Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - கம்பம்


அன்றொரு நாள் மாலையிலே
அந்த மாமரத்தின் கிளையின் பின்னே ஒளிந்து விளையாடியது...

பல நேரங்களில் பசுமையாக காட்சி அளிக்கும்....
பல முகத்தினில் சிரிப்பை வரவழைக்கும்....

சில நொடி பொழுதில் மட்டும் அதன் கண்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 ...பூ விழுந்து விட்டது என எண்ணி கொள்வேன்....

அடர்ந்த வாகனங்களால் பாவம் அதன் கண்கள் அதிக நேரம் சிவந்தே காணப்படும்.....

முன்னர் பெய்த கடும் மழையினில்
அதன் உடல் சரிந்து கிடந்தது
கண்கள் திறக்கவில்லை நெடுநேரமாய்...

எல்லோரும் முண்டியடித்து சென்று கொண்டே இருந்தனர்....
நின்று நெடுநேரம் பார்த்து கொண்டே இருந்தேன்
என்னை பார்த்து கண்ணடிக்காத அந்த சிக்னல் கம்பத்தினை.....

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!