Saturday, March 31, 2007

உள்ளிவாயன் பெருங்காயடப்பா

சமீபத்தில் ஐகாரஸ் பிரகாஷின் வலைப்பதிவில் ஒரு கவிதையைப் பார்த்துவிட்டு அவர் எழுதியது என்று நினைத்து ஒரு பின்னூட்டம் விட்டேன். அந்த கவிதையை ஒரு ரிச்மண்ட்காரர் எழுதியிருக்கிறார். அவர் பெயர் உள்ளிவாயன் பெருங்காயடப்பா வாம்.

கூகுளாண்டவரிடம் முறையிட்டாலும்
சரியான விடை கிடைக்கவில்லை.

இன்னொரு வலைப்பதிவில் மூக்குசுந்தர் என்பவர் இப்படி எழுதியிருந்தார்:
(உள்ளிவாயன் பெருங்காயடப்பா என்கிற ஒட்டக்கூத்தராயன் என்கிற ரங்கபாஷ்யம் என்கிற சுவாரசியமான முகமூடியைப் போட்டுக்கொண்ட ***************னின் லீலை.

மனிதர் மர்ம மனிதராயிருக்கிறார். யாருக்காவது அவரது விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் நான் சற்று நிம்மதியாகத் தூங்குவேன் :-)


திருவாளர் உள்ளிவாயர்கூட எழுதலாம். அவரது ரகசியத்தை காப்பாற்றுவேன்.

Wednesday, March 28, 2007

புச்சு கண்ணா புச்சு

நபர் 1: நல்லா பாட கத்துக்கிட்ட சிஷ்யனுக்கு குரு/பாகவதர்
சொல்லிக்கொடுக்கிற கடைசி பாட்டு என்ன தெரியுமா?
நபர் 2: தெரியாதே! என்ன பாட்டு?
நபர் 1: "பாட்டும் நானே பாவமும் நானே பாடா உன்னை
நான் பாட வைத்தேனே"

ரசிகர் 1: இந்த கலை நிகழ்ச்சி என்னங்க புதுமையா இருக்கு?
ரசிகர் 2: எப்படி சொல்றீங்க?
ரசிகர் 1: முதலில் வந்தவங்க "பார்த்தால் பசி தீரும்" அப்படீன்னு
பாடினாங்க.
பிறகு வந்தவரு "ஓடி ஓடி உழைக்கணும்" அப்படீன்னு பாடினாரு
கடைசியா வந்தவங்க "நலந்தானா நலந்தானா" அப்படீன்னு
பாடினாங்க
ரசிகர் 2: ஓ அதுவா? இந்த ப்ரோக்ராமை ஸ்பான்ஸர் பண்றவங்க
லோக்கல் ஹாஸ்பிடல், டாக்டர்கள் தான். அதான் இப்படி.

சபா செகரட்ரி: பாகவதர் இனிமே சன்மானம் வேண்டாம்னுட்டாரு
சபா ப்ரெஸிடெண்ட்: ஓ ரொம்ப நல்லது. பகவதர் நல்ல இதயம் படைத்தவர்.
சபா செகரட்ரி: அதான் இல்லை. அவருக்கு ரொம்ப கெட்ட இதயம்
சபா ப்ரெஸிடெண்ட்: என்ன சொல்றீங்க?
சபா செகரட்ரி: தேங்காய் மூடி கச்சேரி பண்ணி பண்ணி ஒத்துக்கலையாம்.
ஹை கொலெஸ்ட்ராலாம்.

பேர் என்னடா பேர் பேர்?

எல்லோரும் படித்த படிப்பிற்கேற்ற வேலை பார்ப்பவர்கள் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது. எனக்கு தெரிந்தவர் ஒருவர் கஷ்டப்பட்டு டாக்டர் படிப்பு படித்து டாக்டர் பட்டம் பெற்ற பின்னர் IAS தேர்வு எழுதி பாஸ் பண்ணி கலெக்டராக இருக்கிறார். Charted Accountancy, Company Secretary எல்லாம் படித்து பாஸ் பண்ணிவிட்டு மலேஷியாவில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதிக்கொண்டிருக்கிறார் என் மற்றொரு நண்பர். நான் என்ன படித்துவிட்டு இப்படி ப்ளாகியாகி குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா? என் கதை பெரிய கதை. கூடிய விரைவில் என் சுயசரித்திரத்தை எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
இப்படி இவர்களைப்பற்றி சிந்தித்துக்கோண்டிருந்தேன். அப்போது ஒருவரின் பெயருக்கேற்ற வேலை என்னவாக இருக்கலாம் என்று யோசித்த போது உதித்த சில பெயர்களை கீழே அடுக்கியுள்ளேன்.
(குறிப்பு: உங்கள் பெயர் இந்தப்பட்டியலில் இருந்து உங்கள் மனம் நோகும்படி இருந்தால் என்னை மன்னிக்கவேண்டும். இது ஒரு கற்பனையே)

