Monday, October 27, 2014

செந்தமிழ் நாடெனும் போதினிலே.....

செய்தி: நடிகருக்கு சிலை




(Image Courtesy: http://tamil.filmibeat.com/news/fans-unveil-vijay-statue-chrompet-031464.html) 

தமிழனுக்கு சிலை என்ற வார்த்தயை சொன்னாலோ கேட்டாலோ அஞ்சாறு சாமி, நாலஞ்சி பொண்ணுங்க, ரெண்டு மூணு உம்மணாம் மூஞ்சி, ஒண்ணு ரெண்டு நல்லவங்க, ஞாபகத்துக்கு வரணும், வரும். 

இருங்க இருங்க அது போனவாரம், இப்போ நல்லா சிரிப்பு வருது, சிரிச்சி முடிஞ்சதும் வயசானதால வயிறு எரியுது. 

இருவத்தி ஒண்ணாம் நூற்றாண்டில் தமிழகத்தில் கலை பண்பாடு மற்றும் பொதுஅறிவு சிகரம் தொட்டுள்ளது. முப்பது வருசம் முந்தி சினிமா போஸ்டரை உத்துப் பார்த்தாலே (நம்ம மொழி படம் தான்யா!) வீட்ல உரிச்சிருவாங்க எங்களை. 

நீங்கள்ளாம் எங்கப்பா வளந்தீங்க தமிழ்நாட்டிலேதான? இல்ல எங்க அப்பா மட்டும் தான் அப்புடியா? 

சே, விவரம் தெரியாமலே வளந்துருக்கேன், இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இருவது வருசத்துக்கு முன்னாடியே தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு திருப்பி விட்டிருப்பேன், என்னோட எளமை தான் வீணாபோச்சு, நம்ம பயலுக வீணாயிறக்கூடாது. கைல கால விழுந்தாவது பயலுகளுக்கு நல்ல புத்தி சொல்லி, படம் பாக்க அனுப்பி வைக்கணும். 

நாட்டுக்கு இன்னும் நெறைய சிலைகள் தேவை, 
இனிமேலும் தாமதிச்சா இனத்துக்கே அவமானம்!


Tuesday, October 14, 2014

பாதயாத்திரைப் பயணம்

சனிக்கிழமை காலை ...

'எல்லாம் எடுத்திக்கிட்டாச்சா'னு ஒருமுறை பார்த்துக்கங்க என்ற அன்பான தங்கமணியின் அக்கறையில், தண்ணீர் குடுவை, சிலபல கொறிக்கும் பதார்த்தங்கள், குளிருக்கு ஒரு மென்கம்பளிச் சட்டை (fleece), ஐ.டி.கார்டு, பணப்பை (wallet), கைத் தொலைபேசி, எல்லாம் ரெடி.  கெளம்ப வேண்டியது தான்.  சரி, போய்ட்டு வருகிறேன் என்று, 'மேப் மை வாக்'ஐ கிளிக்கி ...

நான் ஒரு வழியாகப் போகலாம் என்றிருந்தால், 'அந்த வழிகள் பெரிய பெரிய சாலைகள், உயிருக்கு உத்திரவாதமில்லை.  அதனால், குறுக்கு சாலையிலயா (லிஸ்ட் அடுக்கப்படுகிறது) போயிட்டு மரியாதையா வாங்க.  எங்காவது மட்டையாயிட்டா உடனே கூப்பிடுங்க.  (மட்டையாயிட்டு எப்படிக் கூப்பிடமுடியும் ! :))  அப்பப்ப தண்ணி குடிச்சுங்கங்க, மறக்காம ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை கூப்பிட்டு எங்க இருக்கேனு இற்றைப்படுத்துங்க‌ (update).  எவ்வளவு நாள் வெயிலடிச்சுது அப்பலாம் கிளம்பாம, குளிர‌ ஆரம்பிக்கும் போது அப்படி என்ன நடைப் பயணம் வேண்டிக்கிடக்கு' என்று தங்கமணியின் குரல் மெல்லத் தேய்ந்து (fade) குறைய‌, வீட்டை விட்டு ஒருசில நூறு அடிகள் கடந்து அடியேனது பாதயாத்திரை துவங்கியது.  இலக்கு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடக்கலாம் என்று!

