Wednesday, November 16, 2011

பின்னூட்டங்களில் இருக்கும் நகைச்சுவை - பகுதி 1.


சமீபத்தில் நாகு, அவர்  அதிகம் எழுதாமல் பின்னூட்டமே போட்டுக் கொண்டிருப்பதற்கு வருத்தப் பட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  அதைப் படிச்சதும் எனக்கு ஒன்னு தோணிச்சு, பின்னூட்டம் எழுதரது கஷ்டம் அதுவும் காமெடியா எழுதரது ரொம்ப கஷ்டம்.  அதுலயும் தெரிஞ்சவங்க எழுதி அதுக்கு பின்னூட்டம் போடரது ரொம்ப ரொம்ப கஷ்டம்.  நான் எழுதரதுக்கெல்லாம் சூப்பர்ன்னு பின்னூட்டம் வந்தா, பாவம் எவ்வளவு கஷ்டப் பட்டு படிச்சுட்டு அதுக்கு தலையெழுத்தேன்னு பின்னூட்டம் போடராங்களேன்னு நினைச்சுப்பேன்.  அதாவது நான் சொல்ல வந்தது என்னன்னா, தெரிஞ்சவங்க எழுதினா சூப்பர்ன்னு தான் பின்னூட்டம் போடுவாங்க.  தெரியாதவங்க எழுதினா?

எப்படி போடுவாங்க?  இப்படி போடுவாங்க:
இடம்: விகடன்:
தலைப்பு: அன்று எம்.ஜி.ஆர்சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!
மனம் திறக்கும் ராசாத்தி அம்மாள்:

னிமொழியின் சிறைப் படலத்துக்குப் பிறகு முதன்முறையாக இங்கே மனம் திறக்கிறார் ராஜாத்தி அம்மாள்...
 ''ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்தப்பகனிமொழி தீவிர அரசியலில் இல்லைஅது எப்போ எம்.பிஆச்சுஎப்போ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடந்ததுனு ஒப்பிட்டுப் பார்த்தாலே... கனிமொழிக்கு இதில் எள்முனை அளவுகூடச் சம்பந்தம் இல்லைங்கிறது தெரியும்ஆனாதிட்டமிட்டு கனிமொழியை ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இழுத்துவிட்டுட்டாங்ககனிமொழியை விசாரிச்ச சி.பி.அதிகாரிகளுக்கே எங்கள் தரப்பில் இருக்கும் அடிப்படை நியாயம் புரியும்இருந்தும் 150 நாட்களுக்கும் மேலா கனிமொழி சிறையில் இருக்குதுஜாமீன் மனுவுக்கு ஆட்சேபணை தெரிவிக்க மாட்டோம்னு சி.பி.தரப்பே சொன்ன பிறகும்கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு இருக்குகோர்ட்டுக்கு கனிமொழி வந்தப்ப, 'கவலைப்படாதம்மா... உன்னோட கஷ்டங்களுக்கு எல்லாம் இன்னிக்கு விடிவு கிடைச்சிடும்னு ஆறுதல் சொன்னேன்எப்பவும் சிரிக்கிற மாதிரியே மென்மையா சிரிச்சதுஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சதுஅந்த சிரிப்பில் இருக்கிற துயரம் எனக்கு மட்டும்தான் தெரியும்ஒரே ஒரு பெண்ணைப் பெத்தெடுத்துஇப்படி அல்லாடவிட்டுட்டோமேனு என் மனசு கொதிக்குது!'' என்றபடியே கண் கலங்கியவரிடம் சற்று இடைவெளிக்குப் பின் நம் கேள்விகளை வைத்தோம்.
''ஜாமீன் நிராகரிப்புக்குப் பிறகு கனிமொழி என்ன மன நிலையில் இருக்கிறார்?''
''பெத்த தாயா நான்தான் கனிமொழிக்கு ஆறுதல் சொல்லணும்ஆனாகனிமொழி என் கையைப் பிடிச்சு எனக்கு ஆறுதல் சொல்லுதுநான் கண் கலங்கியதைப் பார்த்து, 'அழுவுறதால ஏதும் ஆகப் போறது இல்லம்மா... ஜாமீன் கிடைக்காததுல உங்களுக்குத் தாங்க முடியாத வருத்தம்தான்ஆனாஎதையும் தாங்குற வல்லமையை இந்த மாதிரியான பிரச்னைகளே எனக்குக் கொடுத்துச்சுனு சொன்னதுதிகார் ஜெயில்ல இருந்து கோர்ட்டுக்குக் கிளம்பினப்பஅங்கே இருக்கிற கைதிகளோட குழந்தைகள் சிலர், 'இனிமேல் இங்க வர மாட்டீங்களா?’னு அழுது இருக்காங்கஎங்கே போனாலும் யாரோட கஷ்டத் தையும் பொறுக்காத குணம் என் பொண் ணுக்குபெட்ஷீட்சாப்பாடுபழங்கள்னு சிறைக்குள் இருக்கிற அந்தக் குழந்தைகளுக்கும் கனிமொழி நிறைய உதவுதுமறுபடியும் சிறைக்குக் கிளம்பிய கனிமொழிஅந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறதுக்காக சாக்லேட் வாங்கிவரச் சொன்னதுஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும். 'பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்குஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்னு சொல்லிட்டுக் கிளம்பிப் போச்சுஎல்லாத்தையும் கடந்த மனுஷியா என் மக பேசுறதைத் தாங்க முடியலைஇந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?''
''கனிமொழியைச் சிக்கவைத்ததிலும்அடுத்தடுத்த சில நிகழ்வுகளிலும் காங்கிரஸ் கட்சியின் சில கோபங்களும் இருப்பதாகச் சொல்கிறார்களே?''
''இதில் யாரோட கோபம் இருந்தாலும் சரி... ஒரு சின்னப் பையனோட தாயா கனிமொழியை ஒரு நிமிஷம் நினைச்சுப் பார்க்கணும்மகனைப் பிரிஞ்சு திகார்ல அது படுறபாட்டை ஒரு தாயா என்னால தாங்க முடியலைகலைஞர் டி.வி-க்கு 200 கோடி ரூபாய் வந்ததா சொல்லப்படுற விவகாரத்தில்கனிமொழிக்குச் சம்பந்தம் இல்லைனு அதிகாரிகளுக்கும் தெரியும்அரசியல் பண்றவங்களுக்கும் தெரியும்கனிமொழியைக் காப்பாத்தச் சொல்லி நாங்க கெஞ்சலைஅனுபவிக்க வேண்டிய அத்தனை சிரமங்களையும் அது அனுபவிச்சிட்டுதுஒரு விசாரணைக் கைதியோட நியாயமான கோரிக்கைதானே ஜாமீன் கேட்கிறதுஅதைத் தடுக்கிற விதமா வழக்குல திடீர்னு இரண்டு பிரிவுகளைப் புதுசாச் சேர்த்து ஏன் கனிமொழியைச் சிக்கவைக்கணும்அதைத் தாண்டியும் ஜாமீன் கேட்பதற்கான எல்லா வாய்ப்புகள் இருந்தும்அது எப்படிச் சாத்தியம் இல்லாமப்போச்சுனு எங்களுக்குப் புரியலை.

