Saturday, December 16, 2006

தடயம் - அத்தியாயம் - 2

தடயம் மர்மத்தொடரின் இரண்டாவது அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/2.html


- முரளி.

Friday, December 08, 2006

நிறம்

அன்னை வயிற்றின் கதகதப்பில்
அன்புக் குடிலின் அரவணைப்பில்
கண்கள் மூடி அருந்தவத்தில்
காத்திருந்தாய், அன்று நிறங்களில்லை

ஈரைந்து மாதங்கள் கரைந்த பின்னே
உறக்கம் கலைந்து எழுந்த பின்னே
உலகைக் கண்ணால் கண்ட பின்னே
உன் சிரிப்பினில் மலர்ந்தது வெள்ளை நிறம்

தத்தித் தவழ்ந்து நடை பயின்றாய்
மழலைப் பேச்சால் மயங்க வைத்தாய்
கள்ளம் இல்லாப் பிள்ளை நெஞ்சில்
இன்னும் இருந்தது வெள்ளை நிறம்

செல்லக் கோபம் காட்டக் கற்றாய்
ஒன்று கிடைக்காவிடில் பிடிவாதம் செய்தாய்
கண்ணீர் சிந்தி அடம்பிடிக்கையிலே
லேசாய் மாறுது வெள்ளை நிறம்

பாகுபாடுகள் பார்க்கக் கற்றாய்
ஏற்றத் தாழ்வையும் ஏற்றுக் கொண்டாய்
நம்பிக்கையின்றி வாழக் கற்றாய்
அன்பைக்கூட அளந்து வைத்தாய்
ஆளைப் பார்த்து ஆடை பார்த்து
ஆதாயம் பார்த்து நடக்கும் பொழுதினில்
தானாய் மறையுது வெள்ளை நிறம்…

--கவிநயா

Tuesday, December 05, 2006

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரைப் படிக்க இங்கே க்ளிக்கவும்:

http://kalaichcholai.blogspot.com/2006/12/1.html

- முரளி.

