Sunday, May 25, 2008

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரின் பதினோராவது அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.
http://kalaichcholai.blogspot.com/2008/05/11.html

முரளி.

Tuesday, May 20, 2008

சிட்டுக்குருவி




எங்கிருந்து வந்தாய் என் அருமைச் சிட்டுக்குருவி!
உன் அழகிய வால் அறுந்த காரணம் என்னவோ சிட்டுக்குருவி

வீரப்போர் வெற்றியின் அடையாளமா சிட்டுக்குருவி
பிறப்பின் பிழையா சிட்டுக்குருவி

எதுவாய் இருந்தாலும் உன் சுறுசுறுப்பைக் கண்டு
நான் மகிழ்ந்து போனேன் சிட்டுக்குருவி
வால் போன துயரத்தில் வாடி நிற்காமல் சிட்டுக்குருவி
பறந்து வந்து வற்றலைப் பற்றிச்செல்கிறாய் சிட்டுக்குருவி

உன் தன்னம்பிக்கையை பாராட்டுகின்றேன் சிட்டுக்குருவி !

வலைச்சரத்தில் சதங்கா!


வலைச்சரத்தில் சதங்காவை இந்த வார ஆசிரியர் ஆக்கியிருக்கிறார்கள்! முதல் பதிவில் ரிச்மண்ட் வாழ்க்கையையும்(என்னையும்) நினைவு கூர்ந்திருக்கிறார் மறக்காமல். நன்றி சதங்கா!! மேலும் அவர் எழுதிய பதிவுகளில் அவருக்கு பிடித்தவற்றையும் அழகாகப் பட்டியலிட்டிருக்கிறார்.

இரண்டாவது பதிவில்  அவர் மனதில் நின்ற பதிவுலகில் படித்த கவிதைகளையும், கவிஞர்களையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் மயக்கத்தில் உள்ள எனது நண்பன் மகேஷிலிருந்து ஆரம்பித்து கலக்கலாகப் போகிறது அவரின் அறிமுகம்.

மூன்றாவது பதிவில் கதைகளை அறிமுகப் படித்தியிருக்கிறார். நான்காவதிற்கு எங்கே போகிறார் எனப் பார்ப்போம். :-)

வலைச்சரத்தில் சதங்காவின் மீதமுள்ள நாட்களுக்கான பதிவுகளை ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து தூள் கிளப்ப வாழ்த்துக்கள்! 

Saturday, May 17, 2008

தடயம் - மர்மத்தொடர்

தடயம் மர்மத்தொடரின் பத்தாவது அத்தியாயத்தை இங்கே படிக்கலாம்.
http://kalaichcholai.blogspot.com/2008/05/10.html


முரளி.

Wednesday, May 14, 2008

அமெரிக்க வரன்

"நமஸ்காரம், வாசுகி அம்மா. எப்பிடி இருக்கீங்க? உங்க மகளுக்கு ஏதாவது வரன் வந்ததா?".

"ஏதாவது இல்லை, ஸ்வாமி. அமெரிக்க வரனா வரனும். நான் தினம் வந்து இந்த முருகனை வேண்டிக்கிறேன், ஒரு அமெரிக்க வரனா கிடைக்கணும்னு. இன்னும் இந்த முருகன் மனசு வெக்கலை".

"என்ன வாசுகி அம்மா, முருகனுக்கு கல்யாண உற்சவம் செய்யப் போறிங்களாமே".

"ஆமாம், சிவகாமி. உங்களுக்கு போன் பண்ணிணேன். லைன் கிடைக்கல. தப்பாம வந்துடனும்".

"அப்படியா, நல்லது. கட்டாயம் வரேன். அப்படியாவது முருகன் மனசு வைப்பானென்று பார்க்கறீங்க".

"சரியா சொன்னீங்க."

"நீங்க பேசனதையெல்லாம் கேட்டேன். நல்ல மாப்பிள்ளையாக நம்ப ஊருலயே பாருங்க".

"உங்களுக்கென்ன, சுமதியம்மா. நீங்க உங்க பிள்ளைகளுக்கெல்லாம் அமெரிக்கா, பிரான்ஸ்னு பார்த்து கொடுத்துட்டீங்க. பொண்ணோட பிரசவம், மருமக பிரசவம்னு அமெரிக்கா, பிரான்ஸ் பார்த்துட்டீங்க."