நாங்க சட்டத்தை மதிக்கிறோம்நீதியை நம்புறோம்என் பொண்ணு தவறு பண்ணி இருந்தால்எல்லா விசாரணைகளையும் நடத்தி என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்கஆனாவிசாரணைக் கைதியாவே கனிமொழியைச் சாகடிச்சிடாதீங்ககனிமொழிக்கு எதிரான சதியை யார் பண்ணினாலும் சரி... ஒரே ஒரு தடவை திகார் ஜெயிலைப் போய்ப் பார்த்துட்டு வாங்கஉங்களால் ஒரு நாள் அங்கே இருக்க முடியும்னு தோணுச்சுன்னாநீங்க தொடர்ந்து பண்ணுங்க!''
''நீங்களும் கருணாநிதியும் சோனியா காந்தியை நேரில் சந்தித்து கனிமொழிக்காக மன்றாடியதாகச் சொன்னார்களே?''
''அவர் (கருணாநிதிமகளைப் பார்க்கிறதுக்காகத்தான் டெல்லிக்கு வந்தார்அப்போ சோனியா காந்தி அம்மையாரைச் சந்திக்காமத் திரும்புவது அரசியல் நாகரிகமாக இருக்காதுன்னுதான் அந்தச் சந்திப்பு நடந்துச்சுஅமெரிக்காவுக்கு சிகிச்சைக்குப் போய் வந்ததுக்கு அப்புறம் சோனியா காந்தியை அவர் சந்திக்கலைஅதனால்உடல் நலம் சம்பந்தமாத்தான் ரெண்டு பேரும் பேசினாங்களே தவிரகனிமொழிபத்திப் பேசலைஇன்னிக்கு கனிமொழி எந்த மாதிரியான துயரத்தை அனுபவிக்கிதுனு நாங்க சொல்லாமலே சோனியா காந்தி அம்மையாருக்குத் தெரியும்யார் மேலயும் வருத்தப்படுற நிலையில் நாங்க இல்லை!''
''ஓர் இலக்கியவாதியாக மட்டுமே இருந்த கனிமொழியை அரசியலுக்கு இழுத்து வந்து இப்படி ஆக்கிவிட்டீர்கள் என்று உங்களைக் குற்றம் சாட்டுகிறார்களே?''
''கனிமொழியைக் கையைப் பிடிச்சு யாரும் அரசியலுக்கு இழுத்து வர வேண்டியது இல்லைஅது சின்னக் குழந்தையா இருந்தப்பவே அரசியல்ரீதியான ஆர்வத்தை நிறைய பேர் ஊட்டினாங்கஎம்.ஜி.ஆர்அவர்கள் கனிமொழியை அள்ளிக் கொஞ்சி, 'உங்க அப்பா மாதிரி நீ வருவம்மானு சொன்னார்வேறு யாரைப் பார்த்தும் எம்.ஜி.ஆர்அப்படிச் சொன்னது இல்லைஅவர் மனசாரச் சொன்ன வார்த்தைகள்தான் இன்னிக்கு நடந்திருக்குஐந்து முறை முதல்வரா இருந்தவரோட மகளை அரசியலுக்கு யாரும் இழுத்து வரணும்கிற அவசியம் இல்லைகனிமொழி சின்னப் பொண்ணா இருந்தப்ப கோயம்புத்தூருக்கு விமானத்தில் போய்ட்டு இருந்தோம்நாவலர் நெடுஞ்செழியனும் குடும்பத் தோட வந்திருந்தாங்கஅப்போ விமானம் தரை இறங்குறப்ப வேகமாக் குலுங்குச்சுநான் பயந்துபோய், 'முருகானு கத்தினேன்அப்போ கனிமொழி என்ன சொன்னுச்சு தெரியுமா... 'ஏம்மாமுருகானு கத்துறமு.-னு கத்தியிருக்க வேண்டியதுதானேநீ முருகானு கத்தினதைப் பார்த்துசுத்தி இருக்கிறவங்க தலைவரைத் தப்பா நினைக்க மாட்டாங்களானு அஞ்சாவது படிச்சப்பவே பகுத்தறிவுக்கொழுந்தா இருந்த கனிமொழிஅரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யமே இல்ல.  
தலைவரைக் கைது பண்ணின நாள்தான் கனிமொழியோட அரசியலை வெளிக்கொண்டுவந்த நாள்சிறை வாசல்ல உட்கார்ந்து அவர் துடிச்ச துடிப்பு யாருக்கும் மறந்திருக்காதுஅரசியலுக்கு வந்ததுக்கு அப்புறமும் கனிமொழி ஓர் இலக்கியவாதியா மட்டுமே இருக்கிறதை நினைக்கிறப்பதான் கஷ்டமா இருக்குபதவிகளுக்கு ஆசைப்படுற சராசரி அரசியல்வாதியா கனிமொழி இல்லைகடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திஎத்தனை லட்சம் பேருக்கு அது வாழ்வு ஏற்படுத்திக்கொடுத்துச்சுனு எல்லோருக்குமே தெரியும்.  ஊனமுற்றவர்களுக்காகவும் திருநங்கைகளுக்காகவும் அது எந்த அளவுக்கு ஆத்மார்த்தமா நல வாரியம் போன்ற ஆக்கப்பூர்வ உதவிகளைச் செஞ்சுதுனு எல்லோருக்குமே தெரியும்உதவிகளை மட்டுமே செஞ்சதாலதான்இன்னிக்கு இவ்வளவு பெரிய கொடுமைகளை அனுபவிக்கிற நிலையில இருக்குஅரசியலையும் செஞ்சிருந்தா உள்ளே போயிருக்க வேண்டிய அவசியமே உண்டாகி இருக்காது!''
''செய்த தவறுக்குத்தானே கனிமொழி கஷ்டப்படுகிறார் எனச் சிலர் சொல்வதுபற்றி?''
''நெருப்புல குதிக்கிறவரைக்கும் சீதை யும் தவறானவளாத்தான் பார்க்கப்பட்டாள்இதிகாசத்திலேயே இப்படித்தாங்கிறப்பநிகழ்காலத்தில் எங்களை நோக்கி வர்ற விமர்சனங்களைச் சட்டைபண்ற நிலையில் நாங்க இல்லைகனிமொழியை மீட்க எல்லோருமே போராடுறோம்கட்சிஉறவுனு எல்லோருடைய அன்பையும் அக்கறையையும் நினைச்சுப் பார்க்கிறோம்குற்றம் சாட்டப்பட்டாலே குற்றவாளியாப் பார்க்கிறதும் பேசுறதும் இங்கே எல்லாருக்கும் பழக்கம் ஆயிடிச்சுபேசுறவங்க என்ன வேணும்னாலும் பேசட்டும்... ஆனா, 200 கோடி ரூபாய்க்கும் கனிமொழிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைனு நிச்சயம் நீதிமன்றம் ஒரு நாள் சொல்லும்அதுவரைக்கும் எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!''