அரங்கேற்றம்

அவங்க ஐந்து பேரும் அந்த கட்டிடத்தை வந்து அடைந்த போது அவங்களுக்கு முன்பே பலர் வந்து சேர்ந்திருப்பது அங்கு நிறுத்தி வைக்கப் பட்ட கார்களைப் பார்த்து தெரிந்தது.
அவர்களுள் முதலில் நடந்து சென்றவர் நடுத்தர வயது, நல்ல வாட்ட சாட்டமாக, ஆஜானுபாகுவாக இருந்தார். நிமிர்ந்த நடை, நேர் கொண்ட பார்வை, நல்ல பொன்னை ஒத்த நிறம், கரிய விழிகள், அடர்ந்த கேசம். அவரை தொடர்ந்தது அவருடைய மனைவி. யாராவது முதல் தடவையா பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே அம்மான்னு அவங்க கால்ல விழக்கூடிய ஒரு கருணை அவங்க முகத்தில கொட்டி கிடந்தது. சற்று குண்டா ஒரு இளைஞன், அவனுடைய கண்களே அவன் மிக மிக அறிவாளி என்று சொல்லும்படி களையாக இருந்தான். அவனோடு அவனுடைய தம்பி போல ஒரு சிறுவன், துருதுரு என அலை பாயும் கண்களோடு என்ன விஷமம் செய்யலாம் என அலைபவன் போல கொள்ளை அழகோடு வந்தான். இவங்க நாலு பேரையும் தொடர்ந்து சற்று தள்ளி அவங்க உதவியாளர் போல ஒருத்தர் வந்தார். அவருக்கும் நடுத்தர வயது, அவருடைய திரட்சியான மார்பும், வலுவான கைகளும், கால்களும் அவர் அவர்களின் பாதுகாப்பாளர் என்பதை சொல்லாமலே தெரிந்தது.
அந்த கட்டிடத்தின் வாயிலில் சற்றுத் தயங்கி அவர்கள் நின்றார்கள். அப்போது சிறுவன் "அப்பா, இந்த இடம்தானா" என்றான்.
"இந்த இடம்தான், அதோ அங்க அவங்க தயாராயிட்டு இருக்காங்க, இப்போ நிகழ்ச்சி ஆரம்பிச்சுடும், வாங்க உள்ளே போகலாம்"
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா, நானும் உள்ளே வரலாமா?"
"ஏன் என்ன தயக்கம், கண்டிப்பாக வரலாம்"
"இல்லை அழைப்பு உங்களுக்கு மட்டும்தான் அதனால் கேட்டேன்."
"நல்ல வேடிக்கை, நீ இல்லாமல் நான் என் குடும்பத்துடன் எங்கயாவது போனதுண்டா, எப்போ இப்படி பேச கத்துக்கிட்ட?"
"மன்னிச்சிடுங்க, நீங்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கனும்னு உற்சாகமாக வந்தீங்க, அதை நான் கேள்வி கேட்டு கெடுத்துட்டேன்."
அப்போது இளைஞன், "அப்பா, உள்ள போய் நிகழ்ச்சியைப் பார்க்கலாமா அல்லது, இங்கேயே பேசிண்டு இருக்கலாமா என்பதை சீக்கிரம் முடிவு பண்ணுங்க" என்றான்.
பெரியவர் பாதுகாப்பாளர் பக்கம் திரும்பி ஒரு சிறிய புன்முறுவல் செய்தார், அதன் அர்த்தம் தெரிந்த பாதுகாப்பாளர் ஓடிச் சென்று இரட்டைக் கண்ணாடிக் கதவுகளைத் திறந்து அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர்கள் உள்ளே நுழைந்ததும் அவர்கள் கண்ணில் பட்டது கம்பீரமான நடராஜர் சிலை. அதைப் பார்த்ததும், பெரியவரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போது அவருடைய சிறிய மகன் "அப்பா, நாம கொஞ்சம் உட்காரலாமா" என்றான்.
அதற்கு அவனுடைய அம்மா, "இருப்பா, அப்பா சொல்லுவார் அப்பரம் உட்காரலாம்" என்றார்.
"கொஞ்சம் இருப்பா, அவங்க இப்போ ஆசீர்வாதம் வாங்க வருவாங்க அதுக்கு அப்பரம் நாம உட்காரலாம்" என்றார் அப்பா.
அவர் சொல்லி முடித்த போது, ரெண்டு சிறுமிகள் மேடையில் தோன்றினார்கள்.
"போனவருடம் இவங்க அரங்கேற்றம் பாக்கத்தானே நாம இங்க வந்தோம்!" என்றார் அந்த அம்மா.
அதற்கு அந்தப் பெரியவர் ஆம் என தலையசைத்தார்.
அந்த ரெண்டு சிறுமிகளும் மைக் முன்னாடி வந்து பேசத் துவங்கினார்கள்.
அப்போது பாதுகாப்பாளர், "ஐயா இவங்களா! நீங்க சொன்ன அந்த ரெண்டு பேர்"
"மலர்கள் பேசும் போது இடைஞ்சல் செய்யாதே" என்றார் அம்மா.
இல்லை என தலையசைத்தார் அந்தப் பெரியவர்.
தெளிவாக அவர்கள் பேசத் துவங்கினார்கள்.
"திருமதி. உமா செட்டி அவர்களுடைய மாணவிகளாகிய மீனா வீரப்பன் மற்றும் ப்ரீதி பாடில் இருவருக்கும் நடக்கும் இந்த நடன அரங்கேற்றத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம்......."
"தத்தோம் தகதோம், தத்தீத் ......" கணீரென ஜதியின் சப்தம் அந்த அரங்கத்தை நிரப்பியது. அந்த ஐந்து பேரும் கண்மூடி மௌனமாக நின்றனர்.
சுழன்று சுழன்று ஆடியபடி மீனாவும், ப்ரீதியும், மேடையின் நடுவில் வந்து பிறகு, நடராஜர் சிலையை நோக்கி ஆடத்துவங்கினர். இருவரும் ஒருவித மயக்கத்தில் இருப்பது போல இருந்தது, அது ஒரு தவ நிலை என்பது அந்த ஐந்து பேருக்கும் புரிந்தது. கலையுடன் அவர்கள் உணர்வு ஒன்றாமல் இந்த நிலை வராது என்பது தெளிவாகத் தெரிந்தது.
