Thursday, February 14, 2019

காதல்

கண்டதே காரணமாய் 
காந்தம் போல் ஈர்க்கும் காதல் 
கவர்ந்து நம்மை கொண்டதும் 
கற்றவராயினும் உளறல் தரும் 
கற்பனை அற்றவராயினும் கவி தரும்
காட்டுமிராண்டிக்கும் கனிவு தரும்
சிடுமூஞ்சியாயினும் சிரிப்பு தரும்
துறவியாயினும் துரத்தும் ஆசை தரும்
பரம ஏழைக்கும் பார் ஆளும் கனவு தரும்
நாத்திகரையும் உள்ளத்து உணர்வுகளை நம்பவைக்கும்
தறுதலைகளுக்கும் பொறுப்பு தந்து 
தலைவன் தலைவி ஆக்கும்  
காதல் மண்ணில் தோன்றிய காலம் முதல்
மனித குலத்தின் கதை இதுவே

-Feb 13, 2012

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!