பெயருக்கேற்ற வேலை
பலராமன் - பளு தூக்குபவர் (Weight Lifter)
சிங்காரம் - Hair Stylist
சாரதி - Driver
பார்த்தசாரதி - ரொம்ப தெரிந்த driver
குகன் - Ship captain
சம்மந்தம் - கல்யாண தரகர்
வளர்மதி - டீச்சர்
சிவப்பிரகாசம்/ஞானபிரகாசம் - லைட்பாய்
மார்க்கண்டேயன் - Life Insurance Agent
கார்மேகம்/நீலமேகம் - Weatherman (Meteorologist)
சாமிகண்ணு - Eye Doctor
அப்பு - Painter
தாண்டவராயன் - Long Jump/High Jump athlete
பாரி - Loan Officer
தச்சு(தட்சிணாமூர்த்தி) - Carpenter
வாதிராஜ் - Lawyer
பஞ்சவர்ணம் - Artist
பவுன்ராஜ் - Goldsmith
பன்னீர் - Perfume shop owner

பெயருக்கு பொருந்தாத வேலை
சர்கஸ் கலைஞர் - ஆடியபாதம்
பைனான்சியர் - பிச்சை
Fireman - பஞ்சு
Carpet shop owner - கரிகாலன்
Olympic runner - நடராஜன்
Public speaker/Orator - சாந்தகுமார்

(குறிப்பு: இதற்கு மேலும் யோசித்து என் மண்டை காய்ந்து விட்டது - உங்களால் முடிந்தால் பட்டியலை நீட்டவும்)

Monday, March 26, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 7

ஸ்பைவேரில் இத்தனை வகைகளா?

ஸ்பைவேர்-நம் செயல்கள் அத்துணையையும் நாம் அறியாமல் ஒற்றறியும் மென்பொருள் .

ஆட்வேர்- நாம் கணினியை இயக்கும் போதெல்லாம் விளம்பரங்களை காட்டி எரிச்சலடைய வைப்பது .

ஸ்னூப்வேர்- வேறு ஒருவருக்காக கணிணயில் நாம் செய்யும் செயல்கள் அத்துணையும் பதிவு செய்து பிறகு அவருக்குத் தெரிவிக்கும்.

பிரௌசர் கடத்தி( ஹைஜாக்கர்) -நாம் ஏதேனும் ஒரு வலைத் தளத்தை நோக்கச் சுட்டினால் வேறு எங்காவது நம்மை அழைத்துச் செல்லும் .

கீலாக்கர்- நம் தட்டச்சினை அப்படியே பிறருக்குத் தெரிவிப்பது.

டையலர் - தானாகவே டையல் செய்து இணையத்தைத் தொடர்பு கொண்டு வேறுசில கொடிய நிரலிகள் நம் கணினியை தாக்க வழி ஏற்படுத்திக் கொடுப்பது .

பெரும்பாலும் ஆபாச வலைத் தளங்களைப் பார்ப்பவர்கள் கணினியானது ஸ்பைவேர் தொந்தரவுக்கு அடிக்கடி இலக்காகிறது .


ஸ்பைவேர் தாக்குதலின் அறிகுறிகள்


கணிணியின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கும்.

பிரௌசரில் சில டூல்பார்கள் புதிதாக தென்படும். அவற்றை ஒழிக்கவும் முடியாது.

புதிது புதிதாக பாப்பப் விளம்பரங்கள் தோன்றும்.

நமது பிரௌசரின் செட்டிங்குகள் தானாக மாறியிருக்கும். நமது பிரௌசரின் முதல்பக்கம் மாறியிருக்கும்.

ஏதாவதொன்றை தேடுபொறியில் தேடினீர்களேயானால் வேறு முடிவுகள் வரும் .

இணைய தொடர்பு விடுபடும்.

மென்பொருள்கள் தவறாக இயங்க ஆரம்பிக்கும்.

கணிணியும் இயங்க மறுக்கும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

மரத்திலேறிய தலைவர்கள்

இந்தப் படத்திலுள்ள மரத்தில் ஒளிந்திருக்கும் தலைவர்களை கண்டுபிடியுங்கள்.



எத்தனை தலைவர்கள் உங்களுக்கு தெரிகிறார்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

Sunday, March 25, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 9

ஹேக்கர்ஸ் :

நாயகன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் "நீங்கள் நல்லவரா? கெட்டவரா?" என்று, அதைப்போல ஹேக்கர்ஸ் நல்லவரா? கெட்டவரா ? என்று வாதிடுவோர் கணினி உலகில் உண்டு. பொதுவாக ஹேக்கர்ஸ் என்றாலே கணிணி அல்லது கணிணிகள் நெட்வொர்க்கில் பாதுகாப்பு வளையத்தை உடைத்து , அத்துமீறி நுழைந்து ஏதாவது செய்ய நினைப்பவரையே குறிக்கும். ஆனால் பாதுகாப்பு வளையத்தை சோதனை செய்வதற்காக தாக்குபவர்களை ஹேக்கர்ஸ் எனவும் , தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களை கிராக்கர்ஸ் எனவும் கூறலாம். இனி இதில் வரும் ஹேக்கர்ஸ் எனும் சொல் தீய நோக்குடன் பாதுகாப்பு வளையத்தைத் தாக்குபவர்களையே குறிக்கும்.