மீனாவும், ப்ரீதியும் நடராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவருடைய ஆசீர்வாதத்தை வேண்டி நின்ற போது, பெரியவர் புன்சிரிப்புடன் தன் மனைவியைப் பார்த்தார்.
"என்ன அவங்களுக்கு ஆசீர்வாதம் செய்யலையா"
"தேவி, இவருடைய ஆசீர்வாதம் இல்லாமல் இவர்களால் இன்று இந்த நிகழ்ச்சிக்கு தயாராகியிருக்க முடியுமா?" என்றார் பாதுகாப்பாளர்.
"நந்தியம்பதி, நம் குழந்தைகளை நாம் ஆசீர்வதிக்காமல் வேறு யார் ஆசீர்வதிப்பது"
"சரியாகச் சொன்னாய் தேவி, நாம் அனைவருமே அவர்களை ஆசீர்வதிப்போம்" என்ற பரமன் கண்மூடி ஓம் என ஜெபித்து தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்தார். தேவியும், இளைஞன் விநாயகனும், சிறுவன் கந்தனும், பாதுகாப்பாளர் நந்தி தேவரும் ஆசீர்வதித்தனர்.
மீனாவுக்கும், ப்ரீதிக்கும் ஒரு கண நேரம் சில்லென்ற ஒரு உணர்வு உடல் முழுதும் பரவி பளிச்சென்று விலகியது. உடலில் இருந்து அத்தனை சொர்வும், வலியும், களைப்பும், மனதில் இருந்த தயக்கம் எல்லாம் பட்டென்று விலகியது போல இருந்தது. பளிச்சென்று இருவரும் சிரித்த படி நடனமாடத் துவங்கினர்.
முருகனின் லீலைகளைச் சொல்லி நடனமாடியபோது, பரமன் முருகனைப் பார்த்து, "என்னப்பா, வள்ளியுடன் வந்திருக்கலாம் எனத் தோன்றுகிறதா" என்றார்.
"நான் இன்று உங்களுடன் இங்கு வரப்போவது தெரிந்தவுடன் அவளும், தெய்வயானையும் நமக்கு முன்பே வந்து நடனத்தை ரசித்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார் கந்தன். "
"அதுதானே பார்த்தேன் வா என்று சொன்னதும் நீ ஒன்றும் சொல்லாமல் என்னுடன் வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் என்று"
"தந்தையே, என்ன இது விளையாட்டு, உங்களுக்குத் தெரியாமல் இந்த உலகில் ஏதும் நடக்குமா?"
"அப்பாவும் மகனும் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வது இருக்கட்டும் நாட்டியத்தை கவனியுங்கள்" என்றார் தேவி.
சிறிது நேரம் கழித்து பலர் மேடைக்கு வந்து மீனாவையும், ப்ரீதியையும் பாராட்டி பேசினார்கள், பரமன் புன்சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
விநாயகன் பரமனைப் பார்த்து, "தந்தையே, எல்லா அரங்கேற்றத்திற்கும் சென்று அனைத்து கலைஞர்களையும் ஆசீர்வதிக்கின்றீர்கள், உங்கள் எண்ணம் என்ன?"
"விநாயகா, இந்த உலகில் தருமம் தழைக்க, பகை, துவேஷம் அழிய, போர் முற்றிலும் நிற்க ஒரே வழி கலை வளர்வதுதான். கலையில் தன்னை அர்ப்பணித்த எவருக்கும், உலகில் எதையும் வெறுக்கவும் தெரியாது, அழிக்கவும் முடியாது. கலை ஒருவரை பண்படுத்தும், பலப்படுத்தும், அன்பைப் பெருக்கும்"
"தெரியும் தந்தையே, இதை நீங்கள் கூறக் கேட்பதில் எனக்கு ஒரு ஆனந்தம், அவ்வளவுதான்."
அப்போது நந்தியம்பதி, "பெரும, மேடையில் பலர் அந்த இரு பெண்மணிகளையும் பாராட்டிப் பேசியபோது நீங்கள் எதற்காகச் சிரித்தீர்கள்"
"அது வேறொன்றும் இல்லை, அவர்களைப் பாராட்டிப் பேசியவர்கள் இந்த அரங்கேற்றத்துடன் இவர்களது கடின உழைப்பு முடிந்து விட்டது போல பேசினார்களே அதை நினைத்து சிரித்தேன். இந்த அரங்கேற்றம் ஒரு துவக்கம்தான், இவர்கள் இத்தனை வருடங்கள் பெற்ற பயிற்சியின் பலன் இந்த அரங்கேற்றம் இல்லை, இந்தப் பயிற்சியின் பலன் இவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான பேருக்கு இவர்கள் இந்தக் கலையை கற்பித்து இந்தக் கலையை வளர்ப்பதுதான். "
"அவர்களுக்கு துவக்கத்தில் என்ன ஆசீர்வாதம் செய்தீர்கள்"
"நந்தி உன் கேள்விகளுக்கு முடிவே இல்லையா? நான் அவர்களுக்கு ஆசீர்வாதமாக, இந்தக் கலையை பலருக்கு கற்பித்து, வளர்க்க அவர்கள் மனதில் ஒரு விதையை தூவி விட்டிருக்கிறேன்"
மங்களம் பாடி முடித்து மீனாவும், ப்ரீதியும் அனைவரையும் வணங்கி நிற்க, பரமன் மீண்டும் ஒருமுறை தன் வலக்கையை தூக்கி ஆசீர்வதித்து விட்டு ஒரு புன்முறுவலுடன் அனைவருடன் மறைந்தார்.
- முரளி.