இனி பொதுமக்களின் பின்னூட்டங்கள்.  இதில் சொல் பிழைகளை விட்டுடுங்க.  அவங்க உணர்வுகளை மட்டும் பாருங்க. 

  •  கடவுள் நல்லவர்களை அதிகம் சோதிப்பார் ஆனால் கை விட மாட்டார்கெட்டவர்களுக்கு நிறையா தருவார் ஆனால் ஜாமீன் தரமாட்டார்.!


  •  நாங்க ஏங்க திஹாருக்கு போயி பார்க்கணும், 200 கோடி நாங்களா அடிச்சோம்? அப்படிப்போடு... போடு... போடு...!


  • கண்ணே கனியம்மா வைத்து விடுவார்கள் உனக்கு ஆப்பாம்மானு அன்றே எம்ஜீஆர் சொன்னரோன்னு நினைச்சேன்.


  •  ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும்" - அக்கா வெளியதான் எல்லாருக்கும் அல்வா குடுத்துட்டாங்களேஅதான் அல்வா ஸ்டாக் காலியாயிருக்கும் சாக்லேட் குடுத்துருக்காங்கவிடுங்க தலைவர்கிட்டே சொன்னமுன்னா கிண்டித் தந்துட்டு போறாரு!


  • ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரிச்சப்பவும் அதே மாதிரி சிரிச்சது." - ஏதாவது பேதலிச்சிருக்கலாம்.


  • கனியக்காவிற்க்கு ஒரு லேப்டாப் குடுத்துஅதில் விகடன் வாசகர்களின் கமென்ட்டை படிக்க ஒரு வாய்ப்பு தாருங்கள்...


  • சின்ன வயசு...எந்த பள்ளியில படிக்குது புள்ளபிஞ்சுலே பழுத்ததோ?  தீவிர அரசியலில் .....லேசான அரசியல் .....விளக்க முடியுமா அம்மையாரே?



  • கனி: 'பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்குஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்


மக்கள்நாங்கள் படவேண்டிய நஷ்டத்தையெல்லாம் பட்டாச்சுஇனி புதுசா என்ன இருக்குபணம் கிடைக்கலைன்னாலும் நாங்கள் கவலைப்படமாட்டோம்...

  • இப்படியே போச்சுன்னா 1 லட்சத்தி 75 ஆயிரத்த தாண்டி போயிரும் ஆமா சொல்லிபுட்டேன்.....கருதுக்களின் எண்ணிக்கையை சொன்னேன்.


  • என்னடா நாராயணா .... உள்ள ஒரே புழுக்கம் ...ஓஹ்ஹொ ஹ்ஹொஹ்ஹோ ... சீபீஅய்னாலே இதெல்லாம் இருக்கறதானடா ...... ..... .....அரசியல்வாதினாலே தியாகிகள்தானே ...... ஆயிரம் என்கொயரீஸ்.......ஆயிரம் எங்கேஜ்மென்ட்ஸ் ..... அய்ய்யோ அய்யோ ....இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும் ....எனக்கு செல வெப்பாங்க ....ஸ்டூடன்ட்ஸெல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க ................................ சத்திய சோதன ............ பாரதமாதாவே சோ சாரீ ..... அரசியல்னா இதெல்லாம் சாதாரணமப்பா ......


  • எனக்கு ஒரு டவுட்டுஜெயிலுக்கு போய்ட்டு வந்தால் அரசியலில் முதிற்சி வந்திருமாஅப்படீன்னா கனி இன்னும் கொஞ்ச நாள் உள்ளுக்கு இருந்தால் இன்னும் முத்தும் தானேஎப்பிடி என் டவுட்டு.


  • சோனியா காந்தியிடம் "கனிமொழி காப்பிட்டு திட்டம்எடுபடவில்லை....


  • ஒரு தாயா உங்க மகளை பார்க்குறது சரி.... ஒரு அப்பாவி இந்தியனாய் ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகளை கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன்...


  • அடிச்சது ஒன்னேமுக்கால் லட்சம் கோடிபடிச்சது 150 நாட்கள் திஹார் சிறையில்... கூட்டி கழிச்சு பார்த்தாலும் கணக்கு ஒட்ட மாட்டேங்குதே... ஒன்னேமுக்கால் லட்சம் கோடிகள் அடிச்சுட்டுஅரை கிலோ சாக்லேட் வாங்கி தருவது பெரிய காரியமா???


  • கண்ணகியின் கலக்கம்..!
  • அடுத்து வள்ளுவருக்கும் கலக்கும்..


  • எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!''--------> ஈரமான ரோசாவேநன்றே நடக்கட்டும்அதுவும் இன்றே நடக்கட்டும்காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போகலாம்.


  • ஏம்மாமுருகானு கத்துறமு.கநு கத்தியிருக்க வேண்டியதுதானேநீ முருகானு கத்தினதைப் பார்த்துசுத்தி இருக்கிறவங்க தலைவரைத் தப்பா நினைக்க மாட்டாங்களானு அஞ்சாவது படிச்சப்பவே பகுத்தறிவுக்கொழுந்தா இருந்த கனிமொழிஅரசியலுக்கு வந்ததில் ஆச்சர்யமே இல்ல -  அப்ப நடிப்பு 5 வயசிலேயே ஆரம்பிச்சிருச்சாஅரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை.


  • கனிமொழிக்கு எதிரான சதியை யார் பண்ணினாலும் சரி... ஒரே ஒரு தடவை திகார் ஜெயிலைப் போய்ப் பார்த்துட்டு வாங்கஉங்களால் ஒரு நாள் அங்கே இருக்க முடியும்னு தோணுச்சுன்னாநீங்க தொடர்ந்து பண்ணுங்க - கவலைப்படாதீங்க ஸ்டாலின் திகார பாத்துட்டாருஆனாலும் சதி தொடருதே.


  • இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?' - கஷ்டம்தான், 1.76 லட்சம் கோடின்னா சும்மாவாவெயிட்டாத்தான் இருக்கும்.


  • பட வேண்டிய கவலைகளை எல்லாம் பட்டுட்டேம்மா... இனி புதுசா என்ன இருக்குஜாமீன் கிடைக்கலைன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்’ - அப்புறமென்ன இனிமே ஜாமீனுக்கு அப்ளை பண்ண வேண்டாம்.


  • ஜாமீன் மனு தள்ளுபடியானதுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும். - நல்லா விசாரிச்சு பாருங்கராசா குடும்பமும் சாக்லேட் கொடுத்திருக்கும்கனிக்கு ஜாமீன் கொடுக்காமலிருந்ததுக்காக.


