப்பொருளே


வேதங்கள் நான்கிற்கும் அப்பாற்பட்டவன்
அவனை அறியப் புறப்பட்ட நாரணன் மற்றும் பிரமன் இருவருக்கும் தெரியாதவன்
எல்லாப் பொருளிலிலும் இருந்து இயக்குபவன்
என் தகப்பன்
எல்லா உலகங்களுக்கும் வினை முதலானவன்
அந்தக் கரணங்களான - மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என ஒன்றும் இல்லாதவனும் முழு முதற் பொருளானவனுமான அந்தச் சிவனை வணங்கு கின்றேன்.


இந்தப் பாடலோடு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

முரளி இராமச்சந்திரன்.

Wednesday, May 21, 2014

தாய் - 3

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனு நீதியில 4 விஷயங்களை விட்டு வெக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்குன்னு துக்ளக் ஆசிரியர் சோ சொல்லுவார்.  ஒன்னு - விஷம், ரெண்டு - பகை, மூனு - பாம்பு, நாலு - நெருப்பு.  இதுல எதை மிச்சம் வெச்சாலும் அது நம்மள திரும்பி வந்து தாக்கும்.  யோசிச்சு பார்த்தா அது சரின்னு தெரியும்.  நாம யோசிக்கவே வேண்டாம்னுதான் அந்த காலத்துப் பெரியவங்க யோசிச்சிருக்காங்க இருந்தாலும் நாம யோசிப்போமே.  இதுல முக்கியமான ஒன்னு பகை.  அதை அழிக்க பலர் உபயோகிச்ச வழி என்னன்னு பார்த்தால் நெருப்புன்னு தெரியவரும்.  ஒரு ராஜா ஒரு அண்டை நாட்டை தாக்கி அவங்களை வெற்றி பெற்றால், உடனே அவங்களோட இடத்தை தீ வைச்சு அழிப்பாங்க.  இது அந்த நாட்டு மக்களோட மனதுல ஒரு பயத்தையும், அவங்களுக்கு பெரிய செலவையும் கொடுக்கும்ங்கரதும் ஒரு காரணம்.

புராணக் கதையில் சிவன், அசுரர்கள் மூனு பேரோட இடத்தையும் ஒரு சிரிப்பு சிரிச்சு எரிச்சதனால அவரோட பேரே திரிபுராந்தகன்.  அதே மாதிரி அனுமன் இலங்கைக்கு தீ வெச்சார், சிவன், மன்மதனை எரிச்சார்.  இந்த மாதிரி எரிக்கர வேலைகளை செஞ்சது எல்லாம் சிவ பெருமான்தான்.  அனுமன் சிவனோட அம்சம்கரது சொல்லித் தெரியவேண்டியதில்லை.  கந்தபுராணத்துல, மன்மதனை தவம் செய்யர சிவபெருமான் மேல மலர் அம்பு போட ப்ரம்மன் சொல்லும் போது மன்மதன் சொல்றான், அவரை ஒன்னும் பண்ண முடியாது காரணம் அவருக்கு "கையும் தழலாம், மெய்யும் தழலாம், நகையும் தழலாம்" அதே சமயம், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பஞ்ச பூதங்கள் இருக்குங்கு.  பஞ்ச பூதம்னா,  காற்று, நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாசம் அல்லது வெளி.

காற்று - நம்மோட சுவாசப் பைல காற்று இருக்கு.  நிலம் - நம்மோட மூளை மணல் துகல்களால் ஆனதுங்கரதை விஞ்ஞானிகளும் ஆராய்ந்து சொல்லியிருக்காங்க, அதனால நிலம் நம்ம உடம்புல இருக்கு.   நீர் -  தண்ணீரை நாம் குடிப்பதானாலும், இரத்தத்திலும் நீர் இருப்பதாலும் நம்ம உடம்புல நீர் இருக்கு.  நெருப்பு - எல்லோருடைய அடி வயிற்றிலும் நெருப்பு இருக்கு அதனால் நாம சாப்பிடர சாப்பாடு செறிக்கிறது, உடல் நிலை சரியில்லைன்னா, உடம்பு சூடாகிறது, அந்த அடி வயிற்று நெருப்பை குண்டலினி யோகத்தின் மூலம் ஒரு ஜோதியாக நம்ம புருவத்தின் மத்திக்கு கொண்டுவந்தால் ஒரு நீல வர்ணம் தெரியும்னு சொல்லப் படுகிறது, அதுதான் வெளின்னும் சொல்றாங்க.