Monday, December 04, 2006

தமிழா, ஹிந்தியா?

நாம் அமெரிக்காவில் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கிறோம். இதைப் பாருங்கள். தமிழ்நாட்டிலேயே பள்ளிக்கூடத்தில் தமிழுக்கு பதில் ஹிந்தி படித்திருக்க வேண்டும் என்கிறார் திருச்சியில் வளர்ந்த, தமிழ் படித்த தேசிகன்.

இதில் எனக்கு உடன்பாடில்லை. தேசிகன் கேட்கிறார்: சுஜாதாவையும் பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுத்த அப்பா தமிழை சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாரா என்று? தமிழ் தெரிந்திருக்காவிட்டால் எங்கேயிருந்து சுஜாதாவையும், பிரபந்தத்தையும் சொல்லிக் கொடுப்பது. ஆளை விடுடா சாமி என்று மலைக்கோட்டைக்கு நடையை கட்டியிருப்பார் அப்பா.

வெளிமாநிலங்களுக்கு செல்லும்போது ஹிந்தி தெரியாதிருப்பது கேவலமா, திருச்சியில் உட்கார்ந்துகொண்டு தமிழ் தெரியாமலிருப்பது கேவலமா? என் கல்லூரியில் ஒருவன் சீரங்கத்தில் பிறந்து வளர்ந்து தமிழ் கற்காமலிருந்தான். அதை பெருமையாக வேறு சொல்லிக் கொள்வான். எத்தனை பெற்றோர்களால் குழந்தைகளுக்கு ஒரு மொழியை சொல்லிக் கொடுக்க முடிகிறது. அது கட்டாயம், கடமை என்று எல்லாம் பட்டி மன்றத்தில் பேசலாம். நடைமுறையில் பத்தில் ஒருவராவது கற்றுத் தருகிறார்களா?

பள்ளியில் மும்மொழித்திட்டம் இல்லா நிலையில், தமிழ் கற்காவிட்டால், வீட்டில் தமிழ் கற்பது கடினம். அதானால் முன்னேறுவார்களா இல்லையா என்பது தேசிகன் சொல்வதுபோல விவாதத்துக்கு அப்பாற்பட்ட விஷயம். தமிழ் அழியும் என்று நான் வசனம் பேசவும் இல்லை. அந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு வெளியே தமிழ் கற்கமுடியாது என்பதே என் கருத்து. அதுவும் வெளியே தமிழ் கற்றால், பிரபந்தமும் படிப்பது கஷ்டம். குமுதம், விகடன் படிக்கலாம். ஆனால் நாராய், நாராய் செங்கால் நாராய் எல்லாம் தெரியாது.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில்(comment) இடவும்.

Saturday, December 02, 2006

டிசம்பர் மாத லொள்ளு மொழிகள்

கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்
காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம்
ஏன் ஜேம்ஸ் ஆத்துல கூட மீன் பிடிக்கலாம்
ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா?

கோல மாவுல கோலம் போடலாம்
கடலை மாவுல கடலை போட முடியுமா?

Wednesday, November 22, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 5

எனது ஐந்தாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.

http://pkirukkalgal.blogspot.com/2006/11/5.html





- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

ப க(3)...

இத்துடன் இந்தத் தொடரை முடிக்க விழைகிறேன். பார்ப்போம். பிற்பாடு, இன்னொரு நாள், வேறொரு தலைப்பைப் பிராண்ட அவா.

உமா செட்டி அவர்களைப் ப்ற்றி எழுதுவதாக குறிப்பிட்டிருந்தோம். ஆதலால் இந்த சிறு குறிப்பு.