அதிகாலைக் குளிரில், கதிரவனின் ஒளியில் நடக்க ஆனந்தமாக இருந்தது.  சர்சர்னு சிற்றுந்தில் கடந்த சாலைகளில், ரொம்ப நேரமா நடக்கற மாதிரி தோன்றியது.  இவ்ளோ நேரம் ஆச்சு, இன்னும் இந்த சாலையிலேயேவா இருக்கிறோம் என்று தோன்றியது.  வழியில் ஆங்காங்கே நகர சபை(city council)க்கு என்னைத் தேர்ந்தெடுப்பீர் எனும் பதாகைகள் பல வீடுகளின் முன்பு அறிவித்திருந்த‌ன.  வருகிற நவம்பரில் தேர்தல்.  பெரிய சாலைகளில் நடப்பதற்கு தனிச் சாலையும், மறுபுறம் கடப்பதற்கு பொத்தானும்  இருந்தன.  சிறிய சாலைகள் தான் எதுவுமே இல்லாமல், கொஞ்சம் அச்சம் விளைவிப்பதாய் இருந்தன.  ஒரு குறுஞ்சாலையில், ஆளரவமின்றி இருக்க, திடீரென எதிரில் தூரத்தே இரு ஆண்கள்.  மனதில் கொஞ்சம் பீதி ஏற்படத்தான் செய்தது.  வெள்ளைக்காரர்களா இருந்தா (பொய் சொல்லமாட்டங்க எனும் நகைச்சுவை எண்ணம் மறந்து), பரவாயில்லை, வேறு எவராவதா இருந்து நம்ம ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று மனம் சிறிது யோசித்தது.  அந்த அளவிற்கு எல்லாம் போகவில்லை.  சற்றே நெருங்கி அவர்களைக் கடக்கையில், 'ஹவ் ஆர் யூ'  என்று அசோகன் பாணியில் அடிவயிற்றில் இருந்து கேட்டுவிட்டு கடந்து விட்டன‌ர்.  அப்பாடா என்றிருந்தது.


இந்த மாதிரி ஆட்கள் சிலநேரம் வழிமறிந்து கையில் எவ்ளோ வச்சிருக்கேனு கேட்டு, நம்மிடம் இருக்கத புடுங்கிட்டுப் பற‌ந்துடுவாங்கனு எல்லாம் கேள்விப்பட்டதினால, பையில் எப்பவும் ஒருசில பச்சை நோட்டுக‌ள் மேலாப்பல வைத்திருப்பேன்.  பின் பாக்கெட்ட்ல இருந்து எடுக்கக் கூடாதாம் .. ஏன்னா துப்பாக்கி தான் நாம் எடுக்கறோம்னு அவன் சுட்டுட்டு போய்டுவான் என்றெல்லாம் எனது நண்பர்கள் சொல்லியிருந்தார்கள்.

சிறிது தூரம் நடந்து சிலபல பொத்தான்கள் அமுக்கி சாலைகள் கடந்து நகரப் பூங்கா அருகில் இருந்தேன்.  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் வந்து செல்லும் இடம்.  (கோபால் பல்பொடி ஞாபகம் வருகிறதா?:))  சனிக்கிழமை ஆதலால், பல்வேறு விளையாட்டுக்கள், பிறந்த பிஞ்சுக்களில் இருந்து பதின்ம வயது இளைஞர்கள் வரை.  ஸாஃப்ட் பால், பேஸ் பால், ஸாக்கர், இன்னும் பல பெயர் தெரியாத விளையாட்டுப் போட்டிகள் பல வண்ணங்களில் ந‌டந்து கொண்டிருந்தன.  நடைமேடையில் பலரும் தங்கள் செல்லப் பிராணிகளான நாய்கள் இழுத்துச் செல்ல, அவைகளைத் தொடர்ந்திருந்தனர்.  எப்படித் தான் வளர்க்கிறார்களோ?  ஒரு நாய் கூட குரைக்கவில்லை, சண்டித்தனம் செய்யவில்லை, எப்படி என்ற ஆச்சரியம் தொடர்ந்து கொண்டிருந்தது என்னுள்.

போட்டி நடக்கும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் பலர்.  தங்கள் தாத்தா பாட்டி, சொந்தங்கள், என அனைவரையும் கூட்டி வருகிறது இளைய தலைமுறை.  பூங்காவே ஒரு திருவிழா போல திகழ்கிறது.  காணக் கண் கொள்ளா ஆனந்தம்.  நம்மூரில் இது சாத்தியமா ?  எளிதாகச் சொல்லிவிடுவோம், 'வயசான காலத்துல இதெல்லாம் தேவையா' என ...

