Thursday, August 24, 2006

இது ஞாயமா?

அம்மி மிதித்தது போதாதென்று உன் களைப்பு நீங்க உடம்பு மிதித்தேனே
அருந்ததி பார்த்தது போதாதென்று உன் வழி மேல் விழி வைத்தேனே
தகப்பன் பெயரைத்தூக்கியெறிந்துவிட்டு உன் பெயரை சேர்த்தேனே
என் சொந்தம் விட்டு உன் பந்தம் கொண்டேனே
கோத்திரம் மாற்றிய சாத்திரம் கேட்டேனே
குருதி சிந்தி தந்தை சேர்த்த தட்சிணை கொண்டு வந்தேனே
இது போதாதென்று உன் கரம் பற்றி எரிகனல் வலம் வந்தேனே
அதுதான் என் தவறா?
நீதானே என் கரம் பிடித்து கனல் வலம் வந்தாய்?
இதெல்லாம் போதாதென்று நீயே என்னை நெருப்பிலிடலாமா?

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!