Friday, September 13, 2019

கர கர மொறு மொறு - 2

வணக்கம் நண்பர்களே

 9  ஆம் எண் ஆனது எட்டு திசைகளையும் அதனுடனான ஆக்க சக்தியும் சேர்ந்தது என எண்ணினார் நம் முன்னோர்கள். அதனோடு சேர்த்து அந்த கால கட்டத்தில் இரண்டாம் இலக்கத்திற்கான பூஜ்ஜியம் கண்டறியாமல் இருந்தது கூட காரணமாக இருந்து இருக்கலாம் என்கிறது அறிவியல்

அதாவது 0  சேர்த்தால் தான் 10  என்ற அடுத்த இலக்கம் கூட வந்து இருக்க கூடுமல்லவா

என்னவாக இருந்தாலும் ஒன்பது கோள்களையும் ஒன்பது விதமான சக்தியாக பாவித்து அதனை கடவுளாக அனைத்து ஆலயங்களிலும் அமைத்து விட்டு அதனூடாக விதியையும் சொல்ல தவற வில்லை அவர்கள்...

விதி --- மூலவர் மற்றும் உற்சவர் போல அனைத்து கடவுளரையும் சேவித்து விட்டு பின்னர் அமர்ந்து பிரசாதம் உண்டு ஆலயத்தை விட்டு வெளியேறும் வேளையில் தான் நவ கிரகங்களையும் ஒரு முறை சுற்றி விட்டு வெளியேறுதல் என்பது

அதாது நான் எல்லாத்தையும் பெரிய சாமிட்ட சொல்லிட்டேன் ... நீங்க அதுல பக்க விளைவு எதையும் உண்டாக்காம இருந்தா போதும் என்பது போல....

இதனால் தான் நவகிரகங்களின் திசைகளும் ஒவ்வொரு பக்கமாக இருப்பதையும் மையத்தில் சூரியன் இருப்பதையும் காணலாம்...

அனால் இது கால போக்கில்...ஒரு ஒரு கிரகத்திற்கும் ஒரு சுற்று என்றும் மொத்தமாக மூணு சுற்றும் என்றும் மருகி போண்டது..இதில் சனி கிழமைகளில்  ஒன்பது கூட சுற்றுவார்கள் பலர். ...

இது மற்றோன்றையும் நிரூபிக்கிறது .. அது நமது பண்டைய ஆன்மீகமும் அறிவியலும் கொண்ட பிணைப்பை....அதனால் தான் உயரமான அரண்மனை போன்ற கோபுரங்களும் அதன் மேல் பொருத்தப்பட்ட கலசங்களின் கூர்மையான முனைகளும்...

சரி இருவர் அமர்ந்து பேசி கொண்டு இருக்கையில் ஒருவர் விடும்  கொட்டாவி ஏன் மற்றொருவருக்கு உடனே தொற்றி கொள்கிறது என்பதற்கான நெடுநாள் என்னுடைய புரிதல் பொய் ஆனது ... மூளை oxygen  பற்றாக்குறையை சரி செய்ய எடுக்கும் காற்றினால் அடுத்தவருக்கும் oxygen பற்றாக்குறை சரி செய்ய அவரது மூளை இடும் கட்டளை தான் அடுத்தவருக்கு உடனே வரும் கொட்டாவி என்பது என்னுடைய பண்டைய புரிதல்

அனால் அது அறிவியல் உண்மை இல்லை..... ஏனெனில் நீங்கள் ஒருவருடன் போன்இல் பேசும் போதும் நீங்கள் கொட்டாவி விட்டால் அடுத்தவர் கொட்டாவி விடுவார்....

ஏனெனில் மூளையில் இருக்கும் mirror  நியூரான் ...

அதன் செயல் ஆனது அடுத்தவரிடமிருந்து சில செயல்களை இமிடேட் செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்டது...சிறு குழந்தைகள் எவ்வாறு சில செயல்களை அவர்களது சுற்றத்தை பார்த்து பழகுகின்றனரோ அது போல.....

பேய்கள் கண்களுக்கு புலப்படாது என்பது உண்மையா இல்லையா??..

அடுத்த வாரத்தில் பார்க்கலாம்...5  நாட்கள் காத்திருக்கவும்...

1 comment:

  1. //என்னவாக இருந்தாலும் ஒன்பது கோள்களையும்

    ஒன்பது கோள்கள் எது எதுங்க?

    சூரியனும் நிலாவும் கோள்கள் கிடையாது; இராகுவும் கேதுவும் வெறும் கற்பனை.
    அப்புறம் எப்படி 9 கோள்கள்?

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!