Wednesday, May 21, 2014

தாய் - 3

தாய் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
தாய் இரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனு நீதியில 4 விஷயங்களை விட்டு வெக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்குன்னு துக்ளக் ஆசிரியர் சோ சொல்லுவார்.  ஒன்னு - விஷம், ரெண்டு - பகை, மூனு - பாம்பு, நாலு - நெருப்பு.  இதுல எதை மிச்சம் வெச்சாலும் அது நம்மள திரும்பி வந்து தாக்கும்.  யோசிச்சு பார்த்தா அது சரின்னு தெரியும்.  நாம யோசிக்கவே வேண்டாம்னுதான் அந்த காலத்துப் பெரியவங்க யோசிச்சிருக்காங்க இருந்தாலும் நாம யோசிப்போமே.  இதுல முக்கியமான ஒன்னு பகை.  அதை அழிக்க பலர் உபயோகிச்ச வழி என்னன்னு பார்த்தால் நெருப்புன்னு தெரியவரும்.  ஒரு ராஜா ஒரு அண்டை நாட்டை தாக்கி அவங்களை வெற்றி பெற்றால், உடனே அவங்களோட இடத்தை தீ வைச்சு அழிப்பாங்க.  இது அந்த நாட்டு மக்களோட மனதுல ஒரு பயத்தையும், அவங்களுக்கு பெரிய செலவையும் கொடுக்கும்ங்கரதும் ஒரு காரணம்.

புராணக் கதையில் சிவன், அசுரர்கள் மூனு பேரோட இடத்தையும் ஒரு சிரிப்பு சிரிச்சு எரிச்சதனால அவரோட பேரே திரிபுராந்தகன்.  அதே மாதிரி அனுமன் இலங்கைக்கு தீ வெச்சார், சிவன், மன்மதனை எரிச்சார்.  இந்த மாதிரி எரிக்கர வேலைகளை செஞ்சது எல்லாம் சிவ பெருமான்தான்.  அனுமன் சிவனோட அம்சம்கரது சொல்லித் தெரியவேண்டியதில்லை.  கந்தபுராணத்துல, மன்மதனை தவம் செய்யர சிவபெருமான் மேல மலர் அம்பு போட ப்ரம்மன் சொல்லும் போது மன்மதன் சொல்றான், அவரை ஒன்னும் பண்ண முடியாது காரணம் அவருக்கு "கையும் தழலாம், மெய்யும் தழலாம், நகையும் தழலாம்" அதே சமயம், ஒவ்வொரு மனிதனின் உடலிலும் பஞ்ச பூதங்கள் இருக்குங்கு.  பஞ்ச பூதம்னா,  காற்று, நிலம், நீர், நெருப்பு மற்றும் ஆகாசம் அல்லது வெளி.

காற்று - நம்மோட சுவாசப் பைல காற்று இருக்கு.  நிலம் - நம்மோட மூளை மணல் துகல்களால் ஆனதுங்கரதை விஞ்ஞானிகளும் ஆராய்ந்து சொல்லியிருக்காங்க, அதனால நிலம் நம்ம உடம்புல இருக்கு.   நீர் -  தண்ணீரை நாம் குடிப்பதானாலும், இரத்தத்திலும் நீர் இருப்பதாலும் நம்ம உடம்புல நீர் இருக்கு.  நெருப்பு - எல்லோருடைய அடி வயிற்றிலும் நெருப்பு இருக்கு அதனால் நாம சாப்பிடர சாப்பாடு செறிக்கிறது, உடல் நிலை சரியில்லைன்னா, உடம்பு சூடாகிறது, அந்த அடி வயிற்று நெருப்பை குண்டலினி யோகத்தின் மூலம் ஒரு ஜோதியாக நம்ம புருவத்தின் மத்திக்கு கொண்டுவந்தால் ஒரு நீல வர்ணம் தெரியும்னு சொல்லப் படுகிறது, அதுதான் வெளின்னும் சொல்றாங்க.

இதையெல்லாம் நினைவு வெச்சு நமக்கு இந்தப் பாடல்ல பட்டினத்துஸ்வாமிகள் சொல்றார்:

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

இதுல முன்னை ங்கரது முன் + ஐ - அதாவது சிவ பெருமான்னு தெரிஞ்சுக்கனும்.
பின்னை என்பது - பின் + ஐ - அதாவது  லெட்சுமி - சீதை ந்னு தெரிஞ்சுக்கனும்.  அனுமன் தீ வைத்தாலும் அதனை செயல் படுத்தியது சீதை.
அன்னை இட்ட தீ - இதற்கு ரெண்டு அர்த்தம் இருக்கு, ஒன்னு - பட்டினத்துஸ்வாமிகளின் தாயார் இறந்து அந்த துக்கம் ஸ்வாமிகளின் வயிற்றில் ஒரு தீயை மூட்டுகிறது. ரெண்டு - நமது அடிவயிற்றில் இருக்கும் அந்தத் தீ, இந்தத் தாயின் கருப்பையில் இருந்து வந்ததால் நமக்கு வந்தது அதனால் அடிவயிற்றுத் தீ இந்த அன்னை தந்தது.

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி வளர்ப்பாளாம், அந்தக் குழந்தை வெளியில் விளையாடப் போனால் அந்தக் குழந்தை பின்னாடியே போவாளாம், அப்படி போய், அந்தக் குழந்தை விளையாடும் போது வெட்டப் படாமல் இருக்கர அந்தக் குழந்தையோட சிகையைப் பார்த்து ஒரு சிறு குருவி கூடு கட்டிடலாம்னு நினைச்சு அந்தக் குழந்தையை சுத்தி வட்டமா பறக்குமாம், அதை விரட்டுவாளாம்.  பறவைகள் குழந்தை கையில் இருக்கர பட்சணத்தை பறிக்க வருமாம், அதனால அதை விரட்டுவாளாம்.  அப்படி பார்த்து பார்த்து வளர்த்த கை தாயின் கை ந்னு இந்தப் பாடல்ல சொல்றார்.

வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே
பாவியேன் ஐயகோ மாகக் குருவி பறவாமல்
கோதாட்டி, என்னைக் கருதி
வளர்தெடுத்த கை.

இப்படி என்னை வளர்த்த கை இப்போது பாவியாகிய நான் வெச்ச நெருப்பால் வெந்து பொடி சாம்பல் ஆகுதே என்ன செய்வேன்னு சொல்றார்.

முரளி இராமச்சந்திரன்
தொடரும்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!