Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - கடவுள்


வாழ்க்கையின் வருத்தத்தை போக்குவதற்கான நிவாரணி நீ என்கிறார்கள்...
இன்ப துன்பம் இல்லாவிடில் வாழ்க்கை ஏது?

மகிழ்வான தருணங்கள் உன்னால் அதனால் நன்றி தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள்...
நன்றி கேட்டுக்கொள்ள எங்கிருக்கிறாய் நீ இந்த அறிவியல் உலகில்?

கல்லிலும் கட்டையிலும் கம்பளங்களிலும் நீ என்கிறார்கள்....
அதனை உண்டாக்கும் என் கைகளில் இருந்து தான் நீ அதற்குள் சென்றாயோ?

அதிகம் பேசாதே அகராதி என் அறிவே உன்னிடமிருந்து என்கிறார்கள்...
நாகரீகம் வளராது சண்டையில் மடிந்த உலகத்தை ஒற்றுமையாக்க உபயோகிக்கப்பட்ட பயம் அல்லவா நீ?

ஒரு முறை மட்டுமே வாழப்போகும் இந்த பூலோக வாழ்க்கையிலேயே பலருக்கு நிம்மதி இல்லை....
வான அறிவியல் கண்டறியாத அந்த மற்ற லோகங்களும் வேண்டுமா?

நினைத்தது நடவாவிடில் பக்தி குறைந்து விட்டது இன்னும் ஏற்றுங்கள் என்கிறார்கள்...
இறை நாட்டம் என்பது எப்போது சமையல் குறிப்பானது?

காண கண்கள் தேவை இல்லை....உணர மனம் வேண்டும் என்கிறார்கள்...
அதற்கு கண்ணை மட்டும் மூடினால் போதுமே...கதவுக்கு வெளியில் ஏன் காக்க வேண்டும்?

நாளும் கிழமையும் தவறாது உன் அலுவலகம் வந்து வருகை பதிவேடு தந்தவனும்
நாளொரு மேனி பொழுதொரு வண்ணமும் உன்னை போற்றி துதித்தவனும்
நாணிய வாழ்க்கை வாழ்ந்து அழிபவனுக்கும் மூச்சு என்னோவோ ஒரே போல் தானே வெளியேறுகிறது
நான் பார்த்த வரையில்?!

அதிலும் கொடுமை உனக்காக அடித்து செத்தவர்களுக்கும் கூட சேர்த்து தான்...

இன்று இப்படி நாளை வேறு என்ற இயற்கையின் எதார்த்தம் புரியாதவர்களும்
தன்னால் நடந்தது என்பதை செருக்கில்லாமல் உணர தெரியாதவர்களும்
மீண்டும் முயலலாம் என்ற  தன்நம்பிக்கை இல்லாதவர்களும் சேர்ந்து உருவாக்கிய உருவகமே...

இது செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு மனிதன் எழுதிய உண்மையின் உரைகல்
சற்றே உரசிய கல்.....இது பலநூறு வருடங்களுக்கு பிந்தைய சந்ததிகளுக்கு
ஏனெனில் பூமி முழுவதும் நீ ஏற்கனவே பரவி விட்டாய்....

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!