Wednesday, October 11, 2006

பித்தனின் கிறுக்கல்கள் - 3

பித்தனின் கிறுக்கல்கள் - 3
தமிழ் சங்கத்துக்கு ஒரு யோசனை:
சமீபத்தில் இலக்கியப் போட்டி 2006-க்கான அறிவிப்பு வந்து இருக்கிறது. மேலும் பரிசுன்னு சொல்லாம, எல்லா படைப்புகளையும் படைப்பாளர்களின் புகைப்படங்களோடு இந்த வளைத்தளத்தில் வெளியிடலாமே? இதனால, ஒன்னு - நிறைய பேர் கலந்து கொள்வார்கள், ரெண்டு - பொறாமை இருக்காது, ஒரு அறிஞன் சொன்னது We see things not as they are but as we are-னு இது இந்த போட்டிக்கு கண்டிப்பாகப் பொருந்தும் காரணம், இந்தப் போட்டியில தலைப்பு எதுவும் தராததினால யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் எழுத முயற்சி செய்யலாம், அது நடுவர் குழுவுக்குப் பிடிக்கலைன்னா நல்லா எழுதியிருந்தாலும் பரிசு கிடைக்காதே? ஊதர சங்கை ஊதிட்டேன், இனி சங்கத்தின் பொறுப்பு, பண்ருட்டியார் பொறுப்பு. 'நாராயண, நாராயண'.
தமிழ் சங்கத்தின் தற்போதைய செயற் குழுவின் பணிக்காலம் முடியப் போவதால், அடுத்த குழுவினர்களைத் தேர்ந்து எடுக்கும் பணியும், பொறுப்பும் அவர்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் இந்த முயற்சி இனிது முடிய என் வாழ்த்துக்கள்.
போன வெளியீட்டில் ஒரு சில யோசனைகளைச் சொல்லியிருந்தேன், அது அந்த வெளியீட்டில் கடைசியில் இருந்ததால், பலர் பார்வையில் பட்டிருக்காது எனவே, மீண்டும் ஒரு முறை - சங்கு ஊதி விடுகிறேன்.
பட்டிமன்றம்
தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் வகையில் ஒரு பட்டிமன்றம் நடத்த இருக்கின்றோம் என்று ரிச்மண்ட் தமிழ் சங்கத்திலிருந்து அறிவிப்பு வந்து இருக்கிறது. செவிக்கு நல்ல விருந்தாக இருக்கும். அரட்டை அரங்கம் போல ஒன்றுகூட செய்யலாம் நல்லா பொழுது போக கத்தி பேசலாம். நிறைய குழந்தைகள், பாட்டு, பரத நாட்டியம் பயில்கிறார்கள் அவர்களுக்கு பாட்டு போட்டி வைத்து 'சப்தஸ்வரங்கள்' போல ஒன்றும் செய்யலாம். கலந்து கொள்ளும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசு என்று வைத்துவிட்டால், போட்டி நல்ல களை கட்டும்.
இந்த ப்ளாக் பற்றி
இந்த ப்ளாக்ல நிறைய இலக்கிய படைப்புகள் வெளியிட ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு சந்தோஷம் எனக்கு போட்டியா யாரும் இன்னும் அரசியல் விமர்சனம் எழுத ஆரம்பிக்கல, அது கொஞ்சம் ஆறுதலா இருக்கு.
55 வார்த்தைல கதை கேட்டு இருக்கார் முரளி:
சுஜாதா சொன்னது:
ஒரு ஊர்ல ஒரு நரியாம் அத்தோட கதை சரியாம்
சுவற்றில் ஆணி அடிக்கும் முன் வேலைக்காரப் பையன் கேட்ட கடைசி கேள்வி, ஏங்க
வீட்டில concealed wiring-நு சொன்னீங்களே, மெயின் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டீங்களா?
நான் சமுதாய அவலங்களைச் சாடுவதாக முரளி எழுதியிருக்கார், உங்க எல்லோருக்கும் உள்ள கோபம் என்னிடத்தில் வார்த்தைகளாக வெடிக்கிறது நீங்கள் மனதுக்குள் பொருமுகிறீர்கள் அவ்வளவுதான்.
சமீபத்தில் வந்த சில அறிக்கைகள்:
மக்களுக்காக கக்கூஸ் (கழிப்பறை) கழுவவும், தெருவைக் கூட்டவும் கூட நான் தயார் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பேஷ் பேஷ், இதைவிட கீழே இறங்கி வேறு யாரும் ஓட்டு கேக்க முடியுமா?
************************************************************************
மதுரை மத்திய தொகுதியில் வாக்காளர்களைக் கவர கட்சிகள் கொடுத்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அப்படி போடு அறுவாள! ஓட்டும் கிடைக்கும், கள்ள நோட்டும் கையை விட்டு போயிடுச்சுன்னு கட்சிகள் சந்தோஷப் படும். வாங்கினவங்கதான் பாவம், திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி ஆயிடுச்சு.
************************************************************************
கருணை மனுக்களை பரிசீலிக்கும்போது அரசியல், சாதி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்வதோ, குறைப்பதோ கூடாது என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
சபாஷ், இது போன்ற தீர்ப்புகள்தான் நம் நாட்டில் நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையை மேலும் வலுப் படுத்துகின்றன.
************************************************************************
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்திற்கு செலவுக்குக் கூட அதிமுக பணம் தரவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
என்னங்க இப்படி சொல்றீங்க, அவங்க தயவால ரெண்டு MLA சீட் கிடைச்சு இருக்கு, அதை வெச்சு எவ்வளவு சம்பாதிக்க முடியும்!
************************************************************************
தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைளை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிபர் கூறியுள்ளார்.
மெய்யாலுமா!!! ஐ, சும்மா டமாஸ் பண்ணாதீங்க.
************************************************************************
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி பல ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார், எனவே அவரை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரியுள்ளார்.
அதோட விடுவானேன், அவங்களுக்கு ஒரு MLA சீட்டும் வாங்கி கொடுத்துடுங்க பாவம் பொழைக்கரதுக்கு ஒரு வழி கிடைச்சாமாதிரி இருக்கும்.
************************************************************************
ஏர் இந்தியா விமானத்தை பறவை தாக்கியதால் லண்டனிலிருந்து டெல்லி வர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி பரிதவித்த விமான பயணிகள் ஒரு வழியாக 3 நாட்களுக்குப் பிறகு தலைநகர் வந்து சேர்ந்தனர்.
விமானத்துக்கு பறவைக் காய்ச்சல் வந்து இருக்குமோ?
************************************************************************
இந்தவாரம் அரசியல் விமர்சனம் இல்லை! உள்ளாட்சி தேர்தல் முடிவும், மதுரை மத்திய தொகுதிக்கு இடைத் தேர்தல் முடிவும் வந்ததும் நிறைய எழுதலாம்.
இந்தப் பதிவை பித்தனின் ப்ளாக்கில் படிக்க இங்கே க்ளிக்கவும்:
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும் ...

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!