Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - இந்திய விடுதலை...


நாட்டுக்குன்னு நாகரிகத்தை ஐந்து திணைகள் ஆக்கி...
திட்டமிட்டு திணைக்கொரு தொழில் என பெயரிட்டு..
தொல்ல வராம இருக்க தொழிலுக்கொரு கடவுளை உருவாக்கி...
பட்ட சாராயம் காய்ச்சி படச்சவனுக்கும் படச்சுபுட்டு
நட்ட நடு நெத்தி மட்டும் விட்டு புட்டு மொத்தமா பட்டை அடிச்ச
என் பாட்டன் வழிபட்ட வழிபாடு சத்தமே இல்லாம
மொத்தமா மாறி போச்சு...

கண்மசி கவிதைகளை கண்ணியர்களே சிந்துனப்போ
மண் ஏறி வந்த பய மசியம் என்ன தான் செஞ்சானோ...
உள்ள மொழி மறந்து வெளிநாட்டு மோகம் தின்ன
உட்கார்ந்து ராஜ்ஜியம் பாருன்னு மேற்கால பிரபுவ
ஒட்டகம் கூடாரம் நொழைஞ்ச கதை ஆட்டம் உள்ள தான் சேர்த்தாங்க....

பொருள் விக்க வர்றேன்னு இருள கூட்டிகிட்டு வந்த பயலுக
அருளோட இருந்த நாட்ட அங்க அங்க துண்டாடுன சண்டாளனுங்க...

மொதல்ல மொழியறுத்தான்....முக்கியமா அறிவழிச்சான்
வெள்ள தோல கொஞ்சம் கட்டி மெல்ல நம்ம நாடு புடிச்சான்....

தர்மம்னு வளர்ந்த மண்ணுல தாறுமாறா ஆசை வெதச்சான்...
மொத்த ஊரையும் ஏப்பம் போட்டு கப்பமுன்னு கட்ட வெச்சான்...
ரத்தம் சுண்டுன எலும்பையும் நாய் வாய் விடாம உறிஞ்சத போல்
உலக போர்ல அடி வாங்கி உனக்கு தான் விடுதலைன்னு கொக்கரிச்சான்....

போற நன்னாரி பொத்திகிட்டு போயிருக்கலாம்...
சுரண்டுனது பத்தாது வளர விட கூடாதுன்னு....
மதம்னு ஒரு பெரிய மலையையே மண்ணுக்குள்ள வெதச்சு புட்டான்...
அதுக்கு மேல நான் என்ன சொல்ல அதான் நிதமும் பாக்குறீங்களே...

அப்புடியே ஒரு மதத்தான் ஆனாலும் கூடவே வளந்த சாதி கொஞ்சமும் வளர விடலையே..
அவசரத்துக்கு ரத்தம் வாங்கும் பொழுது மட்டும் ஞாபகம் வராத சாதி...

நூறு கோடி சேர்ந்து இருக்கோம்னு தான் பேரு..
வட மொழி பேசுறது தெற்குல பெரிய தப்பது....
தண்ணி கேட்குற தமிழன சுத்தி மாநிலம் துப்புது...

ஹிந்தி தெரியாதவன் இந்தியாவோட இடுப்புக்கு மேல போக முடியாது....
தெரியாம போயிட்டாலும் தெரு தெருவா சுத்த வேண்டியது தான்....

தங்கத்துல இருந்த வணிகத்தை தெளிவா ஆயிலுக்கு மாத்தி புட்டான்...
நோட்டடிக்கிற மெஷின் இருந்தும் நொண்டி மட்டும் தான் அடிக்கிறோம்..

எங்குட்டோ இருந்து வந்த கணினி இப்போ நம்மளை காக்குதுங்க....
எதிர்காலத்துல எல்லாரும் ஆயில்ல தான் ஆயுள்னு சொன்ன எங்க அண்ணாச்சி போக நம்ம...

திருக்குறளையும் கற்பனை காப்பியம்னு இன்னும் கொஞ்ச வருசத்துல சொல்லி புட்டா
ஒட்டு மொத்த பிரச்னையும் ஒரேயடியா முடிஞ்சுது
நம்ம பேரன் ஆப்பிள் ல படிப்பான் ஐரோப்பால இருந்து பிரிஞ்சது தான் இந்தியாவாம்லன்னு...

எனக்கென்னப்பா பஞ்சாயத்து....எங்கப்பன் ஆயி ஆசைக்கு ஒரு வீடு....
என் பொஞ்சாதி பிள்ளைங்களுக்காக ஒரு வீடு அப்புறம் சின்ன காரு...
வகை தொகை தெரியாம தின்ன தொப்பை வயிறையே மறச்சு கெடக்க...
சந்தனம் குங்குமம் வித தெருக்கள்ள இப்போ நெறஞ்சு கடக்க சாராயத குடிச்சு புட்டு
குப்புற தெனம் படுத்து குதூகலமா செல்ல நோண்டுனா
வருசத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் கேப் விடாம வர்ற மெசேஜ் தான்
தொப்புள் கொடிய பெசையுதப்பா......

அது ஆசையோட என் நண்பர்கள் அனுப்புற விடுதலை திருநாள் வாழ்த்துக்கள் மாப்ளன்ற
பல்லாயிரம் வீரம் விவேகம் நுண்ணறிவு மண்ணோடு போன கண்ணீர் கதை பொதிந்த ஒரு வரி சின்ன கவிதை.....

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!