ஹேக்கர்ஸ் பொதுவாக நல்ல அறிவு உடைய சட்டத்தை மதிக்காத நபராகவே இருப்பர், சிலர் அரசின் மேலுள்ள கோபத்திலும் ஹேக்கர்ஸ் ஆக மாறுவதுண்டு . இவர்கள் தங்களுக்குள் இணைய குழுக்களை அமைத்துக் கொண்டு தங்கள் வழிமுறைகளை பரிமாறிக் கொண்டு நல்ல வலுப் பெற்று விடுகின்றனர். நல்ல திறமுடைய ஹேக்கர்ஸ் வழிமுறைகளையும், கருவிகளையும் வடிக்க, தொடக்க நிலையிலுள்ளோர் அதன் மூலம் அனுபவம் பெறுகின்றனர் .

ஹேக்கர்ஸ் மூலம் ஏற்படும் பாதிப்புகள் :

சம்மந்தமே இல்லாத நபரின் கணிணி காரணமே இல்லாமல் தாக்கி தகவல்கள் பாதிக்கப் படும்.

சில அரசு இயந்திரங்களின் வலைப்பின்னல் இது மாதிரி தாக்குதல்களுக்கு ஆளாகும். காரணம் என்று பார்த்தால் தாக்கியவரின் சமூகத்திற்கு எதிரான கோபம் இவ்வாறு திசை மாறியிருக்கும் .

மற்றவரின் அறிவுசார் தகவல்களைத் திருடவும் இவ்வாறு நுழைபவர்கள் முயல்வது உண்டு.

லாபநோக்கில் தாக்கும் ஹேக்கர்ஸ் நம் கணிணியில் டிரோஜன் குதிரையையோ, வைரஸையோ நம் கணிணியில் நிறுவி , நம் கணிணியை அடிமைக்கணிணி(ஜோம்பி)யாக மாற்ற வாய்ப்பு உண்டு .

அடையாளத் திருட்டு: நம் கணிணியில் உள்ள நமது தகவல்கள் திருடப்பட்டு, நமது வங்கி கணக்குகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

வருங்காலத்தில் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலுக்கு ஹேக்கிங்கை உபயோகப் படுத்தக் கூடும்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Wednesday, March 21, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 8

ஸ்பைவேர் தாக்குதலை தவிர்க்கும் முறைகள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச ஆண்ட்டி ஸ்பைவேர் நிரலிகளில் ஏதேனும் இரண்டினை தரவிறக்கம் செய்து உபயோகப் படுத்தலாம் .

Microsoft AntiSpyware - http://www.microsoft.com/spyware/

Spybot Search & Destroy http://www.safer-networking.org

Ad-Aware SE Personal Edition http://www.lavasoft.de


பிரௌசரின் செட்டிங்கை உயர்த்துதல்;

இன்டர்னெட் எக்ஸ்புளோரர் இயக்குங்கள்.

அதில் டூல்ஸ் மெனுவைத் தேர்ந்து, இன்டர்னெட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.

அதில் செக்யூர்ட்டியைத் தேர்ந்தெடுங்கள்.

வெப் கன்டென்ட் சோன் தெரிவு செய்து, பாதுகாப்பின் அளவை கூட்டுங்கள்.

விண்டோஸ் அப்டேட்டுகளை அவ்வப்போது தரவிறக்கம் செய்து நிறுவுங்கள்.

ஸ்பைவேர் மாதிரிகளை(Signature) வலிமைப் படுத்துங்கள்.


வலைத்தளத்தில் உலாவ யோசனைகள்


நம்பிக்கை இல்லாத தளத்தில் இருந்து மென்பொருள்களை தரவிறக்கம் செய்யவேண்டாம் .

வலைதளத்தில் உள்ள சட்ட விதிகளைப் படித்து பின் தரவிறக்கம் செய்யவும்

பாப்பப் விண்டோ ஏதேனும் நீங்கள் எதிர்பார்க்காமல் வந்தால் உள்ளே உள்ள பொத்தான்களை தட்டவேண்டாம் . மேலே உள்ள பெருக்கல் குறியையே தட்டவேண்டும்.

தாக்குதல் இருப்பதை அறிந்தால் செய்யவேண்டியது:


அந்த மென்பொருளில் உள்ள நீக்கும் வழிமுறையையே உபயோகப்படுத்துங்கள் .

அப்பொழுதும் அது நீங்கவில்லை என்றால் கணிணியை சேப் மோடில் ஆன் செய்து (முன்னரே சொல்லியிருக்கிறேன்) நீக்கவேண்டும் .

விண்டோஸில் ரிஸ்டோர் என்னும் உதவியுடன் பழைய நாளிற்கு ரிஸ்டோர் செய்து பின் நீக்கலாம்.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.