  • திகார் ஜெயில்ல இருந்து கோர்ட்டுக்குக் கிளம்பினப்பஅங்கே இருக்கிற கைதிகளோட குழந்தைகள் சிலர், 'இனிமேல் இங்க வர மாட்டீங்களா?’னு அழுது இருக்காங்கஎங்கே போனாலும் யாரோட கஷ்டத் தையும் பொறுக்காத குணம் என் பொண் ணுக்கு.- அதனால இனிமே நீதிபதி ஜாமீன் கொடுத்தாலும் கனியக்கா வாங்காம சிறைக்குள்ளேயே இருப்பார்.


  • சீதைதீயில் குதிக்க எந்த நாட்டின் பல்கலையில் பயிற்சி பெற்றார் என்று தெரியவில்லையே.. தன்க்குன்னா இந்தக் கேள்வியெல்லாம் வராதில்லஅது சரி.


  • உடல் நலம் சம்பந்தமாத்தான் ரெண்டு பேரும் பேசினாங்களே தவிரகனிமொழிபத்திப் பேசலை...


... இவருதான் டாக்குடர் களைஞர் இல்ல...

  • சாக்லேட் வாங்கிக் கொடுத்த ஒரே ஆள் என் கனிமொழியாத்தான் இருக்கும்...


வழக்கமா ட்ரெய்ன்லதானே சாக்லேட் வாங்கிக் கொடுப்பாங்க (கொள்ளை அடிக்ரத்துக்கு)... அது சரி.. இப்பதான் ஜெயில்ல பணப்புழக்கம் அதிகமிருக்கே...

  • இந்தச் சின்ன வயசுல அது சுமக்க வேண்டிய கஷ்டமா இது?

      என்ன... ஒரு மூணு வயசு இருக்குமா?

  • எம்.ஜி.ஆர்அவர்கள் கனிமொழியை அள்ளிக் கொழ்ஞ்சி, 'உங்க அப்பா மாதிரி நீ வருவம்மானு சொன்னார்"............. அப்புறமென்ன..... வருங்கால முதல்வர் ரெடி...! ஸ்டாலினுக்கு ஆப்புத்தான்....!


  • முருகாவை முக என்று மாற்றியதால் இவர் இன்றுமுதல்
"வேப்பங்கொழுந்துமன்னிக்கவும் "பகுத்தறிவுக்கொழுந்து"
என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவார்



  • நெருப்புல குதிக்கிறவரைக்கும் சீதையும் தவறானவளாத்தான் பார்க்கப்பட்டாள்" - அப்புறம் ஏன் திஹாரை விட்டு வரணுமுன்னு துடியா துடிக்கிறீங்க?


  • எங்க வாழ்க்கை கண்ணீரோடவே கழியட்டும்!


ஆஹா படிக்கப் படிக்கச் சந்தோஷம்... அப்படியே ஆகட்டும் பக்தையே...

  • உங்க அப்பா மாதிரி நீ வருவம்மானு சொன்னார்.


அப்பருக்குப் புள்ளை தப்பாம பொறந்துருக்குன்னு அன்றே எம்ஜிஆர் கண்டு புடிச்சிருக்கார்... நாமதான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வர்ற வரைக்கும் அசடா இருந்துட்டோம்... கொஞ்சம் முன்னாலேயே இதைச் சொல்லியிருந்தா கொஞ்சம் அலர்டா இருந்துருப்போம்ல...

  • கனிமொழி இலக்கியவாதியாநாலு வார்த்தை எதுகைமோனையில் மொக்கையாக எழுதினால்.. மு. பொண்ணு என்பதால் ஃபேமஸ் ஆகி விட்டார்இல்லை என்றால் கை எழுத்துப்பத்திரிகை நடத்தும் எண்ணில் அடங்கதாவர் களிமொழியை விட அருமையாக இலக்கியம் படைக்கின்றனர்.


  • அன்று எம்.ஜிஆர் சொன்னது இன்று அப்படியே நடக்கிறது.


எப்புடிகலைஞர் எனக்கு ஆப்பு வெச்ச மாதிரி உங்களுக்கும் ஆப்பு வெச்சிருவாருன்னு சொன்னாரா.

  • இந்த அம்மா தொல்லையாலதான் அந்த அக்கா அரசியலுக்கு வந்துச்சு இல்லாட்டு அதுபாட்டுக்கு கிறுக்கிட்டு கவிதைன்னு பில்டப் கொடுத்துட்டு இருந்திருக்கும்.


  • நாராயணாகொசுத் தொல்லை தாங்க முடியலை.


  • ஏம்மாமுருகானு கத்துறமு..னு கத்தியிருக்க வேண்டியதுதானே. இனிமேல் 'நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முக நாக்க முகஅப்படின்னு கத்துங்க மகளையும் கத்த சொல்லுங்கமு.வையும் நாக்க முகன்னு கத்த சொல்லுங்க.



  • செந்தமிழ் மானாட்டில் ஆராய்ச்சி கட்டுரை எழுதப்பட்டு வாசிக்கப்படும் அளவுக்கு தற்பெருமையும் தகுதியும் வந்திருந்தால் கூடவே இதையும் தாங்கித்தான் ஆகவேண்டும்.


  • அன்று எம்.ஜி.ஆர்சொன்னது இன்று அப்படியே நடக்கிறது!


-      என்ன ஜாமீன் குடுக்காதீங்கன்னு சொன்னாரா?
சம்பந்தமே இல்லாத தலைப்பு

முரளி இராமசந்திரன்


Friday, November 11, 2011

தடயம் - மர்மத்தொடர்




தடயம் மர்மத்தொடரின் பதிமூன்றாம் அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.

முரளி.

Saturday, November 05, 2011

பித்தனின் கிறுக்கல்கள் - 45

இந்திய அரசியல்

சிதம்பரத்தின் ஞாபகசக்தி

சமீபத்தில் தனது துறையின் சார்பாக இவர் பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பல கேள்விகளுக்கு காமெடியாகப் பேசுவதாக உளறித்தள்ளியிருக்கிறார்.

கனிமொழி ஜாமீன் மறுப்பு

நீதிபதி ஓபி ஷைனி கனிமொழி மற்றும் அவரோடு ஜாமீன் மனு செய்திருந்த அனைவருக்கும் ஜாமீன் மறுத்து தீர்ப்பளித்திருக்கிறார். கனிமொழி மற்றும் 4-5 பேருக்கு சி.பி.ஐ ஜாமின் தருவதை எதிர்க்காத போதும் இந்தத் தீர்ப்பை தந்திருக்கிறார்.

அண்ணா நூலக இடமாற்றம்.

கருணாநிதி கட்டிய அண்ணா நூலகத்தை இடம் மாற்றி அதை ஓர் குழந்தைகள் மருத்துவமனையாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பது பெறும் எதிர்ப்பைக் கண்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி மற்றும் திருச்சி இடைத் தேர்தல்

சமீபத்தில் நடந்த தேர்தல்களில் அதிமுக அடித்து நொறுக்கி வெற்றி பெற்றிருக்கிறது.

