Thursday, March 01, 2007

உங்கள் கணிணியை பாதுகாப்பது எப்படி - 4

வைரஸ்கள் யாரால் எதற்காக எழுதப்படுகின்றன?

வைரஸ்கள் பெரும்பாலும் சிறுவர்களாலேயே எழுதப்படுகின்றன. அதிர்ச்சியடைய வேண்டாம் இது உண்மை. பெரும்பாலான வைரஸ் நிரலி (புரோகிராம்) 13-20 வயது வரை உள்ளவர்களால் தான் எழுதப் படுகின்றன . அவர்களும் விளையாட்டாக இது போன்ற செயல்களைச் செய்கின்றனர். உண்மையில் ஒரு வைரஸ் நிரலியை நாம் எழுத வேண்டுமானால் நமக்கு கணிணி பற்றிய விபரங்கள் அனைத்தும் விரல் நுனியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வைரஸ் நிரலி எழுதுவோருக்கென சில குழுக்கள் உள்ளன அவற்றில் அனுபவமும், அவர்கள் சாட்ரூமில் பழக்கமும் இருந்தால் போதும் . (அவர்களுக்கென குழூஉக்குறியும் உண்டு.) ஒருவர்க்கு எளிதில் மூல வரிகள் கிடைத்து விடும். அதை அவர் மாற்றினால் போதும். எளிதில் வைரஸ் நிரலி தயார்.

மிகச்சிலரே இதன் மூலம் பணம் சம்பாரிக்கலாமென சில சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்கி மிரட்டுகிறார்கள் . அவ்வாறு தாக்க அப்பாவிகளின் கணிணிகளை வைரஸ் கொண்டு தாக்கி அவர்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து , பின் அந்தக் கணிணிகளை சூதாட்ட விடுதிகளின் சர்வர்களை தாக்க உபயோகிக்கிறார்கள்.




நாம் செய்யக்கூடாதவை:

பெரும்பாலான வைரஸ்கள் மின்னஞ்சல் மூலமாகத் தான் வருகின்றன. அதனால் தெரியாதவர் களிடமிருந்து வரும் மின்னஞ்சல்களை படிக்காதீர்கள். அப்படியே படித்தாலும் அதில் இணைப்பு (அட்டச்மெண்ட்) இருந்தால் அதைத் திறக்காதீர் .

உங்களுக்கு தெரிந்தவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வந்தாலும், அதில் உள்ள இணைப்பைக் காரணம் இல்லாமல் திறந்து பார்க்காதீர்கள். முதலில் அவர் உங்களுக்கு ஏதேனும் இணைப்பை அனுப்புவதாகக் கூறியிருந்தாரா ?, என்று ஆராய்ந்து பிறகு அந்த இணைப்பை உங்கள் டெஸ்க்டாப்பிற்கு இறக்கம் செய்து, பின் வைரஸ் ஸகேனர் கொண்டு அந்த இணைப்பை ஆராய்ந்து, அதில் வைரஸ் இல்லை என உறுதி படுத்திக் கொண்டு பின் திறக்கவும் .

ஆண்டி வைரஸ் பாதுகாப்பை நிறுத்தி வைக்காதீர்கள். அப்படி ஓரு தேவை ஏற்பட்டால், இன்டர்நெட் இணைப்பையும் உடன் நிறுத்தி வைத்து விடுங்கள் .

பிளாப்பி, சிடி மற்றும் டிவிடி இவற்றில் எதை உபயோகப் படுத்த வேண்டுமானாலும் அதற்கு முன் வைரஸ் ஸ்கேன் செய்து விடுங்கள் .

நெருப்புச் சுவர் ( பயர்வால்) உங்கள் கணிணியில் இயங்குவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.( பயர்வால் பற்றித் தெரியாவர்களுக்காக பின்னொருநாள் விளக்குகிறேன்.)

சாட்டில் வரும் அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து வரும் பைல்களை உபயோகிக்காதீர்கள் .

அன்புடன் என்ற கூகுள் குழுமத்தில் திரு. சுரேஷ்பாபு அவர்கள் எழுதிய தொடர் இது. இந்த வலைப்பதிவில் அவருடைய தொடரை வெளியிட அனுமதி கொடுத்ததற்கு சுரேஷுக்கு மிக்க நன்றி.


தொடரும்.

1 comment:

  1. முதலில் நானும் வைரசஸ் பற்றி பயந்தேன்.
    இப்போது c++ படிக்கும் போது தான், பல கத்துக்குட்டிகளால் மிக சுலபமாக எழுதமுடியும் என்று தெரிகிறது.

    ReplyDelete

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!