இதையெல்லாம் நினைவு வெச்சு நமக்கு இந்தப் பாடல்ல பட்டினத்துஸ்வாமிகள் சொல்றார்:

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

இதுல முன்னை ங்கரது முன் + ஐ - அதாவது சிவ பெருமான்னு தெரிஞ்சுக்கனும்.
பின்னை என்பது - பின் + ஐ - அதாவது  லெட்சுமி - சீதை ந்னு தெரிஞ்சுக்கனும்.  அனுமன் தீ வைத்தாலும் அதனை செயல் படுத்தியது சீதை.
அன்னை இட்ட தீ - இதற்கு ரெண்டு அர்த்தம் இருக்கு, ஒன்னு - பட்டினத்துஸ்வாமிகளின் தாயார் இறந்து அந்த துக்கம் ஸ்வாமிகளின் வயிற்றில் ஒரு தீயை மூட்டுகிறது. ரெண்டு - நமது அடிவயிற்றில் இருக்கும் அந்தத் தீ, இந்தத் தாயின் கருப்பையில் இருந்து வந்ததால் நமக்கு வந்தது அதனால் அடிவயிற்றுத் தீ இந்த அன்னை தந்தது.

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி வளர்ப்பாளாம், அந்தக் குழந்தை வெளியில் விளையாடப் போனால் அந்தக் குழந்தை பின்னாடியே போவாளாம், அப்படி போய், அந்தக் குழந்தை விளையாடும் போது வெட்டப் படாமல் இருக்கர அந்தக் குழந்தையோட சிகையைப் பார்த்து ஒரு சிறு குருவி கூடு கட்டிடலாம்னு நினைச்சு அந்தக் குழந்தையை சுத்தி வட்டமா பறக்குமாம், அதை விரட்டுவாளாம்.  பறவைகள் குழந்தை கையில் இருக்கர பட்சணத்தை பறிக்க வருமாம், அதனால அதை விரட்டுவாளாம்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த கை தாயின் கை ந்னு இந்தப் பாடல்ல சொல்றார்.

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே
பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல்
கோதாட்டி, என்னைக் கருதி
வளர்தெடுத்த கை.

இப்படி என்னை வளர்த்த கை இப்போது பாவியாகிய நான் வெச்ச நெருப்பால் வெந்து பொடி சாம்பல் ஆகுதே என்ன செய்வேன்னு சொல்றார்.

முரளி இராமச்சந்திரன்
தொடரும்.

Tuesday, May 20, 2014

தாய் - 2

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

நாமெல்லோரும், மாடு, ஆடு இதெல்லாம் கன்று ஈன்று பாத்திருப்போம்.  அதெல்லாம் கன்று ஈன்றதும், கொஞ்ச நேரம் அதன் குட்டிகளோடு இருக்கும், அப்புறம், அந்த குட்டிகள்தான் தாயைத் தேடி வரனும்.  யாராவது குட்டிகள் கிட்ட வந்தா அப்போ தாய் பசுவோ அல்லது தாய் ஆடோ பயந்து போய் அவங்க கிட்ட இருந்து குட்டியை காப்பாத்த ஓடி வரும் மத்தபடி குட்டிகள் அதனோட தாயின் அருகாமையில நல்லா விளையாட்டிட்டு இருக்கும்.  ஆனா மனிதக் குழந்தைகள் விஷயம் அப்படி இல்லை, குழந்தைகள் ஒரு 2-3 வயசு வரும் வரைக்கும், அம்மாவோட அன்றாட பராமரிப்பு, இல்லை இல்லை ஒவ்வொரு கணமும் அம்மாவோட பராமரிப்பு அவசியம் தேவை.  ஒரு தாய்ப் பறவை அதன் குஞ்சுகளுக்கு தேவையான உணவை கொண்டு வந்து ஒவ்வொரு குஞ்சின் வாயிலும் தானே ஊட்டும், பிறகு அந்தக் குஞ்சிற்கு இறக்கை முளைத்து பறக்க துவங்கியதும், அதை விரட்டி விட்டுவிடும்.  ஆனால் நம்மை வளர்க்கும் அம்மா ஒரு போதும் மகனையோ மகளையோ அப்படி விரட்டி விடுவதில்லை.