..................

முழுப் பதிவையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.....

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Sunday, October 09, 2011

கொலு வலம்...

 தவிர்க்க முடியாத காரணத்தால் வார இறுதியில் கொலு வலம் வரவில்லை. கடேசி நாள் சில கொலுக்களை பார்த்துவிட்டு வந்தேன்.  அதனால் உள்ளூரின் பல கொலுக்கள் விட்டுப் போய்விட்டன.





Wednesday, October 05, 2011

பித்தனின் அஞ்சலி

ஆப்பிள் கம்பெனியைத் தோற்றுவித்து உலகில் எலக்ட்ரானிக்ஸ் துறையின் முன்னோடியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் காலமானார்.

இது ஆப்பிள் கம்பெனிக்கு மட்டும் இல்லாமல், நம்மில் பலருக்கும் ஒரு துயரமான நாள்.

அவருடைய ஆன்மா இறைவனின் காலடியில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன்.

பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ......

piththanp@gmail.com

பித்தனின் மற்றப் பதிவுகளை இங்கே படிக்கலாம்

Thursday, September 29, 2011

கடிலக்கரையினிலே...

நவராத்திரி ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில்  சற்று விவரம் தெரிந்தவர்களுக்கு - ரொம்ப வயதானவர்களுக்கு என்றும் சொல்லலாம் - நினைவுக்கு வரும் ஒரு ஊர் பண்ருட்டி.  இப்போதெல்லாம் பண்ருட்டி என்றால் பலாப்பழமும், முந்திரியும், மின்சார அமைச்சர் ராமச்சந்திரனும், கூடவே கொஞ்சூண்டு நாகுவும்தான் உங்களுக்கெல்லாம் நினைவுக்கு வருவார்கள். ஆனால் ஒரு காலத்தில் மண் பொம்மைகளுக்கு புகழ் பெற்றது பண்ருட்டி. உண்மையான கொலு (எங்களூர்) மண்பொம்மையில்தான் வைக்க வேண்டும் தெரியுமா? சந்தேகமிருந்தால் இங்கே படித்துக் கொள்ளுங்கள் நவராத்திரி கொலு பொம்மை தத்துவம். நான் அடுத்த வாரம் கொலுவலம் வரும்போது இந்தப் படிக்கணக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கப் போகிறேன்.


சரி - பண்ருட்டிக்குப் போவோம். பண்ருட்டி பெயர் காரணம் பற்றி எனக்குத் தெரிந்தது. பண்ருட்டியின் சரியான பெயர் பண்ணுருட்டி. அந்தக் காலத்தில் பாணர்கள் வாழ்ந்து பண் உருட்டி, உருட்டி ஊருக்கு பண்ணுருட்டி என்ற பெயர் வந்ததாம். அவற்றில் இருந்து ஒரு சில பண் எடுத்து விடு என்று சிலர் கேட்கலாம். அடுத்த மாதம் இங்கே ஒரு இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. அதில் ஒரு அரைமணி நேரம் கேட்டிருக்கிறேன். அது கிடைத்தால் நீங்களே எங்களூர் பண்ணின் பெருமையை அனுபவிக்கலாம்.

பண்ருட்டி ஒன்றும் அவ்வளவு பெரிய ஊர் இல்லை. ஊரைச் சுற்றி கடில நதி ஓடுகிறது. சரி - ஒரு காலத்தில் ஓடியது. இப்போது போனால் விவசாயிகள் ஆக்கிரமித்து ஆக்கிரமித்து ஆறையே காணோம். சென்ற முறை போனபோது என் பிள்ளை கேட்கிறான்  ஏனப்பா விவசாய நிலங்கள் மேலே உங்களூரில் பாலம் போட்டிருக்கிறீர்கள் என்று. அதுதானடா பண்ருட்டியில் விசேஷம் என்று சொல்லி வைத்தேன். ஊரின் வடக்கே வெண்ணை உருகும் முன் பெருகிய தென் பெண்ணையாறு. அதில் இப்போது மண்தான் பெருகுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஆற்று மண்கூட இருக்காது என நினைக்கிறேன்.

ஊரின் கிழக்கிலும் வடக்கிலும் செம்மண் படிந்த நிலம். அதனால்தான் மா, பலா, முந்திரி அமர்க்களமாக வளர்ந்திருக்கும். அதுவும் தரையில் குடை விரித்து உட்கார்ந்திருக்கும் முந்திரியின் அழகே அழகு.

நான்  துவக்கப் பள்ளியில் படிக்கும்போது பள்ளிக்கருகே இருக்கும் வீதிகளில் எல்லாம் வசித்தவர்கள் பொம்மை செய்யும் கலைஞர்கள். வீதிகளின் இருபுறமும் களிமண் பொம்மைகள் காய்ந்து கொண்டிருக்கும். நான் உயர்நிலைப்பள்ளி போகும்போதே அதெல்லாம் மாயமாகி விட்டது. நான் படித்தது முத்தையர் பள்ளி. நம் வெங்கட் செட்டியாரின் மாமனார் படித்ததும் அந்தப் பள்ளிதான். நான் மூணாப்பு படிக்கும்போது நடந்த நிகழ்ச்சி போன வாரம் என் நினைவுக்கு வந்தது.

அந்த நாட்களில் அணி பிரித்து விளையாடும்போது இருவர் இருவராக 'குழு பிரிந்து' கொண்டு வருவோம். இரண்டு பேர் தனியாகப் போய் ஆளுக்கு ஒரு பெயர் வைத்துக் கொண்டு வந்து நிற்கும் அணித் தலைவர்களை கேட்போம். முக்கால்வாசி - சிவாஜி வேணுமா, எம்ஜியார் வேணுமா.  சிவாஜி.  சரி நான் உன் பக்கம். இவன் எதிர் பக்கம். எனக்கு சிவாஜி, எம்ஜியார் போரடித்து விட்டது. நானும் இன்னொருவனும்  போய் 'குழு பிரிந்தோம்'.

"தென்னரசு -  பட்டாடி வேணுமா, லாயிட் வேணுமா"
"பட்டாசு."
பட்டாசு இல்லடா, பட்டாடி!. மன்சூர் அலிகான் பட்டாடி!!

பக்கத்தில் அரைத் தூக்கத்தில் இருந்த கண்ணம்மா டீச்சருக்கு ஒரே ஆச்சரியம். டேய் - இங்க வா. என்ன பேர்லாம் சொன்னே?

பட்டாடி, லாயிட் டீச்சர்.

ஏன்டா - அவங்க யாருன்னு உனக்குத் தெரியுமா?
பட்டாடி இந்திய கிரிக்கெட் கேப்டன். லாயிட் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கேப்டன் டீச்சர்.