தொடரும்.

Monday, March 19, 2007

95வது செர்ரி மலர் விழா, வாசிங்டன் டி.சி.

நீங்கள் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நம் ரிச்மண்ட் மாதிரி காரோட்டும்தொலைவில் இருந்தால், செர்ரி மலரும் நாட்களை கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டும். செர்ரி ப்ளாஸ்ஸம் என்று அழைக்கப்படும் விழாவைப் பற்றி விரிவாக இங்கே படிக்கலாம். ஆங்கிலத்தில் இங்கே படிக்கலாம்.

புகைப்படத்திலும் திரைப்படத்திலும் பிடிக்கமுடியாத அழகு இந்த செர்ரி ப்ளாஸ்ஸம். ஒரு இலை கூட இல்லாத மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை பார்க்க கண்கோடி வேண்டும். ஒரு எச்சரிக்கை. காரோட்டும் தொலைவில் என்றதால் காரோட்டிக் கொண்டு போய்விட்டு வாகனப் போக்குவரத்து நெரிசலில் மாட்டி எங்களைத் திட்டவேண்டாம். ஏதாவது மெட்ரோ ஸ்டேஷனில் காரை நிறுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் போவது உத்தமம்.

Saturday, March 17, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 8

பித்தனின் எட்டாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/8.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Wednesday, March 14, 2007

திருட்டானியா பிஸ்கோத்து

இப்போது சில காலமாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடக்கின்ற ஒரு நூதன திருட்டு "ரயில் பிஸ்கெட் திருட்டு". ரயிலில் பயணம் செய்கின்ற பயணிகளில் ஏமார்ந்தவர்களாக சிலறை குறி வைக்கின்றனர் சில பேர்வழிகள். மயக்கமருந்து கலந்த பிஸ்கெட் கொடுத்து அவர்கள் மயங்கிய பிறகு அவர்கள் பணத்தையும் பொருட்களையும் அபேஸ் செய்யும் பேர்வழிகள் பெருகி வருகின்றனர். நம் ஊர் ரயில் பயணமே அலாதி. எப்போதும் கும்பல், பேச்சு, ஓசைகள், பயணிகள் நடமாட்டம் இப்படி கலகவென்று இருக்கும். யாராவது பேசிக்கொண்டே இருப்பார்கள். சிலர் கதை அடிச்சுக்கிட்டே இருப்பார்கள். இப்படி இருக்கும்போது இந்த பிஸ்கெட் கொள்ளைக்காரர்கள் எப்படித்தான் காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்களோ. அது என்ன மயக்க பிஸ்கெட் கொடுத்து கொள்ளையடிப்பது? ஒரு "மயக்க இட்லி", "மயக்க வடை", "மயக்க தோசை", "மயக்க சமோசா" இப்படிப்பட்ட பொருட்களை கொடுக்கமாட்டார்களா? ஒரு வேளை பிஸ்கெட் பாக்கெட் மிகவும் வசதியோ? இதற்காகவே பிரத்யேகமான முறையில் "திருட்டானியா" பிஸ்கெட்களை எப்படித்தான் தயாரிக்கிறார்களோ. இவர்கள் திருடும் போது மற்ற பயணிகள் என்ன செய்வார்களோ? ஒரு வேளை திருடர்கள் கம்பார்ட்மெண்ட் முழுதும் இலவச பிஸ்கெட் சப்ளை செய்து விடுவார்களோ? எல்லா கேஸ்களிலும், ஒரு ஸ்டேஷனில் ஏறி, பிஸ்கெட் கொடுத்து மயக்கி திருடிவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடுகிறார்கள். நம்ம லாலுஜி தான் இதை ஒடுக்க ஒரு நல்ல யோசனை செய்யவேண்டும். ரயிலில் இனி யாரும் பிஸ்கெட் திங்கக்கூடாது. ஸ்டேஷனில் பிஸ்கெட் விற்கக்கூடாது என்று சட்டம் போட்டாலும் போடலாம். இல்லை, ஒட்ச கட்ல, அவல், பொரி, புண்ணாக்கு இப்படித்தான் சாப்பிடலாம் என்று ரூல் கொண்டு வந்தாலும்
வரலாம். ஆனால், இந்த "திருட்டானியா" திருட்டு நடந்துக்கிட்டே இருக்கு.

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 6

ஸ்பைவேர்

ஸ்பைவேர் என்பது நாம் அழைக்காமல், தேவையில்லாமல் , மறைவாக, நம்மை பாதிக்கும் வகையில் நம் கணினியை தாக்கி நமது விபரங்களை நாம் அறியாமலே வெளியாருக்குத் தெரிவிக்கக் கூடிய கணினி மென்பொருள்கள் .

ஸ்பைவேரினால் ஏற்படும் பாதிப்புகள்:

நம்மை அறியாமலே நம் கணிணியை வந்தடைந்து, நமது விபரங்களை கேள்விக் குறியாக்கிவிடும்.