நீங்கள் தமிழராக, ஏன் ஒரு இந்துவாக, இருந்து ரிச்மாண்ட் நகரிலே சில நாட்கள் இருந்திருந்தீர்களேயானால், மாதுஸ்ரீ உமா செட்டி அவர்களை அறியாமல் இருப்பது அரிது. இந்த அம்மையார் பற்றி நான் எழுதி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது. ஆயினும் அவர் பெருமையைக் கூறி நான் சிலாகிப்பதில் தவறில்லையே?

நேச்முடன் ஒரு நினைவாக சிந்தை கலங்காது முழு ஈடுபாட்டுடன் தியானிக்கும் முருக பக்தர். மெத்தப் படித்து இருக்கிறார். சி.பி.ஏ மற்றும் எம்.பி.ஏ. அலுவலகத்திலே முழுநேர வேலை பார்க்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருக்கிறார். ம்ற்றும் மனைவி, வீட்டிலே எஜமானி. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, நடனம் கற்றுக்கொண்டு இருக்கிறார். கற்றும் கொடுக்கிறார். கோவிலிலே முருகனுக்கு முறை தவறாது வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்கிறார். பல ந்டனக்க்லை நட்சத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். மற்றும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறார். நடனத்துடன் நட்டுவாங்கம் வேறு. எனக்குத் தெரிந்தது இவை. இன்னும் எவ்வளவோ?

ஆகவே. தமிழ்ச்சங்கத் (புது) தலைவர் திரு நாகு-வுக்கு ஒரு வேண்டுகோள். ஒரு முறை தமிழ்ச்சங்க மேடையிலே இவருக்கு (உமா), சங்க சார்பாக, "மாது சிரோன்மணி" அல்லது "மாதர் சிகாமணி" என்ற ரீதியில் ஒரு பட்டத்தை அளிக்க ஏற்பாடு செய்யுங்கள். ஒன்று நிச்சயம். அவ்வாறு செய்தீர்களேயானால், அதனால் பெருமை அடையப் போவது சங்கமும் நாமுமே தவிர, உமா அவர்கள் அல்ல. உமா அவர்கள் ரிச்மண்ட் இந்து சமூகத்திற்கு செய்யும் தொண்டை நாம் பரிபூரணமாக உணர்வதாக பகிரங்கமாக சபையில் உணர்த்துவதே இந்த முன்மொழிதலின் நோக்கமாகும். யாராவது இக்கருத்துக்குப் பின்மொழிகிறார்களா பார்ப்போம்.

கடைசியாக ஒன்று. In lighter vein. உமா அவர்களின் கணவர் நிலையை சற்று நினைத்துப் பார்ப்போம். சென்ற ஞாயிறு நடனமாடிய மாதர்கள், கடைசியாக, இன்றுடன் எனது கடின உழைப்பு முடிந்தது என்ற ரீதியில் பேசியபோது, அவரவர் கணவன்மார்களின் முகாந்திரத்திலே ஒரு விடுதலைக்க்ளிப்பு எட்டிப் பார்த்ததைக்கண்டோம். உமா அவர்கள் என்று ரிடையர் ஆவது, என்று அசோக் அவர்களின் முகத்திலே களிப்பைக்காண்பது? அசோக் அருகிலிருப்பது தெரியாததுபோல் அவர்கள் அவ்வாறு பேசியது தவறு. பாவம் அசோக். நாகு இவருக்கும் ஏதாவது பட்டமளிப்பார் என்று எதிர்பார்ப்போமாக.

முற்றும்.

பரதநாட்டியம் ... கண்ணோட்டம் - ஒரு விளக்கம்

அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள். அஜாத சத்ரு இரு கேள்விகளை எழுப்பியுள்ளார். எனக்குத் தெரிந்த பதில்:
1. பாரதியின் கண்ணம்மா : எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரிய்ர்கள் மற்றும் நான் படித்த சில பல உரைகள் எல்லாம் சொன்னது இதுதான்: பாரதி கண்ணனைப் பெண்ணாக பாவித்து செய்த கவிதைக்ள் இவை என்று. ஆனால் இந்த நாட்டிய விழாவிலே, ஒரு பாடலை எடுத்து இது பராசக்தியை பாவித்து என்றனர். திக்கித்தேன். நான் கற்றதே தவறோ? இறையனாரும் எம்மான் இலக்குவனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்திலே இந்தக் கேள்வியை வைக்கிறேன். படித்த்மான்களே. கருத்துக்க்ளை அள்ளி வீசுங்கள். சரியான விடையை, விளக்கத்துடன், அறிய அவா.