சென்ற வாரம் பட்டாடி இறந்து போனார். எனக்கு கிரிக்கெட் என்று ஒரு விளையாட்டு தெரிந்த நாட்களில் கேப்டனாக இருந்தவர். கேப்டன் என்றால் பட்டாடிதான் என்று இருந்த நாட்கள் அவை.     (தொடரும்)





Friday, September 23, 2011

முதல் பெண் எழுத்தாளர்





                 சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இலக்கிய மன்றத்தில்  பழம்பெரும் பெண் எழுத்தாளர்   வை. மு. கோதைநாயகியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடினார்கள். விழாவையொட்டி நடைபெற்ற கருத்தரங்கில் பங்கு கொண்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
           இன்றைய தலைமுறை நாவல் ரசிகர்களுக்கு வை. மு. கோதைநாயகி பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தமிழ் நாவல் தரம் அதிக வளர்ச்சி பெறாத நிலையில் நிறைய நாவல்களை எழுதிய நாவல் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். அதுமட்டுமல்லாமல் நாட்டு விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெருமையும் இவருக்கு உண்டு. மாதம் தோறும் ஒரு நாவலை வெளியிடுவதற்காக ஒரு மாதப் பத்திரிகையை நடத்திய துணிச்சல்காரப் பெண் இவர்.
     அன்றைய காலகட்டத்தில் நாவல்களில் பல வகையான ரசனைக்கும் இடமளிக்கும் வகையில் நாவல் எழுதி வெளியிட்டனர்.  துப்பறியும் கதைகள் சமூக அவலங்களை விளக்கியும் பெண்கள் துயரத்தைப் பற்றியும் கூட்டுக்குடும்ப வாழ்க்கை குழப்பங்களை பற்றிய  எழுத்துக்களை ஒரே நாவலில் படிக்கமுடியும்.
       அன்றைய நாவல்களில் சமூகப் பிரச்னைகளைப் பற்றி அதிகம் பேசப்படவில்லை என்ற சிலருடைய விமர்சனம்
சரியானதல்ல. அன்றைய தமிழ்ச்சமுகத்தில் குறிப்பாக குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதித்தது பெண்கள் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துயரமும்தான். கூட்டுக்குடும்ப வாழ்வில் பெண்கள் பட்ட வேதனையை கோதைநாயகியினுடைய நாவல்களில் அதிகம் காணலாம்.

        இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பெரும் அளவில் வழக்கத்திலிருந்த பாலிய விவாஹம், அதன் காரணமாக ஏற்பட்ட இளம் விதவைகள், தாய் வீட்டுக்கு விதவையாக திரும்பி வந்த பெண்கள் அங்கே சந்தித்த புறக்கணிப்பு இவையெல்லாம் அன்றைய நாவல்களில் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. 1921 ம ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி பத்து வயதுக்குக்
குறைந்த விதவைப்பெண்கள் எண்ணிக்கை பத்து லக்ஷத்திற்கு மேல் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

       சிறு வயது பெண்கள் திருமண வாழ்க்கை தொடங்கியவுடன் கருத் தரிப்பதும் அதனால் ஏற்பட்ட பிரசவ கால சிக்கல்கள். அதிகமாக ஏற்பட்ட பிரசவகால மரணங்கள் அந்த நாட்களில் சகஜமான செய்திகளாக இருந்தன. மருத்துவ வசதி அதிகம் இல்லாத அந்த நாட்களில் கிராமப்புறங்களில் செய்யப்பட்ட அரைகுறை மருத்துவம் பல இளம் தாய்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்த நிலைப்பாட்டின் சமூக மற்றும் குடும்ப விளைவுகள் மிக மோசமாக இருந்தன.

        பிரசவ பிற்கால நோய்களும் பெரிய அளவுக்கு பெண்களை பாதித்தன. பல பெண்கள் திருமண வாழ்க்கைக்கு தகுதி  இல்லாதவர்களாக பலஹீனப்பட்டனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல ஆண்கள் முதல் மனைவி இருக்கும்போதே  இரண்டாம் தாரமாக  வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டனர். அன்று ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் இருந்தது. பிற்காலத்தில் பலதாரமண தடைச்சட்டம் வந்தது.  இந்த சட்டமும் மதத்தலைவர்கள் உள்பட பல செல்வாக்குள்ள  மனிதர்களுடைய எதிர்ப்புக்கு இடையில்தான் கொண்டுவர வேண்டியிருந்தது.

         நோய்வாய்ப்பட்ட முதல்மனைவி ஒரு புறமும் வீட்டை ஆளும் இன்னொரு இளம் மனைவி மறுபுறமுமாக உள்ள குடும்பத்தில் எவ்வளவு குழப்பம் ஏற்படும் என்பதை  நாமே கற்பனை செய்து கொள்ளவேண்டியதுதான்.  முதல் மனைவிக்கு குழந்தைகள் இருக்க நேர்ந்தால் அந்த குழந்தைகளும் கடுமையான சோதனைகளை சந்திக்க நேர்ந்தது. மனைவி  இறந்த பிறகு திருமணம் செய்து கொண்ட கணவர்கள் புதிய மனைவியின் மயக்கத்தில் முதல்தாரத்து பிள்ளைகளை   கவனிக்காமல் உதாசீனம் செய்ததால் ஏற்பட்ட குடும்ப பிரச்னைகளும் இளம் பிள்ளைகளின் மனபாதிப்புகளும் அதிகமாகவே இருந்தன.

          ஆகையால் சென்ற நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் வெளியான பெரும்பான குடும்ப நாவல்களின் கதைக்கான கரு சிற்றன்னை கொடுமையாகவே  இருந்ததை பார்க்கலாம். ஆரம்ப கால திரைப்படங்களும் சமூகப்பிரச்னைகளை கொண்ட தாக அமைந்தால் அநேகமாக சிற்றன்னை கொடுமையை பின்னணியாகக் கொண்டிருக்கும். மற்ற  படங்கள் அந்தநாட்களில் புராண படங்களாகவே அமைந்திருந்தன.

          இரு மனைவிகளின் மத்தியில் அல்லல்பட்ட ஆண்கள் நெறி தவறி வாழ்க்கையில் தடம் புரண்ட சம்பவங்களும் உண்டு. 
  இரண்டாம் தாரமாக அமைந்த இளம் மனைவியின் வயது வித்தியாசம் காரணமாக கணவர்களின் மனதில் எழுந்த சந்தேகம் பல பெண்களின் குடும்ப வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது.  இது போன்ற சூழ்நிலையில் இருபது வயதுக்குள், உலக ஞானமும் அதிகமில்லாமல் கல்வி அறிவும் அதிகமில்லாமல் வாழ்க்கையைத் தொடங்கிய பெண்களின் வாழ்வு பரிதாபமாகவே அமைந்திருந்தது. மன உளைச்சலைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட பெண்கள் பலர்.