நம்மை எரிச்சலடைய வைக்கும் வகையில், விளம்பரங்களை அவ்வப்போது திரையில் இடும்.

நமது கணினியின் நினைவகத்தில் இடத்தை பிடித்துக் கொள்ளும். இதனால் நம் கணினியின் வேகம் குறைவடைய வாய்ப்பு உண்டு.

சில ஸ்பைவேர் நிரலிகள் நமது கீஸ்ட்ரோக்களைக் கூட சேகரித்து வெளியாருக்கு அனுப்பி விடும் . இதனால் நம் சங்கேத வார்த்தைகள் (பாஸ்வேர்டு ) அறியப் பட்டுவிடும்.

சில ஸபைவேர் நிரலிகள், ஸ்பாம் செலுத்தும் கணினியாக நம்முடயதை மாற்றி விடும் நிரலிகளை நம் கணினியில் நிறுவும் அபாயமும் உள்ளது.

சில ஸபைவேர் நிரலிகள் நம் பிரௌசரில் செட்டிங்கை மாற்றி நம் பிரௌசர் துவங்கும் போதெல்லாம் வேறு ஏதேனும் வலைப்பக்கத்திற்கு நம்மை கடத்தும் .

சில நம் கணினியில் நன்றாக ஊடுருவி, நீக்குவதற்கு கடினமானதாக மாறிவிடும்.

ஸ்பைவேர் எவ்வாறெல்லாம் நம் கணிணியை வந்தடைகிறது:


சில வலைத்தளங்களை பார்க்கும் போதெல்லாம் தானாக அவற்றிலிருந்து ஸ்பைவேர் நம் கணிணியை வந்தடையும் .

நமக்கு பரிசு இருப்பதாக ஆசைக்காட்டி ஸ்பைவேர் உள்ள சுட்டிகளைத் தட்டத் தூண்டி விடுவார்கள் .

சில பைரேட்டட் மென்பொருள்களில் ஸ்பைவேர் இருக்க வாய்ப்புண்டு . சில தரவிறக்க மென்பொருள்களிலும் ஸ்பைவேர் இருக்க வாய்ப்புண்டு. kazaa இதற்கு நல்ல உதாரணம் .

மின்னஞ்சல் இணைப்புகளில் ஸ்பைவேர் இருக்க வாய்ப்பு உண்டு.

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

Tuesday, March 13, 2007

கவிதைப் போட்டி

கவிஞர்களுக்கு ஒரு நற்செய்தி! இதனால் அறிவிக்கப்படுவது யாதெனில் 'அன்புடன்' குழுமம், தன் இரண்டாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, சிறந்த பரிசுகளுடன், கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்திருக்கிறது. விவரங்களுக்கு:

http://priyan4u.blogspot.com/2007/03/2.html

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

அன்புடன்,
கவிநயா.

Sunday, March 11, 2007

பித்தனின் கிறுக்கல்கள் - 7

பித்தனின் ஏழாவது கிறுக்கலைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.
http://pkirukkalgal.blogspot.com/2007/03/7.html
- பித்தனின் கிறுக்கல்கள் தொடரும்.
piththanp@gmail.com

Saturday, March 10, 2007

நாமெல்லாம் ஜுஜுபி!

நாமெல்லாம் ஏதோ பெரிய வஸ்தாதுகள் என்று நினைத்துக் கொள்ளலாம். எல்லாம் நம்ப பேட்டையில்தான். ஜில்லா கத்திரிகளின் ஜம்பம் சொந்த ஜில்லாவில்தான். இங்கே பாருங்கள், பூமி என்கிற ஜில்லா கத்திரி, பேட்டை பிஸ்தா!




சொந்த ஜில்லாவில் இருந்து ஒரு வட்டம் வெளியே வந்தவுடனே, பாருங்கள். நிலைமை எப்படி போகிறது என்று?



அதை விட்டு இன்னும் கொஞ்சம் வெளியே வந்து சூரிய ஜோதியில் கலந்த உடனே, பாருங்கள், கடுகாகிவிட்டோம்.


இன்னோரு பெரிய வஸ்தாது அருகில் போய் பார்த்தால், துக்குளியோண்டு, துக்குளியோண்டு என்பார்களே - அதாகிவிட்டோம்.



அதைவிட ஒரு பெரிய பாஷா இருக்கிறார். அவர் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களிலேயே, பிரகாசத்தில் பதினைந்தாம் இடம் வகிக்கிறாராம். நம்மூரில் இருந்து ஆயிரம் ஒளிவருடங்களுக்கு மேலான தொலைவில் இருக்கிறார். அவர் முன்னே, நாமெல்லாம் ஜுஜுபி! அதனால்தான் கடுகு சிறுத்தாலும், மூர்த்தி சிறிது என்றெல்லாம் பழமொழி சொல்லி பஜனை பாடிக்கொண்டிருக்கிறோம். வேறு ஆள் இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கும்வரை நாம்தான் ராஜா! ஆனால் என்ன ஜுஜுபி ராஜா!!

Thursday, March 08, 2007

CRY Richmond's Holi Hangama!