பூங்காவை சுற்றி வருகையில், விளையாட்டுத் தவிர குடும்பங்களாகப் பலர் அன்றைய மதிய உணவை கரி அடுப்புகளில் சுட்டுக் கொண்டும், அத்தோடு பல கேளிக்கைகளில் திளைத்தும் இருந்தனர்.  பூங்காவினுள் பெரிய நீர்த் தேக்கம், அதன் நடுவில் மென் நீர்த்தூவல்.  பல வண்ணங்களில் படபடத்துச் செல்லும் மீன்குஞ்சுகள்.  நீரோரங்களில் ஒற்றைவால் தவளைக்குஞ்சுகள்.  ஒருசில வாத்துக்கள்.  இவை எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வைக்கும் விதமாக ஒரு பெரிய பூந்தோட்டம்.  குளிர் ஆரம்பித்திருப்பதால், பூக்களின் விளைச்சல் குறைய ஆரம்பித்திருந்தது.

பூங்காவைக் கடந்து, மற்றொரு பெருஞ்சாலயில் நடையைக் கட்டிய போது தூரத்தே ஒருவர் ஓடி வருவது தெரிந்தது.  ஆணா?, பெண்ணா?, என்று அனுமானிக்கமுடியவில்லை.  சற்றே பெருஞ்சாலை ஆதலால் சர்சர் என்று சிற்றுந்துகளின் உறுமல்.  கிட்டே நெருங்க நெருங்க பதின்ம வயதுப் பெண் அவர்.  இழுத்துப் போர்த்திய மேலாடையும், அரை நிஜாரும், கையில் தண்ணீர் குடுவையும், காதுகளில் இசைக்குழாயும் சொருகி மெய்மறந்து, சற்றும் ஒரு ஜீவன் தன்னை எதிர்கொண்டு செல்கிறது என்ற எண்ணமில்லாமல் என்னை கடந்து விட்டிருந்தார்.

இதன் நடுவே அலைபேசி அழைப்பில் தங்கமணி.  சொல்றத கேளுங்க, அங்கே இருங்க, வண்டிய எடுத்துட்டு வர்றேன்.  எதுக்கு வீராப்பு என்று அடுக்க, வழக்கம் போல அவர்களது அன்பான எண்ணத்திற்கு வளையாமல், சிறிது இடைவெளி எடுத்து, நீர் அருந்தி, தின்பண்டங்கள் கொரித்து, வானத்தை நிமிர்ந்து பார்த்தேன்.  குளிரிலும் வந்த சூரியனின் கதிர்கள் கண்களைக் கூசின.  மதியம் ஆகி இருந்தது.  மேப் மை வாக்கை பார்த்தால், பன்னிரெண்டு மைல்கள் காட்டியது.  சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை.  துள்ளிக் குதிக்கலாம் என்றால் அப்போது தான் கால்களில் லேசாக வலி எடுக்க ஆரம்பித்திருந்தது.  இன்னும் ஒன்னரை மைல்கள் நடக்க வேண்டும் வீட்டிற்கு.  நடந்து, ஆண்டவன் புண்ணியத்தில் இந்த நாள் நடைபயணத்தை முடித்துக் கொண்டாயிற்று!

நடப்பது சுகம் ! தொடரும் ...

