Wednesday, November 22, 2017

அருண் பக்கங்கள் - காலம்


சனிக்கிழமை காலையில் எண்ணெய் தேய்க்க வரும் அம்மாவிடம் இருந்து தப்பி ஓடுவேன் என் பம்பரத்தை எடுத்து கொண்டு........
குமார் அண்ணன் வந்த உடனேயே சில்லாக்கு ஆரம்பமாகும்....
நிழலுக்கும் வேர்க்கும் கோடை வெயிலில் தான் எங்கள் கில்லி தாண்டு உச்சமெடுக்கும்...........
பச்சை குதிரை தாண்டியே பாதி காயம் பட்டிருக்கும்........
பல்லாங்குழி ஆட பாசமாக என் அக்காள் காத்திருக்கும்.....
உள்ளங்கை வேர்த்துவிடும் கம்பு தள்ளி......
கை முட்டி தேய்ந்தது சொட்டாங்கல்லில்.....
இருட்டும் பொழுது ஒளிய தொடங்குவோம் ஒருவனை கண்டு பிடிக்க சொல்லி......
இரவின் முன்னே விளையாடுவோம் ராஜா ராணி........
வெள்ளி கிழமை மட்டுமே வரும் கோயில் யானை.....
புகை கக்கி பின்னாலே இழுத்து செல்லும் கொசு வண்டி....
மின்சாரம் தடைபட்டால் எங்கள் தெரு மெழுகின் சொர்க்கம்...
இமை மூடாமல் தானாகவே தூக்கம் சொக்கும்.....
இத்தனையும் தோன்றும் கதை போல் என் மகனுக்கு !!.....

கதையாவது கேட்க பிடிக்குமோ அவன் பிள்ளைக்கு ??.......

No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!