Showing posts with label லொள்ளு. Show all posts
Showing posts with label லொள்ளு. Show all posts

Thursday, May 03, 2007

மே மாத லொள்ளு மொழிகள்

ஆறின கஞ்சி பழங்கஞ்சி
ஏறின கஞ்சி சுண்டக்கஞ்சி

Sunday, April 01, 2007

ஏப்ரல் மாத லொள்ளு மொழிகள்

என்ன தான் கௌரவமா நடித்தாலும் ஒரு காமெடியன் நடிப்பை பார்த்து நாலு பேர் நாலு விதமா சிரிக்கத்தான் செய்வாங்க

Thursday, March 01, 2007

மார்ச் மாத லொள்ளு மொழி

வாழ்க்கையில ஒண்ணும் இல்லேன்னா bore அடிக்கும்
தலையில ஒண்ணும் இல்லேன்னா glare அடிக்கும்

Saturday, February 17, 2007

லொள் லொள்

நாய் கடிச்சா ஊசி போடலாம்
செருப்பு கடிச்சா மருந்து போடலாம்
மனுஷன் கடிச்சா டைப் அடிச்சு ப்ளாகில் போடலாம்

Thursday, February 01, 2007

பிப்ரவரி மாத லொள்ளு மொழிகள்

என்ன தான் எட்டு பட்டிக்கும் எஜமானா இருந்தாலும்
முடி வெட்டிக்க தலை குனிஞ்சு தான் ஆகணும்

பொங்கலுக்கு கவர்மெண்டுல லீவு குடுப்பாங்க
ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா?

Sunday, September 03, 2006

செப்டம்பர் மாத லொள்ளு மொழி(கள்)

இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பிச்சை

Sunday, August 20, 2006

லொள்ளு மொழிகள்

1. ஆலும் வேலும் பல்லுக்குறுதி
மாலும் ஸேலும் பெண்ணுக்குறுதி

2. கண்டதும் காதல் கட்டியதும் மோதல்

3. பார்த்தால் பசி தீரும் பசித்தால் பார் தேறுமா?

4. கடலோரக்கவிதைகள் காற்றில் பறந்ததால் கடலீரக்கவிதைகள்

5. அண்ணலும் நோக்கியா அவளும் நோக்கியா
வேறென்ன பாக்கியா?
போறாங்க ஹாப்பியா

6. தமிழுக்கு அமுதென்று பெயர் வைத்ததனால் தானோ தமிழை சிலர் கடித்துக் குதறுகிறார்கள்?

7. தாவணிக்கனவுகள் வளர்ந்ததால் புடவைக்கனவுகள் ஆயின

8. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நல்ல பாட்டுக்கு ஓ போடு

9. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும்
நல்ல சூட்டுக்கு ஒரு டை போதும்

10. சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கலாம்
ஆனால் பெரிய மீனைப்போட்டு சின்ன மீனைப்பிடிக்க முடியாது

11. குடிகாரன் பேச்சு பொழுது விடிஞ்சாப்போச்சு
அரசியல்வாதி பேச்சு தேர்தல் முடிஞ்சாப்போச்சு

12. கண்ணைக்கட்டி காட்டில் விடலாம்
ஆனால் காட்டைக்கட்டி கண்ணில் விடமுடியாது

13. அந்திமழை பொழிகிறது
தொந்தி வரை நனைகிறது


14. ஈ மெயில் எழுதி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் ஸ்டாம்பு ஒட்டியே சாவார்

15. கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் - முன்பு
கள் ஆனாலும் கணவன் •புல் ஆனாலும் புருஷன் - பின்பு

16. “மௌஸ்” அமுக்கி வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் “மவுசு” இல்லாமல் சாவார்