Tuesday, December 26, 2006

வலைவலம்

எந்தரோ ப்ளாகிகளு அந்தரிகி மா வந்தனமு

வலைப்பதிவு எழுதுவோர் எல்லாரும் வெட்டியல்ல. சமீபத்தில் வலைப்பதிவர்கள்(ப்ளாகிகள்) சில நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள். செய்கிறார்கள். தேசிகன் என்பவரின் பதிவில் பார்த்த சிறுவன் ஆதித்யா இப்போது பிட்ஸ்பர்க் குழந்தை மருத்துவகத்தில் இருக்கிறான். அவன் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதில் வலைப்பதிவர்களின் பங்கு பெரிது. ஆதித்யா வேலூர் CMCயில் இருந்தபோது அங்கு சிகிச்சை பெற்று வந்த என் நண்பன் சொன்னான் - அந்த வார்டு முழுவதும் ஆதித்யா போல நிறைய குழந்தைகள். அங்கு போவதற்கே கஷ்டமாக இருந்தது.

இப்போது பிட்ஸ்பர்கில் இருக்கும் ஆதித்யாவுக்கு ஒரு பொம்மைகடை வைக்கும் அளவுக்கு பொம்மைகள் வந்து குவிந்திருக்கின்றன என்கிறார்கள் அவன் பெற்றோர்கள்.

ஆதித்யாவுக்கு நீங்களும் உதவலாம். விவரங்கள் இதோ.

Residents of USA and US citizens who would like to contribute thro US$ Check can draw it payable to "Children's Hospital of Pittsburgh" and mail it to the address mentioned below. Please make sure you write "For Aditya Kumar - Visit # 1022726762" in the memo part of the check.

Nandita & Mahesh
5701 Governors Pond Circle
Alexandria, VA 22310
(703) 960-6615

After mailing the check, please send the check details to kumarsang@gmail.com , ravi2604@gmail.com and nandita999@yahoo.com




ஆதித்யா போன்ற புற்றுநோயாளிகளுக்கு உதவ இந்தியாவில் ஒரு அமைப்பு இருக்கிறது. அந்த அமைப்பிற்கு அவ்வப்போது நிதி உதவி செய்தால் உங்களுக்கு எல்லா நலங்களும் வந்து சேரும்.

இனி வலைப்பதிவர்களின் இன்னொரு முயற்சியை பார்ப்போம்.

ஏழைப்பெண் மகாலட்சுமியின் தடைப்பட்ட கல்விக்கு
உதவ முயல்கிறார் செந்தழல் ரவி என்ற பெயரில் பெங்களூரில் இருந்து எழுதும் ரவி. திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது பணம் கட்டமுடியாமல் வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

மேலே விவரங்களுக்கு செந்தழல் ரவியின் பதிவை படியுங்கள். அவரது பள்ளிக்கூட நண்பன் எழிலரசன் பற்றி தெரிந்தாலும் அவருக்கு தெரிவிக்கவும்.

வலைவலம் வராமலே இந்த பதிவு நீண்டுவிட்டது. ஆகவே - RTP (ராகம் தானம் பல்லவி) பற்றி கேட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வருந்தி வருந்தி விக்கிபசங்க சொல்லியதை நான் மறுபடியும் எழுதப் போவதில்லை. நீங்களே படித்துக் கொள்ளுங்கள்.

ப்ளாகிகளே - சற்றே மௌனம் கலைந்து உங்கள் லொள்ளையும், எதிரொலியையும், பித்து மொழிகளையும் நமக்கு அருளவும்.

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!