Friday, May 09, 2008

குழந்தைகள் ஓவியப் போட்டி

குழந்தைகள் சேவை நிறுவனமான CRY மே 17ம் தேதி நம் ஊரில் ஒரு குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தவிருக்கிறது. போட்டி Echo Lake Park, Shelter1ல் 11ல் இருந்து 2 வரை நடக்கும்.

மேல் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்.

Thursday, May 08, 2008

எங்க வீட்டு ரோஜாக்கள்

வசந்த காலம் வந்திருக்கு இங்கே :-) வசந்தத்தில் புல்லு சரியா வெட்டாட்டி யார் வருவாங்கன்னு கடைசி படத்துல பாருங்க

Sunday, May 04, 2008

கிராமத்துக் கோவில் திருவிழா

சித்திரை, வைகாசியில் அநேக கிராமங்களில், கோவில் திருவிழாக்கள் இன்றும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது, நாமறிவோம். அத்தகைய திருவிழாவினைப் பற்றிய ஒரு கவிதை .

http://vazhakkampol.blogspot.com/2008/05/blog-post.html

Wednesday, April 30, 2008

காற்றுக்குமிழி

காற்றுக்குமிழி - தொடாமல் பார்க்கவும்! (தொட்டா உடைஞ்சிடும்ல, அதுக்கு சொன்னேன்)

http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_30.html

Tuesday, April 29, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

என்னைக் கவர்ந்த கவிஞர்கள்
ஞானக்கூத்தன்
நான் முதன் முதலில் படித்த கவிதைத் தொகுப்பு இவருடைய 'அன்று வேறு கிழமை' தான். படித்து சுமார் ஒரு 20 வருடங்கள் இருக்கும். சமீபத்தில் மீண்டும் ஒரு முறை படித்த போது, காலங்களை கடந்த அவருடைய பார்வை ப்ரமிக்க வைக்கிறது. இவருடைய இந்த கவிதைத் தொகுப்பை பற்றி சுஜாதா தனது கணையாழியின் கடைசிப் பக்கங்களில் (அக்டோபர் 1973) இவ்வாறு எழுதியிருக்கிறார்.

"அழகாகப் பதிப்பிக்கப்பட்ட 'அன்று வேறு கிழமை'யில் ஞானக்கூத்தனின் திறமையை முழுமையாக பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஞானக்கூத்தனின் கவிதைகள் யாப்புடன் அமைந்தவை. (மேலாகப் பார்த்தால் இது தெரியாது) எண்சீர், அறுசீர் கலிவிருத்தங்களில் அமைந்தவை. இஷ்டத்திற்குச் சில வேளைகளில், விஷயம் தெரிந்த ஒருவரின் பெயர் நிலையிலிருந்து, சந்தங்களைக் கலக்கிறார். கிடைப்பது ஞானக்கூத்தனுக்கே உரித்தான ஒரு அமைப்பு. ஆனால் யாப்புடன் இன்றைய தின நவீன விஷயங்களைச் சொல்ல முடியும் என்பதை மறுபடி மறுபடி நிரூபித்திருக்கிறார். இதன் மூலம் யாப்பை மீறிப் புதுக் கவிதை எழுதும் முதல் தகுதியை இவர் சுலபமாகப் பெறுகிறார். இது இவர் துருப்புச்சீட்டு, வைத்திருக்கிறார் இன்னும் உபயோகிக்கவில்லை.

'கால வழு அமைதி' என்கிற கவிதையைத் தொகுப்பில் சிறந்த கவிதையாக நான் சொல்வேன். இந்தக் கவிதையை துல்யமான எண்சீர் விருத்தமாகப் படிக்கலாம். அதைவிட ஒலி பெருக்கி அலறும் பொதுக் கூட்ட இரைச்சலின் பின்னணியில் ஒரு அரசியல்வாதியின் கயமை நிறைந்த கட்டைக் குரலில் படிக்கலாம். படிக்க வேண்டும்.

ஞானக்கூத்தனின் உவமைகளில் ஆச்சர்யங்கள் இருக்கின்றன. எது எதற்கு உவமையாகப் போகிறது என்கிற ஆச்சர்யம்.
உதாரணங்கள்
மணி அறியாப் பள்ளிகளில் மணியாக உதவும் தண்டவாளத் துண்டு - பாரதி இல்லாத நாட்டில் லோக்கல் கவிஞன்
எழுதக் குவிந்த கை - குன்று,
தையற்காரன் புறக்கணித்த துணித் துண்டுகள் - பூக்கள்,
ஸ்டேஷன் மாஸ்டர் கொடி - நிலம்
.....

.....

.....
ஞானக்கூத்தனைப் பாகுபடுத்துவது கஷ்டம். அவர் வரிகளை ரசிப்பதும், அவைகளில் நம்மையே கண்டுபிடிப்பதும் சுலபம்.

சுஜாதாவின் அணிந்துரையைக் கடந்து 'அன்று வேறு கிழமை' கவிதைத் தொகுப்பிலிருந்து எனக்குப் பிடித்த சில கவிதைகள்.....