Tuesday, October 07, 2014

பதிவு எண் ௬



விண்ணை மூடிய மேகம்.
மழை வந்தா வரும்.
வராமலும் போகும்.
வானிலை ஆய்வு மையம் தயார் பண்ண வானிலை அறிக்கை மாதிரி அருமையான weather. சுதர்ஷண  சக்கரம் வலது கையிலும், ஒலிக்கும் பாஞ்சசன்னியம் இடது கையிலும் மாதிரி ஒரு கையில hand bag’ கும் இன்னும் ஒரு கையில shopping bag'கும் தாங்கிய மக்கள். ஸ்ரீமன் நாராயணன் கூட கை வலிச்சா சங்கை கீழ வச்சுடுவார்... ஆனா ஷாப்பிங் bags'யும் பெண்ணின் கரங்களையும் பிறிக்கவே முடியாது'னு சொல்லற மாதிரி, sowcarpet streets' கால் தேய நடந்து கை ரேகை அழிய ஷாப்பிங் செய்யும் அந்த பெண்களின் கூட்டதுல தான் அந்த அம்மாவ பார்த்தேன். Silent Observer. அத்தனை இரைச்சலுக்கு இடையிலும் அலட்டலில்லாத மௌனம். எனக்கு curiosity.
நீங்க யாருனு போய் கேட்டேன்.
"நான் இந்த மேல் மாடில இருக்கற கடையோட tailor. இப்பொ எனக்கு break. அதான் கீழ வந்து நின்னுட்டு இருக்கேன். இங்க வந்து நின்னா எதாவது தோனும்...கதையா எழுதி paper' வச்சுக்குவேன்"னு சொன்னார்.
"இன்னைக்கு என்ன எழுதினீங்க?" இது நான்.
ஒரு வெள்ளை paper'இல் ஏதோ கிறுக்கிய எழுத்துக்கள். எடுத்து கொடுத்தார். சின்ன கதை மாதிரி இருந்தது.
ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தான். அவனுக்கு gatekeeper' ஒரு ஆள் வேலை செஞ்ஜான். எப்போதும் ரொம்ப நிதானமா சந்தோஷமா வாழ்க்கையை நடத்தினான் அவன். ஒரு நாள் அந்த ராஜா அவன் திறந்து மூடும் gate'க்கு பக்கத்துல ஒரு மூட்டையை கொண்டு வைத்தார். அதை வந்து பாத்த அவன், பையை பிரிச்சான். அதுல 99 தங்க காசுகள் இருந்துது. விழுந்து அடிச்சு...உருண்டு புறண்டு...மிச்சம் இருக்கற ஒன்ன தேடினான்...எங்கயும் காணல. எப்படியாவது அந்த ஒரு தங்க காச சேர்க்கனம்'னு இரவு பகல் பாக்காம அலைஞ்சான். சரியா சாப்படல, தூங்கல. அவன் கிட்ட இருந்த 99 காச பத்தி அவன் கவலை படல. இல்லாத ஒன்னு. அத தேடி தேடி சுத்தறான். ஓடிகிட்டே இருக்கான்.
அவ்வளவு தான் எழுதி இருந்துது.
“எனக்கு time ஆச்சு நான் வரேன்னு சொல்லிட்டு அந்த அம்மா கிளம்பிட்டாங்க.
ரொம்ப புதிரா இருந்துது எனக்கு. ஏதோ metaphorical. இதுக்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்?
தெரிஞ்சா சொல்லுங்க. மீண்டும் சந்திக்கும் வரை, vgr

பழைய பஞ்சாங்கம்

தமிழ் எண்களை  disguised form'ல வேற மாதிரி எழுதி தலைப்பு தந்திருக்கிறேன்.... But ஏன் பழைய பஞ்சாங்கம்'னு கேக்கிறீங்க இல்லையா...இந்த முறை முன்னொரு காலத்துல என்னோட blog'ல எழுதின ஒரு series... அத இங்க கொஞ்சம் தமிழ் சங்க audience'காக update பண்ணி எழுதி இருக்கேன்... மேலே படிக்கவும்...இது சாம்பு'னு சொல்லப்படற ஒரு அதிபுத்திசாலியோட நேர்காணல்கள்...சாம்புவ ஒருத்தர் பேட்டி காண்கிறார்...Q&A session மாதிரி'னு சொல்லலாம்... ஒருத்தர் சாம்புவ கேள்வி கேக்கறார்...அதுக்கு அவர் என்ன பதில் சொல்றார்ங்கற மாதிரி அமைச்சு எழுதினது...satire'னு கூட வச்சுக்கலாம்..

சாம்புவும் ஒருத்தனும்

ஒரு மாலை இள வெயில் நேரம் கடலோரமா வேர்கடலைய சாப்டுண்டே நடந்துண்ட்ருந்தார் நம்ம சாம்பு. அப்போ அந்த பக்கமா போன ஒரு ஆள் ஒரு நிமிஷம் இவர பாத்து நின்னுட்டு...
(கேள்வி): "உங்களிடம் ஒன்று கேட்கலாமா?"னு சொன்னான்.
நம்ப சாம்புவும் தலை ஆட்டினார்.
முட்டாள்தனமாய் பேசுபவர்கள்...என்ன பேசுகிறோம் என்று புரியாமல் உளறுபவர்கள்..
தனக்கு துளி கூட தெரியாத ஒரு விஷயத்தை பற்றி அபரிவிதமான தன்னம்பிக்கையுடன் வாதாடுபவர்கள்...எவனோ எங்கேயோ சொன்னதை தன் சொந்த கண்டுப்பிடிப்பு போல் காண்பித்து பிதற்றுபவர்கள்...சிரிக்க வைப்பதாக எண்ணி மொக்கை வம்படிப்பவர்கள்...
சுய புகழ்ச்சியே மையப் புள்ளியாகக் கொண்டு சுற்றி சுற்றி பேசுபவர்கள்...
சம்பந்ததாசம்பந்தம் இல்லாமல் வாயடிப்பவர்கள்...
இது போன்றவர்கள் இந்த உலகில் உண்டா? னு சாம்பு கிட்ட அந்த ஒருத்தன் கேட்டான்.
அதுக்கு சாம்பு சொன்னார்.
"அடேய் முட்டாளே...போய் 'என்ன_பெயர்வேன்னா_வைக்கலாம்.blogspot.com' மயும் 'உலகத்தின்_கடைசி_ப்லாக்.wordpress.com' மயும், ‘www.Facebook.com’ மயும் பாருடா...தெரியும்...".

