Thursday, August 31, 2006

வேதாளம்

கல்லூரியில் மைதானத்தையே பார்க்காமல் நாற்பதில் மராத்தன் முடிக்கும் நண்பன்
மகனை உயர்நிலைப்பள்ளியில் விட்டு பரதம் பயிலும் தாய்
உலகமெல்லாம் சுற்றும்போதும் தினம் ஒரு கவிதை எழுதும் மேலாளர்
வருடத்துக்கு ஒரு புதுமொழி கற்கும் மென்போருள் நிபுணர்
குடியே முழுகினாலும் பங்குச்சந்தையை விடாக்கண்டர்
ஓய்வு பெற்றுவிட்டு விமானமோட்டப் பழகும் மாமா
பத்து மணிநேரம் குழந்தைகளை கவனித்துவிட்டு வந்து பந்துவராளியை பந்தாடும் மருத்துவர்
மகனுடன் முதுகலை தொழில் நிர்வாகம் படிக்கும் அன்னை
தொடக்கப்பள்ளி மகனுடன் கராத்தே துவங்கும் தந்தை
இவ்விக்கிரமங்களால் சற்றும் தளராமல் முருங்கையில்
சிவனே என்றிருக்கும் நான்!

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!