       இது போன்ற பிரச்னைகளும் அன்றைய நாவல்களில் நிறையவே கையாளப்பட்டிருக்கின்றன. நான் நாவல் படிக்கத் தொடங்கிய காலத்தில் வை. மு. கோதைநாயகியின் நாவல்கள் பிரபலமாக இருந்தன. அன்றைய நாளில் மற்ற பிரபல நாவலாசிரியர்கள்  வடுவூர் துரைசாமி அய்யங்கார்,ஆரணி குப்புசாமி முதலியார், ஜெ. ஆர். ரெங்கராசு போன்றவர்கள்.
      
             கருத்தரங்கத்தில் பேசுவதற்காக அன்றைய மக்களின் சமூக வாழ்க்கை யதார்த்தத்தை சற்று கூர்ந்து பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

        அன்றைய நாவல்களில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதையத்தொடங்கிய நிலையை பல நாவலாசிரியர்கள் சித்தரிக்க முயன்றார்கள். பெண் கல்வி அதிகமில்லாத அன்றைய நாட்களில் மத்தியதரக் குடும்ப வாழ்க்கை, ஓரளவு வசதியோடு கிராமங்களில் வாழ்ந்த நிலப்பிர்புத்வ மக்கள், அவர்களுடைய குடும்ப வாழ்க்கை ,நகரங்களுக்கு குடிபெயர்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்க்கை இவைகளே நாவல்களில் காட்சிப்படுத்தப்பட்டன.  குறிப்பாக மேல்சாதி மக்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றிய விவாதமாகவே  அன்றைய நாவல்கள் அமைந்திருந்தன என்ற குற்றச்சாட்டை இன்று பல விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். . இந்த குறைபாடு ஓரளவு உண்மையே. ஆனால் இந்த விமர்சகர்கள் ஒரு பெரிய உண்மையை மறந்துவிடுகிறார்கள்.

       அன்றைய நிலையில் நாவலை படிக்கும் வாசகர்களும் இந்த குறுகிய பகுதியிலிருந்துதான் வந்தார்கள்.  நாவல்களைப் படிக்க நேரத்தை ஒதுக்கவும்  நாவல்களை வாங்க பணம் செலவு செய்யவும் அன்று இந்த குறுகிய சமூகப் பகுதியிலிருந்த மக்களால்தான் முடிந்தது. எழுத்தாளன் எப்பொழுதும் தன்னுடைய வாசகனுக்கு தக்க முறையில்தான் சொல்ல வந்த செய்திகளையும் சொல்லும் முறையையும் தேர்ந்து எடுக்கிறான்.

l அன்றைய படித்த மத்தியதர வர்க்கம் பத்திரிகைகளின் வழியாகவும்  நாவல்களின் மூலமாகவே தன்னை சுற்றியுள்ள உலகியல் மற்றும் சமூக வாழ்க்கையை புரிந்து கொண்டனர்..           
       பேராசிரியர் ஏ. ஆர். வெங்கடாசலபதி என்ற அறிஞர் இந்த வாசகர்களுடைய வாழ்க்கை முறை மற்றும் வர்க்க
மற்றும் சாதி பின்னணி பற்றி ஒரு ஆய்வு செய்து ஒரு நூல் எழுதியிருக்கிறார். 1930 களில் வெளியாகிக்கொண்டிருந்த ஆனந்தவிகடன் வாசகர்கள் பற்றி ஆராய்ந்து அவர்களுடைய வாழ்க்கை முறை, கல்விநிலை பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

    ஆகவே எந்த ஒரு காலத்திலும் வெளியான நாவல்கள் தோன்றிய காலத்தின் பிரச்னைகளை விவாதிக்கவே இல்லை என்று அறுதியிட்டு கூறமுடியாது. விவாதித்துவிட்டு தவறான மாற்று காட்டிய எழுத்தாளர்கள் உண்டு. நடப்பதை சொல்லிவிட்டு எல்லாம் காலத்தின் கோலம் என்று அங்கலாய்ப்பை வெளியிட்ட எழுத்தாளர்கள் உண்டு. கதைப்போக்கில் பிரச்னைகளை விவாதித்து விட்டு மாற்றம் காண வேண்டும் என்று சொல்லாமல் வாசகர்களை உணர வைத்த எழுத்தாளர்கள் உண்டு.
         வை.மு. கோதைநாயகி கடைசியாக குறிப்பிட்ட முறையை பின்பற்றி நாவல்கள் எழுதினர்.

                                                                        - மு.கோபாலகிருஷ்ணன்

Tuesday, September 20, 2011

மீனாவுடன் மிக்சர் - 24 {ஒரு பிரஜையின் பிரயாணம் - பாகம் 2}

(ஒரு பிரஜையின் பிரயாணம் - முதல் பாகம் இங்கே)


என் அமெரிக்க பிரஜை பிரயாணத்தின் இரண்டாவது பாகத்தை கட்டுரைக்கு பதில் ஒரு நாடக வடிவில் எழுதி இருக்கிறேன்.  99.9 % கற்பனை, 0.1 % மட்டுமே உண்மை. உங்க காதுல ஒரு அஞ்சு முழம் பூவுக்கு குறையாமல் இன்னிக்கு சுத்தறதுன்னு கங்கணம் கட்டி நான் எழுதிய நாடகம் இதோ. :-)

இடம் - இமிக்ரேஷன் ஆபீஸ் வரவேற்புக் கூடம், அமெரிக்கா


நாற்காலியில் அமர்ந்திருப்போர் - திருவள்ளுவர், பாஞ்சாலி, மீனா சங்கரன், மீனாவின் தாயார் "அம்புஜம்", MLA அராஜகசத்ரு மற்றும் குஞ்சம்மா.

Announcement:

Immigration Officer calling out loud: We now invite the following people to get ready for their interview next. Ti.....ti.....tizhu......tizhuvalvan, pen chali, mina san kaaren, Ambaajam, MLA (gives up after a while) and kunjamma. Please have all the necessary documentation ready and bring with you when your names are called again.


Translator - இப்பொழுது நாங்கள் டி டி டீழு ....டீழுவல்வன், பேன் சளி, மீனா சன் காரேன், அம்பாஜம், MLA (சொல்ல இயலாததால் விட்டு விட்டார்), மற்றும் குஞ்சம்மா - இவர்களை தேவையான பத்திரங்களோடு நேர்முகத் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டு கொள்கிறோம்.

திருவள்ளுவர் - டீழுவல்வனா? வாசுகியின் வாயில் அல்வாவாய் இனித்த என் பெயருக்கு உம்மோடு வாயில் இப்படி ஒரு இடியா? வயதில் முதியவனான எனக்கு இந்த நாட்டில் இவ்வளவு தான் மதிப்பா?

'பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.'

என்ற என் குறளை மறந்தே விட்டீரா?