Child Relief And You America Inc.cordially invites you to the festival of
colors.The proceeds will go towards helping underprivileged children.So join
us for " HOLI HANGAMA " to help in building child's future.

The success of this event and future fun events depends on your response
& participation, so please try your best to make it to this event. It won't
take much of your time.

We also hope to raise some awareness regarding the activities of CRY and
the great work they have been doing with projects back home in India. Let's
get together to have fun, share ideas and make a difference.

Lots of fun,games,snacks, chaat & colors, So join us with your friends &
family.

Date:10th March 07
Venue:Deep Run Park,Shelter 2
9900 Ridgefield Parkway
Contact: cry.richmond@ gmail.com
Time:3pm onwards

Entry is free but there will be charges for Food/Drinks & Contributions
made to CRY America would be greatly appreciated.

(Contributions in Cash or cheque only please)

RSVP by 7th March would be appreciated.
Thanks & Regds,
Prachi Mohile
CRY,Volunteer
804-270-1476

Tuesday, March 06, 2007

கடுப்போ கடுப்ஸ் - 5

ரசிகர் 1: பாகவதர் ஏன் ஒவ்வொரு பாட்டு முடிவிலும் 'சரிமா' 'சரிமா'
அப்படீன்னு முதல் வரிசையில் யாரையோ பார்த்து பாடறாரு?
ரசிகர் 2: முதல் வரிசையில் பாகவதரோட மனைவி உட்கார்ந்து
இருக்காங்க. 'பாட்டு' கச்சேரி முடிந்தவுடன் 'சீட்டு' கச்சேரி
பண்ண போகக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டு பாகவதரை
பாட்டுக்கு பாட்டு மிரட்டிக்கிட்டே இருக்காங்க, அதான்

நர்ஸ் 1: டாக்டர் ஏன் கடுப்பா இருக்கரு?
நர்ஸ் 2: ஒரு கஞ்ச பிசினாரி பேஷண்ட் தன்னுடைய அப்பா, அம்மா, தாத்தா,
பாட்டி, கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டி, மாமா, மாமி இப்படி
ஒரு பட்டாளத்தையே கூட்டிக்கிட்டு வந்து குடுக்கிற காசுக்கு
'Group X-ray' எடுக்கணும் அப்படீன்னு அடம் பிடிக்கிறாராம்.

பசு 1: என் கன்னுக்குட்டி சாப்பிடாம அடம் பிடித்து ரொம்ப கடுப்பு
அடிக்கிறான்
பசு 2: ஏன் என்ன சமாச்சாரம்?
பசு 1: பாக்கெட் பால் தான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறான்

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 5

வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்:

பெரும்பாலானோர்க்கு இந்த தலைப்பைப் பார்த்த உடன் தோன்றும் முதல் கேள்வி ? நான்தான் நல்ல வைரஸ் ஸ்கேனர் வைத்துள்ளேனே! அது சொல்லாதா ? என்பதாகத்தான் இருக்கும். சில சமயங்களில் நாம் மறதியில் அதை அப்டேட் செய்யாமல் விட வாய்ப்புண்டு , அது மட்டும் அல்லாமல் சில வைரஸ்களை நம் ஸ்கேனர் கண்டு பிடிக்க இயலாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு .

அடிக்கடி கணிணி நின்று போகும், அல்லது திரும்ப திரும்ப ஆரம்பிக்கத் துவங்கும்.

மிக மெதுவாக இயங்க ஆரம்பிக்கும், அல்லது தவறாக இயங்க ஆரம்பிக்கும்.

இன்டர்நெட் தொடர்பு விடுபட ஆரம்பிக்கும்.

சில சிஸ்டம் பைல்கள் தொலைந்து போக ஆரம்பிக்கும். அல்லது பாதிப்படையும்.

உங்கள் மின்னஞ்சலில் உள்ள சென்ட் ஐட்டத்தில் நீங்கள் அனுப்பாமலே மின்னஞ்சல் அனுப்பப் பட்டதாக குறிப்பிடப் பட்டிருக்கும் .

உங்கள் கணிணி பூட் ஆகாமல் சில தவறுகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் .




இவற்றில் எதேனும் ஒன்றிரண்டு தென்பட்டாலும் உங்கள் கணிணி வைரஸால் பாதிக்கப் பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு .




வைரஸ் தாக்கினால் செய்ய வேண்டியன:

முதலில் நெட் இணைப்பைத் துண்டியுங்கள்.

இரண்டாவது உங்களிடம் உள்ள ஆண்டி வைரஸ் பேக்கேஜை ஆழ்நோக்கில் ( Deep scan) இயங்க விடுங்கள். பெரும்பாலும் இதிலேயே பிரச்சனை சரியாகிவிடும் .