(கேள்வி): Sir, கவிதை எழுதி கொல்லும் மக்களை பற்றி தங்கள் கருத்து என்ன?
சாம்பு : அட! அதை ஏன்யா கேக்கற?...இப்படி தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தன்..."நானும் எழுதுவேன்"னு ஒரு தலைப்பில எழுதினான்...

காவன்னாவில் கவிதை எழுதச் சொல்லி
கண்மணி நீ கட்டளை இட்டாய்.
கேள்வியாய் ஏன் காவன்னா? என்றால்
கவிதா என் பெயர் என்றாய்.

கண்கள் இரண்டால் நீ பார்த்தால்
கடற்கறை செல்ல ஆவல் பெருகுதடி.
கால் கடுக்க நடந்த பின்னும்
கால் கிலொ கூட குறையலடி
படிச்சப்றம் தான் தெரிஞ்சுது தமிழ் இலக்கணத்துல இந்த மாதிரி கவிதை எழுதுதரவனுக்கு பிடித்தது எதுகையும், மோனையும் மட்டும் தான் போலருக்கு'னு...

(கேள்வி): Sir,வெளி நாட்டு வாழ் இந்தியர்களை பாத்தா உங்களுக்கு என்ன கேக்கத்தோணும்?
சாம்பு : பெட்டி படுக்கய கட்டி வந்த வழியே எப்போ திரும்ப போறீங்கன்னு தான்...
"Declaration of Independence"அ கண்ணுல தண்ணி வச்சுண்டு பாக்கும் இந்த பிறவிகள், அவனோட சுதந்திர தினத்துக்கு "ஜன கன மன" பாட மறந்துடரானாம். சொல்லி நிறைய கவலை படறான் எனக்கு தெரிஞ்ச Vandalur Viswanathan...இப்போ இருக்கறது Wisconsin'ல...
சரி திரும்ப போயேன்டா உன்ன யாரு தடுக்கறானாக்கா.. 'போறத்த பத்தி இல்ல Sir...கொழந்தைகளுக்கு ஒத்து வரல...ஊரோட ஒத்து போற stigma இருக்கு..அதனால நாங்க போக முடியல'னான்.
ஆனா நிஜமென்ன தெரியுமோ...நம்ம ஊருக்கு போய் பணத்த லட்சத்துல செலவு பண்ணி பத்மா சேஷாத்ரி- போடறத்துக்கு பதில்..அந்த பணத்த ஒரு state of art Garden- invest பண்ணினா...வந்து போர guests கணேசனும், செல்வியும் நிறைய பாராடடுவளோன்னோ' அதான்.

(கேள்வி): உலக தலைவர்களெல்லாம் இப்பொ எந்த ப்ரச்சனைய resolve பண்ணறதுல கவனம் செலுத்தனம்? 100 நாட்கள்ல மோடி எத செய்யல…என்ன செஞ்சிருக்கனம்'னு நீங்க நினைக்கிறீங்க?
சாம்பு : What I want them to do is to empower the women in the country, to unleash the power of these women, I mean we talk about being a superpower...

(கேள்வி): Let me be very specific Mr.Sambu.  What should the world leaders do to resolve the current issues?
சாம்பு : I think women are the backbone of any country and women need to be empowered.

(கேள்வி): இது முடியாத தொடர் கதை Sir. கடைசியா உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகை யாருனு சொன்னீங்கன்ன...
சாம்பு : இத நான் சொல்றதுனாலே உலகில் வன்முறை ஒழியும்-னா சொல்லுங்க... இல்ல ebola'வுக்கு vaccine கிடைக்கும்னா...சொல்லுங்க... சொல்றேன்...

(கேள்வி): ?@$#?!!!!?? ?@$#?!!!!??

மீண்டும் சாம்புவுடன் சந்திக்கிறேன். நன்றி. வண்க்கம்.

-vgr