Wednesday, August 10, 2016

வாழ்க்கை

அழுது பிறந்து சிரித்து வளர்ந்து
உண்டு உறங்கி தவழ்ந்து நடந்து
தாவி ஓடி பேசிப் பழகி
எழுதிப் படித்து கல்வியில் சிக்கி
சிந்தித்து அறிந்து கருத்தில் சிறந்து
அறிவை வளர்த்து அழகை ரசித்து
காதலை வியந்து வாலிபம் எட்டி
தொழிலில் முனைந்து பொருளை ஈட்டி
துணையைத் தேடி இல்லறம் புகுந்து
காமம் தொழுது காலம் தொலைத்து
பெற்றோர் மறந்து பிள்ளைகள் வளர்த்து
பாதை மாறாது அவர்களும் வளர்ந்து
ஆளாகி நிற்கப் பார்த்து மகிழ்ந்து
வாழ்ந்து நொந்து நோயில் விழுந்து
வாடி வதங்கி அடுத்தவர் அழ
அடங்கும் உயிரை நம்பிய வாழ்க்கை

2 comments:

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!