கால வழு அமைதி (ஜூலை 1969)

"தலைவரார்களேங்.......
தமிழ்ப் பெருமக்களேங் ... வணக்கொம்

தொண்ணூறாம் வாட்டத்தில் வாழும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தினம்
கண்ணீரில் பசிதொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்"

'வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ'

"வளமான தாமிழர்கள் வாடலாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பொணக்குவியல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வண்க்கொம்"

இன்னுமிரு வர்பேச இருக்கிறார்கள்
அமைதி ... அமைதி ...

நாய் (அக்டோபர், 1969)

காலம் கடந்துண்ணும் எதிர்மனைப் பார்ப்பான்
எச்சிற் களையைத் தெருவில் எறிந்தான்
ஆள் நடவாத தெருவில் இரண்டு
நாய்கள் அதற்குத் தாக்கிக் கொண்டன
ஊர் துயில் குலைத்து நாய்கள் குரைக்கவும்
அயல்தெரு நாய்களும் ஆங்காங்கு குரைத்தன
நகர நாய்கள் குரைப்பது கருதிச்
சிற்றூர் நாய்களும் சேர்ந்து குரைத்தன
நஞ்சை புஞ்சை வயல்களைத் தாவிக்
கேட்கும் குரைச்சலின் குறைச்சலைக் கேட்டு
வேற்றூர் நாய்களும் குரைக்கத் தொடங்கின
சங்கிலத் தொடராய்க் குரைத்திடும் நாய்களில்
கடைசி நாயை மறித்துக்
காரணம் கேட்டால் என்னத்தைக் கூறும்?


ஸ்ரீலஸ்ரீ (ஏப்ரல் 1971)

யாரோ முனிவன் தவமிருந்தான்
வரங்கள் பெற்றான் அதன் முடிவில்
நீர்மேல் நடக்க தீபட்டால்
எரியாதிருக்க என்றிரண்டு

ஆற்றின் மேலே அவன் நடந்தான்
கொடுக்குத் தீயைச் சந்தனம் போல்
உடம்பில் பூசிச் சோதித்தான்
மக்கள் அறிந்தார் கும்பிட்டார்

மறுநாள் காலை நீராட
முனிவன் போனான் ஆற்றுக்கு
நீருக்குள்ளே கால்வைக்க
முடியாதவனாய்த் திடுக்கிட்டான்

கண்ணால் கண்டால் பேராறு
காலைப் போட்டால் நடைபாதை
சிரித்துக் கொண்டு கண்ணெதிரே
ஆறு போச்சு தந்திரமாய்

காலைக் குளியல் போயிற்றா
கிரியை எல்லாம் போயிற்று
வேர்த்துப் போனான். அத்துளிகள்
உடம்பை பொத்து வரக்கண்டான்

யாரோ பிணத்தைக் கண்டெடுத்தார்
செத்துப் போக ஒரு நாளில்
தீயிலிட்டார், அது சற்றும்
வேகாதிருக்கக் கைவிட்டார்

நீரின் மேலே நடப்பதற்கும்
தீயாலழியா திருப்பதற்கும்
வரங்கள் பெற்ற மாமுனிவன்
மக்கிப் போக நாளாச்சு.

இவருடைய கவிதைகளில் யாப்பு அணி எண்சீர் என்று சுஜாதா சொல்வது எனக்கு விளங்கவில்லை. ஆனால் அதில் இருக்கும் நிஜம் முகத்தில் அறைவது அருமை. உதாரணத்திற்கு சில கீழே, இவர் எழுதியிருப்பது 70களில் என்றாலும் அவை இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்துவது சிறப்புதான்.

(1)
வெளியில் வந்தான் நடுநிசியில்
ஒன்றுக் கிருந்தான்
மரத்தடியில்
நெற்றுத் தேங்காய்
அவன் தலையில்
வீழ்ச்சியுற்று
உயிர் துறந்தான்

ரத்தக் களங்கம்
இல்லாமல்
விழுந்த நோவும்
தெரியாமல்
தேங்காய் கிடக்கு
போய்ப்பாரும்

(2)

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்.

(3)
சூளைச் செங்கல் குவியலில்
தனிக்கல் ஒன்று சரிகிறது

(4)
சமூகம் கெட்டுப் போய்விட்டதாடா
சரி
சோடாப் புட்டிகள் உடைக்கலாம் வாடா
piththanp@gmail.com

Saturday, April 26, 2008

சிறுகதை(கள்)

"இடுக்கண் வருங்கால்...", மற்றும் "அவளைப் போல்..." (இது சிலர் முன்னாடியே படிச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு நினைவுபடுத்தினதுக்கு நாகுவுக்கு நன்றி!)

http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_26.html
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_23.html

Friday, April 25, 2008

கிராமத்து மீசை

கிராமத்தில், வரப்பில் இருக்கும் வயோதிகர் முதல், வழித்து தேநீர் ஆற்றும் வாலிபர் வரை, பொதுவாக நிறைய பேர், மீசை என்றாலே, சற்று அளவில் பெரியதாக வைத்திருப்பார்கள். அது பற்றிய கவிதை கிராமத்து மீசை.

