Tuesday, March 12, 2019

அருண் பக்கங்கள் - நம்பகமும் நாலு பருவங்களும்


எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் காதலி.....
எந்த பக்கம் கடவுள் இல்லை என சொல் அங்கு நீட்டுகிறேன் என்றான்
காதலன்.....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் மனைவி....
காகிதத்தில் இருப்பதெல்லாம் கடவுளாக்கும்?  சலித்து கொண்டான் கணவன்....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் அம்மா....
அந்த நாட்காட்டி கிழிய ஆரம்பிச்சுருச்சு. எப்படி ஓட்டலாம் என பசை தேட சென்றார் அப்பா....

எதிரினில் இருக்கும் நாட்காட்டியில் சிரிக்கும் கடவுளின் பக்கம் காலை நீட்டாதே என்றாள் பாட்டி....
ஆங் ஆமா இங்க இருக்காரா
எல்லாரையும் காப்பாத்துப்பா முருகா என்றார் தாத்தா.....


No comments:

Post a Comment

படிச்சாச்சா? அப்படியே சூட்டோடு சூடா ஒரு கமெண்டு??
தமிழ்ல கமெண்டு போட இங்கே போங்க....(http://www.google.com/inputtools/try/)
அங்க எழுதி வெட்டி இங்கே ஒட்டுங்க!