நமக்கு கிடைக்கும் முதல் மெத்தை அம்மாவின் மடிதான், தூளி அம்மாவின் கைகள்தான், தொட்டில் அம்மாவின் தோள்கள்தான், போர்வை அம்மாவின் புடவைதான், நாம் பெற்ற முதல் காதல் அம்மாவின் காதல்தான்.

வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டுவேன்

இந்தப் பாடலில் வரும் "முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றி" என்ற வரிகளை பாசமலர் என்ற படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல என்ற பாடலிலும் பார்க்கலாம்.

நாம் பிறப்பதற்கு முன்னாடி எவ்வளவு தொல்லைகளை அம்மாவுக்கு கொடுத்தாலும், அம்மா அதற்காக நம்ம கிட்ட கோபம் காட்டரது இல்லை.  குழந்தை நடு இரவில வீல்ன்னு கத்தும், பத்து நாள் சாப்பிடாத மாதிரி கதறும், நாம தங்கும் விடுதி (apartment) மேல கீழ இருக்கர அடுத்த குடித்தனக்காரங்க அடுத்த நாள் சண்டைக்கு வர்ர மாதிரி இருக்கும் நிலைமை, அப்போ, என்னை மாதிரி பொறுப்பில்லாத தகப்பன்கள் பட்டுனு எழுந்து தலைகாணியை எடுத்திட்டு அடுத்த ரூமுக்கு போயி தூங்கிடுவோம், ஆனா, அம்மா அப்படி இல்லை, அவ வீட்டு வேலைகளை முடிச்சுட்டு படுத்து ஒரு அரை மணி நேரம்தான் ஆயிருக்கும், இருந்தாலும், சலிக்காம எழுந்து ஒரு கோப்பை பாலை சுடப் பண்ணி அதை பக்குவமா சூடாற்றி, ஒரு பாட்டிலில போட்டு, குழந்தைக்கு கோடுத்தா அது ரெண்டு வாய் குடிச்சுட்டு தூங்கிடும்.  இது நம்மை மாதிரி சாதாரண மக்களுக்கு நடக்கர விஷயம் மட்டும் இல்லையாம்.  முருகன் இப்படித்தான் இருப்பானாம்.  அதை கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்துல "எள்ளத்தணை வந்து உறு பசிக்கும்" நு எழுதறார்.  எள் அளவு பசி அதுவும் உறு பசி, அதாவது தாங்க முடியாத பசி கொண்டவன் முருகப் பெருமான்னு சொல்றார்.

இதைப் பட்டினத்துஸ்வாமிகள் பாடும் அழகைப் பாருங்கள்:

நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி முலை தந்து
வளர்தெடுத்துத் தாழாமே அந்திப் பகல் 
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யிலே தீ மூட்டுவேன்.

குழந்தை முதல் முதலா பேசரதை கேக்கரது ஒரு ஆனந்தம்.  அதை வார்த்தைகளால வர்ணிக்க முடியாது.  திருவள்ளுவர் - "குழலினிது யாழினிது என்பர், தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர்" நு எழுதறார்.  அதுலயும் தம் மக்கள் இதுதான் முக்கியம்.  அடுத்த வீட்டு குழந்தை ஒன்னே முக்கால் வயசு, மழலையாப் பேசினா இந்த வீட்டுல அப்பாவும் அம்மாவும் சொல்வாங்க, "ஒன்னே முக்கா வயசு ஆச்சு இன்னும் என்ன மழலை பேச்சு அது விளங்கினாப்புலதான்"னு.  ஆனா அதே சமயம் இவங்களோட 12 வயசு பையன் கொஞ்சி கொஞ்சி பேசினா, "அவன் வெகுளி, பால் மணம் மாறாத பாலகன்".  இதுதான் அந்த தம் மக்கள்ங்கரதுக்கான வித்தியாசம்.  அப்படி நாம செய்யர, சொல்ற எல்லாத்தையும், பார்த்து பார்த்து ரசிச்சு, ரசிச்சு, மகிழ்ந்து, நம்மை கொஞ்சி குழாவி, சீராட்டி பாராட்டி வளர்பவள் தாய்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த தாய்க்கு நாம பலப் பல நல்ல ஆகாரங்களை செய்து தந்து அவளுக்கு தினமும் வித விதமான உணவு தந்து பராமரிப்பது நம்ம கடமை.


அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பு மானே
என அழைத்த வாய்க்கு

அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனவழைத்த வாய்க்கு


முரளி இராமச்சந்திரன்
தொடரும்