"அங்க போயி அவங்க படற கஷ்டத்த எல்லாம் பார்த்துட்டுதான் சொல்றேன். பாவம் நம்ம வீட்டுப்பிள்ளைங்க. இங்க சுகமா, சொகுசா வளர்ந்துட்டு அங்க போய் கஷ்டப்படறாங்க. பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, பெருக்கிக்கூட்ட, இஸ்திரி போட, ஏன் சமையலுக்குக்கூட இங்க ஆள் இருக்கு. பாவம் இதெல்லாம் அவங்களே செய்யணும். இதற்குமேல் டிரைவர் வேலை வேற. குழந்தையெல்லாம் இருந்தா இன்னும் நெறய வேலை. நிம்மதியா ஒரு வாய் சாப்பிட கூட நேரம் கிடைக்கறதில்லை. எல்லா வேலை செய்ய மெஷின் இருந்தாலும்கூட, அவங்க தானே அதையெல்லாம் போடனும்."

"நீங்க என்ன சொன்னாலும் அமெரிக்கா வரன் போல வருமா?'

"சரி, சரி. உங்க விருப்பம் போல நடக்கட்டும்".

"நீங்களும் முருகன் கல்யாணத்துக்கு வந்துடுங்க."

முருகன் கல்யாண உற்சவம் வெகு ஜோராக நடந்தது. மறுநாள் காலை, "அம்மா, தபால்", என்று ஒரு குரல் ஒலித்தது. "வாசுகி அம்மா. நீங்க எதிர்பார்க்கிற அமெரிக்க வரனாய் இருக்கட்டும்" என்றார் தபால்காரர். "அப்படி இருந்து நல்லபடியாக கல்யாணம் முடியட்டும். உங்களை நல்லா கவனிக்கிறோம்", என்றபடியே வாசுகியம்மா அவசரமாக தபாலைப் பிரித்தார்கள். அதற்குப் பிறகு எல்லாம் மின்னல்வேகத்தில் நடந்து, மகள் அமெரிக்கா கிளம்புவதில் முடிந்தது.

நாட்கள் பறந்தன. வாசுகி அம்மாள் வாரந்தோறும் மகள் போனுக்காக காத்திருந்து பேசி மகிழ்வார்கள். ஒரு வாரம் மகள் போனுக்காக காத்திருந்தபோது, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது சினிமாவை நிறுத்தி, பரபரப்பாக நியுயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தில் நடக்கின்ற விமானத் தாக்குதலை ஒளிபரப்பினார்கள். "அம்மா, தாயே, அகிலாண்டேஸ்வரி. இது என்ன சோதனை. நீதான் என் பிள்ளைகளை காப்பாத்த வேண்டும்", என்று புலம்பியபடி தன் கணவரைக் கூப்பிட்டார்கள். அவர்கள் மருமகன் அந்த கட்டிடத்தில் வேலை செய்வதால், இருவரும் மிகப் பதட்டத்துடன் மகளுக்கு போன் செய்ய முயன்றார்கள். வெகு நேரம் முயன்றும், அவர்களுக்கு இணைப்பே கிடைக்கவில்லை. சுமதியம்மாவிற்கு போன் செய்து அவர்களுக்கு ஏதாவது தகவல் தெரியுமா என்று விசாரித்தார்கள்.

மறுநாள் மகளிடமிருந்து போன் வந்தது. "அம்மா கவலைப் படாதீங்க. நாங்க பத்திரமாக இருக்கிறோம். நாங்க அன்னைக்கு லீவு போட்டுவிட்டு பிட்ஸ்பர்கில் உள்ள பெருமாள் கோயிலுக்கு போயிருந்தோம்" என்றாள் அவள்.

"நல்ல வேளை. அந்த பெருமாள்தான் உங்களை காப்பாத்தினார். டீவில ஒவ்வொரு நாள் ஒரு சேதி வருது. எதோ பாரஸ்ட் பயர்னு சொல்றாங்க. ஒரு நாள் எல்லார்க்கும் வேலை போகுதுனு சொல்றாங்க. ஒரு நாள் பூகம்பம்னு சொல்றாங்க. ஒரு நாள் யாரோ சுட்டுட்டாங்கனு சொல்றாங்க. இப்படி நாள்தோறும் ஒரு பயங்கரமான செய்தியை கேட்டு எங்களால இருக்க முடியலை. பேசாம மாப்பிள்ளையை இங்கயே ஒரு வேலை பார்த்துக்கிட்டு வந்துடச் சொல்லு".

Monday, May 12, 2008

தோட்டக்காரன்

விடிந்தும் விடியாத அதிகாலைப் பொழுது யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டு எழுந்தேன். கசக்கிய கண்களுடன், வாசற் கதவை திறந்து வெளியே பார்த்தேன். ஒருவரும் இல்லை. வானம் மட்டும் லேசாக தூறிக் கொண்டிருந்தது. காற்று தான் கதவைத் தட்டியதோ என்று எண்ணியவாறே சுற்றிலும் நோட்டம் விட்டேன். யாரும் வந்து போனதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரம் அங்கேயே நின்று எதிர்த்தாற் போல இருந்த மரத்தைப் பார்த்தேன். ஆஹா என்ன அழகு! கழுவினாற் போல் ஒரு அழகிய பச்சை நிறத்துடன் நின்றிருந்தது. இறைவனின் படைப்பில் எது தான் அழகு இல்லை?