குஞ்சம்மா - யோவ் பெருசு, உன்னோட ஆனாலும் ரோதனையா போச்சுய்யா. ஆ வூன்னா ஒரு ரெண்டு வரி அணு குண்டை நீ பாட்டுக்கு எங்க மண்டைல போட்டுட்டு போயிரு. உன்னால ஊர்ல சின்ன பசங்க கனவுல எல்லாம் ராத்திரி பல்லவன் பஸ்ஸோட பின் பக்கம் வந்து பயமுடுத்துதாம். சும்மா முறுக்கிக்காம அந்தம்மா கூப்பிட்டா போவியா, என்னமோ ரொம்ப தான்....


அம்புஜம் - வள்ளுவர் மாமா, இதுக்கெல்லாம் கோவிச்சுக்காதீங்கோ. வந்த காரியம் நல்ல படியா முடியணும், அது தானே இப்போ முக்கியம். இந்த நேர்முக பரிட்சைல பாஸ் பண்ணி நல்லபடியா அமெரிக்க பிரஜை ஆகணுமேன்னு ஒரு மாசமா தினமும் நான் சுந்தர காண்டம் படிச்சிண்டு இருக்கேன்..இருந்தாலும் இன்னிக்கு அந்த பகவான் எனன நினைக்கிறானோ, தெரியலையே. ஏம்மா பாஞ்சாலி, பிரஜை ஆயிடுவோம்னு நீ மனசுல நம்பிக்கையோட இருக்கியா? ஆமாம், அது எனன உன் தலையில பச்சையா அசிங்கமா ஏதோ பூசிண்டு வந்திருக்க? அச்சச்சோ, புருவம் பக்கத்துல வேற லேசா ஒழுகறதே!


பாஞ்சாலி - (புடவை நுனியில் துடைத்தபடியே) அது ஒன்றும் இல்லை அம்மா. கொஞ்சம் நாளாகவே தலையில் பொடுகு பிரச்சனை அதிகமாக இருக்கு. அந்த துச்சாதனன் கம்னாட்டியின் ரத்தத்தை என் கூந்தலில் என்று பூசினேனோ அன்றிலிருந்தே இந்த தொல்லை தான். அதோடு இவ்வுலகம் மெச்ச ஒரு சபதம் எடுத்து வேறு கொஞ்சம் நாளாகி விட்டது. சரி ஒரே அம்பில் இரு கௌரவர்களாய் இருக்கட்டுமே என்று தான் 'அமெரிக்க பிரஜை ஆகாமல் இந்த கூந்தலை நீராட மாட்டேன்' என்று சபதம் போட்டு அதே கையோடு ஒரு பிடி வெந்தயத்தை வேப்பிலையோடு அரைத்து என் கூந்தலில் தடவிக்கொண்டேன். பிரஜை ஆகா விட்டாலும், பொடுகாவது தொலையுமே?

அம்புஜம்: ஆனாலும் நீ புத்திசாலி பாஞ்சாலி. இல்லேன்னா பாண்டவா மாதிரி ஒரு கூட்டு குடும்பத்துல வாக்கப்பட்டு உன்னால பிழைக்க முடியுமா? எனக்கு ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம்மா. உங்க மாமியார் குந்தி தேவி..(மீனாவின் முறைப்பில் கேள்வியை நிறுத்துகிறார்)

மீனா: ஏம்மா பொடுகையும் குந்தி தேவியையும் பத்தி வாதம் பண்ண இது தான் நேரமா? அமெரிக்க வரலாறு பத்தின தேர்வுக்கு நீ ரெடியா? அமெரிக்காவோட கொடியில் ஏன் பதிமூணு கோடு போட்டிருக்கு, சொல்லு பார்ப்போம்?

அம்புஜம்: பத்து மாசம் சுமந்து பெத்த தாயை நிக்க வச்சு கேள்வி கேக்கறியே, இது சரியா மீனா? அதோட 13 ராசி இல்லாத நம்பர். பேசாம கொடியில 12 கோடு போட்டா போதும்னு நானே ஒபாமாவுக்கு எழுதி போடலாம்னு இருக்கேன். எப்படி என் ஐடியா? (மீனாவின் கண்ணில் கிலோ கணக்கில் நிராசை)

MLA அராஜகசத்ரு: இந்திய வரலாற்று பரிட்சைக்கே தில்லா கோனார் உரை நூல் கூட படிக்காம போய் எழுதி அஞ்சு மார்க் மட்டுமே எடுத்து பெயிலானவன் நான். அமெரிக்க வரலாறுன்னா மட்டும் என்ன கொம்பா? உடனே படிச்சிரணுமா? எவன்டா அவன் என்னை படிக்க சொல்லறது இங்கே? டாய்.................


அம்புஜம்: வேண்டாம்பா MLA! அமெரிக்காவுக்கு வந்த இடத்துல இப்படி வேட்டியை தூக்கி கட்டினா நல்லாவா இருக்கு. இறக்கி விட்டுடு. அது சரி, உள்ள போட்டிருக்கியே அழுக்கா ஒரு கட்டம் போட்ட அரை நிஜார், அது என்ன போன வருஷம் ஆளும் கட்சி உன்னை ஒரு மாசம் ஜெயிலுக்குள்ள போட்டாங்களே, அப்ப குடுத்ததா? சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இந்த கலர் ரொம்ப சுமாரா இருக்கு. அடுத்த முறை போனீன்னா நல்லா ராமர் நீலத்துல கேட்டு வாங்கி போட்டுக்கோப்பா. உன் நிறத்துக்கு அட்டகாசமா இருக்கும்.

மீனா: ஷ்....அம்மா கொஞ்சம் சும்மா இருக்கியா.

-------------------------------
In the interview room:

Officer - Will you raise your right hand and promise to tell the truth, the whole truth and nothing but the truth today?

Translator - உங்கள் வலது கையை உயர்த்தி உண்மை, முழு உண்மை, உண்மையை தவிர வேறொன்றும் சொல்ல மாட்டேனென்று சூளுரைக்க முடியுமா?


திருவள்ளுவர் -

"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொல்"

என்று சொன்ன என் வாய்மையின் மேலா சந்தேகம்? (உக்ரமாக) நக்கீரா என்னை நன்றாக பார்!

Translator - Nakkeeraa, look at him.

Officer - Who, for the love of Mary and Joseph, is Nakkeeraa?

Translator - மேரி மற்றும் ஜோசப் மேல் உள்ள அன்பினால் கேட்கிறேன், யார் அந்த நக்கீரா?


திருவள்ளுவர் - அது ஒரு பெரிய கதை. வேண்டுமானால் 'திருவிளையாடல்' படம் வாங்கி தருகிறேன், போட்டு பார்த்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.


Translator - That is a big story. If you want..

Officer - No, no, no, no....... I don't want a big story. For that matter, I don't want a small story either. (groaning) Just 2 minutes in to the interview and I already have the mother of all headaches. ( at the translator) Please take this man outside and bring "Ambujam" in for the interview. (Looking at திருவள்ளுவர்) I will get back to you Mr. Theruvalvan. Please step outside and take a seat until you are called in again.

---------------------
(இந்த பிரஜையின் பிரயாணம் தொடரும்)

- மீனா சங்கரன்