Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - ஜாதகங்கள்


வெளி வரும் நேரம் யாரும் கணிக்காமல் பிறந்தோம் ஆயினும் ஜாதகம் உருவாக்கினர் ....
மனிதனை மதம் என்ற நீரினால் குளிப்பாட்டினர்...
கல் என்ற வாயினில் கட்டாய கடவுளை திணித்தனர்...
இன்னொருவரின் விருப்பத்தில் நம் பெயரை அழைத்தனர்..

வளரும் பொழுதுகளில் நம் வார பலனை வாசித்தனர்....
வாங்கிய வேலையும் கூட குருவின் பெயர்ச்சியே என நம்ப வைத்தனர் ...
வண்டிக்கும் கூட பூசைகள் தவறவில்லை.....

இப்பொழுது வாழ்க்கையின் முக்கிய தேர்வு
வகை வகையாய் பலகாரங்களுடன் சேர்த்து வரிசையாக நிராகரிக்கப்படுகின்றனர் என் நண்பர்கள்

மணப்பொருத்தம் என்ற ஒரே வார்த்தையினால்....

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!