மீண்டும் படுக்கப் பிடிக்காமல், காலைக் கடன்களை முடித்து விட்டு, குளித்து விட்டு பூஜை புனஸ்காரங்களை முடித்து அலுவலகத்திற்கு செல்ல தயாராகி இருந்தேன். சிறிது நேரத்தில் அருமை மனைவி, காலை சிற்றுண்டியுடன் வந்தாள். சாப்பிட்டு விட்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன்.

என் சக நன்பன் ஒருவன் அவனது மேஜையில் இருந்த ரோஜா செடியின் காய்ந்த இலைகளை கிள்ளி விட்டு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அவன் பராமரிக்கும் விதத்தை வியந்து பார்த்தவாறே இருந்தேன். என் வீட்டின் முன் நின்றிருந்த மரத்தின் அதே கழுவிய பச்சை நிறம் இப்பொழுது அந்த செடியில் இருந்தது. சிறிது நேரம் நன்பனிடம் உரையாடி விட்டு என் மேஜைக்கு வந்து உட்கார்ந்தேன். என் கவனம் மீண்டும் அந்த மரத்தை சுற்றியே வந்தது. யார் அந்த மரத்துக்கு இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் விடுகிறார்கள்? என் மனம் விசுவரூபம் எடுத்து உலகெங்கும் பரவியது. இந்த மரம் மட்டும் இல்லை, மலைகளிலும், காடுகளிலும், ஆற்றோரங்களிலும் வளரும் மரங்களை யார் பராமரிக்கிறார்கள்?

இயற்கையா? இறைவனா?
யோசித்துப் பார்க்கிறேன், ஒன்றும் முடிவுக்கு வர முடியவில்லை. காற்றும் மலையும் தான் இலைகளை கிள்ளி விட்டு, தண்ணீர் ஊற்றுகிறதோ? என்ன தான் உரம் போடுகிறார்கள்? யார் போடுகிறார்கள்? யார் படைத்தார் இந்த காலங்களை? காற்றின் அசைவுகளை?
இறைவன் என்னும் தோட்டக்காரனோ?
அப்படி என்றால் "வறட்சி" என்பது என்ன? அவனின் சோம்பேறித்தனமா? புயல், வெள்ளம் என்பது அவனின் படைப்பு பிடிக்கவில்லை என்று அழிக்கும் விதம் தானோ? இது தான் அவன் பராமரிக்கும் விதம் என்றால், நாம் காண்பது அவனின் தோட்டத்தைத் தானே. அவன் தோட்டக்காரன் என்றால் அந்த தோட்டம், நாம் வாழும் உலகம் தானோ? அப்படி என்றால் அந்த தோட்டத்திற்கு யார் சொந்தக்காரன்?
இயற்கையா? இறைவனா?

தோட்டத்தின் பலனை அனுபவிப்பவன் தானே, அதன் சொந்தக்காரன். அப்படி என்றால், இந்த உலகை அனுபவிப்பவர்கள் நாம் தானே? ஆக நாம் தானே தோட்டத்திற்கு சொந்தக்காரர்கள். நாம் தோட்டத்தின் சொந்தக்காரன் என்றால் இறைவன் நம் தோட்டக்காரனோ?

நாம் யார்? இறைவன் யார்?

- வெங்கடேசன் செட்டியார்

ரிச்மண்டில் 2002ல் நடந்த இலக்கியப் போட்டியில் பங்கேற்ற படைப்புகளில் என்னைக் கவர்ந்த ஒன்று. இதை அவ்வப்போது படித்துக் கொண்டிருப்பேன். மற்ற படைப்புகளை இங்கே காணலாம்.

Friday, May 09, 2008

குழந்தைகள் ஓவியப் போட்டி

குழந்தைகள் சேவை நிறுவனமான CRY மே 17ம் தேதி நம் ஊரில் ஒரு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தவிருக்கிறது. போட்டி Echo Lake Park, Shelter1ல் 11ல் இருந்து 2 வரை நடக்கும்.

மேல் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.

Thursday, May 08, 2008

எங்க வீட்டு ரோஜாக்கள்

வசந்த காலம் வந்திருக்கு இங்கே :-) வசந்தத்தில் புல்லு சரியா வெட்டாட்டி யார் வருவாங்கன்னு கடைசி படத்துல பாருங்க

Sunday, May 04, 2008

கிராமத்துக் கோவில் திருவிழா

சித்திரை, வைகாசியில் அநேக கிராமங்களில், கோவில் திருவிழாக்கள் இன்றும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, நாமறிவோம். அத்தகைய திருவிழாவினைப் பற்றிய ஒரு கவிதை .

http://vazhakkampol.blogspot.com/2008/05/blog-post.html