இந்த லிங்கில் விடை இருக்குது:

http://www.sas.upenn.edu/~vasur/kili.html


இந்த படத்திலும் இருக்குது:





இலக்குவனார் தெரியும், இறையனார் யார்?


2. RAGAA : ராகம் தமிழ். RAAG ஹிந்தி. ராகா என்ன மொழி? அவர்கள் ஷொன்னார்கள், நம ஷிவாய, போன்ற த்வனிகள் - பேச்சுக்களல்ல - எமக்கு ரத்தக் கொதிப்பைத் தரும். ராகாவும் அதேரகம் போலும். தன்னைத்தானே அறிவு ஜீவி என்று கருதும் ஒரு நடிகர், தங்கிலீஷ் என்பார் இதை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....


அண்ணே, யார் அப்படி பேசினாங்கன்னு நீங்க சொல்லலை. உங்க வீட்ல சூரிய தொலைக்காட்சி இல்லை போல இருக்கு, இருந்தா தமிழ் நாட்டில தமிழ எவ்வளவு கேவலமா பேசராங்கன்னு தெரிஞ்சுருக்கும். தமிழ் நாட்டில தமிழ் கத்துக்க, பேச அவ்வளவு சந்தர்ப்பம் இருக்கும்போதே அப்படி தமிழ் பேசரது தப்பா தோணலையா! அட அத விடுங்க தமிழ்ன்னு சொல்லத்தெரியாம தமில்ன்னு சொல்லிகிட்டு இருக்காங்க, அவங்கள விட இங்க அப்படிபட்ட வசதிகளெல்லாம் இல்லாத போதே தமிழ் பேசும் போது தப்பா கொஞ்சம் உச்சரித்தா அது குத்தமா? கூடவே எதுக்கு அந்த நடிகரைப் பாவம் இதுல இழுக்கறீங்கன்னு தெரியலை. அவர் உண்டு அவர் அவதாரம் உண்டுன்னு இருக்கார்.



நாகு சொன்னா மாதிரி நீங்க தோப்புக்கரணம் போடரதைப் பார்க்க நாங்க ரெடி.

- முரளி.









Tuesday, November 21, 2006

பரதநாட்டியம் ... கண்ணோட்டம்(2)

இப்பகுதியிலே சற்றே சர்ச்சைக்குரிய சில விஷயங்களைப் பார்ப்போம்.

முதலில். இதில் எது சரி எது தவறு என்று ஆரோக்கியமான விவாதங்களை எதிர்பார்த்து எழுதுகிறேனே தவிற வேறு சண்டையைத் துவக்க வேண்டுமென்ற எண்ணம் கிஞ்சித்தும் கிடையாது. நல்லெண்ணத்துடன் கூடிய ஆதார பூர்வமான, ஒத்த (ம) எதிர்ப்புக், கருத்துக்களை வரவேற்கிறேன்.

1. பாரதியின் கண்ணம்மா : எனக்குப் பாடம் கற்பித்த ஆசிரிய்ர்கள் மற்றும் நான் படித்த சில பல உரைகள் எல்லாம் சொன்னது இதுதான்: பாரதி கண்ணனைப் பெண்ணாக பாவித்து செய்த கவிதைக்ள் இவை என்று. ஆனால் இந்த நாட்டிய விழாவிலே, ஒரு பாடலை எடுத்து இது பராசக்தியை பாவித்து என்றனர். திக்கித்தேன். நான் கற்றதே தவறோ? இறையனாரும் எம்மான் இலக்குவனாரும் கட்டிக்காத்த தமிழ்ச்சங்கத்திலே இந்தக் கேள்வியை வைக்கிறேன். படித்த்மான்களே. கருத்துக்க்ளை அள்ளி வீசுங்கள். சரியான விடையை, விளக்கத்துடன், அறிய அவா.

2. RAGAA : ராகம் தமிழ். RAAG ஹிந்தி. ராகா என்ன மொழி? அவர்கள் ஷொன்னார்கள், நம ஷிவாய, போன்ற த்வனிகள் - பேச்சுக்களல்ல - எமக்கு ரத்தக் கொதிப்பைத் தரும். ராகாவும் அதேரகம் போலும். தன்னைத்தானே அறிவு ஜீவி என்று கருதும் ஒரு நடிகர், தங்கிலீஷ் என்பார் இதை. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்....

நான் நினைத்ததை எழுதிவிட்டேன். இனி உங்கள் பாடு.
(தொடரும்..)