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_24.html

Thursday, April 24, 2008

பித்தனின் கிறுக்கல்கள்

ரிச்மண்ட் நாட்டு மக்களுக்கு ஒரு நற்செய்தி!!!!!


எனது சமீபத்திய தமிழ் சங்கத்து விழாவைப் பற்றிய விமர்சனம் பலருக்கு மனவருத்தத்தை தந்திருப்பதாக சில நண்பர்கள் மூலம் தெரிய வந்தது. எனது விமர்சனங்கள் மற்றவர்களைப் புண்படுத்துவதற்காக எழுதப் படவில்லை. நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறியவர்களும் அடுத்த முறை பார்க்கத் தூண்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் பட்டது. எப்பொழுது ஒரு செயல் மற்றவர்களைத் துன்புறுத்தியதோ அதை உடனடியாக நிறுத்துவதுதான் பண்பு. எனவே இனி வரும் எந்த தமிழ்சங்கத்தின் விழாவைப் பற்றியும் நான் விமர்சனம் எழுதி அதன் மூலம் எவரையும் வேதனைப் படுத்தப் போவதில்லை.

இந்த முடிவு நேற்று காலையிலேயே எடுத்து விட்டேன், சில நிமிடங்களுக்கு முன்பு எனது ஒரு நண்பன் சொன்ன ஒரு தகவலினால் இந்த முடிவை செயல் படுத்துவது சரி என்ற தீர்மானத்தை எடுத்து விட்டேன்.

அவன் என்னைத் தொடர்பு கொண்டு,

"பித்தா, என் மகளை கணிதம் கற்றுத் தரும் ஒரு இடத்தில் விட்டு விட்டு வெளியில் அவளுக்காக காத்திருக்கும் போது நமது சங்கத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி என்னிடம் நீங்கதான் பித்தனா என்று கேட்டார், நான் இல்லை, நாகுவிடம் கேளுங்களேன் என்று சொல்லி விட்டேன் என்றான்.

அவன் பிறகு, "இந்தாப்பா எல்லோரும் நாந்தான் பித்தன்னு நெனைச்சு கிட்டு என்னை அடிக்க வர்ராங்க, அதனால், ஒன்று நீ யார் என்று சொல்லி விடு இல்லை நம் தமிழ் சங்கத்தைப் பற்றி இனி எழுதி என்னை அடி வாங்க வைக்காதே" என்றான்.

அவன் என்னிடம் இப்படி பேசியது இல்லை எனவே அவன் இப்படி பேசியதும் என்னுடைய இந்த முடிவிற்கு ஒரு காரணம்.


இதுவரை வெளி வந்த எந்த விமர்சனமாவது யாரையாவது எந்த அளவிலாவது வேதனைப் படுத்தியிருந்தால் அதற்காக எனது ஆழ்ந்த மன வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


எனக்கு தமிழ் சங்கத்தின் இணைய தளத்தில் (அல்லது வலைப்பூ) சுதந்திரமாக எழுத அனுமதித்த அனைவருக்கும், முக்கியமாக என்னை எழுத அதிகம் ஊக்குவித்து எனது எழுத்துப் பிழைகளைத் திருத்தி, நான் என்ன எழுதினாலும் தவறாமல் பின்னூட்டமிட்டு எனக்கு ஆதரவளித்த நாகு அவர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

இதனால் நான் கிறுக்கப்போவதை நிறுத்தப் போவதில்லை, எனக்கென்று பல இருக்கின்றன, இந்திய அரசியல், தமிழக அரசியல், அமெரிக்க அரசியல், படித்த/படிக்கும் புத்தகங்கள், பார்த்த படங்கள், பார்த்த நாடகங்கள், பல கதாசிரியர்களின் தனித்துவம் போன்றவற்றை எழுதிக்கொண்டே இருக்கலாம்.
நாடகங்களின் விமர்சனத்தில், மே 11 நமது கோவிலில் அரங்கேற இருக்கும் ரம்பம்பம் ஆரம்பம் நாடகம் பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை, எனவே கவலை வேண்டாம்.

பித்தன்.
piththanp@gmail.com

Saturday, April 19, 2008

அய‌ல்நாட்டுக் கணிப்பொறியாளன் க(வி)தை

பொதுவாக வெளிநாடுகளில் வசிக்கும் நம் போன்றோரின் நிலை என்னவென்று யோசிக்கையில், நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் நண்பர்களின் நிலையும், மற்றும் இதே போல நிறைய குடும்பங்களின் நிலையும் இப்படித் தான் இருக்கிறது.

மாற்றுக் கருத்து இருந்தால் தெரிவியுங்கள். கவிதை எப்படி இருக்கிறது என்றும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்

http://vazhakkampol.blogspot.com/2008/04/blog-post_18.html

Thursday, April 17, 2008

வசந்தம்

மலர்கள் மலர்ந்திட
மகரந்தம் சிந்திட
புவிமகள் மீதினில்
பொன்போர்வை போர்த்திட
வசந்தம் வந்ததிங்கே!

வந்துதான் பாருங்களேன்! :)
http://kavinaya.blogspot.com/2008/04/blog-post_17.html