ஆனால் , வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டு குணப் படுத்த முடியாவிட்டால் , உங்கள் கணிணியின் நினைவகத்தில் வைரஸானது நீக்க முடியாதவாறு இயங்கிக் கொண்டிருக்கலாம் , அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்குமேயானால் உங்கள் கணிணியை திரும்பத் துவங்குங்கள். அப்படித் துவங்கும் போது திரையில் ஏதேனும் தோன்றத் துவங்கும் முன் (விண்டோஸ் சின்னம் திரையில் தெரியும் முன் ) F8 ஐ அழுத்திக் கொண்டேயிருங்கள். அதனால் விண்டோஸ் சேப் மோடில் துவங்கும் . அந்த சேப் மோடில் ஆண்டி வைரஸ் பேக்கேஜை இயங்க விடுங்கள்.

உங்கள் கணிணியில் உள்ள ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் அப்டேட் ஆக மறுக்கிறது?

உங்கள் கணிணியில் உள்ள ஹோஸ்ட்ஸ் பைலானது பாதிக்கப் பட்டிருக்கும் . அந்த ஹோஸ்ட்ஸ் பைலை நோட் பேடில் திறந்து .127.0.0.1 localhost எனும் வரி மற்ற # ல் துவங்கும் வரி இவற்றைத் தவிர மற்ற வரிகளை அழியுங்கள்.

பின் அப்டேட் செய்துப் பாருங்காள். ஆக வாய்ப்புகள் அதிகம்.

சில உங்கள் சிஸ்டம்

Windows XP/ 2000, சிஸ்டத்தில் அந்த பைல் இருக்கும் போல்டர் C:\WINDOWS\SYSTEM32\DRIVERS\ETC.

Win 98\Me, சிஸ்டத்தில் அந்த பைல் இருக்கும் போல்டர் C:\WINDOWS.
அப்படியானால் என்ன என்ன செய்யவேண்டும்:

உங்கள் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் செக்யூரிட்டி பேட்சுகளை அவ்வப்போது புதிதாக ஏதேனும் வந்துள்ளதா ? எனப் பார்த்து தரவிறக்கம் செய்து இயக்கவேண்டும்.

http://windowsupdate.microsoft.com

உங்களிடம் வைரஸ் ஸகேனர் இருக்குமேயானால், அதற்கான வைரஸ் வடிவங்களை (virus signature) அவ்வப்போது மேம்படுத்தவேண்டும் .

உங்களிடம் உள்ள வைரஸ் ஸ்கேனரின் புதிய பதிப்பு வந்திருந்தால் அதற்கு மாற வேண்டும் .

சில இலவச வைரஸ் ஸ்கேனர்கள்:

ஆன்ட்டிவிர் , இது இலவசம். நன்றாகவும் வேலை செய்யும். சுட்டி www.free-av.com.

கிரிசாப்ட் AVG , இதுவும் இலவசம். நன்றாகவும் வேலை செய்யும். சுட்டி http://free.grisoft.com/

விண்டோஸ் எக்ஸ்பி உபயோகித்தால் அதில் சர்வீஸ் பேக் 2 ஐ தரவிறக்கம் செய்து, இயக்கி, அதில் உள்ள வசதிகளை உபயோகிக்க வேண்டும். கீழ்கண்ட சுட்டி அதற்கான சிடியை பெற உதவும் .

http://www.microsoft.com/windowsxp/downloads/updates/sp2/cdorder/en_us/ .

( பேட்ச் (Patch) மற்றும் சர்வீஸ் பேக் - எந்த மென்பொருளும் வெளியாகையில் சில குறைகளுடனே வரும். அவ்வப்போது கண்டுபிடிக்கப் படும் குறைகளுக்கு தீர்வுகளை அந்த நிறுவனம் வெளியிடும் அது பேட்ச் எனப்படும். இவ்வாறு வழங்கப்படும் பேட்சுகளைத் தொகுத்து வெளியிடுவர் அது சர்வீஸ் பேக் ஆகும்.).


அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

Saturday, March 03, 2007

நவீன தர்மராஜன்


மகாபாரதத்தில் தர்மராஜன் திரௌபதியை சூதாட்டத்தில் பணயம் வைத்து கௌரவர்களிடம் இழந்த கதை கேட்டிருக்கிறோம். ஆனால் இக்காலத்தில் தான் பெற்ற பெண்ணையே ஒருவன் சூதாட்டத்தில் பந்தயம் கட்டி இழந்த அவலம் கேட்டிருக்கிறீர்களா? இதைப்படியுங்கள் - பாகிஸ்தானில் ஹைதராபாத் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நூரான் என்பவருடைய கணவன் ஒரு சூதாடி. லால் ஹைதர் என்பவரிடம் ஆட்டத்தில் தோற்றிருக்கிறான். பந்தயத்தில் இழந்த 10,000 ரூபாயை ($151) கொடுக்கமுடியாததால் தனது 2 வயது பெண்ணான ரஷீதாவை பணயம் வைத்து இருக்கிறான். ரஷீதா பெரியவளான பிறகு லால் ஹைதர் அவளை அழைத்துச்செல்லலாம் என்பது ஒப்பந்தம். சில காலத்தில் அவன் இறந்து வேறு விட்டான். அவனுடைய மனைவி நூரான் கஷ்டப்பட்டு லால் கடனையும் அடைத்துவிட்டாள். இப்போது ரஷீதாவுக்கு 17 வயதாம். ஆனாலும் கிராமத்தின் சட்டப்படி ரஷீதாவை தன் வீட்டிற்கு அனுப்பத்தான் வேண்டும் என்று லால் ஹைதர் பிடிவாதம் பிடித்தாராம். அப்பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்யப்போவதாக சில பேர் கூறினார்களாம். யாருக்கு தெரியும் உண்மை? இதில் என்ன வேடிக்கையென்றால், கட்ட பஞ்சாயத்து நடத்தி ரஷீதாவை லால் ஹைதர் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கிராம பெரிசுகள் முடிவு செய்து தீர்ப்பு அளித்துவிட்டனர். ரஷீதாவும் அவள் தாயான நூரானும் கண்ணிரும் கம்பலையுமாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள் (படத்தைப்பார்க்கவும்). லால் ஹைதருக்கு போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளதாம். ரஷீதாவின் இஷ்டத்திற்கு எதிராக ஒன்றும் நடக்காது என்று போலீஸ் உத்தரவாதம் கொடுத்திருக்கிறதாம். இது யாகூவில் வெளி வந்த செய்தி. யாகூவிற்கு நன்றியாகூக.


Thursday, March 01, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 4

வைரஸ்கள் யாரால் எதற்காக எழுதப்படுகின்றன?

வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களாலேயே எழுதப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம் இது உண்மை. பெரும்பாலான வைரஸ் நிரலி (புரோகிராம்) 13-20 வயது வரை உள்ளவர்களால் தான் எழுதப் படுகின்றன . அவர்களும் விளையாட்டாக இது போன்ற செயல்களைச் செய்கின்றனர். உண்மையில் ஒரு வைரஸ் நிரலியை நாம் எழுத வேண்டுமானால் நமக்கு கணிணி பற்றிய விபரங்கள் அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைரஸ் நிரலி எழுதுவோருக்கென சில குழுக்கள் உள்ளன அவற்றில் அனுபவமும், அவர்கள் சாட்ரூமில் பழக்கமும் இருந்தால் போதும் . (அவர்களுக்கென குழூஉக்குறியும் உண்டு.) ஒருவர்க்கு எளிதில் மூல வரிகள் கிடைத்து விடும். அதை அவர் மாற்றினால் போதும். எளிதில் வைரஸ் நிரலி தயார்.

மிகச்சிலரே இதன் மூலம் பணம் சம்பாரிக்கலாமென சில சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்கி மிரட்டுகிறார்கள் . அவ்வாறு தாக்க அப்பாவிகளின் கணிணிகளை வைரஸ் கொண்டு தாக்கி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து , பின் அந்தக் கணிணிகளை சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்க உபயோகிக்கிறார்கள்.




நாம் செய்யக்கூடாதவை:

பெரும்பாலான வைரஸ்கள் மின்னஞ்சல் மூலமாகத் தான் வருகின்றன. அதனால் தெரியாதவர் களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் அதில் இணைப்பு (அட்டச்மெண்ட்) இருந்தால் அதைத் திறக்காதீர் .

உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வந்தாலும், அதில் உள்ள இணைப்பைக் காரணம் இல்லாமல் திறந்து பார்க்காதீர்கள். முதலில் அவர் உங்களுக்கு ஏதேனும் இணைப்பை அனுப்புவதாகக் கூறியிருந்தாரா ?, என்று ஆராய்ந்து பிறகு அந்த இணைப்பை உங்கள் டெஸ்க்டாப்பிற்கு இறக்கம் செய்து, பின் வைரஸ் ஸகேனர் கொண்டு அந்த இணைப்பை ஆராய்ந்து, அதில் வைரஸ் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு பின் திறக்கவும் .

ஆண்டி வைரஸ் பாதுகாப்பை நிறுத்தி வைக்காதீர்கள். அப்படி ஓரு தேவை ஏற்பட்டால், இன்டர்நெட் இணைப்பையும் உடன் நிறுத்தி வைத்து விடுங்கள் .

பிளாப்பி, சிடி மற்றும் டிவிடி இவற்றில் எதை உபயோகப் படுத்த வேண்டுமானாலும் அதற்கு முன் வைரஸ் ஸ்கேன் செய்து விடுங்கள் .

நெருப்புச் சுவர் ( பயர்வால்) உங்கள் கணிணியில் இயங்குவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.( பயர்வால் பற்றித் தெரியாவர்களுக்காக பின்னொருநாள் விளக்குகிறேன்.)

சாட்டில் வரும் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் பைல்களை உபயோகிக்காதீர்கள் .

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

மார்ச் மாத லொள்ளு மொழி

வாழ்க்கையில ஒண்ணும் இல்லேன்னா bore அடிக்கும்
தலையில ஒண்ணும் இல்லேன்னா glare அடிக்கும்